search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமரூன் கிரீன்"

    • ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 164 ரன்னில் சுருண்டது.
    • நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீனின் பொறுப்பான சதத்தால் 383 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 179 ரன்களில் ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் 71 ரன்னும், மேட் ஹென்றி 42 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 2வது இன்னிங்சில் 164 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நாதன் லயன் 41 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி வெற்றிபெற 369 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2வது இன்னிங்சில களமிறங்கிய நியூசிலாந்து மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 56 ரன்னுடனும், டேரில் மிட்செல் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் நியூசிலாந்து வெற்றிபெற 258 ரன்கள் தேவை என்பதால் உள்ளூர் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • கிளென் பிலிப்ஸ் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • நாதன் லயன் அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார்.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்றுமுன்தினம் வெலிங்டனில் தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்னில் சுருண்டது.

    கவாஜா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நைட்வாட்ச்மேன் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 41 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய கிரீன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டிராவிஸ் ஹெட் 29 ரன்னில் வெளியேற, மிட்செல் மார்ஷ் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அலேக்ஸ் கேரி 3 ரன்னிலும், ஸ்டார்க் 12 ரன்னிலும், கம்மின்ஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா அடுத்த 37 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனால் மொத்தமாக ஆஸ்திரேலியா 368 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    முன்னதாக,

    கேமரூன் கிரீன் சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 103 ரன்னுடனும், ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய கிளென் பிலிப்ஸ்

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஹேசில்வுட் உறுதுணையாக இருந்தார். கேமரூன் கிரீன் 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 174 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கடைசி விக்கெட்டுக்கு கிரீன்- ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு மெக்ராத்- கில்லஸ்பி ஜோடி 114 ரன்கள் சேர்த்ததே அதிக பட்சமாக இருந்தது.

     கேமரூன் கிரீன்

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.

    அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 4 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும், லபுசேன் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    • முதல் இன்னிங்சில் கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்தார்.
    • நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்த நியூசிலாந்து சொற்ப ரன்களில் சுருண்டது.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கேமரூன் கிரீன் சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. கேமரூன் கிரீன் 103 ரன்னுடனும், ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேமரூன் கிரீன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஹேசில்வுட் உறுதுணையாக இருந்தார். கேமரூன் கிரீன் 150 ரன்னை கடந்தார். கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட் 22 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 115.1 ஓவர்களில் 383 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 174 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கடைசி விக்கெட்டுக்கு கிரீன்- ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2004-ம் ஆண்டு மெக்ராத்- கில்லஸ்பி ஜோடி 114 ரன்கள் சேர்த்ததே அதிக பட்சமாக இருந்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து திணறியது. அந்த அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் பிலிப்ஸ்- ப்ளண்டெல் ஜோடி நிதானமாக விளையாடியது. பிலிப்ஸ் அரை சதம் அடித்தார்.

    அவர் 72 ரன்னிலும், ப்ளெண்டெல் 33 ரன்னிலும், ஹென்றி 42 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனால் நியூசிலாந்து 43.1 ஓவரில் 179 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    கேமரூன் கிரீன்

    204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா 4 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும், லபுசேன் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்து இருந்தது. கவாஜா 5 ரன்னுடனும், நாதன் லயன் 6 ரன்னுடனும் களத்தில இருந்தனர். தற்போது வரை ஆஸ்திரேலியா 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • ஸ்மித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.மார்னஸ் லபுசேன் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
    • மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்கடனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இணைந்து 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுசேன் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். கிரீன் களம் இறங்கியதும் கவாஜா 33 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த டிராவிஸ் ஹெட் ஒரு ரன்னில் வெளியேற ஆஸ்திரேலியா 89 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு கேமரூன் க்ரீன் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஒருபுறம் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் கேமரூன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்ய முடியவில்லை.

    ஹென்றி

    ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் சேர்த்துள்ளது. கேமரூன் க்ரீன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹேசில்வுட் ரன்ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.

