என் மலர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து"
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 277 ரன்கள் சேர்த்தது.
புலவாயோ:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் நிதேஷ் சாமுவேல் 47 ரன்கள் எடுத்தார். ஆர்யன் ஷர்மா 34 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் ஆலிவர் பீக் நிதானமாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்னால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
- 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.
புலவாயோ:
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.
லீக் மற்றும் சூப்பர் 6 போட்டிகள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.
இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார்.
4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
- இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 69 சிக்சர்கள் அடித்து இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இதற்கு முன்பு 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் 64 சிக்சர்கள் அடித்திருந்த இங்கிலாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
- இங்கிலாந்துக்கு 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும்.
- சீனாவுடனான வர்த்தகம் இங்கிலாந்துக்கு ஆபத்தானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்று தற்போது நாடு திரும்பியுள்ளார்
தனது பயணத்தின்போது, தலைநகர் பிஜீங் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை ஆகும்.
நேற்று முன் தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பிரிட்டனின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான விஸ்கி மீதான இறக்குமதி வரியைச் சீனா பாதியாகக் குறைத்துள்ளது.
அதாவது 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும். இதில் இங்கிலாந்து பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தும்.

மேலும் இந்தப் பயணத்தின் மூலம் பல பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஸ்டார்மர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு மிரட்டல்களுக்கு மத்தியில், பிரிட்டன், கனடா ஆகிய நாட்டு தலைவர்கள் சீன பயணம் மேற்கொண்டு அந்நாட்டுடன் உறவை வளர்த்து வருகின்றனர்.
இதற்கிடையே சீனாவுடனான வர்த்தகம் இங்கிலாந்துக்கு ஆபத்தானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல.
- சீனா எங்களது 3-வது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜிஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் மனைவி மெலனியாவின் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தின் சிறப்புக் காட்சி நடந்தது. இதில் பங்கேற்ற டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது என்றார்.
இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறும்போது, "இங்கிலாந்து மணலில் தலையை புதைத்துக்கொள்வது புத்திசாலித்தனமல்ல. சீனா உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் ஆகும். ஹாங்காங்குடன் சேர்த்து, சீனா எங்களது 3-வது பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது. எனது பயணத்தின் மூலம், வேலைவாய்ப்புகளுக்கும் செல்வத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் பல வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளோம்" என்றார்.
- பிரிட்டனுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- கனடா பிரதமர் மார்க் கார்னி சீனா சென்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகப் நேற்று (புதன்கிழமை) சீனாவிற்கு சென்றுள்ளார்.
சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளைப் புதுப்பிப்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் பயணம் பிரிட்டனுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 13 முதல் 17 வரை அரசு முறை பயணமாக கனடா பிரதமர் மார்க் கார்னி சீனா சென்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய வரி அச்சுறுத்தல்களால் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகின்றன.
- முதல் 3 போட்டியில் வென்று ஆஸ்திரேலியா டி20 தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
- நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது. 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- மெல்போர்ன் டெஸ்ட் போட்டி இரு நாளுக்குள் முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மெல்போர்னில் நடந்த முந்தைய டெஸ்டில் இரு நாளுக்குள் அடங்கியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியா சரிவில் இருந்து வலிமையாக மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
அதேசமயம், மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 2-3 என முடிக்க ஆர்வமாக உள்ளனர்.
இன்று நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
- இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
மெல்போர்னில் உள்ள எம்.சி.ஜி. ஸ்டேடியத்தில் நடந்த ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கோடை காலத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த டெஸ்ட் வெறும் 2 நாளில் முடிந்தது ரசிகர்களை மட்டுமின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரு நாளில் மட்டும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். குறுகிய நாளில் போட்டி முடிந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.60 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இன்னொரு பக்கம் மெல்போர்ன் ஆடுகளம் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சாடினார்.
பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தன்மையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி நடுவர் மதிப்பிடுவது உண்டு. இதன்படி மெல்போர்ன் ஆடுகளத்தை தரமற்றது என்று ஐ.சி.சி. முத்திரை குத்தியுள்ளது.
ஐ.சி.சி. போட்டி நடுவர் ஜெப் குரோவ் கூறுகையில், 'மெல்போர்ன் எம்.சி.ஜி. ஆடுகளம் அளவுக்கு அதிவேகமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. முதல் நாளில் 20 விக்கெட்டுகளும், 2-வது நாளில் 16 விக்கெட்டுகளும் சரிந்தன. ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. ஐ.சி.சி.யின் மைதான பிட்ச் மற்றும் அவுட்பீல்டு கண்காணிப்பு வழிகாட்டுதலின்படி இது ஒரு திருப்தியற்ற ஆடுகளம். அதனால் இந்த மைதானத்திற்கு ஒரு தகுதி இழப்பு விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு இங்கு நடந்த கடைசி 3 டெஸ்ட் போட்டிகளின் போது இது சிறந்த ஆடுகளம் என்று ஐ.சி.சி. பாராட்டியிருந்தது.
ஐ.சி.சி. விதிப்படி ஒரு மைதானம் 5 ஆண்டுக்குள் 6 தகுதி இழப்பு புள்ளியை பெற்றால் அந்த மைதானத்தில் ஓராண்டு சர்வதேச போட்டி நடத்த தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் அல்சோப் கூறுகையில், '3 மற்றும் 4-வது நாள் போட்டிக்காக டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் உலகம் முழுவதும் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானோம். இது வழக்கமான எம்.சி.ஜி.யின் ஆடுகளம் போல் அல்லாமல் பேட்டிங்குக்கும், பந்து வீச்சுக்கும் இடையிலான சமநிலையை வழங்கவில்லை. சமீபத்தில் ஆண்டுகளில் அருமையான டெஸ்ட் போட்டி ஆடுகளங்களை தயாரித்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் ஊழியர்களை பாராட்டுகிறோம். அடுத்த ஆண்டு இங்கு நியூசிலாந்துக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியும், 2027-ம் ஆண்டு மார்ச்சில் டெஸ்ட் போட்டியின் 150-வது ஆண்டை கொண்டாடும் வகையிலான இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டும் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கு அவர்கள் ஆகச்சிறந்த ஆடுகளங்களை வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்' என்றார்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
- 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது.
- ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் 4-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 152 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மிச்சேல் நேசர் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். ஜோஸ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 110 ரன்னில் சுருண்டது. ஹாரி புரூக் அதிகபட்சமாக 41 ரன் எடுத்தார். மிச்சேல் நேசர் 4 விக்கெட்டும், போலண்டு 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
42 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இங்கிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. மதிய உணவு இடைவேளைக்குள் 88 ரன்னில் 6 விக்கெட்டை பறி கொடுத்தது.

