என் மலர்
நீங்கள் தேடியது "Udhayanidhi Stalin"
- காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள படகு போட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்க உள்ளன.
- போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடத்தப்படுகிறது.
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள இந்த படகு போட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்க உள்ளன.
இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து படகுகள் கோவளத்துக்கு கொண்டுவரப்பட்டு பந்தயத்தில் பங்கேற்க உள்ளன. ஞாயிறு மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்த படகுப்போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த படகு போட்டியை கண்டுகளிக்க மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடையாறில் உள்ள அரசு பங்களாவில் குடியேற முடிவு செய்துள்ளார்.
- 'குறிஞ்சி' பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதி சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தந்தை-மகன் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் முகாம் அலுவலகம் இங்கு உள்ளதால் முதலமைச்சரை பார்க்க அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம்.
இப்போது அமைச்சர் உதயநிதியை பார்க்கவும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வருவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடையாறில் உள்ள அரசு பங்களாவில் குடியேற முடிவு செய்துள்ளார்.
அவருக்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள 'குறிஞ்சி' என்ற அரசு பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த பங்களாவில் இதுவரை சபாநாயகர் அப்பாவு வசித்து வந்தார். கடந்த ஜனவரியில் அவர் அருகில் உள்ள 'மலரகம்' என்ற பங்களாவுக்கு மாறினார்.
இப்போது 'குறிஞ்சி' பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அமைச்சர் உதயநிதி அரசு பங்களாவுக்கு வந்து குடியேறுகிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோது இந்த பங்களாவில் தான் குடியிருந்தார்.
- அரசியலை பொறுத்த வரை எனக்கு எப்போதும் நேர் மறையான எண்ணங்கள் உண்டு.
- மனதில் பட்டதை பேசுபவன் நான், என்னை பொறுத்தவரை எது செய்தாலும் அதில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: பிடித்த விளையாட்டு எது?
பதில்:பேட் மின்டன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நீண்ட நாட்களாக தொடர்ந்து விளையாடி கொண்டிருந்தேன். அதுதான் என்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பணிகள் காரணமாக பேட் மின்டன் விளையாடுவது தடைபட்டு போனது. தொலைக் காட்சியில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விரும்பி பார்ப்பதும் உண்டு.
கே: அம்மா சமைப்பது பிடிக்குமா? மனைவி சமைப்பது பிடிக்குமா?
ப: சந்தேகமே இல்லாமல் அம்மாதான். அவர் மிக சிறப்பாக சமையல் செய்வார். எல்லா உணவு வகைகளையும் ருசியாக சமைப்பதில் வல்லவர். அவர் வைக்கும் வத்தல் குழம்பு எனக்கு மிக மிக பிடிக்கும்.
என் மனைவி கிருத்திகாவும் நன்றாக சமைப்பார். சில சமயம் பிரியாணி செய்ய ஆரம்பிப்பார். ஆனால் அது 'புலவ்'-ல் போய் முடிந்துவிடும்.
கே: மகன், மகளுடன் செலவிட நேரம் கிடைக்கிறதா?
ப: இப்போதெல்லாம் அரசியல் பணிகளுக்காக நிறைய பயணம் மேற் கொள்ளவேண்டி உள்ளது. எனவே அவர்களுடன் வீட்டில் பேசும் நேரம் குறைந்துவிட்டது. என்றாலும், தினமும் நான் என் மகளுடன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி விடுவேன்.
எனது மகன் இன்பன் இங்கிலாந்தில் தொழில் மற்றும் விளையாட்டு நிர்வாக படிப்பு படித்து வருகிறார். அவர் சிறந்த கால்பந்து வீரர். இங்கிலாந்தில் உள்ள இந்திய கால்பந்து அணியில் விளையாடி வருகிறார்.
கே: சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு வருத்தப்படுகிறீர்களா?
ப: சினிமாவில் நான் பெரிய அளவில் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவே சினிமாவை விட்டு விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஒவ்வொரு படத்திலும் இயக்குனர்கள் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதை மட்டுமே நான் செய்தேன்.
கமல் சார் தயாரிப்பில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் அதற்குள் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டியது வந்துவிட்டது. எனவே அந்த படத்தில் நடிக்கவில்லை. அதுபோல எனது தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் நடிப்பதில் இருந்தும் நான் முழுமையாக விலகி உள்ளேன்.
கே: அரசியல் பணிகள் எப்படி இருக்கிறது?
ப: அரசியல்வாதியாக இருப்பதும், அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்வதும் மனம் நிறைந்த மகிழ்ச்சியை தருகிறது. அரசியலை பொறுத்த வரை எனக்கு எப்போதும் நேர் மறையான எண்ணங்கள் உண்டு. அரசியல் பணிகள் உண்மையிலேயே மிகவும் சவாலாக இருக்கிறது.
அரசியலில் நான் இன்னும் எந்த சாதனையையும் செய்யவில்லை. அமைச்சர் பதவியை முழுமையாக செயல்படுத்தி வருகிறேன். நேரம் கிடைக்கும் போது குடும்பத்தினரிடமும் செலவிட நேரத்தை ஒதுக்குவது உண்டு. சமீபத்தில் 2 நாள் ஓய்வு எடுத்து மனைவியுடன் சிங்கப்பூர் சென்று வந்தேன்.

