search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் தற்கொலை"

    • கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (47). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது ராமநாதன் குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததும் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்
    • தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

    கரூர்

    கரூர் வெங்கமேடு ஜீவா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவர் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்யா தனது கணவரிடம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறீர்களே? என்று கேட்டுள்ளார்.
    • வீட்டில் தனியாக இருந்த சிவா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் சிவா (வயது23). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சிவா, சத்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அவரை கடந்த ஒருவருடத்திற்கு முன்பு சிவா திருமணம் செய்து கொண்டார். தற்போது சத்யா கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவா வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து சத்யா தனது கணவரிடம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறீர்களே? என்று கேட்டுள்ளார்.

    இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிவா மனவேதனையுடன் இருந்தார். இந்த நிலையில் கர்ப்பிணியான சத்யா மருத்துவ பரிசோதனைக்காக நேற்று பாலக்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிவா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சத்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்தபோது அங்கு சிவா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த சத்யா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து சத்யா மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சமபவ இடத்திற்கு வந்து சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி ராணி.

    இந்த நிலையில் காளியப் பனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதைத் ெதாடர்ந்து இருவரும் சென்னை சென்று குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்து காளியப்பன் பழைய வேலையில் சேர்ந்துள்ளார்.

    பின்னர் மீண்டும் அந்த பெண்ணை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் ஊருக்கு திரும்பி வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாடி அறைக்கு சென்றவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பaட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31).
    • பேக்கரி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    சேலம்:

    அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பaட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31). இவர் கூட்டாத்துப்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்த அவர் அரளி விதை (விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, சூரமங்கலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மதியழகன், விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் மதியழகன் (வயது 35). இவருக்கு செல்வி (30) என்ற மனைவியும், வித்தின் தர்ஷன் (7) என்ற மகனும் உள்ளனர்.

    மதியழகன் சேலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, சூரமங்கலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மதியழகன், விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மதியழகனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மதியழகன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், மதியழகன் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் பலரிடம் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தான் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் திம்மாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்
    • சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மாடியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது45). திம்மாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள குற்றப்புலனாய்வு துறை போலீஸ் தலைமை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மாடியில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சுந்தர்ராஜனின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

    • கடந்த சில நாட்களாக ஓட்டல் அறையில் தற்கொலை சம்பம் நடந்து வருகிறது.
    • நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

    கோவை

    திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் தரணி (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 30-ந் தேதி கோவை வந்தார்.

    இங்கு காட்டூர் ராம் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதையடுத்து ஓட்டல் ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது அவர் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.

    இதனால், சந்தேகமடைந்த ஊழியர் இது குறித்து லாட்ஜ் மேலாளரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தரணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்த தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓட்டல் அறையில் தற்கொலை சம்பம் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஷர்மிளா (வயது 30). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர்கள் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஷர்மிளா கணவர் இறந்த தூக்கம் தாளாமல் வேதனையில் இருந்து வந்தார்.

    கணவர் இறந்து விட்டதால் ஷர்மிளா அலமேலு மங்காபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது ஷர்மிளா மின்விசிறியில் தூக்கில் தூங்கினார். வெளியே சென்றிருந்த ஷர்மிளாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஷர்மிளா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஷர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷர்மிளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஷர்மிளாவின் தந்தை சவுந்தரராஜன் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    சத்துவாச்சாரி போலீசார் ஷர்மிளாவின் பிணைத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரஞ்சித் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • ரஞ்சித் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஊட்டி,

    ஊட்டி அருகே தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி திவ்யா. இவர்கள் கோவையில் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தங்காடுக்கு வந்தனர்.

    இந்தநிலையில் ரஞ்சித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கிராம மக்கள் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். இதற்கிடையே ரஞ்சித் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரஞ்சித் சாவு குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அருகே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
    • வீடியோவை பார்த்த உறவினர்கள் இறந்த மணிகண்டனின் சடலத்தை வாங்க மறுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி கல்லாங்குத்து புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31).இவர் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னசீரகாப்பாடியில் உள்ள தாபா ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மணிகண்டன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கெண்டார்.அவரது உடலை அஸ்தம்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மணிகண்டன் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவுசெய்து தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் தான் வேலைபார்த்து வந்த தாபா ஓட்டலில் இருந்து ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டதாக தன்னை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டனர்.

    மேலும் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரும் தற்போது அந்த பணத்தை தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வோம் என்று கூறி மிரட்டுவதாக கூறி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் இறந்த மணிகண்டனின் சடலத்தை வாங்க மறுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மணிகண்டனின் சாவிற்கு காரணமான தாபா ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாகவும், எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை பெற்று சென்ற இறுதி சடங்கு செய்தனர்.

    இந்த நிலையில் மணிகண்டன் தற்கொலை வழக்கை அஸ்தம்பட்டி போலீசார் திருத்தம் செய்தனர். அதில் மணிகண்டன் வேலை பார்த்த தாபா ஓட்டல் உரிமையாளர் பாலாஜி, அசோக், சுரேஷ் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை தேடிய போது 3 பேரும் தலைமறைவானது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க செல்போன் எண்ணை வைத்து போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×