search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிலாவல் பூட்டோ"

    • பாராளுமன்றத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • அடுத்த வாரம் நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்.

    பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற்று 3 வாரங்கள் முடிவடைய இருக்கும் நிலையிலும் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில்தான், பாகிஸ்தானின் நாட்டின் காபந்து பிரதமராக இருக்கும் அன்வார்-உல்-ஹக் கக்கார் தனது பிரதமர் அலுவலக பணிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளார். தனது ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள கோப்புகள் அனைத்திலும் கையழுத்திடவில்லை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்துள்ளார். "புதிய அரசின் தொடக்கத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் புதிய நிர்வாகத்திடம் வழங்குவோம்" என்றார்.

    பாகிஸ்தானின் காபந்து அரசின் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம், பிப்ரவரி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக இதை நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் ஆரிஃப் அல்விக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் கோரிக்கை பாகிஸ்தான் அதிபர் நிராகரித்துள்ளார்.

    மேலும், புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாக அனைத்து ஒதுக்கீடு இடங்களும ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    2018-ம் ஆண்டும் ஆரிஃப் அலிவி பாகிஸ்தான் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக இம்ரான் கான் கட்சியின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்தும் ஆட்சியமைக்க முடியவில்லை.

    நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க இருக்கின்றன. அடுத்த வாரம் ஆட்சி அமைக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி தேர்தலுக்கு இரு கட்சி சார்பிலான வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

    பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். அதன்படி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட அமைச்சகம் ஒப்பதல் கேட்டிருந்தது.

    • இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.
    • தேர்தல் முடிவு மாற்றப்பட்டதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இம்ரான் கான் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தவறு நடந்துள்ளன. அதற்கு பொறுப்பேற்று தனது பதவியை அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷனரான லியாகத் அலி சத்தா, இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பத்திரிகையாளர்களின் பேசினார். அப்போது "தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர்.

    நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக இதில் ஈடுபட்டார்கள்.

    இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட லியாகத் அலி சத்தா தனது அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டின் முதுகில் குத்துவது தன்னை தூங்க விடாது என்றார். நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்கான எந்த தவறான செயல்களில் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடையே வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இம்ரான் கானின் தெஹ்ரிக்-ரீ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றதாகவும், முடிவுகள் மாற்றப்பட்டதாகவும், அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

    அதன்பின் சனிக்கிழமை இறுதியாக அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் பொதுத்தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என அறிவித்தார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என போட்டியாக அறிவித்தார். அத்துடன் பிலாவல் பூட்டோ உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஷெரீப் முடிவு செய்தார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    • பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ பிரதமர் பதவிக்கு போட்டியில்லை என அறிவிப்பு.
    • நவாஸ் ஷெரீப் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.

    பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.

    இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

     

    ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர்.

     இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார்.

    இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார்.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

    பாகிஸ்தானில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது.

    பாகிஸ்தானை காப்பாற்ற நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே தனிப்பட்ட முறையில் நாங்கள்தான் அதிக இடம் பெற்றுள்ளோம். அதனால் எங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைப்பார்கள் என இம்ரான் கான் கட்சி தெரிவித்து வருகிறது.

    இதனால் இரண்டு பக்கத்தில் இருந்தும் வெற்றி பெற்றவர்களை இழுப்பதற்கான குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    தேர்தலின்போது முறைகே நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மொத்தமுள்ள 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

    நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இவர்களுக்கு (75+54) 129 இடங்கள் உள்ளன. இன்னும் 4 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.

    • நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி.
    • இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.

    பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், நேற்றுதான் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 42 இடங்களை பிடித்துள்ளன.

    மொத்தம் 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

    ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இதை இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு 128 இடங்கள் உள்ளன. இன்னும் 5 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.

    அரசியல் உறுதியற்ற நிலையில் பாகிஸ்தானை காப்பாற்ற கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன. நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கா அரசியல் ரீதியிலான ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

    • தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை.
    • தேர்தல் முடிவு காலதாமதம் ஆனதால் இம்ரான் கான் கட்சி இன்று போராட்டம் நடத்தி வருகிறது.

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கினாலும் அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே வாக்குப்பதிவின் போது பல இடங்களில் வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. இவ்வாறு சேதம் அடைந்த வாக்குசாவடிகள் குறித்து தகவல் சேகரித்து வருகிறது தேர்தல் ஆணையம். மேலும், தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

    அதன்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் வருகிற 15-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவுக்குள் அனைத்து இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இன்று போராட்டம் நடத்தப்படும் என இம்ரான் கான் கட்சி தெரிவித்திருந்தது. இன்று காலை வரை சுமார் 10 தொதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதனால் அறிவித்தபடி அக்கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    265 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதாக தெரிவித்தனர். தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று உள்ளதாக அந்த கட்சியினர் அறிவித்தனர்.

    மேலும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினர். ஆனால் தேர்தலில் தனது கட்சி தான் வெற்றி பெற்றதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

    255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளா்கள் 101 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 27 இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றன.

    ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெற வில்லை. இதனால் ஆட்சியை அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது.

    அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை அமைக்க நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்து உள்ளார். மேலும் அவரது கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பிற கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நவாஸ் ஷெரீப்-பிலாவல் பூட்டோவின் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இன்னும் அவர்களுக்கு 6 இடங்கள் தேவைப்படுகிறது.