    அலேக்ஸ் கேரி 10 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 9 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வில்லியம் ஓ'ரூர்கே, ஸ்காட் குக்கெலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரச்சின் ரவிந்திரா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    • முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி பகல்- இரவு போட்டியாக நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் நெகடிவ் முடிவு வரவில்லை என்றாலும் அவர்களால் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முழுமையாக பேட்டிங் செய்து 10- 20 ஓவர்களை வீசும் வீரர் இந்தியாவிடம் இல்லை.
    • பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை.

    பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் போல வீரர் இல்லாததே வெளிநாடுகளில் இந்தியா தடுமாறுவதற்கான காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா சொந்த மண்ணில் மிகச் சிறந்த கலவை மற்றும் பேலன்ஸ் கொண்டிருப்பதால் அபாரமாக செயல்படுகிறது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ் போன்ற ஒரு வீரர் அவர்களிடம் இல்லை. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் 6 - 7வது இடத்தில் பேட்டிங் செய்து ஸ்விங் பந்துகளை வீசும் வீரர் இல்லை. அதாவது லேசாக பேட்டிங் செய்யும் பவுலர் அல்லாமல் முழுமையாக பேட்டிங் செய்து 10- 20 ஓவர்களை வீசும் வீரர் அவர்களிடம் இல்லை. அதுவே சொந்த மண்ணுக்கு வெளியே இந்தியாவை தடுமாற வைக்கிறது.

    ஏனெனில் அவர்களிடம் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களும் சுப்மன் கில் போன்ற வருங்கால சூப்பர் ஸ்டார்களும் இருக்கின்றனர். ஆனாலும் வெளிநாட்டு மண்ணில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இருந்தால் தான் இந்தியா பேலன்ஸ் நிறைந்த அணியாக மாறும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா முழுமையாக ஃபிட்டாக விளையாடியிருந்தால் அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்தி தொடர்ந்து அசத்தியிருப்பார்.

    அதே போல ஜஸ்பிரித் பும்ரா கம்பேக் கொடுத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். காயங்கள் எதுவுமில்லாத போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அளவுக்கு அவர் மிகச்சிறந்த பவுலர். எனவே இது போன்ற சீனியர் மற்றும் இளம் வீரர்களுடன் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 ஆல் ரவுண்டர்கள் இருப்பது சொந்த மண்ணில் இந்தியாவை மிகவும் வலுவான அணியாக காட்சிப்படுத்துகிறது.

    என்று கூறினார். 

    • இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி தடுமாறியது. பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
    • குஜராத் அணி கடும் சவாலாக இருக்கும். ஆனால் மும்பை அணி தனது திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது.

    இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    மும்பை அணி 14 ஆட்டத்தில் 8 வெற்றி, 6 தோல்வி பெற்று 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வெளியேறுதல் சுற்றில் லக்னோவை தோற்கடித்தது.

    இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணி தடுமாறியது. பின்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இது தொடர்பாக மும்பை அணியின் ஆல்ர வுண்டர் கேமரூன் கிரீன் கூறியதாவது:-

    இத்தொடரை நாங்கள் மெதுவாக தொடங்கிேனாம். ஆனால் சரியான நேரத்தில் உச்சத்தை அடைய வேண்டும். அந்த எழுச்சியை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

    சூர்யகுமார் யாதவுடன் பேட்டிங் செய்வது எளிதான வேலை என்று நினைக் கிறேன். குஜராத் ஒரு கடினமான அணி. ஆனால் நாங்கள் எல்லா நம்பிக்கை யுடனும் அவர்களுடன் மோதுேவாம். அவர்களிடம் வலுவான செயல்திறன், விளையாட்டின் விரிவான அணுகுமுறை உள்ளது.

    குஜராத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் அற்புதமான வடிவத்தையும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான், நூர் அகமது செயல் திறனையும் பெற்று உள்ளனர்.

    குஜராத் அணி கடும் சவாலாக இருக்கும். ஆனால் மும்பை அணி தனது திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் இதுவரை 15 ஆட்டத்தில் 422 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம், இரண்டு அரை சதம் அடித்துள்ளார். 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது.
    • அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும்.

    ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

    கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்சை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம், கேமரூன் க்ரீனின் அதிரடி சதம். அவர் 47 பந்தில் 100 ரன்களை குவித்தார்.

    கேமரூன் கிரீன், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக் ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டனர். இவர்களில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கேவிற்கு சொல்லும்படியான பங்களிப்பை செய்யவில்லை. சாம் கரன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பஞ்சாப் அணிக்கு பங்களிப்பு செய்திருந்தாலும் ஒரு அணியாக அந்த அணி சிறப்பாக செயல்படாததால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.

    ஆனால் கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் சில இன்னிங்ஸ்களை ஆடினார். பவுலிங்கும் நன்றாக வீசினார். அதிலும் வாழ்வா சாவா என்ற கடைசி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கொடுத்த தொகைக்கு கிரீன் சரியான ஆளுதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது. பவர் ஹிட்டரான கிரீன் ஏமாற்றமளிக்கவில்லை. மும்பை இந்தியன்சின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும். சூர்யகுமார் யாதவ் 4-ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம்.

    என்று இர்பான் பதான் கூறினார்.

    • குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.
    • சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத அணிகள் மோதின. இதில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

    இதனையடுத்து இரவு நடந்த மற்றோரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜாராத் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆடிய பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் தொடரில் 4-வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தகுதி பெற்றது.

    பெங்களூரு அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    இந்நிலையில், குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

    அதில், கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்.
    • டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன்.

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார். அவர் 170 பந்தில் 114 ரன் எடுத்தார். இதில் 18 பவுண்டரி அடித்தார்.

    20-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதமாகும். சதம் அடித்தது தொடர்பாக கேமரூன் கிரீன் கூறியதாவது:-

    இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது நான் 95 ரன்னில் இருந்தேன். இடைவேளையின் 40 நிமிடங்கள் எனக்கு 1 மணி 40 நிமிடம் போல் இருந்தது.

    ஆனால் நான் உஸ்மான் கவாஜாவுடன் பேட்டிங் செய்தேன். அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவரது அனுபவங்கள் எனக்கு நிறைய உதவியது. அந்த அனுபவம் சதம் அடிக்க உதவியது.

    உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவர் என்னை போன்ற வீரர்களுக்கு, தனது அனுபவத்தை பற்றி சொல்லும் விதத்தில் மிகவும் மதிப்புமிக்கவர். அவரிடமிருந்து என்னால் முடிந்த வரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

    இது எனது 20-வது டெஸ்ட் போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஏற்ற- தாழ்வுகளை பார்க்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இது நம்ப முடியாத கடினமான ஆட்டம். இது போன்ற தருணங்களை நீங்கள் பெறும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.

    டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீச தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய நிர்வாகம்.
    • எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இன்னும் சில மாதங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இம்முறை சில குறிப்பிட்ட வீரர்களை வாங்கி அந்த அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது.

    அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை 17.50 கோடிக்கு விலைக்கு வாங்கி அவரை தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை கேமரூன் கிரீன் பந்து வீசமாட்டார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம், தங்களது அறிக்கையில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஆஸ்திரேலிய வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அந்த அணியின் நிர்வாகம் சில முடிவுகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏப்ரல் 13-ம் தேதி வரை கேமரூன் கிரீனை பந்து வீசக்கூடாது என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது.

    எதிர்வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது. அதன்படி மார்ச் மாதம் 13-ஆம் தேதி டெஸ்ட் தொடர் முடிவடையும்போது அந்தத் தொடரில் பங்கேற்கும் கேமரூன் கிரீன் அதிலிருந்து நான்கு வாரங்கள் வரை பந்து வீசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வீரர்களின் பனிச்சுமையையும் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி ஏற்கனவே ஏலத்திற்கு முன்பாக அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பங்கேற்பு விதிமுறைகளை தெளிவாக கூறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே இவற்றுக்கெல்லாம் சம்மதித்து கேமரூன் கிரீன் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நிச்சயம் அவர் மும்பை அணிக்காக பந்து வீசமாட்டார்.

    அதன் பின்னர் அவர் பந்துவீச வாய்ப்பு இருந்தாலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது உள்ள மும்பை அணி மிகவும் பலமாக இருப்பதினால் அவரை ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவே பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது.

    • இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். 

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்) கோடி

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    ×