search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த பேக்கரி கடை ஊழியர் தற்கொலை
    X

    காதல் திருமணம் செய்த பேக்கரி கடை ஊழியர் தற்கொலை

    • சத்யா தனது கணவரிடம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறீர்களே? என்று கேட்டுள்ளார்.
    • வீட்டில் தனியாக இருந்த சிவா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் சிவா (வயது23). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சிவா, சத்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அவரை கடந்த ஒருவருடத்திற்கு முன்பு சிவா திருமணம் செய்து கொண்டார். தற்போது சத்யா கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவா வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து சத்யா தனது கணவரிடம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறீர்களே? என்று கேட்டுள்ளார்.

    இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சிவா மனவேதனையுடன் இருந்தார். இந்த நிலையில் கர்ப்பிணியான சத்யா மருத்துவ பரிசோதனைக்காக நேற்று பாலக்கோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிவா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சத்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று பார்த்தபோது அங்கு சிவா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த சத்யா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து சத்யா மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சமபவ இடத்திற்கு வந்து சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×