    ஆனால் நவாஸ் ஷெரீப் கட்சியுடன் அதிகாரப்பூர்வ மாக இன்னும் பேச்சு வார்த்தை எதுவும் நடத்த வில்லை என்று பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

    இதற்கிடையே சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. 3 சுயேட்சை வேட்பா ளர்கள் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். நவாஸ் ஷெரீப் புக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
    • இம்ரான் கான் கட்சி 93, நவாஸ் ஷெரீப் கட்சி 73, பிலாவல் பூட்டோ கட்சி 54.

    பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றதாக கூறப்படுகிறது.

    அதேவேளையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    அதன்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின் மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இன்னும் 8 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர்.

    இம்ரான கான், நவாஸ் ஷெரீப் ஆகியோர் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என மாறிமாறி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப் கட்சி, பிலாவால் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது.

    நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெள்ளி பெற்றுள்ளது.

    ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்திரதன்மையான ஆட்சி அமைப்பதில் தவித்து வருகிறது.

     இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில் ஆட்சியமைக்க 134 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற மத்திய ஆசிய நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.

    இஸ்லாமாபாத்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் இந்தியாவின் கோவாவில் நேற்று நடந்தது.

    இதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்தரி பிலாவல் பூட்டோ உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்றனர். அவர்களை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பிலாவல் பூட்டோ பாகிஸ்தானுக்கு திரும்பினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவுக்கான எனது பயணம் வெற்றிகரமாக அமைந்தது. ஒவ்வொரு முஸ்லிமை தீவிரவாதியாக பார்க்கும் பார்வையை நிராகரிக்க உதவியது. இது போன்ற கட்டுக்கதையை உடைக்க நாங்கள் முயற்சி செய்தோம்.

    2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதிக்கு முந்தைய காஷ்மீர் நிலையை (சிறப்பு அந்தஸ்து) மீட்டெடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

    சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற மத்திய ஆசிய நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன என்றார்.

    முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு மந்திரியாக இங்கு வந்த பிலாவல் பூட்டோ அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முந்தைய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தி தொடர்பாளராகவே அவ ரது நிலைப்பாடுகள் கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டன என்று கூறினார்.

    • பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
    • அவரது தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என உத்தர பிரதேச பா.ஜ.க நிர்வாகி அறிவித்தார்.

    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாக்பாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது அங்கு பேசிய பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்துக் கொண்டு வருபவர்களுக்கு நான் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்தார்.

    அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நன்கு அறிந்துதான் அவ்வாறு பேசியதாகவும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் மந்திரி பயன்படுத்திய வார்த்தைக்கு கடும் கண்டனம்.
    • இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்கள்.

    அஜ்மீர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், அந்நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் மோடி என அவர் குறிப்பிட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாவலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களில் பிலாவலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் ஆன்மீக தலைவரும், அகில இந்திய சுபி சஜ்ஜதன்ஷின் கவுன்சில் தலைவருமான ஹஜ்ரத் சையது நசீருதீன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பயன்படுத்திய விஷம தானமான வார்த்தைக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பிலாவல் பூட்டோ தனது அமைச்சர் பதவியை மட்டுமன்றி ஒட்டு மொத்த தேசத்தை தரம் தாழ்த்தியுள்ளார்:

    பிலாவல் பூட்டோவுக்கு எனது அறிவுரை இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம். எங்களது அரசியல் சாசனம் அனைத்து மதங்களின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்.

    பாகிஸ்தானிய முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் அதிக பாதுகாப்புடன், நல்ல நிலைமையில் உள்ளனர் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் வைத்துதான், அமெரிக்க படைகளால் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை பிலாவல் பூட்டோ மறந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
    • பிலாவல் பூட்டோ கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

    அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுத்தவர்கள், அண்டை நாட்டு பாராளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி பதில் கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பூட்டோ சர்தார் கூறுகையில், ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடை விதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறினார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு என தெரிவித்தார்.

    • உருகும் பனிப்பாறைகளே, பாகிஸ்தானின் பேரழிவு நிலைக்கு காரணம்.
    • பாகிஸ்தானில் தற்போது மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தால் 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்,இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, வாஷிங்டன் நகரில் பாகிஸ்தான் ஊடக குழுவிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானில் தற்போது மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறோம். தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் பருவநிலை மாற்றம் பிரச்சினையில் இணைந்து செயல்படுவது பற்றி சிந்திக்க வேண்டும்.

    காலநிலை மாற்றத்தால் உருகும் பனிப்பாறைகள்தான் பாகிஸ்தானின் இந்த பேரழிவு நிலைக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். பல காரணங்களுக்காக நாங்கள் (இந்தியாவுடன்) இணைந்து செயல்படுவது 2018-19 ஆண்டிற்கு பிறகு சாத்தியமற்றதாகி உள்ளது. இந்நிலையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய ஏதேனும் ஒரு பகுதி இருந்தால், அதுதான் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையாக இருக்கும்,

    ஏனென்றால், நாங்கள் அனுபவித்தது, எங்கள் எதிரிகளும் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த பிலாவல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்ப்பதில் பாகிஸ்தான் நிலைப்பாடு உறுதியானது என கூறினார்.

    ×