ஸ்காட் போலண்டு (6 ரன்), ஜேக் வெதரால்ட் (5), லபு ஷேன் (8), டிராவிஸ் ஹெட் (46), உஸ்மான் கவா ஜா (10), அலெக்ஸ் கேரி (4) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
அதை தொடர்ந்து விக்கெட்டுகள் எளிதில் விழுந்தன. ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 132 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்துக்கு 175 ரன் இலக்காக இருந்தது.
கேமரூன் கிரீன் 19 ரன்னிலும், நேசர், ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்காமலும், ரிச் சர்ட்சன் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கேப்டன் ஸ்டீவ் சுமித் 24 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஸ் டங் 2 விக்கெட்டும், அட்கின்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
175 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர் பென்டக்கெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7-வது ஓவரில் தொடக்க ஜோடி சரிந்தது. டக்கெட் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர், 34 ரன் எடுத்து ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு கிராவ்லியுடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. போட்டியின் இறுதிவரை 18 ரன்களுடன் ஹாரி புரூக் மற்றும் 3 ரன்களுடன் ஸ்மித் களத்தில் இருந்தனர்.

2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, சொந்த மண்ணிலிருந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். 5468 நாட்கள், அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.
ஆஷஸ் தொடரின் முதல் மற்றும் 4-வது போட்டிகள் 2 நாட்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.
- மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
- சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
இந்த சூழலில், இந்த மாதம் 25 ஆம் தேதி வெர்ஸ்டரில் அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் கத்தியால் தாக்கப்பட்டார். விஜய் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜய் உயிரிழந்தார்.
விஜய்யின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் அளித்த இங்கிலாந்து காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விஜய்யின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு குடும்ப உறுப்பினர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமும், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.
- ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் ரஷிய உளவுக்கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் யந்தர் என்ற ரஷிய கப்பல் நுழைந்தது. அந்த கப்பலை எங்களது விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.
ஏனென்றால் அது நாட்டின் கடலுக்கடியில் உள்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தக் கப்பலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க கடற்படை போர்க்கப்பலையும் போர் விமானங்களையும் நாங்கள் நிறுத்தினோம்.
அப்போது எங்கள் விமானிகள் மீது ரஷிய கப்பல் லேசர்களை செலுத்தியது. ரஷியாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. நாங்கள் ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






