என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • நவராத்திரியை பெண்கள் முழு பயபக்தியுடன் வழிபடுகின்றனர்.

    இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.

    நவராத்திரி விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.



    இத்தகைய சிறப்பு வாய்ப்பு நவராத்திரியை பெண்கள் முழு பயபக்தியுடன் வழிபடுகின்றனர். இதற்காக பலர் நவராத்திரி முழுவதும் விரதம் கடைப்பிடிக்கின்றனர். அவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்கும் போது சில விதிகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விதிகளை முறையாக பின்பற்றினால் தேவியின் ஆசிகளை பெறலாம். நவராத்திரி விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்...

    * விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். பகலில் தூங்குவது விரதம் இருப்பவரின் ஆன்மிக செயல்திறனை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், பகல் நேர தூக்கம் சோம்பலை அதிகரிக்கும்.

    * விரதத்தின் போது முடி மற்றும் நகங்களை ஒரு போதும் வெட்டக்கூடாது. இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் ஆண்கள் சேவிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    * விரதத்தின் போது டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் குளிர்பானங்கள் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.

    * விரதத்தின் போது பூண்டு மற்றும் வெங்காயம் கொண்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். விரதம் இல்லாவிட்டாலும், நவராத்திரியின் போது இறைச்சி அல்லது மீன் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

    * விரதத்தின் போது வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். 

    • திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது.
    • கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது. ஆம்... விழாவில் 5-ம் நாளன்று நடைபெறும் மோகினி அலங்கார சேவையும், கருடசேவையும் மிக பிரசித்தி பெற்றது. அன்று காலை மலையப்பசாமி, மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு, வண்ணமயமான வஸ்திரங்கள் அணிந்து, மலர்கள் சூடி, ஜொலிக்கும் நகைகள் அணிந்து மைசூரு மகாராணி அளித்த பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    கருடசேவையின்போது, தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு (ஏழுமலையான்) அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூலவிக்ரகமூர்த்தி அணிந்திருக்கும் தங்க சங்கிலி மகரகண்டி, லட்சுமிஹாரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இதேபோல, கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. இக்குடைகள் சென்னையில் இருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அந்த திருக்குடைகள் ஏழுமலையானுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

    மோகினி அலங்காரமும், கருடசேவையும் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் நான்காவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    நான்காவது நாள் போற்றி

    ஓம் கருணை வடிவேபோற்றி

    ஓம் கற்பகத் தருவேபோற்றி

    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி

    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி

    ஓம் கரும்பின் சுவையேபோற்றி

    ஓம் கார்முகில் மழையேபோற்றி

    ஓம் வீரத்திருமகளே போற்றி

    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி

    ஓம் பகைக்குப் பகையேபோற்றி

    ஓம் ஆவேசத் திருவேபோற்றி

    ஓம் தீமைக்குத் தீயேபோற்றி

    ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி

    ஓம் நாரணன் தங்கையேபோற்றி

    ஓம் அற்புதக் கோலமேபோற்றி

    ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி

    ஓம் புகழின் காரணியேபோற்றி

    ஓம் காக்கும் கவசமேபோற்றி

    ஓம் ரோகிணி தேவியேபோற்றி

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் நான்காம் நாள், துர்கா தேவியின் கூஷ்மாண்டா வடிவத்தை வழிபடும் நாளாகும்.

    கூஷ்மாண்டா தேவிக்கான முக்கிய மந்திரம்:

    ஸ்ரீ தேவி கூஷ்மாண்டாயை நமஹ.

    இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்தால் சக்தி, படைப்பாற்றல் மற்றும் நிறைவான வாழ்வு கிட்டும் என்று நம்பப்படுகிறது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

    ரிஷபம்

    எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

    மிதுனம்

    வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். பிரபலமானவர்களின் நட்பால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    கடகம்

    கனவுகள் நனவாகும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    சிம்மம்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    கன்னி

    யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வரலாம். வியாபார வளர்ச்சி உண்டு. புது முயற்சியில் வெற்றி கிட்டும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    துலாம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். திருமண முயற்சி கைகூடும்.

    விருச்சிகம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.

    தனுசு

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் உண்டு.

    மகரம்

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர். தொழில போட்டிகள் அகலும்.

    கும்பம்

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பண வரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் பணி உயர்வு கிடைக்கும்.

    மீனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் விரோத மனப்பான்மையால் நடைபெற வேண்டிய காரியம் தாமதப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாம்.

    • நவராத்திரி பூஜையானது முற்றிலும் சுமங்கலி பெண்களுக்குரியதாகும்.
    • நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.

    'நவ' என்பது ஒரு சிறப்பு வாய்ந்த சொல்லாகும். இதற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று ஒன்பது மற்றொன்று புதியது. எனவே நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் சொல்லலாம். புதிய ராத்திரிகள் என்றும் சொல்லலாம்.

