என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான 72 பயனாளிகளுக்கு வைப்பு தொகை ரசீது
- மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
- முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 72 பயனாளி களுக்கு இணையவழியில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தருமபுரி,
முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் இரண்டு பெண் குழந்தைகளுடன் அல்லது ஒருபெண் குழந்தையுடன் அல்லது முதல் பிரசவத்தில் ஒருபெண்குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் 2 பெண்குழந்தையும் பிறந்து பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடும்பங்களுக்கு ஒரு பெண் குழந்தைக்கு தலா ரூ.25,000 வீதம் வழங்கப்படுகிறது.
மேலும் ஒரே பெண் குழந்தை எனில் ரூ.50,000 என தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வைப்புத்தொகை ரசீது வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் முதிர்வுத்தொகை பெற்று கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்மூலம் பெண் சிசுக்கொலை தடுக்கப்படு கிறது. பெண் கல்வி ஊக்கு விக்கப் படுகிறது.குழந்தை திரு மணம் தடுக்கப்படுகிறது.
அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 2023-2024 ஆம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 72 பயனாளி களுக்கு இணையவழியில் ஒப்புதல் வழங்கப்பட்டு, விண்ணப்பம் ஏற்பு செய்யப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி யதற்கான செயல்முறை ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கி னார்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய் கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுதொகை கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் உரிய சான்றுகளோடு ஆஜராகி பயனடைந்தனர்.
இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா மற்றும் தொடர்பு டைய அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்