search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக் கோப்பை கிரிக்கெட்- இங்கிலாந்து விறுவிறுப்பான ஆட்டம்
    X

    உலகக் கோப்பை கிரிக்கெட்- இங்கிலாந்து விறுவிறுப்பான ஆட்டம்

    லண்டனில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் முதல் ஆட்டத்தில், துவக்க விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தபோதிலும், இங்கிலாந்து அணி விறுவிறுப்பாக ஆடி வருகிறது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கியது.

    உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பை பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.


    முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர் பேர்ஸ்டோ 2வது பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் ஜேசன் ராயுடன், ஜோ ரூட் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து ஆடினர். 9-வது ஓவரில் 50 ரன்னை எட்டியது.
    Next Story
    ×