search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ராணுவம் தாக்குதல்"

    காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரமான ரேடார் பதிவுகளை இந்தியா இன்று வெளியிட்டது. #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் ஏற்பட்டது. 

    அப்போது பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைந்த பாகங்களையும் இந்தியா வெளியிட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது. 

    நாங்கள் சுட்டு வீழ்த்தியது எப்-16 ரக போர் விமானம்தான் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்-16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

    இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரின் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானிடம் எத்தனை எப்-16 ரக விமானங்கள் உள்ளது? என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. 

    இதற்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்திருந்தது. “இருதரப்பு வான்மோதலின்போது இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் ரக விமானம், பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை நவ்ஷேரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஆணித்தரமாக கூறியுள்ளது. 

    மேலும், பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள நிலைக்கு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் விமானப்படை தகவல் தொடர்புத்துறை உயரதிகாரி மைக் மூலம் தெரிவித்த கருத்தும் இதை உறுதிப்படுத்துவதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்தியாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரத்தை இந்திய விமானப்படையின் துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் இன்று வெளியிட்டுள்ளார்.

    பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவுகளை செய்தியாளர்களுக்கு துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் காட்சிப்படுத்தினார். இதைவிட அதிக வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், பாதுகாப்பு மற்றும் நாட்டின் அதிமுக்கிய ரகசியம் என்னும் வகையில் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் (ஊடகங்களுக்கு) பகிரங்கமாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison 
    ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் எல்லையில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தளம் அழிக்கப்பட்டது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஹரி வாக்கர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தார்.



    இந்நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தளங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பிரிவில் செயல்படும் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது.  இது தீவிர ஆபத்தின் அடையாளம் என ராணுவம் தெரிவித்து உள்ளது. #JammuKashmir
    பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் குடும்பத்துக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். #Abhinandan #KamalHaasan
    சென்னை:

    பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அபினந்தன் மீட்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் பொது மக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அபினந்தனின் தந்தை வர்த்தமானை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். வர்த்தமானும் முன்னாள் ராணுவ வீரர் தான். அவரிடம் கமல் கூறியதாவது:-

    ‘ஏற்கனவே மனோபலம் உள்ள உங்களை போன்ற போர் வீரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாடே உங்களுடன் இந்த இக்கட்டான சூழலில் துணை நிற்கிறது. உங்கள் மகன் இந்த நாட்டிற்கு செய்திருக்கும் இந்த பணி உன்னதமானது. உங்களைப்போல போர் தர்மம் அறிந்த, புரிந்த வீரர்கள் அங்கும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனவே அபினந்தன் நலமாக நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்புவார்.

    இது குறித்து நான் டுவிட்டரில் எதுவும் வெளியிடவில்லை. ஏனெனில் இது விவாதப் பொருளோ அதற்கான நேரமோ இல்லை. இது விவேகத்திற்கான நேரம். எனவே தான் நான் உங்களிடம் நேரடியாக பேசுவது முக்கியம் என்று நினைத்து உங்களை அழைத்தேன். எனது அழைப்பினை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் நிம்மதியாக தூங்குவதற்கு காரணமே நீங்கள் தான்.

    ஆனால் இன்று இரவு நீங்கள் நிம்மதியாக தூங்க இயலாது என்பது வருந்தத்தக்க செய்தி. அபினந்தன் மீண்டும் பாதுகாப்பாகவும் நலமுடனும் நாடு திரும்பி வருவார் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.’

    இவ்வாறு கமல் ஆறுதல் கூறினார்.

    தனக்கு ஆறுதல் கூறியதற்காக கமல்ஹாசனுக்கு வர்த்தமான் நன்றி தெரிவித்துள்ளார்.  #Abhinandan #KamalHaasan
    விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் பகுதியில் விழுந்தபோதும், எதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். #Abhinandan
    புதுடெல்லி:

    இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தபோது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது.

    அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பைலட் அபினந்தன் பாகிஸ்தான் பிடியில் உள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டது.

    இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்தது. பைலட் அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார்.

    இதை அந்த பகுதியினர் பார்த்துவிட்டு அவர் கீழே குதித்த இடத்தை நோக்கி சென்றனர். அப்போது அபினந்தன் பத்திரமாக கீழே இறங்கினார். அந்த இடத்தை இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர் விழுந்த இடம் பாகிஸ்தானா? இந்தியாவா? என்பது அபினந்தனுக்கு சரியாக தெரியவில்லை.



    எனவே அந்த இளைஞர்களிடம் இது பாகிஸ்தானா இந்தியாவா என்று கேட்டார். இது பாகிஸ்தான் என்று கூறிய அவர்கள் அபினந்தனை தாக்குவதற்கு முயன்றனர். எதிரிகள் மத்தியில் நின்றாலும் நெஞ்சுறுதியுடன் அவர் செயல்பட்டார்.

    விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்களால் அவரை தாக்கினார்கள். இருந்தபோதும் வீரத்தை கைவிடாத அபினந்தன் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார்.

    பின்னர் அங்கிருந்து பின்னோக்கி சென்ற அபினந்தன் தன்னிடம் இருந்த ஆவணங்களை அருகில் இருந்த குட்டையில் வீசி அழித்தார். இதற்குள் ஏராளமான இளைஞர்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் அபினந்தனை பிடித்துக் கொண்டார்கள்.

    பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து சென்று ஹாலில்சவுத் என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்தனர். #Abhinandan
    பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்ப கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் காக்குமா வீரத் திருமகனை என்று பார்த்திபன் ட்விட்டரில் கோரியுள்ளார்.
    பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை நேற்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம். கைதான சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமானை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்துடன் அபிநந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைராக பரவியது. அபிநந்தனை விரைவில் மீட்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



    இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

    கணவனின் கடமையும்
    தந்தையின் வீரமும்,

    மனைவியின் மனதையும்
    மகனின் கண்களையும்,

    ஈரப்படுத்தாமல் 
    சேதப்படுத்தாமல்
    எத்தனை நிமிடங்கள்
    காக்கும்?

    அதற்குள் காக்குமா
    இந்தியா அந்த வீரத்
    திருமகனை?

    இவ்வாறு கூறியிருக்கிறார். #Abhinandan #BringBackAbhinandan #Parthiban

    பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது. #AbhinandaninterrogationVideo #Abhinandaninterrogation
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிகமான பதில்களை தவிர்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தான் இன்று சுட்டு வீழ்த்தியதாக கூறும் இந்திய போர் விமானத்தில் இருந்து காயங்களுடன் உயிர் தப்பிய இந்திய வீரர் அபினந்தன் வர்தமானிடம் அந்நாட்டு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கையில் ஒரு குவளையில் உள்ள தேனீரை  பருகியவாறு அந்நாட்டு அதிகாரிகளின் கேள்விக்கணைகளை தைரியமாக எதிர்கொண்டு, தேவைக்கதிமான பதில்களை அவர் தவிர்க்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    நான் இந்திய விமானப்படையை சேர்ந்த ‘விங் கமாண்டர்’ அபினந்தன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

    எங்களுடன் இப்போது இருப்பதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள்? என்று ஒரு அதிகாரி அபினந்தனை கேட்கிறார்.

    ‘நான் இது தொடர்பாக என்னுடைய கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து என்னை பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டது முதல் இப்போதுவரை அவர்கள் என்னை நன்றாக நடத்தி வருகின்றனர். 

    என்னுடைய தாய்நாட்டுக்கு திரும்பிச் சென்ற பிறகும் இந்த கருத்தை நான் மாற்றி தெரிவிக்க மாட்டேன். பாகிஸ்தான் ராணுவத்தினர் மிகவும் கண்ணியான (ஜென்ட்டில்மேன் மேன்) முறையில் என்னை நடத்தினார்கள். அவர்கள் ராணுவத்தினர் இந்தியாவிடம் பிடிபட்டாலும் இதேபோல் கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என அபினந்தன் பதிலளிக்கிறார்.

    இந்தியாவில் நீங்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற கேள்விக்கு, ‘நான் இதை உங்களிடம் தெரிவிக்க கூடாது. என்றாலும், இந்தியாவின் தென்கோடி பகுதியை சேர்ந்தவன்’ என்கிறார்.  நீங்கள் திருமணமானவரா? என்னும் கேள்விக்கு ‘ஆம்’ என்கிறார். தேனீர் எப்படி உள்ளது? என்பதற்கு மிக அருமையாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

    ‘நீங்கள் எந்தவகை போர் விமானத்தில் பறந்து வந்தீர்கள்? என்ற கேள்விக்கு நேரிடையாக பதிலளிப்பதை தவிர்க்கும் அபினந்தன், ‘மன்னிக்கவும் எரிந்து விழுந்த விமானத்தின் சிதிலங்களை கொண்டு நீங்களே யூகித்துக் கொள்ளலாம்’ என்று சாதுரியமாக கூறுகிறார்.

    போர் விமானத்தில் நீங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததற்கான முக்கிய நோக்கம் என்ன? என்னும் கடைசி கேள்விக்கு ‘மன்னிக்க வேண்டும். இதற்கு நான் உங்களுக்கு பதிலளிக்க இயலாது’ என துணிச்சலாக அபினந்தன் பதில் கூறும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. #AbhinandaninterrogationVideo #Abhinandaninterrogation #IAFpilotAbhinandan #BringBackAbhinandan

    ரத்த காயங்களுடன் பிடிபட்ட சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரரின் வீடியோவை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. #IndiaobjectsPakistan #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது. 

    மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது, பதவி மற்றும் மதம் ஆகியவை தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வீடியோ காட்சியை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் அபினந்தன் முகத்தில் ரத்த காயங்களுடன் காணப்படுகிறார்.

    இதுதவிர, பாகிஸ்தானில் உள்ள சிலர் அபினந்தன் காட்டருவியில் விழுந்து கிடந்த நிலையில் அவர் கைது செய்யப்படும் காட்சி, படுத்த நிலையில் அவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்படும்காட்சி, அவரை சில அதிகாரிகள் மாறிமாறி முகத்தில் தாக்கப்படும் காட்சி மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் அபினந்தன் தோன்றும் காட்சி ஆகிய காட்சிகள் கொண்ட சில வீடியோக்களை சமூக வலைத்தளத்தங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை இன்று மாலை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காயமடைந்த இந்திய விமானப்படை வீரரின் படங்களை மோசமான வகையில் காட்சிப்படுத்துதல் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அனைத்து விதிமுறைகள் மற்றும் ஜெனிவா உடன்படிக்கையில் உள்ள ஷரத்துகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக பாகிஸ்தானிடம் இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப்படை வீரர் அபினந்தனுக்கு எந்தவித தீங்கும் ஏற்பட கூடாது. அவர் விரைவில் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் இந்த நிலையில் செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #IndiaobjectsPakistan #injuredIAFpersonnel #Abhinandan #BringBackAbhinandan
    இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். #oppositionleadersmeet #Indiassovereignty #protect Indiassovereignty
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள பாராளுமன்ற நூலக அரங்கில் இன்று அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

    இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, புல்வாமாவில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் பதிவு செய்யப்பட்டதாகவும், இதற்கு பதிலடியாகவும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாகவும் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டதாகவும்  தெரிவித்தார். #oppositionleadersmeet #Indiassovereignty #protect Indiassovereignty
    பாகிஸ்தான் மிரட்டலை தொடர்ந்து இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள சில விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. #airportsOperations #Operationsresumed
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நேற்று நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தவந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்ஷேரா எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இதைதொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே, ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் ஆகிய விமான நிலையங்களில் இன்று காலையில் இருந்து விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்டர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மற்றும் சிம்லா உள்ளிட்ட விமான நிலையங்களும் இன்று பிற்பகல் மூடப்பட்டன. இதனால், நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    டெல்லிக்கு வடக்கில் உள்ள வான்வெளியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வட மாநிலங்களில் உள்ள 9 விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது.  #airportsOperations #Operationsresumed 
    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல், 40 வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு என்று கயத்தாறு வீரரின் மனைவி தெரிவித்துள்ளார். #PulwamaAttack #Surgicalstrike2 #Subramaniyan
    கயத்தாறு:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணியனும் பலியானார். இதையடுத்து சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். அவர்களை பல்வேறு கட்சியினர், அமைப்பினர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.



