search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் பயன்பாடு"

    • அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம்.
    • மின்காந்த கதிர்வீச்சுகள் ஆபத்தானது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம். ஷாப்பிங் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்துமே உட்கார்ந்த இடத்திலிருந்து செல்போன் வைத்து முடித்து விடுகிறோம். ஒரு பக்கம் இதனால் நாம் சோம்பேறியாக மாறினாலும் இன்னொரு பக்கம் நமக்கே தெரியாமல் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஏன்...? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன...? என்பதை பற்றி பார்க்கலாம்.

     செல்போனை பெரியவர்களே அதிகம் உபயோகிப்பது தவறு, அதிலும் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்த செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

    நாம் குழந்தைகளுக்கு அருகில் மொபைல் போன்களை வைத்து சோறு ஊட்டும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டும் இல்லாமல் செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் புற உதாக்கதிர்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

    அதிலும் குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு அதிக அளவு கதிர்வீச்சுகளை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது.

    குழந்தைகள் மீது இந்த புற ஊதாக்கதிர்கள் தாக்கும் போது அவர்கள் கண்கள் பாதிப்படையக் கூடும். மேலும் இது தூக்கமின்மை, மூளை செயல்பாடு, அறிவுத்திறன் மற்றும் நடத்தையை கூட சில நேரங்களில் பாதிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது தெரியாமல் பெற்றோர்கள் பலரும் குழந்தைகள் அழுகையை நிறுத்த பயன்படுத்தும் ஆயுதமாகவே செல்போன் மாறிவிட்டது.

    அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம், மனநல குறைபாடு, குழப்பம் மற்றும் சிந்தனை தடைபடுதல் ஏற்படலாம் மற்றும் உடல் செயல்பாடு குறைவதால் உடல் பருமன் மற்றும் மோசமான எலும்பு ஆரோக்கியம் ஏற்படும்.

    செல்போனில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரை அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.

    அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உபயோகிக்க கொடுக்கலாம். அதேபோல வீட்டில் அனைவரும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

    • ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.
    • குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள்.

    இருபத்தைந்து வயதானாலும் பலர் மொபைல் போனில் புது புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது.

    அதேநேரம் பல் முளைக்காத சின்னஞ்சிறுசுகள் செல்போன் கேட்டு அடம் பிடிப்பதையும் செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகி விடுவதையும் வீடுகள் தோறும் காண முடிகிறது. செல்லுக்கு கட்டுப்படும் குழந்தைகள் தாயின் சொல்லுக்குகூட கட்டுப்படுவது இல்லை. அந்த குழந்தைகளே செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் போன்ற படங்களை பார்த்தும் ரசிக்கிறது.

    அதை பார்த்ததும் 'ஆஹா... என் பிள்ளையின் ஆற்றலைப் பார்...! என்று பெருமைப்படும் பெற்றோரும் உண்டு. என் குழந்தைகள் எப்போதும் செல்போனில்தான் விளையாடும். அவனுக்கு செல்போனை கையில் கொடுத்தால் போதும் இரவில் கூட பக்கத்தில் வைத்து கொண்டுதான் தூங்குவான். 'என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும். செல்போனை கையில் கொடுத்தால்தான் சாப்பிடும்..." இது தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதி!

    ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோபசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.

    ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள்.

    நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது.

    உலகம் முழுவதும் செல்போன் விற்பனை செய்யும் உலக கோடீசுவரரான டிம் குக் தனது குழந்தைக்கு விளையாட செல்போன்கள் கொடுப்பதில்லை என்பதை நம்ப முடிவதில்லை.

    ஆனால் குழந்தையின் ஆரோக்கியம் கருதி செல்போன் கொடுப்பது கிடையாது என்பதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா பெருந்தொற்று காலகட்டம்தான் பலரையும் கட்டாயமாக செல்போனுக்குள் மூழ்க வைத்தது.

    ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் செல்போன்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. எனவேதான் தேவைக்கான என்ற நிலை மாறி செல்போன்களிலேயே மூழ்க வைத்து விட்டது.

    குழந்தைகள் செல்போன்களின் ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்த்து கொண்டிருந்தால் அவர்களுக்கு பல், கண் பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடுகள் ஏற்படலாம்.

    பேச்சு திறன் குறையும். மற்றவர்களோடு பேசும் திறன் குறையும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து பழகவோ, விளையாடவோ முடியாமல் தனிமைப்பட்டு விடுகின்றன.

    குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பில் சுமார் 60 சதவீத குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்களாம். அதிலும் 31 சதவீதம் பேர் 2 வயதுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கி விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    குழந்தை பருவம் என்பது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மூளை செல்களை வலுப்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கட்டமாகும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் எந்நேரமும் அல்லது அதிக நேரம் போன்களில் மூழ்கி இருக்கும் போது, அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை தவிர்க்கிறார்கள்.

    தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு செய்ய கூடியது. அதிலும் குறிப்பாக Blue light radiation-க்கு தொடர்ந்து கண்களை வெளிப்படுத்துவது, ஒருவரது விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை பாதிக்கிறது. தவிர குறுகிய கால நினைவாற்றலில் (short-term memory) குறுக்கிடுகிறது.

    இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியேறும் புளூ ரேடியேஷன்ஸ், இது இரவல்ல பகல் என்று மூளையை நம்ப வைக்கிறது. இதனால் உடல் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே அடுத்த நாள் தூக்கமின்றி களைப்பாகவும் எந்த வேலையையும் முழு திறனில் செய்ய முடியாமலும் ஒருவர் பாதிக்கப்படுவார்

    செல்போனில் மூழ்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்துள்ளதால் பள்ளிகளுக்கு ஓரிரு நாள் விடுமுறை கிடைத்தாலே ஏன்தான் விடுமுறை விட்டார்களோ என்று நினைக்கிறார்கள்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை வர உள்ளது. இதில் 85 சதவீத குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடப்பார்களே என்று பெற்றோர்கள் கவலையில் மூழ்கி இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

    அமேசான் நிறுவனம் நாடு முழுவதும் 10 மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 2 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் 750 பெற்றோரிடம் ஆய்வை நடத்தி உள்ளது.

    செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களில் மூழ்கும் போது குழந்தைகளிடம் சுறுசுறுப்பான உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதாக 90 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    2 மணி நேரம் வரை செல்போன்களை பயன்படுத்தலாம் என்று கூறும் நிலையில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    96 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு அழைத்து செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    82 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகள் கவனத்தை திசை திருப்பி வேறு எந்தவிதமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

    இதில், குழந்தைகள் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 50 சதவீத பெற்றோரும், நல்லொழுக்கம் மற்றும் சமூக பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டுமென 45 சதவீத பெற்றோரும், நடனம், பாட்டு, இசைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 36 சதவீத பெற்றோரும், கலை மற்றும் கைவினை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும் விருப்பம் கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது' என்றார்.

    • பறிமுதல் செய்யப்படும் செல்போன்களை மீண்டும் ஒப்படைக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோவிலுக்குள் செல்ல கூடாது என பக்தர்களுக்கு அறிவுரை.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்க கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அனைத்து வழிமுறைகளும், திருச்செந்தூர் கோயிலில் மூன்று நாட்களில் அமல்படுத்தப் படும் என கூறினார். 

    எடுத்தவுடன் பறிமுதல் செய்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால், செல்போன் கொண்டு செல்ல கூடாது என்று பக்தர்களுக்கு முதலில் அறிவுரை வழங்கப்படும் என்றார். மேலும் பக்தர்களின் செல்போன்களை வைப்பதற்கு பலகைகள் மற்றும் செல்போன்கள் குறித்து அறிவதற்கான ஸ்கேனிங் மெஷின் போன்றவை ஆர்டர் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    அதேபோல் பக்தர்கள் ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கோயிலுக்குள் செல்ல கூடாது என்பது உள்பட உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் பக்தர்களிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் மேன்மையானவர்களாய் திகழ வேண்டும். சிந்தனைகள் சிதறும் போதே ஒழுங்கீனம் மேலோங்குகிறது.
    • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

    முகாம் நிறைவு நாளன்று கொங்கு நகர் சரக உதவி ஆணையர் அனில்குமார் பேசியதாவது: -

    ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் படிக்கும் முதன்மை பள்ளியில் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதே பெருமைப்பட வேண்டிய விஷயம். படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் மேன்மையானவர்களாய் திகழ வேண்டும். சிந்தனைகள் சிதறும் போதே ஒழுங்கீனம் மேலோங்குகிறது.

    இதற்கு முக்கிய கருவியாக இருக்கும் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்த்தல் நல்லது. தேவையறிந்து பயன்படுத்துவது நல்லது. பாதுகாப்பு மிக அவசியம். இடர்பான சூழ்நிலையிலும் தைரியமாக இருக்க வேண்டும். எங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ×