என் மலர்
வழிபாடு
- அயோத்தி கும்பாபிஷேக விழா நேற்று விமர்சியாக நடந்தது.
- ராமர் சிலைக்கு முன்பாக பீடத்தில் சமர்ப்பித்து பூஜை செய்யப்பட்டது.
திருச்சி:
அயோத்தி கும்பாபிஷேக விழா நேற்று விமர்சியாக நடந்தது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ராமர் தொடர்பான கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அந்த வகையில் ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை கடந்த 20-ந் தேதி நேரில் தரிசனம் செய்தார்.
அப்போது அயோத்தி ராமருக்கு ரங்கநாதருக்கு சாத்தப்பட்ட பட்டு வேஷ்டிகள், தாயாரின் திருப்பாவாடை, திருமஞ்சன கைலி போன்ற பகுமானங்கள் பட்டர்கள் சார்பில் பிரதமரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை அயோத்தியில் பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் நடந்த சிறப்பு பூஜையின் போது பிரதமரிடம் வழங்கப்பட்ட ரங்கநாதருக்கு சாற்றிய பட்டு வஸ்திரம் பால ராமர் சிலைக்கு முன்பாக பீடத்தில் சமர்ப்பித்து பூஜை செய்யப்பட்டது.
இந்த புகைப்படங்களை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கநாதர் பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலராமர் சிலைக்கு மேலே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போன்று பள்ளி கொண்ட பெருமாள் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
- சிவபெருமானையும், நந்திபகவானையும் வழிபட விசேஷமான நாள்.
- நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும்.
பிரதோஷ நாள் சிவபெருமானையும் நந்தி பகவானையும் வழிபட விசேஷமான நாள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் மாலை நந்தி பகவானுக்கும் சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும். மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடக்கக்கூடிய இந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்வதன் மூலமாக எல்லாவிதமான கிரக தோஷங்களும் நீங்கி விடும்.
- மனிதனின் வாழ்க்கை மகத்தானது.
- பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
உயிரினங்களில் மனிதனின் வாழ்க்கை மகத்தானது, அந்த மகத்துவத்தை நாம் வீணாக்கி விடக்கூடாது. நமது வாழ்க்கையை நாம்தான் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
இன்றைக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு மூல காரணமே பொறுப்புகளை உணர்ந்து நடக்காததுதான். இதனால்தான் நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள்:
"நீங்கள் அனைவருமே பொறுப்பாளர்கள்தான். உங் கள் பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விசாரணை செய்யப் படுவீர்கள். தலைவர் ஒரு பொறுப்பாளர், கணவன் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளர், மனைவி தன் கணவனுக்கும், தம் பிள்ளைகளுக்கும் பொறுப்பாளி. ஆக ஒவ்வொருவரும் பொறுப்பாளர்தான். நீங்கள் அனைவருமே உங்களது பொறுப்புகளைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்". (நூல்: புகாரி)
சுய நலம் சுருங்கி பொது நலம் விரியும்போதுதான் பொறுப்புகள் தானாகவே வரத் தொடங்கி விடும் என்பதை பின்வரும் வரலாற்றுச் செய்தி சுட்டிக் காட்டுகிறது:
"சுலைமான் நபியின் ராணுவம் வெகுதூரத்தில் வருவதை உணர்ந்து கொண்ட தலைமை எறும்பு பொறுப்புணர்வுடன் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இப்படிப் பேசியதாம், 'எறும்புகளே... நீங்கள் உங்களது புற்றுகளுக்குள் புகுந்து கொள்ளுங்கள். சுலைமானும், அவரது படையினரும் சற்றும் அறியாமல் உங்களை உறுதியாக மிதித்து நசுக்கி விடவேண்டாம்". (திருக்குர்ஆன் 27:18)
ஆறறிவற்ற ஒரு எறும்பு தன் இனத்தைக் காப்பதில் கண்ணும் கருத்துமாக பொறுப்புணர்வுடன் இருந்திருக்கிறது என்பதைத்தான் இதிலிருந்து நாம் விளங்க முடிகிறது. எதையும் முன்கூட்டியே கணிக்கும் இத்தகைய பொறுப்புணர்வு உள்ளவர்கள்தான் இன்றைக்கு தேசம் முழுவதும் தேவைப்படுகிறார்கள்.
மனம் எப்போதும் தீமையைத்தான் தூண்டிக் கொண்டிக்கும். இதனால்தான் நபிகள் நாயகம் சொன்னார்கள்: 'நடைபாதையில் கிடக்கும் நோவினைப் பொருட்களை அகற்றுவதும் இறை விசுவாசத்தின் ஓர் அங்கம்'.
தங்களுக்கான பொறுப்புகளை ஒவ்வொருவரும் சரியாக செய்தாலே போதும் உலகத்தின் எல்லா செயல்பாடுகளும் மிகச்சரியாக இயங்க ஆரம்பித்து விடும்.
திருக் குர்ஆன் கூறுகிறது:
`மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட தீயசெயல் களின் காரணத்தால் கடலிலும், தரையிலும் `நாசமும், குழப்பமும் தோன்றின. தீமைகளில் இருந்து அவர்கள் திரும்பி விடும் பொருட்டு' அவர்கள் செய்தார்களே தீவினைகள்; அவற்றில் சிலவற்றை இவ்வுலகிலும் அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்கிறான்'. (திருக்குர்ஆன் 30:41)
`என் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லையில் எங்கோ ஓரிடத்தில் ஆடொன்று பாதிக்கப்பட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு' என்று கலீபா உமர் சொன்னது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது. இன்றைக்கு இத்தகைய பொறுப்பாளர்கள்தான் மிகஅதிகமாக நாட்டுக்கு தேவைப்படுகிறார்கள்.
ஆனால் இன்றைக்கு நடப்பது என்ன...? அவரவர் தமக்குரிய பொறுப்புகளை மறந்து `இதற்கு நான் பொறுப்பல்ல... இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை... அவர்தான் அதற்கு பொறுப்பு... எனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது...' என்றெல்லாம் சொல்வதுண்டு.
பொறுப்பு என்பது தட்டிக்கழிப்பதல்ல, எதையும் தைரியமுடன் எதிர்கொள்வதுதான் உண்மையான பொறுப்பு. இறைநம்பிக்கையும், மனவலிமையும் உள்ளவர்களால்தான் எந்தப் பொறுப்பையும் துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.
'எவர் தமது இரு தாடைக்கும், தொடைக்கும் மத்தியில்உள்ளவைகளுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவர் சுவனத்தில் நுழைவதற்கு நான் முழுப்பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்' என நபிகள் நாயகம் சொல்லியதன் பொருளையும், அதன் பொறுப்பையும் நாம் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஏனெனில் இந்த இரண்டும் தான் பெரும்பாலான பிரச்சினை களுக்கு முதன்மைக் காரணமாக இருக்கிறது. அதில் இருந்து விலகி சற்று பாதுகாப்பாக இருப்பது என்பது சிரமமான ஒன்றுதான். அந்த சிரமத்தை எவர் பொறுப்புடன் ஏற்றுக்கொள்கிறாரோ அவருக்குத் தான் அந்த சொர்க்கம் தயாராக இருக்கிறது. அதை பெற்றுத்தருவதற்கு நானும் தயாராக இருக்கிறேன் என்று நபிகள் நாயகம் தைரியமாகச் சொன்னார்கள்,
குழந்தைப் பருவத்தில் இருந்தே நமது பிள்ளைகளுக்கு பொறுப்பு என்றால் என்ன? அதை எப்படி நிறைவேற்ற வேண்டும்? என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும், நாம் அவற்றை செய்து காட்டவும் வேண்டும்.
ஒரு முறை, 'இந்தக் குழந்தைக்கு ஹஜ் கடமையா?' என்று ஒருவர் நபிகள் நாயகத்திடம் கேட்டபோது சட்டென `ஆம்' என்று சொன்னார்கள். காரணம், அந்தப் பிள்ளைக்கு அதற்கான பொறுப்புணர்வை குழந்தைப் பருவத்திலேயே ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான். இதே போன்று தான் `ஏழு வயதில் உங்கள் பிள்ளைகளை தொழ ஏவுங்கள். பத்து வயதில் தொழுகையை விட்டதற்காக அடியுங்கள்' என்றும் சொன்னார்கள்.
இன்றைக்கு நமது பிள்ளைகளை எப்படி வளர்த்து வருகிறோம் என்பதுடன், நாம் எப்படி வாழ்ந்து வருகிறோம் என்பதும் சிந்தித்துப் பார்க்கத்தக்கது. பொறுப்பாக நடப்பது மட்டும் பொறுப்பல்ல, பொறுப்பில்லாமல் சிலர் நடக்கும் போது அதை சரிசெய்வதும் கூட இன்னொரு வகையான பொறுப்புதான். சொல்லப்போனால் தவறுகளை சரிசெய்வதுதான் பெரும் பொறுப்பு.
வாருங்கள் நமது பொறுப்புகளை உணர்வோம்...! பிறரது உணர்வுகளை மதிப்போம்...!
- தேவனைத் தவிர பூமியெங்கும் வேறு தேவன் இல்லை.
- இயேசுவை நோக்கி பிரார்த்திப்போம்.
அன்பானவர்களே, நம்முடைய வாழ்க்கையில் ஒரு நோய், பிரச்சினைகள், சவால்கள், ஆபத்துக்கள் வந்தால் உடனே அதை பெரிய அளவில் சிந்தித்து, பயந்து, கவலைப்படுகிறோம். ஒரு சில நல்ல ஆலோசனைகளை உதாசீனப்படுத்துகிறோம். உடனே பிரச்சினைகள் தீர்ந்து விட வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால் நம்முடைய துன்ப காலங்களில் இயேசுவை நோக்கி பார்த்தால், அவருடைய வார்த்தைகளால், வசனங்களால் எல்லா ஆபத்தில் இருந்தும் விடுபடுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதற்கு எடுத்துக்காட்டாக வேதாகமத்தில் இருந்து ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்...
சிரியா நாட்டில் நாகமான் என்ற பலம் படைத்த, செல்வாக்கான தளபதி இருந்தார். கர்த்தர் அவர் வழியாக சிரியா நாட்டிற்கு பல வெற்றிகளைக் கொடுத்திருந்தார். இதனால் இவர் சிரியா ராஜாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால் இந்த நாகமான் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரது வீட்டில் இஸ்ரவேல் நாட்டைச்சேர்ந்த ஒரு சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள். அவள் தன் எஜமானியிடத்தில், `இஸ்ரவேலின் சமாரியாவில் இருக்கும் இறைவனின் தீர்க்கதரிசி எலிசாவிடம் சென்று அவர் சொல்கிறபடி செய்தால் நாகமான் நிச்சயமாக குணமடைவார்' என்று தெரிவித்தாள்.
இதன்படி நாகமான், சிரியா ராஜாவிடம் இருந்து இஸ்ரவேலின் ராஜாவுக்கு கடிதம் பெற்றுக்கொண்டு, பொன், வெள்ளி, விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், பரிசுப் பொருட்களை எடுத்துக்கொண்டு இஸ்ரவேல் சென்றார். அந்த நாட்டு ராஜாவிடம் சிரியா ராஜா எழுதிய கடிதத்தைக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், நாகமானுடைய தொழுநோயை குணப்படுத்த வேண்டும் என்று எழுதியிருந்தது. கடிதத்தை படித்த இஸ்ரவேலின் ராஜா, 'சிரியாவின் ராஜா என் மேல் யுத்தம் தொடுக்க முகாந்திரம் தேடுகிறார். தொழுநோயைக் குணப்படுத்த நான் என்ன கடவுளா?' என்று கேட்டு சினமடைந்தார்.
இந்த செய்தியை அரண்மனையில் இருந்து எலிசாவுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது எலிசா நாகமானை தன்னிடம் அனுப்பும்படி வேண்டினார். அப்படியே நாகமான் தன் பரிவாரங்களுடனும், எல்லா பொருள்களுடனும் எலிசாவின் வீட்டின் முன் வந்து நின்றார்.
அப்பொழுது எலிசா தன் பணியாளனாகிய கேயாசி என்பவனை சிரியா படைத் தளபதியிடம் அனுப்பி, நாகமானை நோக்கி `யோர்தான் நதியில் ஏழு தரம் மூழ்கி குளித்தெழுந்தால் தொழுநோய் நீங்கி சுத்தமாவார்' என்று சொல்லச்சொன்னார்.
இதைக் கேட்டவுடன் நாகமான், `சிரியாவில் தண்ணீர் ஓடுகிற நதிகள் இல்லாமலா இங்கு வந்தேன்' என்று சொல்லி மிகுந்த கோபத்துடன் திரும்பினார்.
இதைப்பார்த்த நாகமானின் ஊழியக்காரன் ஒருவன் அவர் அருகில் வந்து, `கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய எலிசா கடினமான பெரிய காரியங்களை ஒருவேளை செய்யச் சொல்லியிருந்தால் நீங்கள் அதை செய்திருப்பீர் அல்லவா? இந்த சிறிய காரியத்தைச் செய்வதில் தடைஎன்ன?' என்று கேட்டதும், நாகமான் நதியில் ஏழு தரம் மூழ்கி எழுந்தான்.
குளித்து முடித்ததும் அவன் உடலில் இருந்த தொழுநோய் நீங்கி, சிறு பிள்ளையின் உடலைப் போல மாறியதைக் கண்டு "இதோ இஸ்ரவேலில் இருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறு தேவன் இல்லை என்பதை அறிந்தேன்" என்று கூறி இறைவனைப் புகழ்ந்து போற்றினார்.
கர்த்தருடைய தீர்க்கதரிசி எலிசாவுக்கு பொன், வெள்ளி, ஆபரணங்கள், பரிசுப் பொருட்களை கொடுத்தார். நாகமான் வருந்தி கேட்டும் எலிசா எதையும் வாங்கவில்லை. நாகமான் மகிழ்ச்சியோடு சிரியா நாட்டிற்கு திரும்பினார்.
இங்கே நாகமான் எதிர்பார்த்து வந்தது இறைவனின் தீர்க்கதரிசி எலிசா, தன் உடலில் கைகளை வைத்தோ, அல்லது எண்ணெய்யைப் பூசி ஜெபித்தோ தனக்கு சுகம் கிடைக்கும் என்று எண்ணினார். ஆனால் கர்த்தரோ தீர்க்கதரிசி எலிசா மூலமாக, 'தண்ணீரில் குளித்து முழ்கி எழுந்தாலே போதும்' என்ற அற்பமான காரியத்தைக் கூறக் கேட்டதும் நாகமானின் மனம் ஏற்க மறுக்கிறது.
இன்றைக்கு கூட இவ்வாறே நம் கடினமான செயல் களால், அல்லது உடலை வருத்திக்கொள்வதால், பெருமுயற்சி செய்வதால், இறைவனிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறோம். ஆனால் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஆழ்ந்த இறைநம்பிக்கையையும், சின்னச்சின்ன காரியங்களிலும்கூட நாம் இறைவனுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதே.
ஏனெனில் அற்ப காரியங்களிலும் கூட அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்வது இறைவனுக்கு மிகவும் லேசான காரியம். அற்பமான காரியத்தை யார் அசட்டை பண்ண முடியும்.
இறைவனை நம்புவோம், கீழ்ப்படிவோம். சிறிதோ, பெரிதோ இறை மகன் இயேசுவை நோக்கி பிரார்த்திப்போம். அவரையே நம்புவோம், அவருக்கு கீழ்ப்படிந்து காத்திருப்போம்.
நாகமானுடைய வாழ்வில் அற்புதம் செய்த மீட்பர், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவர் ஜீவனுள்ள தேவன். ஆகவே அவரை நோக்கி பார்க்கும் போது நமக்கு சுகம் நிச்சயம், வெற்றி நிச்சயம், ஆசீர்வாதம் நிச்சயம், ