என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court custody"

    • பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது.

    கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6ம் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் இன்று மாலை நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மூன்றாவது வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அவரைக் காவலில் எடுத்தது.
    • தற்போது நீதிமன்றம் ஜூலை 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    ஆஜர்படுத்தப்பட்டபோது எஸ்ஐடி மேற்கொண்டு விசாரணை நடத்த பிரஜ்வாலின் காவலிலை நீட்டிக்க கோரிக்கை வை்ககவில்லை. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    விசாரணையின் போது, இரைப்பை பிரச்சினைகள் குறித்து பிரஜ்வால் புகார் செய்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி, அவரது உடல்நிலையை கண்காணிக்க எஸ்ஐடி அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டார்.

    • ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல்.
    • பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார்.

    மதுபானக் கொள்கை முறைகேடு சிபிஐ வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜூலை 3ம் தேதிக்குள் புலன் விசாரணை நிறைவு பெறும் என அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்துச் செல்லப்பட்டார். 

    • ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார்.
    • விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ரூ 1500 லஞ்சம் வாங்கி கைதான உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து அவர் விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குருசாமி. இவரிடம் உணவு பாதுகாப்பு சான்று பெற்று தருவதாக கூறி ரூ.1500 லஞ்சம் பெற்றதாக நேற்று உத்திர உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து விருதுநகர் மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    • செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
    • மனுவை முதன்மை நீதிமன்ற தள்ளுபடி செய்தது.

    திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து வரும் நிலையில், நீதிமன்றக் காவலை நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    நேற்று புழல் சிறையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை இன்று நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

    இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தள்ளி வைக்க முடியாது எனக் கூறி செந்தில்பாலாஜி மனுவை முதன்மை நீதிமன்ற தள்ளுபடி செய்தது.

    குற்றச்சாட்டு பதிவை இழுத்தடிக்கும் நோக்கில், அவகாசம் கோரப்படுகிறது என ED தரப்பு தனது வாதத்தை வைத்துள்ளது. இதையடுத்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆகஸ்ட் 2ம் தேதி செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஈடுபட்டதாக கூறி டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது.

    பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கப்பட்ட நிலையில், அவரை வரும் ஜூலை 29ஆம் தேதி வரை

    நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டது.

    இதற்கிடையே ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி அல்லி ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் ஆகஸ்டு 23ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்து உள்ளார்.
    • சிறுமி கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ். இவர் சொந்தமாக பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர்.

    நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்து உள்ளார்.

    நேற்று முன்தினம் தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை முடிந்து குளிக்கச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, சிறுமியின் உடலில் சிகரெட் காயங்கள் இருந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    இந்நிலையில், சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தம்பதி உள்பட 6 பேருக்கும், வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட 6 பேரையும் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, முகமது நிஷாத், நாசியா, லோகேஷ், ஜெயசக்தி, மகேஸ்வரி மற்றும் சீமா பேகம் ஆகிய 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது.
    • 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 7-வது நுழைவுவாயில் 5 கிராம் 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடருடன் நின்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், சின்னத்திரை துணை நடிகை எஸ்தர் என்கிற மீனா (வயது 28) என்பது தெரிய வந்தது.

    தனி 'நெட்வொர்க்' அமைத்து 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பவுடர் விற்பனை நடைபெற்று இருக்கிறது. 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதனையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். துணை நடிகை மீனாவுக்கு 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்கும்படி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • குற்றம்சாட்டப்பட்ட நபரை புகாரிலிருந்து விடுவிக்க ராஜி முயற்சி செய்தது தெரியவந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, சதீஷ் என்ற வாலிபர் மீது புகாரளிக்கப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான போக்சோ வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழகத்தில் உள்ள வெளிமாநில 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணையில் 16 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற வாலிபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர்.

    மேலும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதாலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை புகாரிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ததும் தெரிய வந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட வட்ட செயலாளர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், விரைவில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கைதான பெண் காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோருக்கு வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, சதீஷுக்கு சாதகமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    • கைதான இருவருக்கும் ஜனவரி 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
    • இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அ.தி.மு.க. வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் வழக்கை சரியாக விசாரிக்காத மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

    இதனிடையே, எழும்பூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதான இருவருக்கும் ஜனவரி 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 103-வது வட்ட செயலாளர் சுதாகர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

    ×