search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னாப்பிரிக்கா"

    • மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
    • இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது.

    கேப்டவுன்:

    தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரைந்து வந்தனர்.

    இந்தநிலையில் இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன.

    அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது. இதனால் அதை குடிக்கும் குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளன.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்  311 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து பந்து வீச்சை மாளிக்க முடியாமல் திணறியது. 39.5 ஓவர்களில் 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது. 

    தென் ஆப்பிரிக்க அணியில் அதிக பட்சமாக தொடக்க வீரர் டி காக் 68 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் ஆக பென் ஸ்டோக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷியா, சீனா, அங்கோலா, அர்ஜெண்டினா ஆகிய நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். #PMModi #BRICS #IndiaatBRICS
    ஜோகன்னஸ்பெர்க்:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    மேலும், மாநாட்டில் பார்வையாளராக அங்கோலா, அர்ஜெண்டினா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களிடம் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.



    தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அங்கோலா ஜாவோ, அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்னாப்பிரிக்க அதிபர் உடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் இன்று மகாத்மா காந்தி தனது அமைதி போராட்டத்தை தொடங்கிய பீனிக்ஸ் செட்டில்மெண்டில் செடிகளை நட்டினார். #SushmaSwarajinSouthAfrica #Johannesburg #BRICS
    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.


    இந்நிலையில், இன்று டர்பன் பகுதியில் உள்ள பாரம்பரிய இடமான பீனிக்ஸ் செட்டில்மெண்ட் பகுதியில் செடிகளை நட்டினார். இந்த பகுதியில் தான் மகாத்மா காந்தி தனது அகிம்சை போராட்டத்தை தொடங்கினார். காந்தியின் நினைவாக அங்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் அடிமை நாடாக சிக்கிக்கிடந்த தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் 125-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பீய்ட்டெர்மார்ட்டிஸ்பர்க் ரெயில் நிலையம் பகுதியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளிலும் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். #SushmaSwarajinSouthAfrica  #Johannesburg  #BRICS
    பண்டைய பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக பள்ளி மாணவிகள் குழுவாக நின்று பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த தென்னாப்பிரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    ஜோகன்ஸ்பர்க்:

    தென்னாப்பிரிக்காவில் ஹோசா என்ற இனக்குழு அந்நாட்டின் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும். இதனால், பல முக்கிய விவகாரங்களில் இந்த இனக்குழு தலைவர்களை அனுசரித்தே அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஹோசா இன பள்ளி மாணவிகள் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர்.

    பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக மாணவிகள் நின்று பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவிகளின் அந்தர உறுப்புகள் வெளிப்படையாக தெரியும் வண்ணம் பொது நிகழ்ச்சியில் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



    இந்நிலையில், இவ்விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அடிப்படை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். எங்கள் இனக்குழுவின் பாரம்பரியமான இந்த செயலால் நாங்கள் பெருமையடைகிறோம் என ஒரு ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
    ×