என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் - கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
    X

    பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் - கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    • கைதான இருவருக்கும் ஜனவரி 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
    • இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அ.தி.மு.க. வட்டச் செயலாளர் சுதாகர் மற்றும் வழக்கை சரியாக விசாரிக்காத மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

    இதனிடையே, எழும்பூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதான இருவருக்கும் ஜனவரி 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. வட்ட செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 103-வது வட்ட செயலாளர் சுதாகர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×