search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monitor"

    • பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தலைவாசல் வட்டத்திற்கு உட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் மஞ்சினி ஓடையின் குறுக்கே ரூ.22.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலப் பணியினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு இருக்கிறதா? என்பது குறித்தும், சிகிச்சைகள் அளிக்கும் முறை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தலைவாசல் தாசில்தார் அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள், வாகனப் பதிவு எண் வழங்குதல், புதிய வாகனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வார்டு எண் 15-ல் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து வாழப்பாடி வட்டம் காட்டுவேப்பிலை ப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளைக் கிணறுகள், சொட்டு நீர் பாசனம், பழ சாகுபடிகள் மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காளாண் வளர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளார்கள்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (பொறுப்பு) யோகானந்த் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய மானிட்டர் டூயல் இன்புட் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
    • புதிய மானிட்டர் அறிமுக சலுகையாக தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ZEB EA122 22 இன்ச் அளவு கொண்ட HD+ எல்.இ.டி. மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் பியூர் பிக்சல் சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த மாதம் ஜெப்ரானிக்ஸ் ஜெப் ராக்சர் 100 வாட் டி.ஜெ. ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய மானிட்டர் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 எல்.இ.டி. மானிட்டரில் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் (1680x1050), அதிகபட்சம் 250 நிட்ஸ் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட், 5ms ரெஸ்பான்ஸ் டைம், டிஸ்ப்ளேவில் VA பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ காரணமாக இந்த மானிட்டரை அலுவல் மற்றும் கேமிங் என இருவித பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும்.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் இன்புட் ஆப்ஷன்கள்: HDMI மற்றும் VGA வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை கொண்டு பல்வேறு சாதனங்களை கனெக்ட் செய்ய முடியும்.

     

    ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 மானிட்டர் அம்சங்கள்:

    பியூர் பிக்சல், எல்.இ.டி. பேக்லிட் VA பேனல்

    வால் மவுன்ட் டிசைன்

    22 இன்ச் HD+ 1680x1050 பிக்சல் ரெசல்யூஷன்

    5ms ரெஸ்பான்ஸ் டைம், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    HDMI மற்றும் VGA கனெக்டிவிட்டி

    புதிய ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 மானிட்டர் ஆகஸ்ட் 14-ம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக இந்த மானிட்டர் ரூ. 4 ஆயிரத்து 699 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மை விலையான ரூ. 12 ஆயிரத்து 799-ஐ விட குறைவு ஆகும்.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய மானிட்டர் கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை குறைக்கும் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
    • இரண்டு புதிய மானிட்டர்களிலும் அதிகபட்சம் 100Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய மானிட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. வியூபினிட்டி S8 மற்றும் S9 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் தற்போது, வியூபினிட்டி S65UC மற்றும் வியூபினிட்டி S65VC மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு மானிட்டர்களும் கிரியேடிவ் துறையில் பணியாற்றுவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இரண்டு மானிட்டர்களிலும் 34 இன்ச் VC வளைந்த பேனல் மற்றும் 1000r ரேடியஸ் கொண்டிருக்கிறது. இந்த மானிட்டர் 3440x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த மானிட்டர் அதிகபட்சம் 100Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 வாட் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் டிஸ்ப்ளேக்களில் 1.07 பில்லியன் நிறங்களை சப்போர்ட் செய்கிறது. 

    கேமிங் பிரியர்களுக்காக AMD FreeSync சப்போர்ட் வழங்கப்படுகிறது. இது கேம்பிளேவின் போது ஸ்கிரீன் ஸ்டட்டர் ஆவதை குறைக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐ சேவர் மோட், ஃப்ளிக்கர் - ஃபிரீ தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நேர பயன்பாடுகளின் போதும் கண்களில் சோர்வு ஏற்படுவது குறைக்கப்படுகிறது.

    இத்துடன் பிக்சர்-இன்-பிக்சர் மற்றும் பிக்சர்-பை-பிக்சர் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இமேஜ்சைஸ், ஆஃப் டைமர் பிளஸ், HDR10 பிளஸ், ஆட்டோ சோர்ஸ் ஸ்விட்ச் பிளஸ், அடாப்டிவ் பிக்சர் மற்றும் KYM ஸ்விட்ச் வசதிகள் வழங்கப்படுகின்றன.

