search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case Field"

    • பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது.
    • ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்அங்கு பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெய செல்வியிடம் விளக்கம் கேட்டு, மெமோ கொடுத்துள்ளார். அப்போது ஆசிரியை ஜெயசெல்வி மெமோவை கிழித்து எரிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியை ஆபாசமாக பேசி தாக்கினார்.

    மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து பறித்து கையில் கடித்துள்ளார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தில் இருந்து எல்.எண்டத்தூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி தனியார் பஸ் சென்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. பஸ்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய 2 பஸ்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறையில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டி வருகிறார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடத்தில் வீடு கட்டுவதாக இவர் மீதும், அதே பகுதியில் வீடு கட்டும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

    காண்டிராக்டருக்கு நடிகர் பாபி சிம்ஹா பல லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்தது. ஜமீரின் உறவினர் உசேனும் பாபி சிம்ஹாவும் பள்ளி நண்பர்கள் என்பதால் இந்த கட்டிட பணிகளை அவர் ஒத்துக் கொண்டார்.

    இந்நிலையில் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் காண்டிராக்டர் ஜமீரின் உறவினர் உசேன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கொடைக்கானல் செண்பகனூரில் உள்ள எனது தங்கும் விடுதிக்கு கடந்த மாதம் 20-ந் தேதி நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கே.ஜி.எப். படத்தின் வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் வந்து வீடு கட்டும் பிரச்சினையில் தலையிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

    எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் நடிகர்கள் பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜ் உள்பட 4 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 13-ந் தேதி மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் ரெட்டியூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தென் அழகாபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த 13-ந் தேதி இந்த மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் அந்த மாணவனின் தந்தைக்கு நேற்று தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவர் நேற்று பகல் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றார்.

    அங்கு மகனை அடித்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் திடீரென ஆசிரியையை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், மாவட்ட கல்வி அதிகாரி மோகன் ஆகியோரும் நடந்த சம்பவம் குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார்.
    • இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது40).

    இவர் புதுவை அரசு பல்நோக்கு ஊழியர் ஆவார். இவர் தனது அவசர தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றார்.

    இதற்காக அவர், அந்த செயலியில் அவரின் செல்போன்களில் உள்ள அனைத்து தகவல்களை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்தார்.

    அதையடுத்து அவருக்கு உடனே கடன் வழங்கப்பட்டது. கடன் பெற்ற ஒரு வாரத்திலேயே அந்த தொகையை ஆண்ட்ரூஸ் திரும்ப செலுத்திவிட்டார்.

    ஆனால் அவரை ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும் என தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆண்ட்ரூசின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய நபர், நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் உனது நிர்வரண படத்தை உறவினர்கள், நண்பர்கள் செல்போன் எண்ணுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டினார். மேலும் ஆண்ட்ரூசின் நிர்வாண படத்தையும் அவரது செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரூஸ் பல்வேறு தவணைகளாக ரூ.3லட்சம்வரை வங்கிகணக்கு மூலம் செலுத்தினார்.

    ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.

    இதையடுத்து ஆண்ட்ரூஸ் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக இதேபோன்று நிர்வாண படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல் குறித்து புகார்கள் வந்ததால் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதனை பொருடப்படுத்தாமல் பலர் பணம் செலுத்தி ஏமாறுகின்றனர்.

    • எங்கக்காடு ரெயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கற்கள் வீசப்பட்டன.
    • ரெயில்கள் மீது கல்வீசியது பள்ளி மாணவர்கள் 5 பேர் என்பது கண்டறியப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கல்வீசும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. வந்தே பாரத் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது கல்வீச்சில் சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் கடந்த மாதம் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் நாகர்கோவில் செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீது வடக்கஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள எங்கக்காடு ரெயில்வே கேட் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி கற்கள் வீசப்பட்டன.

    இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில்கள் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருச்சூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் குட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், ரெயில்கள் மீது கல்வீசியது பள்ளி மாணவர்கள் 5 பேர் என்பது கண்டறியப்பட்டது. அந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சவுமியா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரையானூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து என்கின்ற கணேசன் (வயது 31). இவரது மனைவி சவுமியா (26). இந்த தம்பதிக்கு 5 வயதில் கபிலன் என்ற குழந்தை உள்ளது.

    பச்சமுத்து சென்னையில் தங்கி ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று பச்சமுத்துக்கும், சவுமியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சவுமியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எடப்பாடி உட்கோட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சவுமியா உடலை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    சவுமியா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சவுமியாவின் தந்தை மாணிக்கம் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மருமகன் பச்சமுத்து இரவு 10.45 மணிக்கு எனக்கு போன் செய்து சவுமியா தற்கொலை செய்து கொண்டு விட்டார். உடனடியாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு வருமாறு கூறினார். இதனால் நானும் குடும்பத்தினரும் பதறியபடி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு எனது மகள் பிணமாக கிடந்தார். எனது மகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது மகள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. தனது மகள் சவுமியா இறப்பு குறித்து கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவுமியாவுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். 

    • மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்த தாய் சுஜாதா கதறி துடித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஒய் எஸ் ஆர் மாவட்டம் அஸ்தலிங்கய்ய பள்ளியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி சுஜாதா. தம்பதிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 2 மகன்கள் இளைய மகன் சோமேஸ்வர ரெட்டி (வயது 10). இவர் அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சிவசங்கர் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால் 2-வது மகனை கொலை செய்ய முடிவு செய்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் சோமேஸ்வர ரெட்டி வீட்டில் ஒரு அறையில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.

    அப்போது சிவசங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த மகனை சரமாரியாக வெட்டினார்.

    இதனால் சோமேஸ்வர ரெட்டி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். மகனின் அலறல் சத்தம் கேட்ட தாய் சுஜாதா மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

    சோமேஸ்வர ரெட்டி ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து தாய் கண் முன்னே பரிதாபமாக இறந்தான்.

    அதற்குள் சிவசங்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்த தாய் சுஜாதா கதறி துடித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து சோமேஸ்வர ரெட்டியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை தேடி வருகின்றனர். 

    • வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் புகழேந்தி என்ற ரவிக்குமார் (37), எம்.பி.ஏ. பட்டதாரி.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தனர். இவர்களுடன் ரவிக்குமாரின் அண்ணன் செல்வக்குமார் (44), இவர்களது சித்தப்பா மகன் யவுன் (27) ஆகியோரும் பெயிண்ட் அடித்து வந்தனர்.

    இந்நிலையில் சதீசுக்கு தெரியாமல் புதிதாக ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் காண்டிராக்டை ரவிக்குமார் எடுத்துள்ளார். இது சதீசுக்கு தெரிய வந்ததால் இது குறித்து பேசுவதற்காக பா.ஜனதா கட்சியின் தொழில் நுட்ப பிரிவு சேலம் மாவட்ட செயலாளர் சாமுவேல் (37) என்பவரை அழைத்தனர்.

    இதையடுத்து நேற்றிரவு 7 மணியளவில் வீரகனூர் அருகே பெரம்பலுர் தேசிய நெடுஞ்சாலையில் சதீஷ், ரவிக்குமார், சாமுவேல் ஆகியோர் கூடினர். அப்போது சதீசுக்கு தெரியாமல் ஏன் காண்டிராக்ட் எடுத்து செய்கிறாய் அவருடன் சேர்ந்து செய் என ரவிக்குமாரிடம், சாமுவேல் கூறினார். இதனை ரவிக்குமார் ஏற்காததால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    அப்போது ரவிக்குமார் அங்கிருந்த கல்லை எடுத்து சாமுவேலை தலையில் தாக்கினார். இதில் சாமுவேல் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து ரவிக்குமாரை கழுத்து, முகம், தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வகுமாரும், யுவனும் அங்கு வந்து தடுக்க முயன்றனர். அப்போது செல்வகுமாரையும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாமுவேல் கத்தியால் குத்தினார். யுவனுக்கும் நெற்றியில் வெட்டு விழுந்தது. இதையடுத்து வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த மோதலில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், செல்வக்குமார், யுவன் ஆகிய 3 பேரையும் மேல் சிசிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சாமுவேல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டாக்டரிடம் கருத்து கேட்டு அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
    • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ஷெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நடந்து சென்ற 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது.

    இதேபோல் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. தற்போது மலை பாதை அருகே சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.

    இதனால் பக்தர்கள் அச்சத்துடன் நடை பாதையில் நடந்து செல்கின்றனர். எனவே நடைபாதை முழுவதும் இரும்பு வேலி அமைக்க திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவித்தனர்.

    • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
    • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    ராமாபுரம், பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் உறவுக்காரரான பாண்டியன் என்பவருக்கும் (சிறுமியின் தாயின் தம்பி) கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்ட சிறுமி தன்னை கட்டாயபடுத்தி உறவுக்காரருடன் திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய் மற்றும் அவரது தம்பியான பாண்டியன் மீது வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் சிறுமி ஏற்கனவே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனை தேடி சத்தியமங்கலத்துக்கு சென்ற சிறுமியை அவரது தாய் மீட்டு வந்துள்ளார் இதற்கிடையில் சிறுமி தனது தாயின் சகோதரரான பாண்டி யனை காதலிப்பதாகவும், அவருடன் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் வேறு வழியின்றி மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த சிறுமியின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகாராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு தனது திருமணம் குறித்து புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது தாய் மற்றும் திருமணம் செய்த பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர்.
    • பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து பல்வேறு விசை படகுகள், பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று தங்களது வாழ்வை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் மற்றொரு பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு பல படகுகளில் வரும் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் அவர்கள் படகுகளில் வைத்துள்ள மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்கள் 15 பேர் நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×