search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசு மாடு"

    • தீயணைக்கும் படை வீரர்கள் போராடி மீட்டனர்
    • பசு மாட்டை அதன் உரிமையாளரிடம் தீயணைக்கும் படை வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள அழகப்பபுரத்தை அடுத்துள்ள ஜேம்ஸ்டவுணை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று காலையில் அந்த பகுதியில் மேய்ச்ச லுக்காக வீட்டில் இருந்து வெளியில் அவிழ்த்து விடப் பட்டு இருந்தது.

    அதன்பிறகு அந்த பசு மாடு நேற்று மாலை வரை வீடு திரும்ப வில்லை. இ தனால் அந்தோணி ராஜ் பசுமாட்டை தேடி மேய்ச்சல் நிலத்துக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள 50 அடி ஆழ தண்ணீர் இல்லாமல் சேறும் சகதியு மாக இருந்த பாழடைந்த கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து சகதியில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டி ருந்ததை பார்த் தார். உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மழையிலும் விடாது போராடி ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் உயிருடன் மீட்டனர். அதன்பிறகு அந்த பசு மாட்டை அதன் உரிமையாளரிடம் தீயணைக்கும் படை வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    • சுவிஸ் நாட்டின் சீஸ் மற்றும் பால் பொருட்கள் உலக புகழ் பெற்றது
    • மணியோசை, கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றனர் பால் பண்ணையாளர்கள்

    மத்திய ஐரோப்பாவில் உள்ள இயற்கை எழில் நிறைந்த நாடு, சுவிட்சர்லாந்து.

    உலகளவில் புகழ் பெற்ற சுவிஸ் சீஸ் உட்பட பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்நாட்டில், அதிகளவில் பால் பண்ணைகளிலும், பசுமாடுகள் வளர்ப்பதிலும் பண்டைய வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பல கிராமங்களில் பால் பொருட்கள் தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வழிமுறைகளை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.

    பசுக்களை வயல்வெளிகளிலும், மலைகளிலும் மேய்வதற்கு அனுப்பி விட்டு அவற்றின் நடமாட்டத்தை சரியாக மேற்பார்வை செய்ய பசுக்களின் கழுத்தில் மணிகள் தொங்க விடுவது அவர்களின் பரம்பரை வழக்கம். பசுக்களின் நடமாட்டத்தின் போது மிக மென்மையான ஓசையை எழுப்பும் இந்த மணிகள், இந்நாட்டின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.

    பனிமலை, பசுக்கள், வயல்வெளிகள், கிராமங்கள் என அனைத்து சுவிஸ் நாட்டின் அடையாளங்களும் கொண்டு சுமார் 4700 பேரை கொண்ட அந்நாட்டின் ஆர்வெஞ்சன் (Aarwangen) கிராமத்தில் ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது.

    சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களில் 25 சதவீதத்தினருக்கும் மேல் வெளிநாட்டினர். அந்த கிராமத்தில் வசிக்கும் அவர்களில் சிலர், பல பசுமாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளிலிருந்து ஒன்றாக எழும்பும் ஓசை ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இரவு உறக்கத்தை கெடுப்பதாக கிராம சபையில் புகாரளித்தனர். இரவு வேளைகளில் மட்டும் மணிகளை கழட்டி வைக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம மக்கள், "சுவிஸ் நாட்டின் தனித்தன்மை இந்த மென்மையான மணியோசை" என கூறி, கையெழுத்து இயக்கம் நடத்தி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரின் கையொப்பமிட்ட எதிர்ப்பு கிராம சபையில் அளிக்கப்பட்டது.

    பலமான எதிர்ப்பை கண்ட புகார் அளித்தவர்களில் ஒருவர் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்; மற்றொருவர் வேறு இடத்திற்கு இடம் மாறி விட்டார்.

    உலகெங்கும் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை பதுக்க சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகள்தான் முதல் புகலிடம் என நம்பப்படுகிறது. அந்த நாட்டில் ஒற்றுமையால் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைந்த சுவிஸ் பால் பண்ணையாளர்களின் மனஉறுதி சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

    • பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.
    • நிறைமாத கர்ப்பமாக இருந்த பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது.

    தஞ்சாவூர்:

    உலகில் தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை. தாய்ப்பாசம் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான். இதனை உணர்த்தும் வகையில், தஞ்சாவூரில் கன்றுக்குட்டியை ஆட்டோவில் எடுத்து சென்ற உரிமையாளரை பின்தொடர்ந்து, 5 கி.மீட்டர் தூரத்திற்கு ஓடிய தாய் பசுவின் பாசம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை செக்கடியை சேர்ந்தவர் சபரிநாதன். ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் லெட்சுமி என்ற பசுமாடு ஒன்று உள்ளது. இவர் தனது மாட்டை வீட்டில் ஒரு குழந்தையை போல வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.