    கனெக்டிவிட்டிக்கு 1x 1.2EA டிஸ்ப்ளே போர்ட், 1x HMDI மற்றும் ஹெட்போன் போர்ட்கள் உள்ளன. இத்துடன் யுஎஸ்பி போர்ட்கள், யுஎஸ்பி சி போர்ட், மற்றும் LAN நெட்வொர்க் கனெக்ஷன் வசதியும் வழங்கப்படுகிறது. இரண்டு புதிய மானிட்டர்களும் இம்மாத இறுதியில் ஜெர்மனியில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • இந்த மானிட்டரில் யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி, 40 வாட் 2-வே பவர் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் இன்டகிரேடெட் ஸ்பீக்கர்கள், எனர்ஜி ஸ்டார் சான்று உள்ளது.

    வியூசோனிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய VP-16 OLED, போர்டபில் டச் ஸ்கிரீன் மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த 15.6 இன்ச் கலர்ப்ரோ மானிட்டர் 1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி ரெசல்யூஷன், பான்டோன் வேலிடேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டான்டு வழங்கப்படுகிறது. இது மானிட்டரை பல்வேறு கோணங்களில் வைத்து பயன்படுத்த வழி செய்கிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் டிரைபாட் மவுன்ட் மூலம் மானிட்டரை ஐந்து கோணங்களில் வைத்துக் கொள்ள முடியும். இந்த மானிட்டரில் கேமராவை மவுன்ட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

     

    இதன் OLED டிஸ்ப்ளே, பரவலான கலர் கமுட், 100 சதவீதம் DCI-P3 கவரேஜ், அதிக காண்டிராஸ்ட் ரேஷியோ உள்ளது. இந்த மானிட்டர் உடன் கழற்றக்கூடிய பாதுகாப்பு கவர் வழங்கப்படுகிறது. இது ஆம்பியன்ட் பிரைட்னஸ் இருந்த போதிலும், ஷேடிங் ஹூட் போன்று செயல்படுகிறது.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை இந்த மானிட்டரில் யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி, 40 வாட் 2-வே பவர் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு லேப்டாப் மூலம் பயன்படுத்தவோ அல்லது லேப்டாப், மொபைல் சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றவோ முடியும். இத்துடன் மினி HDMI போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் இன்டகிரேடெட் ஸ்பீக்கர்கள், எனர்ஜி ஸ்டார் சான்று உள்ளது.

    புதிய வியூசோனிக் VP-16 OLED மானிட்டர், 15.6 இன்ச் டிஸ்ப்ளே விலை ரூ. 75 ஆயிரம் ஆகும். எனினும், இது ரூ. 49 ஆயிரத்து 999 (வரிகள் சேர்க்கப்படவில்லை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. 

    • எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய மானிட்டர் வித்தியாசமான செட்டப் கொண்டிருக்கிறது.
    • புதிய டூயல்அப் மானிட்டருடன் எல்ஜி எர்கோனோமிக் ஸ்டான்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் முற்றிலும் புதிய அல்ட்ரா-டால் டூயல்அப் மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் மாணிட்டர்களை போன்றே அகலமாக இல்லாமல், உயரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய எல்ஜி மானிட்டர் 28MQ750 என்று அழைக்கப்படுகிறது. இதன் அம்சங்கள் அதன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி டூயல்அப் 28MQ780 மானிட்டர் வழக்கமன 27 இன்ச் டிஸ்ப்ளே இல்லை. மாறாக இதில் உயரமான ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளது. இதன் ஸ்கிரீன் அளவு 27.6 இன்ச் அளவில் உள்ளது. இதில் எல்ஜி நானோ IPS பேனல், மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மானிட்டர் 2560x2880 பிக்சல், அகலமான வைடு கலர் கமுட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், HDR10 சப்போர்ட் கொண்டுள்ளது.

