என் மலர்
வழிபாடு
- அவினாசியில் லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
- வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி கும்பாபிஷேக விழா இன்று காலை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.
29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
31-ந் தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு 6-ம்கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.
2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.
- முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதிஉலா.
- முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
விராலிமலை:
விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.
- திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
- பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.
அந்த வகையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இ்ந்த ஆண்டு கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த 369-ம் ஆண்டு தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து சேர்கிறார்.
தைப்பூசத்தை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தரிசனம் செய்து செல்கின்றனர்.
நாளை நடக்கும் தைப்பூசம் திருவிழாவிற்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறும்.
- ஞானசபையில் கொடி ஏற்றம் நடந்தது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா இந்த ஆண்டு 153-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.
இன்று காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப் பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றமும், காலை 10 மணிக்கு ஞானசபையில் கொடி ஏற்றமும் நடந்தது.
நாளை (25-ந்தேதி) தைப்பூச திருவிழா வையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 5.30 மணி என 6 காலம், 7 திரை விலக்கி ஜோதிதரிசனம் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வருவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பபடுகிறது. வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
- கிரவுஞ்சா என்ற அசுரன் ஆற்றலும், ஆணவமும் உள்ளவனாக இருந்தான்.
- மலை வடிவம் எடுத்து மற்ற முனிவர்களை துன்புறுத்தினான்.
கிரவுஞ்சா என்ற அசுரன், மற்றவர்களை அழிக்கக்கூடிய ஆற்றலும், ஆணவமும் உள்ளவனாக இருந்தான். அகத்தியர் கயிலாயத்திற்குச் சென்று சிவ வழிபாடு செய்து, காவிரியை தன்னுடைய கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கிரவுஞ்ச அசுரன் மலை வடிவம் எடுத்து மற்ற முனிவர்களை துன்புறுத்தியது போல், அகத்தியரையும் வழிமறித்து தடுத்தான். மேலும் பலத்த மழையையும் தன் சக்தியால் ஏற்படுத்தினான். இதனால் அகத்தியர் அந்த மலையை கடக்க முடியாமல் பல நாள் காட்டினுள் தவித்தார்.
பின்னர் கிரவுஞ்ச அசுரனின் மாயையால் தான் நாம் இவ்வாறு சிரமப்படுகிறோம் என உணர்ந்து, காவிரி நீரை எடுத்து மந்திரப் பிரயோகம் செய்தார். "நீ எப்போதும் மலையாகவே இருப்பாய். உன்னால் இனி நகரவே முடியாது" என்று சபித்தார். இதைக்கேட்டு தன் ஆணவம் அழியப்பெற்ற அசுரன், தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினான்.
அப்போது அகத்தியர். "முருகப்பெருமான் பிறப்பெடுத்து அவரின் வேல் உன் மீது படும் வேளையில் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்றார்.

அதன்படியே முருகப்பெருமான் பிறப்பெடுத்து வந்ததும், சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனை அழிக்க வந்தார். அவனோ, தன் படைகள் அனைத்தும் அழிந்த நிலையில் முருகனின் சக்தியைப் பற்றி அறிந்து கொண்டு, கிரவுஞ்ச மலைக்கு பின்பக்கமாக வந்து ஒளிந்துகொண்டான்.
இதையடுத்து மாயைகள் நிறைந்த கிரவுஞ்ச மலையைத் தாண்டி, தாரகாசுரனை அழிப்பதற்காக முதலில் வீராவாகு தேவர் வந்தார். ஆனால் கிரவுஞ்ச மலையின் மாயைக்கு முன்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே அவர் சென்று முருகப்பெருமானிடம் கூறினார்.
உடனே முருகப்பெருமான் கிரவுஞ்ச மலை இருந்த பகுதிக்குச் சென்று, தன்னுடைய வேலை எடுத்து அந்த மலையின் மீது வீசினார். இதையடுத்து கிரவுஞ்ச மலை தகர்ந்ததோடு, அகத்தியரின் சாபத்தால் பாதிக்கப்பட்டிருந்த கிரவுஞ்ச அசுரனின் சாபமும் நீங்கப்பெற்றது.
- கையில் வில், அம்புடன் இருக்கும் முருகனை 'தனுக சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர்.
