search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
    X

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

    • பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கருதி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும்.

    சேலம்:

    பெண் சிசுக்கொலையை ஒழித்தல், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கருதி முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருப்பின் அந்த குழந்தை பேரில் ரூ.50 ஆயிரம், 2 குழந்தைகள் இருப்பின் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு 16 வயது பூர்த்தியான பின் முதிர்வுத்தொகை வட்டியுடன் பயனாளி வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

    இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குழந்தையின் 3 வயதுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

    10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். புதிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து பயன்படலாம். என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×