     

    இந்த மானிட்டரின் பிரத்யேக வடிவமைப்பு மூலம், இரண்டு 21.5 இன்ச் QHD ரெசல்யூஷன் கொண்ட மானிட்டர்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைக்கப்பட்டதை போன்று காட்சியளிக்கிறது. மேலும் டூயல்அப் மானிட்டருடன் எல்ஜி எர்கோனோமிக் ஸ்டான்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மானிட்டரை எளிமையாக தூக்குவதும், வசதிக்கு ஏற்ப சுழற்றிக் கொள்ளவும் முடியும்.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய மானிட்டர் யுஎஸ்பி டைப் சி இன்டர்ஃபேஸ், 90 வாட் எக்ஸ்டெர்னல் பவர் சப்ளை வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு HDMI மற்றும் ஒரு DP இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் இன்-பில்ட் டூயல் 7 வாட் ஹை பவர் ஸ்பீக்கர்கள் உள்ளன.

    புதிய டூயல் அப் மானிட்டர் தற்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர சர்வதேச சந்தையிலும் கிடைக்கும் எல்ஜி டிஸ்ப்ளே விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49 ஆயிரத்து 096 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.
    • இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.

    ரெட்மி G27 மற்றும் G27Q கேமிங் மானிட்டர்களை தொடர்ந்து சியோமியின் துணை பிராண்டு ரெட்மி முற்றிலும் புதிய மற்றும் குறைந்த விலை மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ரெட்மி A27Q என்று அழைக்கப்படுகிறது. இதில் 2K ரெசல்யூஷன் மற்றும் IPS ஸ்கிரீன் உள்ளது.

    ரெட்மி A27Q 2K IPS அம்சங்கள்:

    புதிய ரெட்மி A27Q 2K IPS மானிட்டர் அன்றாட பணிகளை மேற்கொள்ளவும், பொழுதுபோக்கு சார்ந்த பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள IPS ஸ்கிரீன் 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் தலைசிறந்த விஷூவல்களை அதன் உண்மை நிறங்களில் பிரதிபலிக்கிறது. இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.

    இத்துடன் HDR 10 சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இது தரவுகளுக்கு டெப்த் மற்றும் தரத்தை மேம்படுத்தி காண்பிக்கிறது. இதில் 8-பிட் கலர் டெப்த் மற்றும் 100 சதவீத sRGB சப்போர்ட், 95 சதவீதம் DCI-P3 சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.

    ரெட்மி A27Q மானிட்டரில் 75Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் ப்ளூ லைட் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இது கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. இதன் மூலம் நீண்ட நேரம் மானிட்டரை பயன்படுத்த முடியும். கனெக்டிவிட்டிக்கு DPI.4 இன்டர்ஃபேஸ், HDMI இன்டர்ஃபேஸ், யுஎஸ்பி ஏ இன்டர்ஃபேஸ், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் உள்ளது.

    இதில் உள்ள யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் 65 வாட் ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த மானிட்டரை வால் மவுன்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் இதன் விலை 869 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 047 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஆதார் எண் வைத்து குற்றவாளிகளின் விவரங்கள் தனியாக அடையாளப்படுத்தப்படுகிறது.
    • குற்றவாளிகளை தரம் பிரித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களின் ஆதார் அட்டை நகல் பெறுவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

    ஆதார் எண் வைத்து குற்றவாளிகளின் விவரங்கள் தனியாக அடையாளப் படுத்தப்படுகிறது. வழக்குகளில் குற்றவாளியின் பெயர், முகவரியுடன் ஆதார் விவரங்களையும் இணைக்க வலியு றுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சில குற்றவாளிகள் ஆதார் அட்டை இல்லாமல் உள்ளனர். சிலர் ஆதார் அட்டை விவரங்களை தெரிவிக்க மறுத்து விடுகின்றனர். போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதுடன் அவர்களின் ஆதார் விவரங்களை பெறமுடியாமல் உள்ளனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்த, அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்க, ஜெயிலுக்கு கொண்டு செல்ல என பல்வேறு இடங்களில் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு குற்ற வழக்குகள் வாரியாக குற்றவாளிகளை தரம் பிரித்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள், அடிதடி மோதல் நபர் கள், போதை பொருள் வியாபாரிகள் என பல் வேறு வகையான பட்டியல் தயாரித்து அந்த குற்றவாளிகளை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆதார் அட்டை இல்லாமல் சில குற்றவாளிகள் சிக்குகிறார்கள். சிலர் வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஆதார் எண் களை தேடி கண்டறிவது சிரமமாக இருக்கிறது. ஆதார் எண் விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய வேண்டியது உள்ளது.

