என் மலர்
நீங்கள் தேடியது "Russia Warship"
- விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.
- ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் ரஷிய உளவுக்கப்பல் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் யந்தர் என்ற ரஷிய கப்பல் நுழைந்தது. அந்த கப்பலை எங்களது விமானப்படை விமானிகள் யந்தர் என்ற ரஷிய கப்பலைக் கண்காணித்து வருகிறாா்கள்.
ஏனென்றால் அது நாட்டின் கடலுக்கடியில் உள்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தக் கப்பலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க கடற்படை போர்க்கப்பலையும் போர் விமானங்களையும் நாங்கள் நிறுத்தினோம்.
அப்போது எங்கள் விமானிகள் மீது ரஷிய கப்பல் லேசர்களை செலுத்தியது. ரஷியாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது. நாங்கள் ரஷியாவுக்கும் புதினுக்கும் கூறுவது என்னவென்றால் நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரஷியாவின் 33 சதவீத கப்பல்களை செயல் இழக்க வைத்துள்ளோம் என்கிறது உக்ரைன்.
- இதுவரை மூன்று கப்பல்களை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது.
ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதில் இருந்து ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது.
டிரோன் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இரண்டு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான செர்கெய் கோட்டோவ் என்ற கப்பலை கெர்ச் ஜலசந்தி அருகே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளோம் என உக்ரைன் பாதுகாப்பு புலனாய்வு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் 1300 டன் எடை கொண்டதாகும்.
செர்கெய் கோட்டோவ்-ஐ இதற்கு முன்னதாக தாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவுக்கு எதிரான போரில் பின்னடைவை சந்தித்து வந்தாலும், உக்ரைன் கடந்த சில மாதங்களாக ரஷியாவின் போர்க்கப்பல்களை டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் கருங்கடலில் அரிதான மூலோபாய வெற்றி எனக் கருதப்படுகிறது. கடந்த மாதம் ரஷியாவின் லேண்டிங் கப்பல் இதுபோன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது.
கடந்த மாதம், ரஷியாவின் 33 சதவீத கப்பல்களை (23 கப்பல் மற்றும் ஒரு நிர்மூழ்கி கப்பல்) செயல் இழக்க வைத்து விட்டோம் என உக்ரைன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2022 ஏப்ரல் மாதம் மோஸ்க்வா என்ற ஏவுகணை வழிகாட்டி கப்பலை ரஷியா இழந்தது பெரிய இழப்பாக கருதப்படுகிறது.






