என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள் போராட்டம்"
- மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
- நாங்கள் பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம்.
கோவை:
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இந்த 100 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட தூய்மை பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகிறார்கள். மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற கோரியும், கலெக்டர் அறிவித்த ரூ.721 ஊதிய உயர்வு சம்பளத்தை வழங்க கோரியும் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து இன்று 400-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தூய்மை பணியார்கள் கோவை-அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி. மைதானத்திற்கு வந்தனர்.
பின்னர் வாகனங்களை அங்கு நிறுத்தி விட்டு மைதானத்தில் அமர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-
நாங்கள் பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களை நிரந்த பணியாளர்களாக மாற்ற பலமுறை கோரிக்கை விடுத்தோம்.
இதுவரை மாநகராட்சி எங்களது போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லை.
மேலும் எங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது என்று தெரிவித்தும் போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்தி ரூ.721 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அந்த சம்பளத்தையும் இதுவரை வழங்கவில்லை.
எனவே எங்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்த சம்பளமான ரூ.721-யை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களாக உள்ள எங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை எங்களது காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக கோவை மாநகரில் பல இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
- ஊதிய உயர்வு இல்லாமல் தூய்மை பணியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
- ஒரே மாதிரியான வேலைக்கு அனைவருக்கு ஒரே மாதிரியான சம்பளத்தை வழங்க வேண்டும்.
கோவை:
கோவை மாநகரில் 100 வார்டுகள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் தேங்கும் குப்பைகளை அகற்றுவது உள்பட பல்வேறு பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
கோவை மாநகராட்சியில் 2,400 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1,800 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரியும், பல ஆண்டுகளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருபவர்களை நிரந்த ஊழியர்களாக ஆக்கவும் வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊதிய உயர்வு இல்லாமல் தூய்மை பணியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணியை தனியார் மயமாக்க உள்ளது.
இதனை கைவிட வலியுறுத்தியும், ஆண்டுக்கணக்கில் கூலி தொழிலாளர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு இருந்து ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக கருப்புகொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த ஊர்வலத்தை கோவை-ஓசூர் சாலையில் அ.தி.மு.க. அலுவலகம் அருகே தடுப்புகள் வைத்து அடைத்து போலீசார் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-
தமிழக அரசு தூய்மை பணியை தனியார் மயத்திடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர் நிரந்தர பணியிடங்களை தனியாருக்கு, தாரை வார்க்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையானது தூய்மை பணியாளர்களுக்கு எதிரானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், தூய்மை பணி தனியார் மயத்தையும் கைவிட வேண்டும்.
ஒரே மாதிரியான வேலைக்கு அனைவருக்கு ஒரே மாதிரியான சம்பளத்தை வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக எங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தூய்மை பணி யாளர்கள் பணிகளுக்கு செல்லாததால் திருக்கோவில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
- கோவில் அதிகாரிகள் மே 1 ஆம் தேதி ஊதிய உயர்வு தருவதாக உறுதி அளித்தனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 330 தூய்மை பணியாளர்கள் படிப்பாதை, மலை க்கோவில், மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையம், பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிலையம், கோவில் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்பட வில்வலை. இது குறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் இன்று அதிகாலை 5 மணி முதல் தூய்மை பணியில் ஈடுபடச் செல்லாமல் அவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற உள்ளதால் பெரும்பாலும் தூய்மை பணியாளர்களே உண்டியல் பெட்டிகளை தூக்கிச் செல்வது நாணயங்களை பிரித்து தருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருவார்கள். இந்த நிலையில் தூய்மை பணி யாளர்கள் பணிகளுக்கு செல்லாததால் திருக்கோவில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில் அதிகாரிகள் மே 1 ஆம் தேதி ஊதிய உயர்வு தருவதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் தற்காலிகமாக பணிக்கு திரும்பினர்.
- கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மற்ற மாவட்டங்களில் அளிக்கப்படும் குறைந்தபட்ச கூலியை விட குறைவாக உள்ளது.
கோவை:
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ. 750 வழங்க கோரி, சமூக நீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மற்ற மாவட்டங்களில் அளிக்கப்படும் குறைந்தபட்ச கூலியை விட குறைவாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஊராட்சியில் 8 மணி நேரம் பணிபுரியும் பணியாளர்களுக்கு வெறும் 80 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்களுக்கு ரூ.325் மட்டும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை. எனவே மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவை சுண்டப்பா ளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-
கோவை மாவட்டம் சுண்டப்பாளையம் ரோட்டில் மசுரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. பலதரப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 200 குடும்பத்தினர் தினசரி, வார மற்றும் மாதம் அமாவசை, பவுர்ணமி தினங்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் கோவிலை அகற்ற போவதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். எனவே கோவிலை அகற்றாமல் வழிபாடு மேற்கொள்ள நிரந்தர தீர்வு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்