search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Velvi pooja"

    • தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி.
    • திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கும்பாபிஷேக விழா நாளை 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அதன்படி நாளை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.

    இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந்தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    31-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.

    2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.

    • அரியூர் அருகே பங்கூரில் உள்ள நவாம்பிகை உடனுறை, நவகோல் லிங்கேஸ்வரர் சிவன் கோவிலில் உலக மக்கள் நன்மை வேண்டி மகா உருத்திர பெருவேள்வி பூஜை நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் மகா உத்திர பெருவேள்வி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    அரியூர் அருகே பங்கூரில் உள்ள நவாம்பிகை உடனுறை, நவகோல் லிங்கேஸ்வரர் சிவன் கோவிலில் உலக மக்கள் நன்மை வேண்டி மகா உருத்திர பெருவேள்வி பூஜை நடைபெற்றது. திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், அமுது படையல், பேரொளி வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து  2 மணிக்கு மேல் மகா உத்திர பெருவேள்வி நடைபெற்றது.  5 மணிக்கு மகா வேள்வி, கலச புறப்பாடு, சிறப்பு கலச அபிஷேகம், அமுது படையல், பேரொளி வழிபாடு நடைபெற்றது.

    இந்த மகா வேள்வி பூஜையில் பங்கூர், அரியூர், நவமாள்காப்பேரி, பள்ளித்தென்னல், சிவராந்தகம், கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×