search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் குழந்தைகள்"

    • நாடு முழுவதும் பாலின பேதங்கள் இன்றி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்
    • பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்றார் பிரதமர் மோடி

    நாடு முழுவதும் சில தசாப்தங்களுக்கு முன் வரை குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என கேட்பதும், ஆண் குழந்தை என்றால் உயர்வாக கருதுவதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது.

    இன்றைய காலகட்டத்தில் அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது.

    இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

    மூட நம்பிக்கைகளால் பெண் குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலைமை தற்காலத்தில் அறவே மாறி, பாலின பேதம் இல்லாமல் கிராமங்களிலும், நகரங்களிலும் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.

    2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.


    பாலின சமத்துவம், கல்வி, உடலாரோக்கியம், பணி மற்றும் ஊதியம் உள்ளிட்ட அம்சங்களில் சமநிலையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் "பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.


    குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.


    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, "பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள்.பெண் குழந்தைகள் கல்வி கற்று, வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ தேவையான அனைத்து முயற்சிகளையும் தனது அரசு செய்து வருகிறது" என குறிப்பிட்டார்.

    2015ல் பிரதமர் நரேந்திர மோடி இதே தினத்தன்று, "பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்; பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்" ("பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ") என முன்னெடுத்த பிரசார திட்டங்கள் குறித்தும் இன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

    • சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது.

    தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

    இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

    அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.

    சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

    2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

    போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

    அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.

    வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-

    போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.

    மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.

    1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு முதிர்வு தொகையை கலெக்டர் வழங்கினார்.
    • விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவார ணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி னார். சமூகநல அலுவ லகத்தின் கீழ் செயல்படும் முதலமைச்ச ரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த 45 பயனாளிகளுக்கு முதிர்வு தொகையாக ரூ.18 லட்சத்து 20 ஆயிரத்து 10-க்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 800 மதிப்பில் இலவச தையல் எந்திரங் களையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாதம் தோறும் 2-வது செவ்வாய்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
    • வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயது நிறைவடைந்தும் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்காமல் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கும் மாவட்ட கலெக்டர்வளாகம், மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் மாதம் தோறும் 2-வது செவ்வாய் கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை எனில் ரூ. 50 ஆயிரத்திற்கான நிலை வைப்புத் தொகையும், 2பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிலை வைப்புத் தொகை செய்யப்பட்டு வருகிறது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் ஆக மொத்தம் மூன்று பெண் குழந்தைகளுக்கும் சிறப்பு அனுமதியின் பெயரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் பெற்று பயனடையலாம்.

    முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்த்தல், விண்ணப்பித்த 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வைப்புத் தொகை ரசீதுகள் பெறாமல் இருப்பவர்களுக்கு வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல், வைப்புத் தொகை ரசீதுகளில் பெயர், பிறந்த தேதி மாற்றம் இருப்பின் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளு வதற்கு இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
    • முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 72 பயனாளி களுக்கு இணையவழியில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தருமபுரி,  

    முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் இரண்டு பெண் குழந்தைகளுடன் அல்லது ஒருபெண் குழந்தையுடன் அல்லது முதல் பிரசவத்தில் ஒருபெண்குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் 2 பெண்குழந்தையும் பிறந்து பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடும்பங்களுக்கு ஒரு பெண் குழந்தைக்கு தலா ரூ.25,000 வீதம் வழங்கப்படுகிறது.

    மேலும் ஒரே பெண் குழந்தை எனில் ரூ.50,000 என தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வைப்புத்தொகை ரசீது வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் முதிர்வுத்தொகை பெற்று கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்மூலம் பெண் சிசுக்கொலை தடுக்கப்படு கிறது. பெண் கல்வி ஊக்கு விக்கப் படுகிறது.குழந்தை திரு மணம் தடுக்கப்படுகிறது.

    அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 2023-2024 ஆம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 72 பயனாளி களுக்கு இணையவழியில் ஒப்புதல் வழங்கப்பட்டு, விண்ணப்பம் ஏற்பு செய்யப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி யதற்கான செயல்முறை ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கி னார்.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி, நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் உரிய சான்றுகளோடு ஆஜராகி பயனடைந்தனர்.

    இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா மற்றும் தொடர்பு டைய அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
    • பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.

    புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

    ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.

    மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.

    பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது.

    ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.
    • பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருந்து இருக்கவேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்குவது, பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வது, கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 வழங்குவது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    அதன்பின் புதிய பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பயனாளிகளை கண்டறிந்து மீண்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதேபோல் கியாஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதில் தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.

    இந்த திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்படுத்துகிறது.

    இந்த திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருந்து இருக்கவேண்டும்.

    17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகள் கழித்து அந்த பணம் வழங்கப்படும். இந்த திட்டமானது விரைவில் அமலுக்கு வர உள்ளது.

    • பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கருதி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும்.

