வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பனி, குளிரை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Published on

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞானசபையையும், பசிப்பிணி போக்க சத்ய தருமசாலையும் நிறுவினார். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டு தோறும் தைப்பூசவிழா நடைபெறும். இந்த ஆண்டு 155-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும், சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து ஞான சபையில் கொடியோற்றம், பார்வதிபுரம் கிராமமக்கள் சார்பில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மசாலை மேடையில் திருவருட்பா இன்னிசையும், இரவு 6 மணி முதல் 9 மணி வரை சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.

தைப்பூச விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 மணி என 6 காலம் 7 திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு ஜோதி தரிசனம் பெற்றனர்.

தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு நாளைமறுநாள் (3-ந்தேதி) மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை (பேழை) பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

தைப்பூச விழாவையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பனி, குளிரை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com