    நவராத்திரி பூஜையானது முற்றிலும் சுமங்கலி பெண்களுக்குரியதாகும். காரணம், இதில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்று தான் வரும். ஆனால் நவராத்திரியின் போது இவை மாற்றம் அடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்றாகிறது.

    சிறப்புக்குரிய நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால், மனதில் நினைக்கும் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.



    அப்படியான நவராத்திரி விழா தொடங்கி மூன்று நாட்கள் முடிந்து உள்ளது. சதுர்த்தி திதியில் வியாழக்கிழமையான இன்று நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் மகிழ்ச்சியை குறிக்கிறது.

    பக்தர்கள் மஞ்சள் நிறத்தை அணிந்து, மனதை நேர்மறை மற்றும் நம்பிக்கையின் ஒளியால் நிரப்புங்கள். மஞ்சள் நிறம் கொண்ட சாமந்தி பூவைக் கொண்டு வழிபாடு செய்யலாம். 

    • கூஷ்மாண்டா தேவி உலகத்தையும், பிரபஞ்சத்தையும் உருவாக்கிய தாயாகக் கருதப்படுகிறார்.
    • கூஷ்மாண்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி உடல் வலிமை, மன உறுதி கிடைக்கும்.

    நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை துர்க்கையாக வழிபடும் நாள். கூஷ்மாண்டா தேவியை மகாலட்சுமியின் ரூபமாக வழிபடுகிறோம். இவர் நவதுர்க்கைகளில் ஒருவர். இன்று வீட்டுக்கு மகாலட்சுமியை வரவேற்கும் முதல் நாளாகும். இந்த நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் வடிவமாக வழிபட்டு, செல்வ செழிப்பிற்காக வேண்டிக்கொள்ளலாம். 

    கூஷ்மாண்டா தேவி உலகத்தையும், பிரபஞ்சத்தையும் உருவாக்கிய தாயாகக் கருதப்படுகிறார். வடமொழியில் "கூ" (சிறியது), "உஷ்மா" (வெப்பம்), "அண்டா" (உருண்டை) என்ற சொற்களின் சேர்க்கையே கூஷ்மாண்டா என்பதாகும், இது "சிறிய வெப்பமான உருண்டை வடிவத்தில் இருக்கும் பிரபஞ்சத்தை உருவாக்கியவள்" என்று பொருள்படும்.

    கூஷ்மாண்டா தேவி

    புராணங்களில் சொல்லப்பட்டபடி, காலத்தின் தொடக்கத்தில் எங்கும் இருள் மட்டுமே இருந்தது. சிருஷ்டி எதுவும் இல்லாமல், பிரபஞ்சம் வெறுமையாகக் காணப்பட்டது. அப்பொழுது, மகா சக்தியான ஆதி பராசக்தி தனது சிரிப்பின் ஒளியால் பிரபஞ்சத்தை உருவாக்கினாள்.

    அவள் சிரித்தபோது வெளிப்பட்ட ஒளி, சூரிய மண்டலத்தின் ஒளியாக பரவியது. அந்த ஒளியிலிருந்தே உலகம் தோன்றியது.

    கூஷ் என்றால் புன்சிரிப்பு என்றும், அண்டம் என்றால் உலகம் என்றும் பொருள். இவர், சூரியனின் மையப்பகுதியில் வசிப்பவர் என்றும், உலகத்திற்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்குபவர் என்றும் நம்பப்படுகிறது.

    கூஷ்மாண்டா தேவி அஷ்டபுஜ (எட்டு கைகள்) உடையவள். கைகளில் கமண்டலம், தாமரை, அமிர்தக் கலசம், சங்கு, சக்கரம், அம்பு, வில் ஆகியவை உடையவள். இவரது வாகனம் சிங்கம். அவரது முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒளிர்கிறது. சூரிய மண்டலத்தின் நடுவில் திகழ்கிறாள்.

    கூஷ்மாண்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி உடல் வலிமை, மன உறுதி கிடைக்கும். பக்தர்களுக்கு ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செழிப்பு, ஆனந்தம் வழங்குகிறாள். படைப்பின் தெய்வமாக கருதப்படுவதால், அவர் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரியவளாகக் கருதப்படுகிறார்.

    ஸ்லோகம்:

    'ஓம் தேவி கூஷ்மாண்டாயை நமஹ' என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

    • தல்லாகுளம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணாவதார காட்சி.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-9 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை காலை 6.09 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : சுவாதி இரவு 7.03 மணி வரை பிறகு விசாகம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சதுர்த்தி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்

    இன்று சதுர்த்தி விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்கார காட்சி. தல்லாகுளம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணாவதார காட்சி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர், தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.

    திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-பயணம்

    கடகம்-பரிசு

    சிம்மம்-வரவு

    கன்னி-களிப்பு

    துலாம்- நிம்மதி

    விருச்சிகம்-ஆதாயம்

    தனுசு- அமைதி

    மகரம்-கவனம்

    கும்பம்-யோகம்

    மீனம்-நிறைவு

    • வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராகி என்று அழைக்கப்படுகிறாள்.
    • வராகியை வழிபட சுக்கிரதோஷம் நிவர்த்தியாகும்.

    நவராத்திரி மூன்றாம் நாளன்று அன்னை பராசக்கதி, வராகியாக வழிபாடு செய்யப்படுகிறாள். அம்பிகையின் படைத்தளபதியாக இருப்பவள். மங்கலமய நாராயணி என்றும் அழைக்கப்படுபவள். வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராகி என்று அழைக்கப்படுகிறாள்.

    அன்னை வராகியை வழிபாடு செய்ய அரிசி மாவைக் கொண்டு மலர்கள் உருவத்தில் கோலம் போட வேண்டும். 20 அகல் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் பயன்படுத்த வேண்டும். பலாப்பழம் மற்றும் கற்கண்டு சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். சம்பங்கி, மருக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள் கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே" என பாடி துதித்தால் வேண்டும் வரம் அருளுவாள்.

    அன்னை வராகி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சுக்கிரன். எனவே வராகியை வழிபட சுக்கிரதோஷம் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, வெற்றி, செல்வம், செழிப்பை தருவாள். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள், சண்டைகள் விலகி, அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் எந்த ஒரு காரியத்திலும் இறங்கினாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

    • நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது.
    • விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும்.

    நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமான பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரும். தமிழில் கேட்டை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

    சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும். இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம்.

    மூல நட்சத்திர தீபம்:

    மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூல நட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி பூஜை வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது. மூலம் நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தை சுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும். பசு நெய் ஸ்ரேஷ்டம் ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதினால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.

    விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும். திரியை சுத்தம் செய்யும் பொழுது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.

    • பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
    • 5-வது நாள் காலை மோகினி அவதார உற்சவம்.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.

    சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.

    பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள்: மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்படும். இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.

    2-வது நாள்: காலை- சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளுவார். இரவு- அம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வருவார்.

    3-வது நாள்: காலை- பொன்மயமான சிம்மவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி உலா வருவார். இரவு- முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார்.

    4-வது நாள்: காலை- கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா. இரவு- சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வலம் வருவார்.

    மோகினி அவதாரம்-கருட சேவை

    5-வது நாள்: காலை மோகினி அவதார உற்சவம். அப்போது பெருமாள், அழகிய மங்கை வேடமேற்று உலா வருவார். இரவு கருடசேவை நடைபெறும். அப்போது ஏழுமலையான் கருட வாகனத்தில் அமர்ந்து மாடவீதிகளில் வீதிஉலா வருவார்.

    6-வது நாள்: காலை- 'சிறிய திருவடி' என போற்றப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி, பச்சை பட்டாடை அணிந்து, தங்ககிரீடம் சூடி, கையில் வில்லேந்திய ராமப்பிரானாக வலம் வருகிறார். மாலை- தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    7-வது நாள்: காலை- ஏழு குதிரைகள் இழுக்க தங்கமயமாக ஜொலிக்கும் சூரியபிரபை வாகனத்தில், மலையப்பசாமி மட்டும் எழுந்தருளுகிறார். இரவு- சந்திரபிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் மலையப்பர் சேவை சாதிக்கிறார்.

    தேரோட்டம்

    8-வது நாள்:- காலை தேரோட்டம். அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வருவார். இரவு- குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார்.

    9-வது நாள்: கோவில் தெப்பக்குளமான புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்) நடைபெறும்.

    பின்னர் கொடியிறக்கம் (த்வஜாவரோகணம்) நடைபெற்று திருவிழா இனிதே நிறைவுபெறும்.

    பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

    பிரம்மோற்சவ விழா நேரத்தில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. பிரேக் தரிசன முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 435 முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் திருப்பதியில் கொண்டு விடப்படுவார்கள்.

    திருப்பதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 23 வாகன நிறுத்துமிடங்கள் தயாராக உள்ளன.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாடவீதிகளில் தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 அகண்ட ஒளித்திரைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 7-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள இன்று காலை பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் முன்பு பந்தக்கால் வைத்து பூஜை செய்யப்பட்டது.

    பின்பு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார் பி.டி.சங்கர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க பந்தக்கால் நடப்பட்டது.

    இதில் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அருணாசலேஸ்வரர் கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×