கே: உங்களுக்கு நெருக்கமானவர் யார்?
ப: அன்பில் பொய்யா மொழி. எனக்கு ஏற்படும் அழுத்தங்கள் அனைத்தையும் உடைத்தெறிபவர் அவர்தான். என்னுடைய மிகச்சிறந்த நண்பர். நகைச் சுவை உணர்வு மிக்கவர். அவர் அருகில் இருந்தால் தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்.
நான் எப்போதாவது அழுத்தத்தில் சிக்க நேரிட்டால் தயங்காமல் அவரிடம்தான் செல்வேன். மனதில் பட்டதை பேசுபவன் நான், என்னை பொறுத்தவரை எது செய்தாலும் அதில் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவன்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
- இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
- இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.

இதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'காத்திரு' பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. புகழேந்தி வரிகளில் லக்ஷ்மிகாந்த் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
- மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
- இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

கண்ணை நம்பாதே
மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.

கண்ணை நம்பாதே போஸ்டர்
இதையடுத்து, இப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'கண்ணை நம்பாதே' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'கதிரு' பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
The next song from #KannaiNambathe, #Kathiru will be out tomorrow.
— Red Giant Movies (@RedGiantMovies_) March 14, 2023
Movie in cinemas from March 17th! @Udhaystalin @lipicinecrafts @mumaran1 @im_aathmika @Prasanna_actor @bhumikachawlat @Act_Srikanth @actorsathish @SubikshaOffl @saregamasouth @kalaignartv_off @DoneChannel1 pic.twitter.com/l6d2iRB1hr
- இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.
- இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து கண்ணை நம்பாதே படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். கண்ணை நம்பாதே படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில் "இயக்குனர்கள் சாதுவான கதைகளை சொல்கிறார்கள். எனக்கு, என்னுடைய உடல் வாக்கிற்கு அந்த மாதிரி கதைகள் தான் சரியாக இருக்கும் என அவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். எனக்கும் அது வசதியாக இருக்கிறது, முடிந்தவரை 'மனிதன்' திரைப்படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைக்களம் கொஞ்சம் சவாலான கதாபாத்திரங்கள் இப்படி செய்யனும் என்ற நோக்கத்தோடு திரைப்படம் நடித்து வருகிறேன்." என்று உதயநிதி ஸ்டாலின் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
- சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி பங்கேற்கிறார்.
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐ.பி.எல். உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்காக சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலியன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டன.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பெவிலியன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திறந்து வைக்கிறார். இதற்கான விழா அன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐ.சி.சி. சேர்மனும் இந்திய கிரிக்கெட் சங்க தலைவருமான என்.சீனிவாசன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு (இருக்கை பகுதி) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்படுகிறது. அந்த ஸ்டேடியத்திற்கு 'கலைஞர் கருணாநிதி ஸ்டேன்டு' என்று பெயர் சூட்டப்படுகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.ஸ்டேடியத்தில் உள்ள அண்ணா பெவிலியனை கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் புதிய ஸ்டான்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனுக்கு பிறகு இந்தியாவில் 2-வது மிக பழமையான கிரிக்கெட் மைதானம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.
- மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.
- இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

கண்ணை நம்பாதே
மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.

கண்ணை நம்பாதே போஸ்டர்
இதையடுத்து, 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'கண்ணை நம்பாதே' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
U/A CERTIFIED
— Red Giant Movies (@RedGiantMovies_) March 11, 2023
The intriguing crime thriller #KannaiNambathe releasing in cinemas near you on MARCH 1️⃣7️⃣!
Trailer ➡️ https://t.co/j3TlLC96Pw @Udhaystalin @mumaran1 @im_aathmika @Prasanna_actor @bhumikachawlat @Act_Srikanth @Music_Siddhu @kalaignartv_off @lipicinecrafts pic.twitter.com/9VYXRCK5pe
- இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
- இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மாரி செல்வராஜ், மாமன்னன், உதயநிதி ஸ்டாலின், mari selvaraj, maamannan, udhayanidhi stalinபரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மாமன்னன்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. சமீபத்தில் நடிகர் வடிவேலு டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தது.

மாமன்னன் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு 'மாமன்னன்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.
He's a force to reckon with. Here's wishing the powerful storyteller @mari_selvaraj a very happy birthday from team #MAAMANNAN ? ?
— Red Giant Movies (@RedGiantMovies_) March 7, 2023
#HBDMariSelvaraj@Udhaystalin @RedGiantMovies_ @arrahman @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah pic.twitter.com/iEehfTXaaA
- இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
- இப்படம் வருகிற மார்ச் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

கண்ணை நம்பாதே
மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.

கண்ணை நம்பாதே
இதையடுத்து, 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு'பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.