    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

    இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு சுப்பிரமணியனின் கிராமமான சவலாப்பேரி மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் தந்தை கணபதி ஆகியோர் சுப்பிரமணியன் படத்திற்கு இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் எங்கள் கிராமமே சந்தோ‌ஷம் அடைந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இது 40 வீரர்களின் தியாகத்திற்கு கிடைத்த பரிசு ஆகும். இதற்கு இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்பிரமணியனின் தந்தை கணபதி கூறுகையில், ‘பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது வரவேற்க கூடியது. இதில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது’ என்றார். இதனிடையே சவலாப்பேரி முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள், பொதுமக்கள் கூடிநின்று ராணுவ நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். #PulwamaAttack #Surgicalstrike2 #Subramaniyan
    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமான படை நடத்திய தாக்குதலுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Surgicalstrike2 #Narayanasamy
    புதுச்சேரி:

    புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பயங்கரவா முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

    ஜம்மு, காஷ்மீர் அருகே விமான படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய விமான படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இதுகுறித்து புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், ஜம்மு, காஷ்மீர் அருகிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படைக்கு என் வணக்கங்களை தெரிவிக்கிறேன். உங்களால் நாட்டுக்கு பெருமை.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இன்று அதிகாலை நேரத்தில் இந்திய ராணுவத்தின் விமானப் படையானது பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது குறிப்பாக புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது சரியான பதிலடி.

    நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தை எதிர்க்கக் கூடிய மனிதாபிமானம் உடைய அத்தனை பேரும் வரவேற்கக்கூடிய செயலாகும்.

    இந்த தருணத்தில் நாம் அத்தனை பேரும் ஜாதி, மதம், பாகுபாடு அத்தனையும் மறந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கும், முப்படை தளபதிகளுக்கும், இந்திய பிரதமருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    மேலும் இந்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும் துணை நிற்க வேண்டிய நேரம் என்பதை தெரியப்படுத்த வேண்டியது எனது தேசிய கடமை. உலகில் எந்த பகுதியில் பயங்கரவாதம் இருந்தாலும் எதிர்க்க வேண்டியது மனிதகுலத்தின் தலையாய கடமை. ஜெய் ஜவான், ஜெய்பாரத்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Surgicalstrike2 #Narayanasamy
    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது என்று இல.கணேசன் கூறியுள்ளார். #Surgicalstrike2 #BJP #LGanesan
    மதுரை:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீரிட்டு எழுந்ததை பார்த்தோம்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது இதுவரை சந்தித்திராத பெரிய தாக்குதல். இந்திய தேசம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருந்த இந்த நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரவேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார்.

    அதன்படி இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல்களை நடத்தி விட்டு வெற்றிகரமாக திரும்பிவிட்டது. இதை யாரும் அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது.

    இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடையவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தேசமே ஆர்த்தெழுந்து பதிலடிதரும் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது.

    பா.ஜனதாவை பொறுத்தவரை காஷ்மீர் பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் மீட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.



    தேசிய அளவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை எடுத்துச்சொல்லி பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி தனி நபருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார் என்பதை மறந்து கீழ்த்தரமான வார்த்தைகளால் ராகுல்காந்தி அர்ச்சித்து வருகிறார். இது தரமான அரசியலுக்கும், தரமற்ற அரசியலுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

    இது லோட்டசுக்கும் (தாமரை), லூட்டர்சுக்கும் (கொள்ளையர்கள்) இடையே நடக்கும் தேர்தல். காங்கிரஸ் என்றாலே ஸ்கேம் (ஊழல்) என்று அர்த்தம். மோடி என்றால் ஸ்கீம் (திட்டம்) என்று அர்த்தம். பிரதமர் மோடிக்கு தேசமே சக்தி. ராகுல்காந்திக்கு குடும்பமே சக்தியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Surgicalstrike2 #BJP #LGanesan
    ×