search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhoni"

    • நாளை ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.
    • டோனியின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் டோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. ஐபிஎல் அறிமுக போட்டியில் டோனி எந்த ஹர் ஸ்டைலுடன் இருந்தாரோ அந்த ஸ்டைலுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். கருப்பு நிற உடையில் டோனி இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

    இதற்கு பல லட்சம் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் ஹீரோ மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
    • டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குகதாஸ் மதுலன் யார்க்கர் பந்து வீசி விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது
    • சிஎஸ்கே அணியில் ஏற்கனவே யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனா உள்ளார்.

    இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய YORKER பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சிஎஸ்கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    புனித ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பந்துவீச்சாளர் குகதாஸ் மதுலன் யார்க்கர் பந்து வீசி விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    சிஎஸ்கே அணியில் ஏற்கனவே யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
    • சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.

    இந்நிலையில் கேப்டன் டோனி தனது பயிற்சியை இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்ததை ஒட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    • இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது
    • இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.

    இந்நிலையில் தனது சக வீரர்களுடன் கேப்டன் டோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்சின் பிறந்தநாளை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சிஎஸ்கே அணி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.
    • முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

    இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.

    இந்நிலையில் லியோ படத்தில் உள்ள ஒரு மாஸ் நிறைந்த காட்சியை வைத்து டோனிக்கு புது வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவுக்கு அந்த படத்தில் உள்ள சிங்கம் பாடலை பின்னணியாக தயார் செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் வீடியோவில் கூஸ்பம்ஸ் இல்ல.. கூஸ்பம்ஸ் தான் வீடியோவே என பதிவிட்டிருந்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.

    ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் 'வந்தாரா' என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

    அந்த வகையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி கபூருடன் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.
    • தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன்.

    மகேந்திர சிங் தோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:-

    அறுவை சிகிச்சைக்கு பின்னர் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வர வேண்டும். இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் தோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள்.

    தோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். அதேசமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதல் வைத்திருப்பார். அவரிடம் நேரம் செலவிடுவது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு இருக்கிறது.


    தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. கொரோனா நேரத்தில் நாங்கள் இருவரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்து விளையாடி உள்ளோம்.

    களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எனக்கு விளையாட 14 ஆட்டங்கள் கொடுத்தார். அதுதான் நான் இந்திய அணிக்கு தேர்வாவதற்கு முக்கிய காரணம்.

    இவ்வாறு தீபக் சாஹர் கூறினார்.

    • பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
    • ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.

    அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

    முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர். 

    விளையாட்டு வீரர்களான மகிந்திரசிங் தோனி, விராட் கோலி, அஷ்வின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    விராட் கோலி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் பிரதிஷ்டை விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், விழாவிற்கு தோனியும் வரவில்லை.. விராட் கோலியும் வரவில்லை.

    இருவரும் விழாவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தகவல் இல்லை. இருப்பினும், ரசிகர்கள் காரணத்தை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் உள்ளனர்.

    • கடந்த ஜூன் மாதம் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.
    • தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 22-ந்தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப் டன் டோனி இந்த சீசனிலும் விளையாடுகிறார்.

    கடந்த போட்டித் தொட ரின்போது அவரிடம் ஓய்வு பற்றி கேட்டபோது, ரசிகர் களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய் வேன் என்று கூறினார். அதன்படி டோனி ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆயத்தமாகி வருகிறார்.

    அவர் கடந்த ஜூன் மாதம் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.

    இந்த நிலையில் டோனி 10 நாளில் பயிற்சியை தொடங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனி தற்போது நன்றாக இருக்கிறார். அவர் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இன்னும் 10 நாட்களில் டோனி வலைப்பயிற்சியை தொடங்குவார். மார்ச் முதல் வாரத்தில் எங்களது பயிற்சி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐ.பி.எல். சீசன் மார்ச் 22-ந்தேதி தொடங்குவதால் அந்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் முதல் முகாமை நடத்துவோம்.

    அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு ஐ.பி.எல். தொடரின் பாதி ஆட்டங்கள் வேறு நாட்டுக்கு மாற்றம் செய்யப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    போட்டி அட்டவணையை வேறு இடத்துக்கு மாற்றுவது பற்றி அவர்கள் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் ஐ.பி.எல். விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித்சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அதிகபட்சமாக தலா 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர்.
    • ஐ.பி.எல். தொடரை எடுத்துக் கொண்டால் 10 அணிகளுமே பலம் வாய்ந்தவையாகும். சிறந்த வீரர்களை தான் தேர்வு செய்துள்ளனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் நடைபெற்றுள்ளன.

    வீராட்கோலியின் ஆர்.சி.பி. (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. 3 தடவை இறுதிப்போட்டியில் தோற்று 2-வது இடத்தை பிடித்தது.

    தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை அதிகபட்சமாக தலா 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 தடவையும், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகி யவை தலா 1 முறை சாம்பியன் பட்டன் பெற்றுள்ளன.

    இந்நிலையில் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல ஆர்.சி.பி. அணிக்கு உதவி செய்ய வேண்டும் என்று டோனியிடம் பெங்களூர் அணியின் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ரசிர் இந்த கேள்வியை எழுப்பினார்.

    அந்த ரசிகரின் கேள்விக்கு தோனி பதில் அளித்து கூறியதாவது:-

    அவர்கள் (ஆர்.சி.பி.) மிகவும் நல்ல அணியாகும். உங்களுக்கு அது தெரியும். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை திட்டமிட்ட படி எப்போதுமே சரியாக நடக்காது. ஐ.பி.எல். தொடரை எடுத்துக் கொண்டால் 10 அணிகளுமே பலம் வாய்ந்தவையாகும். சிறந்த வீரர்களை தான் தேர்வு செய்துள்ளனர்.

    சில வீரர்கள் காயத்தால் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. இது வெற்றி வாய்ப்பை பாதிக்கும். நான் ஏற்கனவே கூறியது போல் ஆர்.சி.பி. நல்ல அணிதான்.

    எங்கள் அணியிலும் கவலைப்பட நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எனது அணி குறித்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கிறது. வேறு அணிக்கு என்னால் எப்படி உதவ இயலும். நான் ஆர்.சி.பி.க்கு உதவினேன் என்றால் எங்கள் அணி ரசிகர்கள் எவ்வாறு நினைப்பார்கள்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    ரசிகர் கேள்வி கேட்பதும், டோனி அதற்கு பதில் அளிப்பதுமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகேந்திரசிங் தோனி இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
    • சச்சினை கவுரவிக்கும் வகையில் அவரது 10-ம் நம்பர் ஜெர்சிக்கு 2017-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ஆம் ஆண்டுமுதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

    இந்த நிலையில், மகேந்திரசிங் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இதன்மூலம் ஜெர்சி '7' ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக சச்சினை கவுரவிக்கும் வகையில் அவரது 10-ம் நம்பர் ஜெர்சிக்கு 2017-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    தோனி தலைமையில் இந்திய அணி டி-20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×