என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

    • அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 7-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள இன்று காலை பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் முன்பு பந்தக்கால் வைத்து பூஜை செய்யப்பட்டது.

    பின்பு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார் பி.டி.சங்கர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க பந்தக்கால் நடப்பட்டது.

    இதில் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அருணாசலேஸ்வரர் கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×