search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் வாக்குறுதிகள்"

    • கீழக்கரையில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நகராட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கீழக்கரை நகர் மன்ற தலைவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் கீழக்கரை மக்களுக்கு 8 வாக்குறுதிகள் அளித்தனர். அதில் கீழக்கரை நகருக்கு பல்நோக்கு மருத்துவமனை கொண்டு வருதல், அரசு கட்டிடத்தில் பெண்களுக்கு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருதல், பாதாள சாக்கடை திட்டம், கீழக்கரை விரிவடைந்த பகுதிகளில் மின்விளக்கு அமைத்து தருதல், இளைஞர்களுக்கு அதி நவீன விளையாட்டு மைதானம், நூலகம், பல்நோக்கு மருத்துவமனை, மின் கட்டண செலுத்தும் முறையை ஊருக்கு கொண்டு வருதல், கீழக்கரை நகராட்சி சார்பாக அரசு பள்ளி போன்றவை வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 வருடம் நெருங்கி வரும் நிலையில் ஒரு வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

    போர்க்கால அடிப்படையில் அரசு சார்ந்த நிலங்களில் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்ற வேண்டும். கீழக்கரையில் வெறிபிடித்த நிலையிலும், நோய் வாய்பட்ட நிலையி லும் நாய்கள் சுற்றித் திரிகிறது. இதனால் குழந்தைகளை பொது மக்கள் பள்ளிக்கு விட கூட அச்சப்படுகிறார்கள். இதற்கு முன்பு நாய்க்கு கடித்து இறப்பும் நடந்துள்ளது. நாய்கள் விஷயத்தில் நகராட்சி கவனம் செலுத்தி முழுமையாக இதனை சரி செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், மேலும் வடக்கு தெருவில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை விழுவதற்கு முன்பு இடித்துவிட்டு புதிதாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும். பொதுமக்களிடையே மனுக்கள் வாங்கி சரி செய்வது வரவேற்கத்தக்கது மனுகளோடு நின்றுவிடாமல் அதற்குண்டான என்னென்ன தீர்வு செய்தோம் என்று அடுத்த கூட்டத்தில் சேர்மன் துணை சேர்மன் கீழக்கரை பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும்.
    • மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    தேர்தல் நேரத்தில் கொடுத்தபடி தி.மு.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும், மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும், குஜராத் மாநிலம் போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மன்னார்குடி தேரடியில் மாவட்டத் தலைவர் ச. பாஸ்கர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ரகுராமன் வரவேற்றார்.

    மாவட்ட பொது செயலாளர்கள் வி.கே. செல்வம், சி. செந்தில் அரசன், எஸ். ராஜேந்திரன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பால பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், வெளிநாடு, வெளி மாநில தமிழர் நலப் பிரிவு தலைவர் போல்ட் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை பி. சிவா கலந்து கொண்டு பேசினார்.

    போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். ராகவன், சி.எஸ். கண்ணன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கோ. உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சிவ. காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி. சந்துரு, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர். துரையரசு, ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் எல்.எஸ்.பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்தப் போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ரஜினி கலைமணி, சி. ரெங்கதாஸ், கே.டி. ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×