search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசு மாட்டை மீண்டும் அடித்து கொன்ற சிறுத்தைகள்
    X

    பசு மாட்டை மீண்டும் அடித்து கொன்ற சிறுத்தைகள்

    • தொடரும் சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி
    • வனத்துறையினர் எச்சரிக்கை

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப் பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது, குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.

    சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

    இந்த சிறுத்தைகள் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம், தேவரிஷிகுப்பம், மயிலாடும்மலை, மேல்மாயில், பரதராமி அடுத்த கொட்டாளம் வனப்பகுதி, டி.பி.பாளையம், கொத்தூர், தனகொண்டபல்லி, சைனகுண்டா, மோர்தானா, கொட்டாரமடுகு உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகள் ஜோடி, ஜோடிகளாக சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

    குடியாத்தம் வனப் பகுதியில் ஆறு ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25 ற்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கிராமங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

    குடியாத்தம் சேம்பள்ளி ஊராட்சி உப்பிரப்பள்ளி பகுதியில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி விவசாயி இவருக்கு சொந்தமான நிலம் உப்பிரப்பள்ளி- தட்டப்பாறை கூட்ரோடு ஊத்துமலை அருகே உள்ளது இந்த நிலத்தில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை மூன்று நாட்களுக்கு முன்பு சிறுத்தைகள் அடித்துக் கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் அச்சத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் சேம்பள்ளி ஊராட்சி கொட்டார மடுகு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாத்திரி இவருக்கு சொந்தமான நிலம் ஜிட்டப்பள்ளி செக் டேம் அருகே உள்ளது அந்த நிலத்தை ஒட்டியபடி மோர்தானா காப்புக் காடுகள் உள்ளது.

    நேற்று காலையில் தனது பசு மாட்டை மேச்சலுக்கு விட்டுள்ளார் மாலையில் பால் கறப்பதற்காக தனது நிலத்தில் உள்ள பசுமாட்டை தேடிப் சென்ற போது பசுமாட்டை சிறுத்தைகள் கடித்து குதறி கொன்று இருப்பது தெரியவந்தது.

    சிறுத்தைகள் பசு மாட்டை கொன்ற சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் நேதாஜி உள்ளிட்ட வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்ளிட்ட வருவாய் துறையினர் பசு மாட்டை சிறுத்தை கொன்ற பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கொட்டாரமடுகு கிராமத்தை ஒட்டியபடி வனப்பகுதி உள்ளதால் மாலை வேலைகளிலே அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும்

    இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறத்தில் இருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    Next Story
    ×