- குக்கே சுப்பிரமணியர் கோவிலில், முருகர் பாம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.
* மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழியில், முருகப்பெருமான் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.
* சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.
* ஈரோடு மாட்டம் சென்னிமலையில் இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தருகிறார். இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும்.
* வழக்கமாக அம்மனுக்குதான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.
* கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் தன்னுடைய காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.
* திருவையாறு ஐயாறப்பர் சன்னிதி பிரகாரத்தில் கையில் வில், அம்புடன் இருக்கும் முருகப்பெருமானை 'தனுக சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர்.
* திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப்பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியிருக்கிறார்.
* நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்ற இடத்தில் முருகப்பெருமான், வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். சிக்கல் சிங்காரவேலவர் கோவிலைப்போலவே இந்த கோவிலில் உள்ள முருகன் சிலையிலும் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.
* மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் உள்ள முருகன், கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.
* மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது. நெய்குப்பை என்ற ஊர். இங்குள்ள அம்மன் கையில் குழந்தையாக அமர்ந்தபடி முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
* திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காணப்படுகிறார்.
* புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் திருத்தலத்தில் குருவின் தோற்றத்தில் முருகப்பெருமான அருள்கிறார். அவர் தனது ஒரு கையில் ஜெப மாலையும், மறு கையில் சின் முத்திரையும் தாங்கியிருக்கிறார்.
* கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணியர் கோவிலில், முருகப்பெருமான் பாம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.
* கனககிரி தலத்தில் முருகப்பெருமான் கையில் கிளியை ஏந்தி காட்சி தருகிறார்.
* செம்பனார் கோவில் திருத்தலத்தில் அருளும் முருகப்பெருமான், தலையில் ஜடா மகுடம் தரித்து, இரண்டு கரங்களிலும் அக்கமாலை ஏந்தியபடி இருக்கிறார்.
* கும்பகோணம் அருகில் உள்ள அழகாபுத்தூர் என்ற ஊரில் அருளும் முருகப்பெருமான், மகாவிஷ்ணுவைப் போல தன்னுடைய கையில் சங்கும், சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார்.
* பூம்புகார் அருகே உள்ள திருச்சாய்க்காடு சாயாவ னேஸ்வரர் கோவிலில் பஞ்சலோகத்தால் ஆன முருகப்பெருமான் அருள்கிறார். இவர் தனது கையில் வில் மற்றும் அம்பு ஏந்தியுள்ளார்.
* திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ஜலகம் பாறை என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் ஆலயத்தில், விக்கிரகம் கிடையாது. 7 அடி உயர வேல் வடிவத்தில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயம் இது.
* பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன், மன்மதனைப் போல கரும்போடு காட்சி தருகிறார்.
* நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி என்ற இடத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் முருகப்பெருமான் அருள்கிறார்.
* திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் வில்வாரணி என்ற ஊரில் நட்சத்திரகிரி மலை இருக்கிறது. இங்கே சுயம்பு லிங்க வடிவில் நாகாபரணத்துடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒரே வடிவமாக அமர்ந்திருக்கும் கோலத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
* சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு எதிர் திசையில் இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் உள்ளன.
* ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் தலத்தில் உள்ள நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில், பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் கோலத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.
- அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன்.
- எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான்.
ஒரு சமயம் அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன். அவன் மிகப்பெரிய பலசாலி, எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான். அகத்திய முனிவரின் வழிபாட்டிற்காக அவன் கயிலை மலைக்குச் சென்று, அங்குள்ள கந்தமலையில் சிவ-சக்தி சொரூபமாக இருக்கும் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளையும், ஒரு நீண்ட மூங்கிலில் இரு பக்கமும் துலாபாரம் போல கட்டி தன்னுடைய தோளில் வைத்து தூக்கி வந்தான்.
அப்போது அவனுக்குள், 'நம்மை விட மிகுந்த மிகுந்த பலசாலி யாரும் இல்லை' என்ற கர்வம் உண்டானது. அப்படி வரும் வழியில் முருகப்பெருமானின் திருவிளையாடலால். பாதை தெரியாமல் திகைத்து தடுமாறினான். அப்பொழுது முருகப்பெருமான், மிக அழகிய சிறுவனின் தோற்றத்தில் வந்து இடும்பனுக்கு வழிகாட்டினார்.