    சேலம்:

    பெண் சிசுக்கொலையை ஒழித்தல், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கருதி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருப்பின் அந்த குழந்தை பேரில் ரூ.50 ஆயிரம், 2 குழந்தைகள் இருப்பின் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு 16 வயது பூர்த்தியான பின் முதிர்வுத்தொகை வட்டியுடன் பயனாளி வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குழந்தையின் 3 வயதுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

    10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். புதிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்படலாம். என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • கிராம மக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் திருமணம், பெண்கள் மாயம், பாலியல் தொல்லை குற்றங்கள் போன்றவை அதிகரித்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஏ.முக்குளம் கிராமத்தில் 100 நாள் பணியில் இருந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேரில் சென்று விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 2 பெண் குழந்கைளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கான பத்திரம் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் 2-வது பெண் குழந்தைக்கு 3 வயது பூர்த்தியாகும் முன்பும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு குறைவாக உள்ள ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் நிலையான வைப்புத்தொகையும், 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரமும் நிலையான வைப்புத்தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படுகிறது.

    முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், 2-வது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தாலும் 2 குழந்தைகளுக்கும் சிறப்பு இனமாக கருதி தலா ரூ.25 ஆயிரத்திற்க்கான பத்திரம் வழங்கப்படும்.

    18 வயது நிறை வடைந்தவுடன், மின்விசை நிதி நிறுவனம் மூலம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் பற்று வைக்கப்படும்.

    தமிழக அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 7.5.2021 முதல் 21.2.2023 வரை ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 வட்டங்களை சேர்ந்த 497 பயனாளிகள் ரூ.1.24 கோடி மதிப்பில் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தைகளின் தாயார் வித்யா கூறியதாவது:-

    நான் கோத்தகிரி இட்டக்கல் ஒன்னட்டி பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எனக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எங்கள் ஊரில் உள்ள களப்பணியாளர்கள் இரு பெண் குழந்தைகளுக்கு பணம் பெறும் திட்டம் குறித்து அறிவித்தனர். இதன் மூலம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.

    எனது விண்ணப்பத்தினை ஏற்று 2 பெண் குழந்கைளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. இந்த தொகையின் மூலம் எங்கள் குழந்தைகளின் படிப்பு செலவினை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    மேலும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தை களின் தாயார் மீனாட்சி கூறியதாவது:-

    நான் கூடலூர் அம்பலகொல்லி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் விவசாயம் செய்து வருகிறார்.

    எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமூக நலத்துறையின் சார்பாக 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக உதவித்தொகை வழங்கப்படுவதாக களப்பணியாளர் மூலம் தெரிந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தோம்.

    அதன் அடிப்படையில் சமூக நலத்துறை சார்பில் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் பற்று வைக்கப்பட்டு அதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. இத்தொகையானது எனது குழந்தைகளின் மேல் படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தினை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

    • ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிசாமி விழாவிற்கு தலைமை தாங்கினார்.
    • தங்கமகள் சேமிப்பு திட்டத்தின் பயன்கள் குறித்து செல்வபாரதி விளக்கினார்.

    தென்காசி:

    பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய அஞ்சல் துறையின் சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான பெண் குழந்தைகளுக்கான "தங்கமகள் சேமிப்புத் திட்டத்தில்" முதல் மாதத் தவணை ரூ.250-ஐ தளிர் திப்பணம்பட்டி கிராமம் சார்பாக பெண் குழந்தையின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கி 50 பெண் குழந்தைகளுக்கு தங்கமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டன. பயனாளிகளுக்கான சேமிப்பு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி திப்பணம்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். அங்கன்வாடி பொறுப்பாளர்கள் பிரேமா , பேபி மற்றும் வார்டு உறுப்பினர் சொர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். அஞ்சல் துறை ஆய்வாளர் செல்வபாரதி கலந்து கொண்டு அஞ்சல் துறையில் உள்ள சேவைகள் குறித்தும், தங்கமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கான பயன்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். விழாவில் பயானிகளுக்கு தங்கமகள் சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டன. விழாவில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை தளிர் நிர்வாகி வேல்முருகன் மற்றும் திப்பணம்பட்டி அஞ்சல் கிளை பொறுப்பாளர் மீனா செய்திருந்தனர்.

    • முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொகை அனுமதிக்கப்படும்.

    ஈரோடு:

    முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகள் பெற்று இருப்பின் விண்ணப் பிக்கலாம். ஆண் குழந்தை யின்றி 2 பெண் குழந்தைகள் (2-வது பெண் குழந்தைக்கு 3-வயதுக்குள்) அல்லது ஒரு பெண் குழந்தை இருப்பின் (3-வயதுக்குள்).

    பெற்றோர்களில் ஒருவரில் 40 வயதிற்குள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் பெற்று இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொகை அனுமதிக்கப்படும்.

    ஏற்கனவே இத்திட்டத்தில் பயனடைந்து முதலீட்டு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் சம்மந்தப்பட்டவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் வரும் 30-ந் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணி யாளர்களை அணுகுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×