என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாபநாசம் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை- வாலிபர் வெறிச்செயல்
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய விஸ்வலிங்த்தை தேடி வருகிறார்கள்.
- சொத்து தகராறில் அண்ணன் மகன் சித்தப்பாவை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராராமுத்திரக்கோட்டை கள்ளிமேடு வையாபுரி தோப்புபகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45) விவசாயி. இவரது மனைவி ராதிகா.
இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது அண்ணன் வீரையன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வீரையன் மகன் விஸ்வலிங்கம் (வயது 30) என்பவர் மது போதையில் சக்திவேல் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுப்பட்டார்.
பின்னர் ஆத்திரமடைந்து விஸ்வலிங்கம் அரிவாளால் சக்திவேலை சராமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். சக்திவேலின் அலறல் சத்தம் கேட்டு ராதிகா வெளியே வந்தார்.
அவரையும் விஸ்வலிங்கம் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாழசோழன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய விஸ்வலிங்த்தை தேடி வருகிறார்கள்.
சொத்து தகராறில் அண்ணன் மகன் சித்தப்பாவை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