திருவாவினன்குடி அருகே வந்தபோது, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "இடும்பா.. இங்கு நீ சற்று ஓய்வு எடுத்து விட்டுச்செல்" என்றார். இடும்பனும் அங்கு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று காவடி போல் சுமந்து வந்த மலைகளை கீழே இறக்கி வைத்தான். ஒய்வு எடுத்த பிறகு அந்த காவ டியை தூக்கியபோது, அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.
என்ன காரணம் என்று பார்க்கையில், சிவகிரியின் உச்சியில் ஒரு அழகிய சிறுவன் கோவனத்துடன், கையில் ஒரு கம்பை ஊன்றியபடி நிற்பதைக் கண்டான். உடனே கோபம் கொண்ட இடும்பன், சிறுவனைப் பார்த்து "மலையில் இருந்து இறங்கு" எனக் கூற, அந்த சிறுவனோ ``இந்த மலை எனக்கே சொந்தம்" என்றான்.
இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இடும்பன். சிறுவனை தாக்க முயன்றான். அப்போது சிறுவன் உருவத்தில் இருந்த முருகப்பெருமான். இடும்பனை சாதாரணமாக தள்ள, அவன் கீழே விழுந்து மயக்கமுற்றான். அப்போது அகத்தியரும். இடும்பனின் மனைவியும் முருகப்பெருமானிடம் வந்து இடும்பனுக்கு ஆசி கூறுமாறு வேண்டினர்.
இதையடுத்து முருகப்பெருமான். இடும்பனை தன்னுடைய காவல் தெய்வமாக நியமித்தார். இடும்பன் இரு மலைகளைத் தூக்கி வந்த நிகழ்வை நினைவுகூரும் ஒன்றாகத்தான் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கும் வழக்கம் வந்தது.

தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு பால் காவடி, பழக்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமான காவடிகளைச் சுமந்தபடி முருகபக்தர்கள், முருகனை தரிசிக்கச் செல்கிறார்கள். இவ்வாறு காவடி எடுக்கும் பக்தர்களுக்கு. இடும்பனுக்கு அருள்செய்தது போல முருகப்பெருமான் அருள்செய்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு பழனி.
- இன்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நடந்து வருகிறது.
6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வருவதால் பழனி நகரின் அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.
- பழம்பெருமை வாய்ந்தது கோப்பினேஷ்வர் திருக்கோவில்.
- 5 அடி உயரம், 5 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கம்.
கோவில் தோற்றம்
மும்பையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நகரம், தானே. மும்பையின் நன்கு வளர்ச்சி அடைந்த புறநகர் பகுதிகளில் ஒன்றாகவும் இந்த நகரம் திகழ்கிறது. இங்கே சுற்றிலும் கடைகளும், காய்கறி மண்டிகளும் சூழ்ந்த ஒரு நெருக்கடியான வீதியில் அமைந்திருக்கிறது, பழம்பெருமை வாய்ந்த கோப்பினேஷ்வர் திருக்கோவில்.
கி.பி. 810-ம் ஆண்டு முதல் 1240-ம் ஆண்டு வரை, தானே பகுதியை ஆட்சி செய்த சில்ஹாரா வம்ச அரசர்கள், இந்தக் கோவிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள், சிறந்த சிவ பக்தர்களாகவும் இருந்துள்ளனர். கி.பி. 1760-ம் ஆண்டு மராட்டிய மன்னர் சர் சுபேதார் ராமோஜி மகாதேவ் என்பவர், இந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்து கட்டியிருக்கிறார். அதன்பின்னர் 1879-ம் ஆண்டு பொதுமக்களால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
சந்தை வீதியில் நின்று பார்த்தால் இந்த ஆலயத்தை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் ஆலயத்தின் நுழைவு வாசல், மிகவும் குறுகலான தலைவாசல் ஆகியவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளது. சாதாரணமாக அந்த வீதியில் செல்லும்போது, அதுவும் ஒரு கடை என்பது போல் கடந்து சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. நன்றாக உற்று நோக்கும் போதுதான், அது ஒரு ஆலயம் என்பதையே நாம் உணர முடியும்.
