என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூசத் திருவிழா"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பனி, குளிரை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞானசபையையும், பசிப்பிணி போக்க சத்ய தருமசாலையும் நிறுவினார். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டு தோறும் தைப்பூசவிழா நடைபெறும். இந்த ஆண்டு 155-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெற்றது.

    இந்தநிலையில் நேற்று வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும், சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து ஞான சபையில் கொடியோற்றம், பார்வதிபுரம் கிராமமக்கள் சார்பில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மசாலை மேடையில் திருவருட்பா இன்னிசையும், இரவு 6 மணி முதல் 9 மணி வரை சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.

    தைப்பூச விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 மணி என 6 காலம் 7 திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு ஜோதி தரிசனம் பெற்றனர்.

    தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு நாளைமறுநாள் (3-ந்தேதி) மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

    முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை (பேழை) பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச விழாவையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பனி, குளிரை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். 

    • உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
    • இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில்,

    தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.

    இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    • பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    தை மாதம் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆங்காங்கே இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    • தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை, கருங்குழி, வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு காட்ட வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞானசபையையும், பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூசவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு 155-வது தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக ஜனவரி 24-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலும், தருமச்சாலையில் ஜனவரி 27முதல் 30-ந்தேதி வரை, அருட்பா முற்றோதலும் நடைபெற்றது.

    இன்று(சனிக்கிழமை) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது.

    மதியம் 1 மணி அளவில் திருவருட்பா இன்னிசை நடைபெற்றது. இரவு, 6 மணி முதல் 9 மணி வரை தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10மணி, மறுநாள் திங்கள் காலை 5.30 ஆகிய 6 காலம், 7 திரை நீக்கிய ஜோதி தரிசனம், நடைபெறுகிறது. இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரளுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின்பல பகுதியில் சிறப்பு பஸ்கள், மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தைப்பூசத்தன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையிலும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறுகிறது.

    இதில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட அரசு உயர்நிலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

    முன்னதாக வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறைஉள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன் மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கடைகளில் அலுமினிய பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள், பழக்கடைகள், அவல் பொறிகடை, டெல்லி அப்பளம் கடைகள், சர்க்கஸ் கூடாரங்கள், நடன நாட்டிய அரங்குகள், சிறுவருக்கான ராட்டினம் தொடங்கி பிரம்மாண்ட கடைத்தெருக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் அறங்காவலர் குழுத் தலைவர் அழகானந்தம், செயல்அலுவலர் ராஜா சரவணக்குமார், அறங்காவலர்கள் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

    • நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், வழிபாடு செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலை வாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. நாளை தைப்பூச திருவிழாவில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே, கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வருபம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலாவும் நடக்கிறது.

    • பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.

    முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு தெப்பத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் வழியாக சுவாமி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் எழுந்தருள தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

    • கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர்.
    • 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் முதல் 6-ம் நாள் வரை காலையில் தங்க பல்லக்கில் சுவாமி வீதிஉலா வந்தார். 6-ம் நாளான 24-ந்தேதி வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

    அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. 7-ம் நாளான 25-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரமே விழாக்கோலம் பூண் டு காணப்பட்டது. குறிப்பாக தேவகோட்டை பகுதியில் இருந்து நகரத்தார் ஒருங்கிணைந்து பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பாத யாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.

    அதன்படி கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர். 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

    தொடர் விடுமுறை காரணமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மலைக்கோவில் என எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூச திருவிழாவில் இன்றிரவு தெப்பதேரோட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் கொடியிறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.

    • எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
    • பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலம், எடப்பாடி, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதராஜகுல காவடிக்குழுவைச் சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தருவார்கள்.

    தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர் வருகை தரும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி இருந்து தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். இவர்களில் அன்னதானக்குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் உள்ளனர்.

    இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்வதற்கு 1 நாள் முன்னதாகவே பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.


    இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக அவர்கள் பழனி சண்முக நதி பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது சண்முக நதியில் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுடன் பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.

    அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரிச்சம்பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவைகளை கொண்டு ராட்சத அண்டாக்களில் கலந்து சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்த பின்னர் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அதனை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்து பின்னர் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்து செல்வார்கள். மலைக்கோவிலில் மலர்களால் கோலமிடும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகப்பெருமானுக்கும் உகந்த வழிபாட்டு நாளாகும்.
    • உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாளும் இதுவே.

    பவுர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. தை மாத பவுர்ணமியான தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்கிற இந்த ஆறு மாத காலத்தை 'உத்திராயன புண்ணிய காலம் என்று கூறுவார்கள். இந்த புண்ணிய காலத்தில் வருகிற முதல் பவுர்ணமி, தை மாத பவுர்ணமி ஆகும்.

    இதனால் நம் விருப்ப தெய்வங்களின் நேரடிப் பார்வை நம் மீது படும் யோகம் உண்டாகி, நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். நல் வாய்ப்புகள் எளிதாகக் கிட்டும்.


    தை அமாவாசை போல தை பவுர்ணமி விரதத்திற்கும் அதிகமான பலன்கள் உண்டு. பவுர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில் நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.

    அப்படிப்பட்ட சக்தி மிகுந்த நாளில், நாம் வழிபாடு செய்வது தீய சக்திகளி டம் இருந்து நம்மைக் காக்கும். பவுர்ணமி நன்னாளில் வழிபாடு செய்தால் வாழ்வில் இதுவரை அடைந்த துன்பங்கள் அனைத்தும் விலகும்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் தை மாதம் வரும் பவுர்ணமி, பூச நட்சத்திரத்துடன் இணைந்து, 'தைப்பூசம்' என்று வழிபடப்படுகிறது.

    இந்த தைப்பூசமானது, சிவபெருமானுக்கு மட்டுமின்றி, முருகப்பெருமானுக்கும் உகந்த வழிபாட்டு நாளாகும். சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள், தைப்பூசமாகும்.

    உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாளும் இதுவே. தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரிய வர். அவர் அறிவுக் கடவுள்' என்று போற்றப்படுகிறார்.

    எனவே பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி அமையும் நாளான தைப்பூசத்தன்று, புண்ணிய திருத்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் அறிவாற்றல் பெருகும். மனக்குழப்பம் அகலும் என்பது ஐதீகம்.

    தை மாத பவுர்ணமியில் விரதம் இருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி சூரிய பகவானை வழிபட வேண்டும். அப்போது வெல்லம் கலந்த பாயசம் செய்து, அதை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும்.


    தை மாதம் வரும் பவுர்ணமியில் திருவிடைமருதூர் திருக்கோவிலில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனுக்கு காவடி எடுக்கப்படும். திருச்சேரை சாரநாதப் பெருமாள் கோவிலில், தைப்பூசம் அன்று காவிரிக்கு இறைவன் காட்சி தந்த நாளாகக் கருதி, தேர் திருவிழா நடத்தப்படுகிறது.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், ஒரு தை மாதவெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரம் அன்றுதான் இறை ஒளியுடன் கலந்தார். எனவே வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத் தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலாரை வழிபடுவார்கள்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருநாளையொட்டி முதல் நாளில் சந்திரசேகர சுவாமி தெப்போற்சவமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலர் தெப்போற்சவமும் நடைபெறும்.

    சிதம்பரத்திற்கு திருப்பணிகள் செய்த இரணியவர்மன் என்ற மன்னன், நேருக்கு நேராக நடராஜரின் தரிசனத் தைக் கண்ட நாள் தை மாத பவுர்ணமி ஆகும்.

    இந்த நாளில் சமயபுரம் மாரியம்மன், வட திருக்காவிரிக்கு எழுந்தருளி, அண்ணனாகிய அரங்கநாதரிடம் இருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்றுத் திரும்பும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.

    ×