search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driving"

    • கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை 1,954 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டதில், 197 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ேபாக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள பஸ்கள் மட்டும் இயக்க தகுதி சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நடப்பாண்டு பள்ளிகள் திறக்கும் முன்பே, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங் களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள னர். இதுவரை 1,954 வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டதில், 197 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    குறிப்பாக இதில் பெரும் பாலான வாகனங்களில் சி.சி.டி.வி காமிரா, சென்சார் கருவி உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்படவில்லை. மேலும் சில பஸ்களில் சீட் பெல்ட், மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்டவை சேதமடைந்து இருந்தது. இதனால் இந்த 197 பள்ளி வாகனங்களை இயக்க தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப் படவில்லை. குறைப்பாடு கண்டறியப்பட்ட வாகனங்கள், குறைபாட்டை நிவர்த்தி செய்த பிறகே தகுதிச்சான்று வழங்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது.
    • பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, வாகனத்தின் பதிவுச் சான்று ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும்.

    மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.

    மேலும் புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு முதல்முறை ரூ.ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • செல்போன் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சில அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பார்த்துக் கொண்டே பஸ்சை ஓட்டி செல்கின்றனர்.

    நேற்று மதியம் மதுரை ரெயில் நிலையம்-பெரியார் பஸ் நிலையம் இடையே அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர் விபத்து அபாயத்தை உணராமல் செல்போனில் காட்சிகளை பார்த்தபடி ஓட்டிச் சென்றார். பஸ் டிரைவரின் அலட்சியத்தை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் சில பஸ்டிரைவர்கள் மற்றும் ஆட்டோ, கார் வாகன டிரைவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் செல்போனை பார்த்தபடி வாகனங்களை ஓட்டுவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் விலை மதிப்பில்லாத மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பார்த்து கொண்டு இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரையில் சில போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.

    இருசக்கர வாகனங்களை அடிக்கடி நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறும் பெரிய வாகனங்கள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதில்லை.

    சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.
    • இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் மார்க்கெட் அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபியில் இருந்து ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார்போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்த இடத்தில் வந்து நின்றது.

    காருக்குள் 2 பேர் இருந்தனர். அதில் ஒரு வாலிபர் கார் கண்ணாடியை இறக்கி போலீசாரை முறைத்து பார்த்தார். அதன்பின் அந்த காரை அவர் ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்துக் போலீசார் இருசக்கர வாகனத்தில் காரை விரட்டினர்.

    அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே சென்ற காரை போக்குவரத்து போலீசார் மடக்கி படித்தனர். காரை ஓட்டி வந்த வாலிபர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தடுமாறியபடி காரை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது போக்கு வரத்து சப்-இனஸ்பெக்டர் விஜயகுமார் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்து ழைக்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓடடி வந்தது கோபியை சேர்ந்த அருண் (21) என்பதும், மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மது போதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வரப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

    சென்னையில் செல்போன் பேசியபடி அரசு மாநகர பேருந்துகளை இயக்கிய 50 ஓட்டுனர்களை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். #MTCdrivers #MTCdriverssuspended
    சென்னை:

    சென்னையில் மாநகர பேருந்துகளை ஓட்டும் சில டிரைவர்கள் பரபரப்பான சாலை போக்குவரத்துக்கு இடையில் பேருந்தை இயக்கியபடி செல்போனில் பேசிக் கொண்டு செல்வதுண்டு.

    இதனால், சாலையில் இருக்க வேண்டிய கவனம் சிதறி விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பயணிகள் அச்சப்படுகின்றனர்.



    இதுதொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பரவலாக புகார்களும் வந்தன. இப்புகார்கள் மீது விசாரணை நடத்திய உயரதிகாரிகள் 50 டிரைவர்களை இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    தொடர்ந்து, இதே தவறை செய்யும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. #MTCdrivers #MTCdriverssuspended  

    விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்த், தனசேகரன், ரவிசந்திரன், மீனாட்சி ஆகியோர் கொண்ட குழுவினர்  கரூர் சுங்ககேட், சுக்காலியூர் ரவுண்டானா, வெங்கக்கல்பட்டி பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது போக்குவரத்து விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடையை ஏற்றி கொண்டு வாகனங்கள் வருகிறதா? விபத்தை ஏற்படுத்தும் வகையில் குடித்துவிட்டு அதிகவேகமாக வாகனத்தை யாரும் ஓட்டி வருகின்றனரா? என அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்தனர்.

    அப்போது அந்த வாகனங்களுக்கான இன்சூரன்ஸ், தகுதிச்சான்று உள்ளிட்டவற்றையும் சரிபார்த்தனர். இதில் தகுதிச்சான்றினை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 9 சரக்கு வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதேபோல் சாலைவரியை முறையாக செலுத்தாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக எடை ஏற்றி வந்த 7 சரக்கு வாகனங்களுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, இனி தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில், விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மோட்டார் சைக்கிள், மொபட் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுகின்றனரா?, பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்கிறாரா? என வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் மற்றும் குழுவினர் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த 17 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.2,500 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

    கரூரில் வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவது, சிக்னலில் நின்று செல்வது, மிதவேகமாக வாகனம் இயக்குவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது என்பன உள்ளிட்டவற்றை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க முன்வர வேண்டும்.

    மேலும் சரக்கு வாகனங்களில் ஆடுமாடுகள், மனிதர்கள் உள்ளிட்டோரை ஏற்றி செல்வதும் விதிமீறலாகும். எனவே சரக்கு வாகன ஓட்டிகள் இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். விபத்தினை தடுக்கும் பொருட்டு தான் இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வாகன விதிகளை மீறும் நபர்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
    18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் வாகன உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவற்றின் டிரைவர்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி(பொறுப்பு) ஜெய்தேவராஜ் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி (பொறுப்பு) ஜெய்தேவராஜ் பேசியதாவது:-

    மோட்டார் வாகன சட்டத்தின் படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. அதை மீறி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டினால் வாகன உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். மேலும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மது அருந்தி விட்டும், செல்போன் பேசிக்கொண்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது. 

    அப்படி ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துறைமங்கலத்தில் இருந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நேரிடையாக ஷேர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்தில்லா பெரம்பலூராக மாற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×