என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Google"
- கூகுள் மெசேஜஸ் செயலியில் புதிய அம்சம்.
- புதிய அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது மெசேஜஸ் ஆப்-ஐ வாட்ஸ்அப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியாக மாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கூகுளின் மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ். எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி உள்ளது. மற்ற குறுந்தகவல் செயலிகளுடனான போட்டியை வலுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் மெசேஜஸ் செயலியில் புதிய வசதியை வழங்கி உள்ளது.
மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் மெசேஜஸ் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் "வாய்ஸ் நோட்ஸ்" (Voice Notes) அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

கோப்புப்படம்
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வெளியாகி இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் நோட் ரெக்கார்டு செய்யும் போது வெளிப்புற சத்தத்தை தவிர்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி கூகுள் மெசேஜஸ் செயலியின் வாய்ஸ் நோட் அம்சத்தில் நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) வசதி சேர்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த வசதி கூகுள் மெசேஜஸ் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக செயலியில் நாய்ஸ் கேன்சலேஷன் பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தும் போது வாய்ஸ் நோட்-களில் வெளிப்புற சத்தம் எதுவும் பதிவாகாது. வாய்ஸ் நோட்-இல் வழங்கப்படும் புதிய நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் தற்போது டெஸ்டிங் கட்டத்திலேயே உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
- விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் பேக்கப் செய்வது குறித்து கூகுள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி பேக்கப் தகவல்கள் அனைத்தும் கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் கட்டுப்பாடு விதிகளின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான தகவல் கூகுள் வலைதள பதிவில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய கட்டுப்பாட்டு விதிகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் தங்களின் ஃபைல் சைஸ் அளவை குறைக்கவோ அல்லது கூடுதல் ஸ்டோரேஜை வாங்கிக் கொள்ளலாம் என்று கூகுள் தெரிவித்து உள்ளது. தற்போது வரை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 15 ஜி.பி. வரையிலான தரவுகளை இலவசமாக வைத்துக் கொள்ள முடியும்.
பேக்கப்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்லிமிடெட் ஸ்டோரேஜை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு கூகுள் வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பேக்கப்களுக்கு அன்லிமிடெட் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் இந்த வழிமுறையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
"ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பேக்கப்களை செயல்படுத்த விரும்பினால், தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்களுடன் 15 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இது கூகுள் டிரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் போன்ற மொபைல் தளங்களில் பகிரப்படுவதை விட மும்மடங்கு அதிகம் ஆகும்."
"பயனரின் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்-இல் ஸ்டோரேஜ் இருக்கும் வரை ஆண்ட்ராய்டு தளத்தில் வாட்ஸ்அப் பேக்கப்கள் தொடர்ந்து வேலை செய்யும். ஸ்டோரேஜ் அளவை நெருங்கும் பட்சத்தில், தொடர்ந்து பேக்கப் சேவையை பெற ஸ்டோரேஜை அதிகப்படுத்த வேண்டும்," என்று கூகுள் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய மாற்றத்தின் படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. பிறகு அடுத்தாண்டு துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் அமலுக்கு வரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
- கூகுள் அக்கவுண்ட் மற்றும் அதன் தரவுகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும்.
- இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம்.
ஜிமெயில் சேவையை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்கள் தங்களின், அக்கவுண்ட்-ஐ இழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையாக, டிசம்பர் 2023 மாதத்தில் லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட்கள் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை, டிசம்பர் மாதத்தில் இருந்து அழிக்கும் வகையில், நடைமுறை மாற்றங்களை கூகுள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட், அதன் தரவுகள் கூகுள் வொர்க்ஸ்பேஸ்-இன் கீழ் உள்ள ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், மீட், காலண்டர் உள்ளிட்டவைகளும், கூகுள் போட்டோஸ் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணை தலைவர் ரூத் ரிச்செலி தெரிவித்துள்ளார்.

"எங்களது மதிப்பீடுகளின் படி, தொடர்ந்து பயன்படுத்தும் அக்கவுண்ட்களுடன் ஒப்பிடும் போது பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் 10 சதவீதத்திற்கும் குறைவு என தெரியவந்துள்ளது. இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம். அதன்பிறகு, இதனை எந்த விதமான தீய செயல்களுக்கும் எளிதில் பயன்படுத்த முடியும்," என்று இது தொடர்பான வலைதள பதிவில் ரூத் ரிச்செலி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் கீழ் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ இரண்டு ஆண்டுகள் வரை திறக்காமல் இருக்கும் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்கள் மட்டுமே பாதிக்கப்படும். இதன் காரணமாக நிர்வாகங்களான பள்ளி மற்றும் வியாபாரங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கூகுள் அக்கவுண்ட்-ஐ பாதுகாப்பது எப்படி?
கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படுவதை தவிர்க்க, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அதனை சைன்-இன் செய்ய வேண்டும். சமீபத்தில் ஏதேனும் கூகுள் சேவையை பயன்படுத்துவதற்கு கூகுள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தி இருந்தாலும், அக்கவுண்ட் ஆக்டிவ் நிலையில் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படும்.
- புதுவித அகௌஸ்டிக் சென்சிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
- கூகுள் உருவாக்கும் புதிய ANC ரக இயர்பட்ஸ்-இல் மைக்ரோபோன் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் ரிங் போன்ற சாதனங்களில் ஹார்ட் ரேட் சென்சார் வழங்குவது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது. பயனர்களுக்கு மிகமுக்கியமான அம்சமாக ஹார்ட் ரேட் டிராக்கிங் தற்போது பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவன சாதனங்களில் உள்ள ஹார்ட் ரேட் சென்சார் பலரின் உயரை எச்சரிக்கை கொடுத்து காப்பாற்றிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
எனினும், இவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெரும்பான்மையாக மாறவில்லை. இதனை கருத்தில் கொண்டு உடல்நல அம்சங்களை அணியக்கூடிய சாதனங்களில் வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி இருக்கிறது. அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் தனது இயர்பட்களில் புதுவித அகௌஸ்டிக் சென்சிங் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஆடியோ-பிலடிஸ்மோ-கிராஃபி (ஏ.பி.ஜி.) துறையில் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறது. இந்த வழிமுறையில் ஒலி அலைகளை கொண்டு இரத்த சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட முடியும். கூகுள் உருவாக்கும் புதிய ANC ரக இயர்பட்ஸ்-இல் மைக்ரோபோன் வழங்கப்படுகிறது. இவை காற்றினுள் ஏற்படும் ஏராளமான பயோ-சிக்னல்களை பதிவு செய்யும்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் சிக்னல்களை கொண்டு ஹார்ட் ரேட் ரீடிங் மற்றும் ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி என இருவித இதய செயல்பாட்டை டிராக் செய்ய முடியும். இந்த அம்சம் பயனர்கள் இயர்பட்ஸ்-இல் இசையை அனுபவிக்கும் போதும் சிறப்பாக இயங்கும். தற்போது இருக்கும் ஹார்ட் ரேட் சென்சார்களுடன் ஒப்பிடும் போது, இந்த தொழில்நுட்பத்தில் சரும டோன்களால் எவ்வித இடர்பாடும் ஏற்படாது.
- கூகுள் நிறுவனம் கியூட் ஆன விளையாட்டை தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
- பயனர்கள் கூகுளில் தீபாவளி என்று டைப் செய்து தேட வேண்டும்.
இந்தியாவில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ம் கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகை அல்லது விசேஷ நாட்களை கொண்டாடும் வகையில், கூகுள் தனது வலைதளத்தில் டூடுல்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த டூடுல்கள் கார்டூன் படங்களாகவும், அனிமேஷன் வீடியோக்களாகவும் இடம்பெற்று இருக்கும்.
அந்த வகையில் தீபாவளியை கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம் கியூட் ஆன விளையாட்டை தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி பயனர்கள் கூகுளில் தீபாவளி என்று டைப் செய்து தேடினால், தீபாவளி என்ற வார்த்தையின் அருகில் நட்சத்திரங்களால் சூழப்பட்ட விளக்கு காணப்படுகிறது. பயனர்கள் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
இனி க்ளிக் செய்த விளக்கு மிளிர்ந்து, அந்த வலைப்பக்கம் முழுக்க இன்னும் அதிக விளக்குகள் தோன்றும். இதோடு வலைப்பக்கம் இருளில் இருப்பது போன்று காட்சியளிக்கும், இதைத் தொடர்ந்து பயனர்கள் மவுஸ் பாயின்டரை அசைத்தால், விளக்கும் அசையும். அதன்படி பயனர்கள் வலைப்பக்கத்தில் உள்ள விளக்குகள் அனைத்தையும் பற்ற வைக்கலாம்.
இவ்வாறு செய்ததும், வலைப்பக்கம் முழுக்க மெல்ல வெளிச்சமுற்று சாதாரண வலைப்பக்கமாக மீண்டும் மாறிவிடும். இதே எஃபெக்ட் கணினி மட்டுமின்றி கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களிலும் இயங்குகிறது.
- பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.
- முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் பிக்சல் 8 யூனிட்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இம்மாத துவக்கத்தில் கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் கூகுள் நிறுவனத்தின் டென்சார் G3 சிப் மற்றும் டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்படுகிறது. இத்துடன் இரட்டை பிரைமரி கேமரா சென்சார்கள் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் 72 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகின்றன.
Just announced at #GoogleForIndia: @rosterloh spoke about our plan to manufacture Pixel smartphones in India intending to start with the Pixel 8, and expecting these devices to start to roll out in 2024, joining India's "Make in India" initiative.For more:… pic.twitter.com/FznOzH8E8C
— Google India (@GoogleIndia) October 19, 2023
பிக்சல் பிராண்டிங்கில் முதல் ஸ்மார்ட்போன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கூகுள் ஃபார் இந்தியா 2023 நிகழ்வில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 8 மாடல் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் ஸ்மார்ட்போன் யூனிட்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் புதிய நிறுவனமாக இணைய இருக்கிறது.
இந்திய உற்பத்தி காரணமாக பிக்சல் ஸ்மார்ட்போன் விலை இந்திய சந்தையில் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், இது பற்றி தற்போதைக்கு எந்த தகவலும் வெளியாகவில்லை.
- பிக்சல் 8a ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்.
- வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் தான் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் மற்றும் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு மாடல்கள் பிக்சல் 8 சீரிசில் இடம்பெற்று இருக்கின்றன. வரும் மாதங்களில் பிக்சல் 8a ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், பிக்சல் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 8 விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
கூகுள் பிக்சல் 8 மாடல் பயனர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இத்துடன் பிக்சல் 8 ப்ரோ வாங்கும் போது ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 8 சீரிஸ் வாங்குவோர் கூகுள் பிக்சல் வாட்ச் 2 மாடலை ரூ. 19 ஆயரத்து 990 என்றும் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலை ரூ. 8 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.
- பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.
- பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் 8 மாடலில் 6.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளே, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.
பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 8 மாடலில் மெட்டல் ஃபினிஷ் மற்றும் பாலிஷ்டு கிளாஸ் பேக் உள்ளது. இரு மாடல்களிலும் டென்சார் G3 பிராசஸர், டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். உள்ளது.

இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா, பிக்சல் 8 மாடலில் 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 48MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் 4575 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இந்திய சந்தையில் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசெல் மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடல் அப்சிடியன் மற்றும் பே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ மாடலின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது "ஆன்டி டிரஸ்ட்" வழக்கு பதிவு செய்துள்ளது
- எங்களால் சந்தையில் கால் பதிக்கவே முடியவில்லை என்றார் நாதெல்லா
அமெரிக்க வியாபார நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தால், பிற நிறுவனங்களின் எதிர்காலம் அதனால் பாதிக்கப்படலாம் என்பதால் அத்தகைய நிறுவனங்களின் மீது அந்நாட்டில் "ஆன்டி டிரஸ்ட்" (antitrust) எனப்படும் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
உலகின் முன்னணி இணையவழி வலைதள தேடுதல் இயந்திரமான கூகுள் (Google) எனும் பிரபல நிறுவனத்தின் மீது அத்தகைய ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு கூகுள் பல கோடிகள் சட்ட விரோதமாக தந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நீதித்துறையால் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகின் மற்றொரு முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
வலைதள தேடுதல் இயந்திரங்களுக்கான சந்தையில் கூகுள் வலைதளத்தின் ஆதிக்கம் பிற போட்டியாளர்களை தலைதூக்கவே அனுமதிப்பதில்லை. அந்நிறுவனத்தின் வியாபார தந்திரங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் நிறுவனத்தினரோடு போட்டிருக்கும் ஒப்பந்தங்களினால் எங்கள் வலைதள தேடுதல் இயந்திரமான 'பிங்' (Bing) 2009லிருந்து சந்தையில் ஒரு இடம் பிடிக்க எவ்வளவு முயன்றும் இயலவில்லை. கூகுள் தேடுதல் இயந்திரத்திலிருந்து பெறும் பயனர்களின் விவரங்களை கூகுள் நிறுவனம், தங்களின் தேடுதல் இயந்திரத்தின் விளம்பரத்திற்கே பயன்படுத்தி பெரும் வருமானம் ஈட்டுகிறது. அந்த தொகையை ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் செலவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் எங்களின் பிங் சேவையை பயன்படுத்த அனுமதித்தால் அதற்குண்டான செலவினை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கூகுளின் ஆதிக்கத்திலிருந்து ஆப்பிள் வெளிவர முடியாததால், மைக்ரோசாப்ட், சந்தையிலேயே நுழைய முடியாமல் தவிக்கிறது.
இவ்வாறு நாதெல்லா சாட்சியம் அளித்தார்.
3 தசாப்தங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது விண்டோஸ் எனும் இயக்கமுறை மென்பொருளுக்கு (Operating System) இதே போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி சந்தையில் முதலிடம் பிடித்ததை இப்போது கூறி தற்போது அதே நிலைமை தங்களுக்கு வந்ததும் மைக்ரோசாப்ட் புலம்புவதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
- கூகுள் பிக்சல் 7a மாடல் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி விரைவில் துவங்க இருக்கும் பிக் பில்லியன் டே சேல்-இல் பிக்சல் 7a புதிய நிற வேரியண்ட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது கூகுள் பிக்சல் 7a மாடல் சீ, சார்கோல் மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இவற்றுடன் கோரல் நிற வேரியண்ட் விரைவில் இணைய இருக்கிறது. கோரல் நிற வேரியண்ட் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிற வேரியண்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 7a மாடல் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்-இல் இதன் விலை சற்று குறைக்கப்படவோ அல்லது அதிக சலுகைகள் வழங்கப்படவோ வாய்ப்புகள் உண்டு.
அக்டோபர் 5-ம் தேதி கூகுள் பிக்சல் மாடல்களுக்கான சலுகை விவரங்களை ப்ளிப்கார்ட் அறிவிக்க இருக்கிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 4-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு அக்டோபர் 4-ம் தேதி துவங்குகிறது.