search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக இருந்தது- பாகிஸ்தான் மந்திரி பிலாவல் பூட்டோ பேட்டி
    X

    இந்திய சுற்றுப்பயணம் வெற்றிகரமாக இருந்தது- பாகிஸ்தான் மந்திரி பிலாவல் பூட்டோ பேட்டி

    • 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற மத்திய ஆசிய நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.

    இஸ்லாமாபாத்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் இந்தியாவின் கோவாவில் நேற்று நடந்தது.

    இதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்தரி பிலாவல் பூட்டோ உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்றனர். அவர்களை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பிலாவல் பூட்டோ பாகிஸ்தானுக்கு திரும்பினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவுக்கான எனது பயணம் வெற்றிகரமாக அமைந்தது. ஒவ்வொரு முஸ்லிமை தீவிரவாதியாக பார்க்கும் பார்வையை நிராகரிக்க உதவியது. இது போன்ற கட்டுக்கதையை உடைக்க நாங்கள் முயற்சி செய்தோம்.

    2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதிக்கு முந்தைய காஷ்மீர் நிலையை (சிறப்பு அந்தஸ்து) மீட்டெடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

    சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற மத்திய ஆசிய நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன என்றார்.

    முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு மந்திரியாக இங்கு வந்த பிலாவல் பூட்டோ அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முந்தைய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தி தொடர்பாளராகவே அவ ரது நிலைப்பாடுகள் கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டன என்று கூறினார்.

    Next Story
    ×