    அப்போது, பசு மாடு நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது. இதை தொடர்ந்து, பசுவை வெகுநேரம் காணவில்லை என்று சபரிநாதன் பல பகுதிகளில் தேடி பார்த்தார். அப்போது ஈன்ற கன்றுக்குட்டியுடன் பசு நின்று கொண்டிருந்தை பார்த்தார்.

    இதையடுத்து, கன்றுக்குட்டியை மீட்டு அதை ஆட்டோவில் வைத்து வீட்டிற்கு புறப்பட்டார். இதை கண்ட தாய்ப்பசு பாசத்தினால் ஆட்டோவை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டே சுமார் 5 கி.மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து சென்று ஆட்டோவையும் வழி மறித்தது.

    பின்பு சபரிநாதன், கன்றுக்குட்டியை பசுவிடம் இறக்கி விட்டார். அதையடுத்து, கன்றுக்குட்டியைப் பசுமாடு பாசத்தோடு அரவணைத்து பாலூட்டியது. பின்னர் பசுமாடும், கன்றுக்குட்டியும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்கவும், வியக்கவும் செய்தது. தஞ்சையில் பசு மாட்டின் இந்த பாச போராட்டம், பார்ப்போரை மனம் நெகிழ வைத்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • சுந்தரம்மாள் என்பவருடைய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது.
    • மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    உடுமலை :

    மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் ஆத்தூர் பகுதியில் சுந்தரம்மாள் என்பவருடைய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. சுமார் 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றின் அருகில் மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    இந்த சம்பவம் குறித்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • குருந்தமலை பஞ்சுக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • மாடுகள் 7 அடி உயரமுள்ள குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருந்தமலை பஞ்சுக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன.இப்பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் (22) என்பவர் தனது வீட்டில் மூன்று பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை ரஞ்சித்குமார் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார்.

    மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சினையாக இருந்த மாடு ஒன்று எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாத 7 அடி உயரமுள்ள குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்தது.

    இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயி ரஞ்சித்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார். மேலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.

    தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி கிரேன் மூலமாக சினை மாட்டினை பத்திரமாக மீட்டனர்.  

    • தொடரும் சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி
    • வனத்துறையினர் எச்சரிக்கை

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப் பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது, குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.

    சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

    இந்த சிறுத்தைகள் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம், தேவரிஷிகுப்பம், மயிலாடும்மலை, மேல்மாயில், பரதராமி அடுத்த கொட்டாளம் வனப்பகுதி, டி.பி.பாளையம், கொத்தூர், தனகொண்டபல்லி, சைனகுண்டா, மோர்தானா, கொட்டாரமடுகு உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகள் ஜோடி, ஜோடிகளாக சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

    குடியாத்தம் வனப் பகுதியில் ஆறு ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25 ற்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கிராமங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

    குடியாத்தம் சேம்பள்ளி ஊராட்சி உப்பிரப்பள்ளி பகுதியில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி விவசாயி இவருக்கு சொந்தமான நிலம் உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே உள்ளது இந்த நிலத்தில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை மூன்று நாட்களுக்கு முன்பு சிறுத்தைகள் அடித்துக் கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் அச்சத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் சேம்பள்ளி ஊராட்சி கொட்டார மடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாத்திரி இவருக்கு சொந்தமான நிலம் ஜிட்டப்பள்ளி செக் டேம் அருகே உள்ளது அந்த நிலத்தை ஒட்டியபடி மோர்தானா காப்புக் காடுகள் உள்ளது.

    நேற்று காலையில் தனது பசு மாட்டை மேச்சலுக்கு விட்டுள்ளார் மாலையில் பால் கறப்பதற்காக தனது நிலத்தில் உள்ள பசுமாட்டை தேடிப் சென்ற போது பசுமாட்டை சிறுத்தைகள் கடித்து குதறி கொன்று இருப்பது தெரியவந்தது.

    சிறுத்தைகள் பசு மாட்டை கொன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறையினர் பசு மாட்டை சிறுத்தை கொன்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கொட்டாரமடுகு கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேலைகளிலே அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும்

    இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    • தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்பு
    • உரிமையாளரிடம் பசுமாடு ஒப்படைக்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் வினோத் குமார் இவர் வீட்டில் பசு மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள 80 அடி ஆழமுள்ள விவசாயி கிணற்று அருகே தனது பசு மாட்டை மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட இருந்தார். அப்போது பசு மாடு ஒன்று நேற்று கிணற்றில் திடீரென தவறி விழுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமாரின் குடும்பத்தினர் இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். பின்னர் மாட்டின் உரிமையாளரிடம் பசுமாடு ஒப்படைக்கப்பட்டன.

    • அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது.
    • ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கடலூர்:

    திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு அதே பகுதியில் உள்ள ஆசைத்தம்பி என்பவரது 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பசுமாட்டை 20 அடி ஆழமுடைய தரை கிணற்றில் இருந்து கயிறு மூலமாக ேஜ.சி.பி. எந்திரம் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • தளவாடப் பொருட்களில் இருந்த 20 அடி நீளமுள்ள 37 இரும்பு குழாய்கள் காணாமல் போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமம் பட்டணத்தான் தோட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் என்பவர் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வைத்திருந்த 2 பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கவின் குமார் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில்,பருவாய்ஊராட்சி இடையர்பாளையம் கிராமத்தில் திருப்பதி கார்டன் பகுதியில், சதீஷ் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கான தளவாடப் பொருட்களை வீட்டின் முன்பு போட்டுள்ளார். இந்த நிலையில் தளவாடப் பொருட்களில் இருந்த 20 அடி நீளமுள்ள 37 இரும்பு குழாய்கள் காணாமல் போனது.இதுகுறித்து சதீஷ் காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள கரடிவாவி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது, அந்த வழியே வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்த போலீசார், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, பசுமாடுகள் மற்றும் இரும்பு கம்பிகளை அவர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் மேலும் விசாரணை செய்த போது அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாதாளமுருகன் மகன் பார்த்திபன்(வயது 25) என்பதும் தற்போது கோவை மாவட்டம் சிங்காநல்லூரில், இரும்பு ஆலையில் பணிபுரிந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 பசுமாடுகள் மற்றும் 37 இரும்பு கம்பிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரெங்கராஜ்பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது.


    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 65). விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வெங்கனூர்-ஆத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த முகேஷ் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக அந்த மாடு மீது மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.

    இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கொடுத்து சினைபசுமாடு ஒன்றை வாங்கி வந்தனர்.
    • இவர்கள் வாங்கி வந்த பசு சில நாட்களில் கன்று ஈன்றது. அன்று முதல் இன்று வரை 11 ஆண்டுகளாக பசு காலை, மாலை என இரு வேளையும் தினமும் 6 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. விவசாயி. இவரது மனைவி லட்சுமி தேவி.

    இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கொடுத்து சினைபசுமாடு ஒன்றை வாங்கி வந்தனர். இவர்கள் வாங்கி வந்த பசு சில நாட்களில் கன்று ஈன்றது. அன்று முதல் இன்று வரை 11 ஆண்டுகளாக பசு காலை, மாலை என இரு வேளையும் தினமும் 6 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.

    பொதுவாக கன்று ஈனும் பசுக்கள் 1 முதல் 1½ ஆண்டுகள் மட்டுமே பால் கொடுப்பது வழக்கம். 11 ஆண்டுகளாக பால் கொடுக்கும் பசுவை வெங்கடசாமி லட்சுமிதேவி தம்பதியினர் தங்களது வீட்டிற்கு வந்த மகாலட்சுமியாக நினைத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர்.

    இந்த பசுவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • தாளவாடி அருகே பசு மாட்டை அடித்து கொன்றது
    • 2 மாதமாக அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வன விலங்குகள் வசித்து வரு கின்றன.

    இதில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளி யேறும் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை அடித்து கொல்வது தொடர்கதை யாகி வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடியை அடுத்த சேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி (48) விவசாயி. இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறார்.

    இவர் மாடுகளை தன்னுடைய தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

    அதன்படி வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டார். மதியம் மாடுகள் திடீரென கத்தின. மாடுகளின் சத்தம் கேட்டு நாகமணி தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது அங்கு பசு மாடு ஒன்று கழுத்து, முதுகு போன்ற பகுதியில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மாட்டை புலி அடித்துக்கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வன ச்சரகர் சதீஷ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கால் தடம் புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். எனவே மாட்டை புலி அடித்து க்கொன்றது தெரிய வந்தது.

    கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 நாய், 2 கன்றுக்குட்டி ஆகியவற்றை புலி அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து உள்ளது. மேலும் கடந்த வாரம் மாடு ஒன்றையும் புலி கொன்று உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் கிராமத்துக்குள் புலி புகுந்து மாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் புலி தாக்கி இறந்த மாட்டுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை விவசாயிக்கு வழங்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×