    போலீசின் சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தில் வழக்கு விவரங்களுடன் ஆதார் விவரங்களை சேர்க்க வேண்டி உள்ளது. சில குற்றவாளிகள் நீண்ட காலம் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதில் ஆதார் எடுக்காதவர் களும் உள்ளனர். வெளியே வந்து பல்வேறு குற்றங்க ளில் ஈடுபடுகிறார்கள்.இவர்களை கைது செய்து மீண்டும் ஜெயிலில் அடைக்க செல்லும் போது ஆதார் இல்லாமல் இருப்பதால் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.

    குற்றவாளிகள் தொடர்பான வரலாற்று பதிவேடு இருக்கிறது. புதிய குற்றவாளிகள், வெளியூர் குற்றவா ளிகள் இந்த பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஜாமீனில் வந்தவர்கள். சிறையில் உள்ளவர்கள், தலைமறைவாக இருப்ப வர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
    • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்வதற்காக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவான போக்சோவில் பதிவாகும் வழக்குகளில் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

    புதிய நடைமுறை

    அதாவது அந்த வழக்கு குறித்த விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலருக்கு உடன் இருந்து உதவ குழந்தைகள் நலக் குழுமத்திடம் இருந்து ஒரு நபரை வேண்டி பெறுதல், அரசின் இடைக்கால நிவாரணம் பெறுதல், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், நீதிமன்ற விசாரணை விவரம் உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்வதற்காக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

    அதன்படி, புகார்தாரர்களின் மொபைல் போனுக்கு வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி மூலம் விசாரணை விபரத்தை அனுப்பும் முறையை நாட்டில் முதல் முறையாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நெல்லையில் 4 பேர் குழு

    இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறுகையில், தென்மண்டல ஐ.ஜி. உத்தரவினை நெல்லை மாவட்டத்திலும் நடைமுறைபடுத்தி உள்ளோம். இதற்காக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்டப்டு உள்ளது. இந்த குழுவில் 4 பேர் செயல்படுவார்கள்.

    அவர்கள் ஹலோ போலீஸ் வாட்ஸ் அப் எண் மூலமாக போக்சோ வழக்கின் விபரங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரிவிப்பார்கள். மேலும் அவர்களின் சந்தேகங்களை கேட்டறிந்து உரிய விளக்கம் அளிப்பார்கள். இதன் மூலம் போக்சோ குற்றவாளிகளுக்கு சீக்கிரம் தண்டனை கிடைக்கும் என்றார்.

    • ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது.
    • லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்–பூர் :

    நூற்பாலைகளுக்கு விவசாயிகள் நேரடியாக பஞ்சை விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு சைமா சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளித்துறை மந்திரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று பாதிப்பு, அபரிமிதமான நூல் விலை உயர்வால் திருப்பூர் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைததறி, கைத்தறி ஜவுளித்தொழில் 50 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் நடப்பு ஆண்டுக்கான பருத்தி சீசன் தொடங்கும்போது, மத்திய அரசு கவனமாக செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் ஜவுளித்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு விடும்.

    தேவைக்கு மேல் கொள்முதல் செய்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்கும் பெரும் வியாபாரிகள், ஒழுங்குமுறை விற்பனை கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தும், முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கும் இந்திய பருத்தி கழக நிறுவனம் ஆகியவற்றால் நூல் விலை உயர்வு, பற்றாக்குறைக்கு காரணம் ஆகும். இதற்கான தீர்வுகளையும் எங்கள் சங்கம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

    விவசாயிகளுக்கு நியாயமான ஆதரவு விலையை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் விவசாயிகள் நேரடியாக பஞ்சு அரைப்பவர்களுக்கும், நூற்பாலைகளுக்கும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்க வியாபாரிகள் மறுக்கும்போது அல்லது கொள்முதல் செய்ய வராதபோது இந்திய பருத்தி கழகம் தலையிட்டு அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி கொள்முதல் செய்த பருத்தியை அதிகமாக வாங்கி இருப்பு வைக்கும் வியாபாரிகளை தவிர்த்து உற்பத்தி செய்யக்கூடிய நூற்பாலைகளுக்கு விற்க வேண்டும்.