ஆனால் நுழைவுவாசலைக் கடந்து உள்ளே சென்றால், அந்த ஆலயத்தின் பிரமாண்டமே வேறு விதமாக நம்மை வியக்க வைக்கும். அந்த அளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் ஆலயங்களில் ஒன்றாக இந்த கோப்பினேஷ்வர் கோவில் திகழ்கிறது.
கோவிலுக்குள் நுழைந்ததும் மிகப்பெரிய நந்தி நம்மை வரவேற்கிறது. அதை வணங்கிச் சென்றால், மகா மண்டபத்தை அடையலாம். ஆலயத்தில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளின் போதும், இந்த மண்டபத்தில்தான் சொற்பொழிகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இந்த மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள சில படிகளை இறங்கிச் சென்றால், இத்தல இறைவனான கோப்பினேஷ்வர், சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்தி 5 அடி உயரம், 5 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கமாகும். கோவில் வளாகத்தை ஒட்டி மசுண்டா ஏரி இருக்கிறது.
இந்த ஏரியில் இருந்து தானாகவே மேல் எழும்பி வந்த சிவலிங்கத்தைத்தான், இத்தல கருவறையில் சில்ஹாரா வம்ச அரசர்கள் பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்த சிவன் கோவில்களில் உள்ள லிங்கங்களில், இத்தல லிங்கமே பெரியது என்கிறார்கள்.
இந்த கோவில் வளாகத்தில் சிவன் சன்னிதி தவிர, இன்னும் பல சிறுசிறு சன்னிதிகளும் இருக்கின்றன. அவற்றில் காளிகாதேவி, ராமர், சீதளாதேவி, உத்தரேஷ்வர் (காசி விசுவநாதர்), காயத்ரி தேவி, மாருதி, பிரம்மதேவர், தத்தாத்ரேயா் ஆகியோர் தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளனர்.
இந்த ஆலயத்தில் `ஷ்ரவண சோம்வார்' என்று அழைக்கப்படும் ஆடி மாத திங்கட்கிழமைகள், அனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற பண்டிகைகள் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன.

மகா சிவராத்திரி விழாதான் இங்கு நடைபெறும் விழாக்களில் வெகு விமரிசையாக நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். அந்த தினத்தில் கோவில் வெகு அழகாக அலங்கரிக்கப்படும். மகாசிவராத்திரி தினத்தில், தானே நகரமே விழாக்கோலம் பூண்டு, தங்களின் காவல் தெய்வமான கோப்பினேஷ்வரை வழிபட்டு நிற்கிறது.
இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு, பகல் 12 மணி வரை பக்தர்கள் தங்களின் கைகளாலேயே பால் அபிஷேகம் செய்யலாம். அதோடு வில்வ இலைகளும், மலர்களும் தூவி வழிபடலாம். 12 மணிக்கு மேல் பால் அபிஷேகம் செய்ய அனுமதி கிடையாது. மனதில் எந்தக் கவலை இருந்தாலும், இத்தல இறைவனை வழிபட்டால் அதில் இருந்து விடுபடலாம் என்பது பக்கதர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
- ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
- திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை-10 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 10.43 மணி வரை. பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: திருவாதிரை காலை 7.43 மணி வரை. பிறகு புனர்பூசம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
நாளை சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் சூர்ணாபிஷேகம். குன்றக்குடி திருப்புடைமருதூர், திருவிடைமருதூர் தலங்களில் தேரோட்டம். கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்கப்பல்லக்கு நாள் கதிரறுப்பு விழா. திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி, பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-தனம்
மிதுனம்-படிப்பினை
கடகம்-உழைப்பு
சிம்மம்-கவனம்
கன்னி-கடமை
துலாம்- செலவு
விருச்சிகம்- நிறைவு
தனுசு- உற்சாகம்
மகரம்- நன்மை
கும்பம்- வரவு
மீனம்- பெருமை
- பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
- தை மாத பவுர்ணமி நாளை.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி தை மாத பவுர்ணமி நாளை (புதன்கிழமை) மாலை 10.06 மணிக்கு தொடங்கி மறுநாள் விழாயக்கிழமை மாலை 11.22 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி.
- திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி கும்பாபிஷேக விழா நாளை 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அதன்படி நாளை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.
29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந்தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
31-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.
2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.






