search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhoni"

    • முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்திருந்தார்
    • வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது

    இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறார். முன்னதாக EMotorad ,Cars24, Khatabook உள்ளிட்ட நிறுவனங்களில் டோனி முதலீடு செய்த நிலையில் தற்போது ஸ்டார்ட்டப் நிறுவனம் ஒன்றில் அதிகளவில் டோனி முதிலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     ஹரியானா மாநிலம் குருகிராமில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஷ்டார்டப் ஆக தொடங்கப்பட்டு இயங்கி வரும் மின்சார வாகன நிறுவனம் புளூமார்ட்[BluSmart]. வளர்ந்து வரும் இந்நிறுவனம் ஓலா ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கும் வாடகை வாகன சர்வீஸ்களை தனித்துவமான வகையில் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வழங்கும் குறிக்கோளுடன் இயங்குவருகிறது. தற்போதைக்கு டெல்லி,குருகிராம், நொய்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் எலெக்ட்ரிக் கார் வாடகை சேவைகளை வழங்கிவரும் புளூமார்ட் இந்த வருட இறுதிக்குள் மும்பையில் தனது சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

     

    இந்த வருடத்துன் தொடக்கத்தில் துபாயிலும் தனது சேவையை புளூமார்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. ப்ரீ சீரிஸ்  நிதியுதவி சுற்று மூலம் புளூஸ்மார்ட் சுமார் 250 மில்லியன் டாலர்கள் முதலீடுகளை தற்போதுவரை ஈர்த்துள்ளது.

    மேலும் ரூ.550 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது. பெரு நிறுவனங்களில் அல்லாமல் வளர்ந்து வரும் நிறுவனங்களில் டோனி தொடர்ந்து முதலீடு செய்து வருவது கவனிக்கத்தக்கது. வளர்ந்து வரும் சந்தையில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புளூஸ்மார்டின் மின்சார வாகன சேவை பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின்.
    • சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

    விளையாட்டு உலகில் சிறந்த ஐகான், ரோல்மாடல், ஆசான் என பல்வேறு பெருமைகள் கொண்டவராக இருப்பவர் எம்.எஸ்.டோனி. பொதுவாக விளையாட்டு என்றாலே வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஒன்றில் முடிந்து போகும் விஷயம்தான்.

    ஆனால் அதில் கற்ற படிப்பினைகளையும், பாடங்களையும், போராட்டங்களையும், நுணுக்கங்களையும் என பல்வேறு விஷயங்களையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்த வல்லவராக இருப்பதால் தான் டோனியை ஒரு தலைவனாகவே பலரும் பார்க்கிறார்கள்.

    சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளார். "கேரம் பால்" அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில் 2 பேர் அவற்றில் இவரும் ஒருவர்.

    எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின், ரேங்க்களில் விரைவாக உயர்ந்து இந்திய அணிக்கு வலிமையான சக்தியாக மாறினார். இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் தூணாக தொடர்கிறார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் எம்.எஸ்.டோனியின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றும் அதிர்ஷ்டமும் பெற்றார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டோனி தன்னிடம் ஒரே அறிவுரையை தான் கூறியதாக அஸ்வின் சமீபத்தில் தெரிவித்தார்.

    மேலும், அவர் 15 ஆண்டுகளாக சொன்ன அறிவுரை தற்போது தான் தனக்கு புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசும்போது, சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.

    ஒருகட்டத்தில் புதிதாக முயற்சிக்கும் உனது வழக்கத்தை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே. தொடர்ந்து உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இரு என்று கூறினார். அவர் அப்படி சொன்னது கிரிக்கெட் மட்டுமின்றி ஒருவரின் மனவலிமை மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    • திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
    • 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எம்.எஸ்.தோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்த நிலையில், இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும், சாக்ஷி வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனியின் ரசிகர்கள் இருவரைக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
    • 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    முன்னதாக டோனி தலை மையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    டோனி 3 ஐ.சி.சி. கோப்பை யையும் (2007 இருபது ஓவர் உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி), கபில்தேவ் (1983 ஒருநாள் போட்டி உலக கோப்பை), ரோகித் சர்மா (2024 இருபது ஓவர் உலக கோப்பை தலா ஒரு ஐ.சி.சி. கோப்பையை யும் பெற்றுக் கொடுத்தனர்.

    சாம்பியன் பட்டம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தெண் டுல்கர், டோனி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார்.
    • அதில் 'தல' பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    சமீபத்தில் தந்தையர் தினம் அன்று அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை கூறி டோனி மகளுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து தனது வளர்ப்பு நாய்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் சமூகவலை தளத்தில் தல டோனி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஹார்கட் செய்து புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அதில் 'தல' பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார். சிரிப்பது போலும், முறைப்பது போலும் வெவ்வேறு தோற்றங்களில் செம க்யூட்டாக உள்ளார்.

    இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் "MASS" "Vaathi coming" என்று கமெண்டுகள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    • அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.
    • சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    தந்தையர் தினமான இன்று தனது எக்ஸ் தள பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி டோனி மகளுடன் தனது வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    தற்போது சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார்.
    • பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், தோனி தனது பெட்டியை மேல் உள்ள ரேக்கில் வைத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது. சக பயணிகள் டோனியை தங்கள் போன் கேமராக்களில் படம்பிடித்து அவரின் எளிமையை கைதட்டி வரவேற்றனர்.

    தொடர்ந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் டோனியின் எளிமையை மெச்சி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆர்சிபி உடனான ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் ஆர்சிபி அணியினருக்கு டோனி கை கொடுக்காமல் மைத்தனத்தில் இருந்து சென்றது சர்ச்சையான நிலையில் அந்த களங்கத்தைப் போக்கும் வகையில் இந்த வீடியோவைப் பகிர்ந்து டோனியின் நற்பண்புகளை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் 6 ஆம் கட்ட தேர்தலான இன்று ( மே 250 பீகார் மாநிலம் ராஞ்சியில் டோனி வாக்களித்து குறிப்பிடத்தக்கது.

     

    • இந்த ஐ.பி.எல் தொடரில் 14 ஆட்டங்களில் ஆடிய டோனி 161 ரன்களை எடுத்துள்ளார்.
    • அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

    இந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் டோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது.

    இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

    ஆனால் இதுவரை டோனியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

    அதில், "எனக்கு அது தெரியாது. இதற்கான பதில் எம்.எஸ்.டோனிக்கு மட்டும் தான் தெரியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் மரியாதை தருவோம். அவர் சம்பந்தமான முடிவுகளை எப்போதும் அவர் தான் எடுப்பார். சரியான சந்தர்ப்பங்களில் அந்த முடிவுகளை அவர் தெரிவிப்பார். ஆனால் அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் என்னுடைய விருப்பமும் ரசிகர்களின் விருப்பமும் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்டதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.
    • பெங்களூரு அணி டோனிக்கு கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    பெங்களூரு அணி டோனிக்கு  கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது.

    இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார். அவர் முடிவு எடுக்க நாங்கள் நேரம் கொடுப்போம் என்று கூறிய நிலையில்

    டோனி கால் தசை நார் வலிக்கு  அறுவை சிகிச்சை லண்டனில் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிகிச்சையை முடித்துவிட்டு அவரது எதிர்கால திட்டங்களை குறித்து யோசிக்க போகிறார். இந்த சிகிச்சையில் இருந்து குணமாக 5- 6 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

    • பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.
    • நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எதிர்காலம் குறித்து டோனி எந்த முடிவையும் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. நாங்கள் அதைப் பற்றி பேசவில்லை, நாங்கள் அவரிடம் கேட்க மாட்டோம். நாங்கள் அவரை முடிவு செய்ய அனுமதிப்போம் என்பது உங்களுக்கு தெரியும்.அவர் எங்களுக்குத் தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சி.எஸ்.கே. அணியில் விளையாடிய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:-

    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அவ்வளவுதான். எனவே இதுவே டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை.

    பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று டோனி நினைத்தார். நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மழை பெய்து ஆட்டம் நின்றுவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. எப்படியாவது சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிகணக்கான ரசிகர்களில் பிரார்தனை வீணாகியது.

    ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை அவர்கள் போட்டியை வென்ற சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் அதனால் டோனி கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுக் குறித்து பலரும் பல கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

    இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் "தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் "லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்" என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள். என கூறியுள்ளார்.

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என ஒலிக்கும் குரல்கள்

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ஆட்டத்தில் நடந்தவை குறித்த பதிவுகளே சமூக வலைத்தளப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதே தற்போது நடந்துவரும் விவாதங்களுக்குக் காரணம்.

    ஆர்சிபி வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருந்ததால் கை கொடுக்க சென்ற டோனி சட்டென திரும்பி டிரஸிங் அறைக்குச் சென்ற வீடியோ தீயாக பரவி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என்று அவருக்கு ஆதரவான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் அணிகள் குறித்தும் தனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கக்கூடிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கவுதம் கம்பீர், சில காலத்துக்கு முன் பேசிய பழைய வீடியோ ஒன்றில், சிஎஸ் கே அணி 5 முறை ஐபிஎல் வென்றிருந்தாலும் தாங்கள் பெரியவர்கள் என்ற ஆட்டிட்யூடான மனநிலை அவர்களிடம் இருக்காது.

    ஆனால் விராட் கோலியும் ஆர்சிபி அணியும் ஒரு லீக் போட்டி வென்றாலும், பிளே ஆப்பிற்கு தகுதிபெற்றாலும் கூட தாங்கள் கோப்பையை வென்றதுபோல் நடந்துகொவர்கள் என்று பேசியிருந்தார். அதுவே இந்த மேட்சிலும் நடந்துள்ளதாக இந்த வீடியோவை நெட்டிஸின்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. 

    ×