    பருத்தி, பஞ்சு இருப்பு திருப்தியாக இருக்கும்போது கூட உள்நாட்டு உற்பத்திக்கு போதுமான அளவு வினியோகம் செய்து மீதம் உள்ள இருப்பை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அனுமதிக்க வேண்டும். அரசு ஏற்கனவே அறிவித்தபடி பருத்தி, பஞ்சு விசயத்தில் நிபுணத்துவம் உள்ள குழுவை அமைத்து, பருத்தி அதிகம் விளைவித்தல், வியாபாரிகள், இந்திய பருத்தி கழகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கொள்கைக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறை அந்த குழு கூடி தேவையான பரிந்துரைகளை தர வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #CentralGovernment #ComputerMonitoring
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் தங்களது நாச வேலை திட்டங்களை செல்போன்கள் மற்றும் இ.மெயில்கள் மூலம் பரிமாறிக் கொள்வதை தடுப்பதற்காக புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கி உள்ளது.

    செல்போன் உரையாடல்களை உளவுத்துறையினர் இடைமறித்து கேட்பதன் மூலம் பல நாசவேலை திட்டங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் உளவுத்துறை அமைப்புகளுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்வது மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர் பதிவுகளையும் ஆய்வு செய்யும் கூடுதல் அதிகாரம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

    நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உள்துறை செயலாளர் ராஜீவ் கோபா வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையில் 10 அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த 10 அமைப்புகள் விவரம் வருமாறு:-

    1. உளவுத்துறை (ஐ.பி.)

    2. போதைபொருள் கட்டுப்பாட்டுத் துறை

    3. அமலாக்கத்துறை

    4. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம்

    5. வருவாய் உளவுத்துறை

    6. சி.பி.ஐ.

    7. தேசிய விசாரணை ஆணையம்

    8. ‘ரா’ உளவு அமைப்பு

    9. சிக்னல் உளவுத்துறை

    10. டெல்லி போலீஸ் கமி‌ஷனர்

    இந்த 10 அமைப்புகளுக்கும் கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

    மத்திய உள்துறை வழங்கி உள்ள இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

    இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதுபோல வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

    அமலாக்கத்துறையை பொறுத்தவரை எந்த இடத்திலும் ஆவணங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் இல்லாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக அமலாக்கத்துறைக்கும் கம்ப்யூட்டர் பதிவு தகவல்களை கைப்பற்றும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையினர் தகவல் பரிமாற்றங்களில் தலையிடும் அதிகாரத்தையும் பெற்று உள்ளனர். 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் நாடு முழுவதும் மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளன.



    தனி நபர்களின் கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் இதுபற்றி கூறுகையில், “மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்க இயலாது. இந்தியாவை அடக்கி ஆள மோடி முயற்சி செய்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்டு கம்ப்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், “ஒவ்வொரு இந்தியரையும் கிரிமினல் போல் நடத்துகிறீர்கள். தனி நபர்களின் விவகாரங்களில் தலையிடுவது சட்ட விரோதமானது” என்று கூறியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி ஆகியோரும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலில், “மக்களின் தகவல் தொடர்பை மோடி முடிக்க நினைக்கிறார்” என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் கம்ப்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு ஏன் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்டுபிடிக்கவே இந்த அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்கான 10 அமைப்புகளும் தங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. அதைத்தான் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

    சாதாரண மக்களுக்கு இந்த உத்தரவால் எந்த இடையூறும் ஏற்படப்போவதில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளவர்களின் கம்ப்யூட்டர்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். எனவே இதுபற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கம்ப்யூட்டர் தகவல்களை 10 அமைப்புகளும் ஆய்வு செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறையின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஒத்துழைக்காத பட்சத்தில் அபராதமும், 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #CentralGovernment
    #ComputerMonitoring
    நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணிக்க 45 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர் கூறினார்.
    நாமக்கல்:

    தமிழக பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பயிற்சி) டாக்டர் சேகர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்ட அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், நோயாளிகளிடமும், சிகிச்சை முறைகள், மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளும் விதம், டாக்டர்களின் கவனிப்பு குறித்தும் கேட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில், அவர்கள் குணமாகி வீடு திரும்புவார்கள்.

    அதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனும் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அவனும், நல்ல நிலையில் இருக்கிறான். விரைவில் குணமாகி வீடு திரும்புவான்.

    அடுத்த 2 மாதங்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணித்து தடுப்பு நடவடிக்கையை தொடரும் வகையில், 45 மருத்துவ குழுவினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த குழுவில் ஒரு டாக்டர், நர்சு உள்பட 5 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.

    பன்றி காய்ச்சலுக்கு உரிய 15 ஆயிரம் மாத்திரைகள் இருப்பு உள்ளது. அதேபோல், ஊசியும் 2 ஆயிரம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் என்ற அச்சுறுத்தல் இல்லை. மேலும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 76 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் உஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
    கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனவிலங்குகளை கண்காணிக்க ஆளில்லாத குட்டி விமானம் கோவை வந்தது. அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து இதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இதில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள், மலையடிவார பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை தடுக்க அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைந்த பகுதி வழியாக காட்டு யானைகள் அகழியை கடந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுகின்றன.

    அவற்றை கண்காணித்து மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வந்தாலும், சில நேரங்களில் யானை- மனித மோதல் நடந்து வருகிறது. இதனால் மலையடிவார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தாலும், அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும்போது, அவைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டதா அல்லது அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் வனப்பகுதிக்குள் எந்த இடங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    எனவே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்துவதற்காகவும், வனவிலங்குகளை கண்காணிப்பதற்காகவும் ஆளில்லாத குட்டி விமானம் வேண்டும் என்று வனத்துறை சார்பில் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. தற்போது அதற்கான அனுமதி அளித்து, ஆளில்லாத குட்டி விமானமும் கோவை வந்துள்ளது.

    இதை இயக்க அதிகாரிகள் யாரை நியமிப்பது? என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அதை பயன்படுத்து வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் அந்த ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவைக்கு கொடுக்கப்பட்டு உள்ள ஆளில்லாத குட்டி விமானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. வீடியோ பதிவு செய்வதுடன், புகைப்படமும் எடுக்கும். அதுபோன்று அதில் தேனீக்கள் போன்று சத்தம் எழுப்பும் வசதியும் உள்ளது. பெரும்பாலும் தேனீக்களின் சத்தம் கேட்டதும் காட்டு யானைகள் ஓடிவிடும்.

    வனப்பகுதிக்கு மேல் இந்த குட்டி விமானத்தை இயக்கி, கண்காணிக்கும்போது, வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக யாராவது நடமாடுகிறார்களா? என்பதையும் கண்காணிக்க முடியும். அத்துடன் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த வகையான வனவிலங்குகள் இருக்கின்றது என்பது குறித்தும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்க பயிற்சி அளித்த பின்னர், அதன் பயன்பாடு குறித்து பரிசோதனை செய்யப்படும். இந்த ஆளில்லாத குட்டி விமானம் வித்தியாசமானதாக, எடை அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே வனப்பகுதியை விட்டு வெளியே வந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த மிகவும் உதவியாக இருக்கும். அதுபோன்று அந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதா? அல்லது வன எல்லையில்தான் நிற்கிறதா? என்பது குறித்தும் அறிய முடியும்.

    மேலும் இதை வனப்பகுதிக்கு மேல் இயக்கும்போது, வனப்பகுதிக்குள் காயத்துடன் ஏதாவது வனவிலங்குகள் சுற்றுகிறதா? என்பதையும் உடனடியாக கண்டறிய முடியும். எந்தப்பகுதியில் வனவிலங்குகளின் தொந்தரவு இருக்கிறதோ அங்கு உடனடியாக ஆளில்லாத குட்டி விமானத்தை எடுத்துச்சென்று கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்
    ×