search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனால்ட் டிரம்ப்"

    • தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
    • கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால் ஜனாதிபதி ஜோ பைடனின் நடவடிக்கைகள் சமீப காலமாக விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக நேரடி விவாதத்தின்போது டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது, உக்ரைன் அதிபரை புதின் என குறிப்பிட்டது மற்றும் மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என சொந்த கட்சியினரே கூறி வந்தனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்து வந்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிசின் பெயரை அவர் முன்மொழிந்தார்.

    இவரது இந்த அறிவிப்புக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஸ்டெனோகிராபராக பதவி வகித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

    ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி.கோபாலனை அனுப்பி வைத்திருந்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறி உள்ளார். இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் இந்த கமலா ஹாரிஸ்.

    இவர் முன்பு வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அரசியலில் இருந்து வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக அவர் பணியாற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    • குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
    • துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக டிரம்ப் தனது வலது காதில் ‘பேண்டேஜ்’ போட்டிருந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த 13-ந்தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தாமஸ் மேத்யூ என்ற இளைஞர் டிரம்பை கொலை செய்யும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு தோட்டா டிரம்பின் வலது காதை உரசி சென்றது. இதில் அவரது காதின் மேல் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. துப்பாக்கிச்சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், பாதுகாப்பு படையினரால் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனிடையே குடியரசு கட்சியின் தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக வலது காதில் 'பேண்டேஜ்' போடப்பட்டிருந்தார். 'பேண்டேஜ்' உடன் அவர் மாநாட்டில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

    இந்த நிலையில் மாநாட்டின் நிறைவையொட்டி நேற்று முன்தினம் டிரம்ப் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையை கேட்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அவர்களில் பலர் வினோதமான முறையில் டிரம்புக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயத்துக்காக டிரம்ப் தனது வலது காதில் 'பேண்டேஜ்' போட்டிருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்கள் பலரும் தங்களின் வலது காதில் 'பேண்டேஜ்' போட்டுக் கொண்டு மாநாட்டில் பங்கேற்றனர்.

    படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய டிரம்ப் உடனான ஒற்றுமையின் அடையாளமாகவும், நாங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அவருக்கு தெரியப்படுத்துவதற்காகவும் காதில் 'பேண்டேஜ்' அணிந்துள்ளதாக டிரம்பின் ஆதரவாளர்கள் கூறினர்.

    • இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது.

    அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகே சாமுவேல் ஷார்ப் என அடையாளம் காணப்பட்ட நபர் ஓஹியோ காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு அருகிலுள்ள வீடற்ற முகாமில் வசித்து வரும் சாமுவேல் ஷார்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் சம்பத்தன்று 2 கைகளிலும் கத்தியை வைத்து கொண்டு ஒருவரை தாக்க சென்றதாகவும் பாதுகாப்பு கருதி அவரை சுட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்புதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார்.
    • அவர் விரைந்து குணமடைய விழைகிறேன்.

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "என் நண்பர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் வருத்தம் அடைகிறேன். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் மற்றும் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைந்து குணமடைய விழைகிறேன். எங்களது எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை இந்த சம்பவத்தில் காயமுற்றோர், உயிரிழந்தோர் குடும்பங்கள் மீது உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக அதிபர் தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார்.

    துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அதிபர் டிரம்ப் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் களத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    • டிரம்புடனான விவாதத்தின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
    • அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு கடவுள் கூறினால் மட்டுமே வெளியேறுவேன்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 26-ந்தேதி நடந்தது. இதில் அதிபர் ஜோபைடன், டொனால்டு டிரம்ப் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

    டிரம்ப் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். 81 வயதான அவரால் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை நேரடி விவாதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேரடி விவாதத்தில் ஜோ பைடனுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் அவர் தோல்வியை தழுவலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனால் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனை மாற்ற வேண்டும் என அவரது சொந்த கட்சியினரே கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

    வயதானாலும் தேர்தலில் போட்டியிடுவதில் ஜோ பைடன் உறுதியாக இருந்து வருகிறார். இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    டிரம்புடனான விவாதத்தின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சளி பிடித்து இருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தேன். நேரடி விவாதத்தில் சரியாக செயல்படாததற்கு நான்தான் காரணம். இதில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஜனநாயக கட்சியில் எனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    பெரும்பாலான தலைவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதிபர் தேர்தலில் இருந்து விலகுமாறு கடவுள் கூறினால் மட்டுமே வெளியேறுவேன். நான் போட்டியில் இருந்து வெளியேறும் எண்ணம் எதுவும் இல்லை. மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

    • திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது.
    • ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

    பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.

    மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

    அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.

    ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

    இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் வழங்கறிஞர் டெட் க்ரூஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டிரம்புக்கு பதிலளித்த ஜோ பைடன், My son is not a sucker.. you are a sucker, you are a loser என்று குறிப்பிட்டார்
    • ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

     பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    இந்த விவாதத்தில் பொருளாதாரம், வேலையின்மை, சட்டவிரோத குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை, கருக்கலைப்பு உரிமைகள், இஸ்ரேல் பாலஸ்தீன போர், கொரோனா தொற்றைக் கையாண்ட விதம் உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் அவர்கள் விவாதகித்தனர். பைடன் சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு அமேரிக்காவில் பற்றாக்குறையை உண்டாக்குகிறார் என்று கூறும் அளவுக்கு டிரம்ப் சென்றார். மேலும் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்ட டிரம்புக்கு, My son is not a sucker.. you are sucker, you are a loser என்று டிரம்ப் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்டு ஜோ பைடன் பதிலளித்தார்.

    ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர். 81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.

    மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

     

    அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.   

    • அமெரிக்காவில் போதைப்பொருள் புழக்கம் பைடன் ஆட்சியில் அதிகரித்துள்ளது.
    • அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபராக இருந்தவர் டிரம்ப்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

    ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    அப்போது, டிரம்ப் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என பைடன் கூறியதற்கு, ஜெயிலுக்கு போக வேண்டியது யார் என்பதை கமிட்டி முடிவு செய்யும். பைடனின் மகனும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி தான். பைடன் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் எனக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. வேலையை ஒழுங்காக செய்யாதவர்களை பணிநீக்கம் செய்துவிடுவேன்.

    குற்றவாளிகளை அனுமதிப்பவர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கிறீர்களா? எல்லையை திறந்து அன்னியர்களை அனுமதிக்க நினைக்கிறார் பைடன். அவர் மீண்டும் அதிபரானால் அமெரிக்காவை யாராலும் காப்பாற்ற முடியாது. அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் டைபன் தான். மிகப்பெரிய நிதி பற்றாக்குறை பைடன் ஆட்சியல் தான் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சீனா அழித்து கொண்டிருப்பதை அனுமதிக்கிறார் பைடன். எல்லையில் சட்ட விரோத குடியேற்றங்களால் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு. அமெரிக்காவில் போதைப்பொருள் புழக்கம் பைடன் ஆட்சியில் அதிகரித்துள்ளது. நான் ஆட்சிக்கு வந்தவுடன் ரஷியாவில் உள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மனதளவிலும், உடல் அளவிலும் நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.

    இதனிடையே, மகனின் மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வரவேண்டாம் என நினைத்தேன். அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபராக இருந்தவர் டிரம்ப். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். மிக மிக மோசமான பொருளாதாரத்தை என்னிடம் விட்டுச்சென்றார் டிரம்ப். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதாரம் மாறி உள்ளது. எத்தனை பிரச்சனை இருந்தாலும் உலகின் முன்னணி நாடாகாவை தற்போதும் திகழ்ந்து வருகிறது என்று பைடன் கூறினார்.

    • கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    • டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 77). குடியரசு கட்சி தலைவரான இவர் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அங்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் சீன செயலியான டிக் டாக்கில் டிரம்ப் புதிய கணக்கு துவங்கினார். அவரை டிக் டாக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இவர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

    இந்தநிலையில் தற்போது அவரே டிக் டாக்கில் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தேர்தல் பிரசார உத்திக்காக டிக் டாக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    • கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார்.
    • வழக்கு சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்தது.

    சான் பிரான்சிஸ்கோ:

    அமெரிக்கா பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி. கடந்த 2022-ம் ஆண்டு இவர் பதவியில் இருந்தபோது வாலிபர் ஒருவர் நான்சி பெலோசியின் வீடு புகுந்து அவரை கொலை செய்ய முயற்சித்தார். இதனை தடுக்க வந்த அவருடைய கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பால் பெலோசி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    பின்னர் போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் டேவிட் டீபாபே என்பதும், டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த அவர், ஆளுங்கட்சியினர் செயல்பாடுகளால் வெகுண்டெழுந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

    இதுதொடர்பான வழக்கு சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் முன்னாள் சபாநாயகரின் வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட டேவிட் டீபாபேவுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    • இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன், அதுவும் குறிப்பாக தற்போதுள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான் அதிபராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என தெரிவித்தார்.

    • டிரம்ப் சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது.
    • உலக பணக்காரர்கள் பட்டியலில் 500-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். பெரும் தொழில் அதிபரான அவர் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

    இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் டிரம்ப், முதல் முறையாக புளூம்பெர்க் கோடிஸ்வரர்கள் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளார்.

    அவரது சொத்து மதிப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 ஆயிரம் கோடி) ஆகும்.

    அவரது நிறுவனங்களின் பங்கு 185 சதவீதம் விலை அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்துள்ளது.

    இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 500-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    ×