search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருந்தமலை அருகே குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
    X

    குருந்தமலை அருகே குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு

    • குருந்தமலை பஞ்சுக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • மாடுகள் 7 அடி உயரமுள்ள குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள குருந்தமலை பஞ்சுக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன.இப்பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் (22) என்பவர் தனது வீட்டில் மூன்று பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை ரஞ்சித்குமார் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார்.

    மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சினையாக இருந்த மாடு ஒன்று எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாத 7 அடி உயரமுள்ள குடிநீர் வால்வு தொட்டியில் விழுந்தது.

    இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயி ரஞ்சித்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயற்சி செய்துள்ளார். மேலும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.

    தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி கிரேன் மூலமாக சினை மாட்டினை பத்திரமாக மீட்டனர்.

    Next Story
    ×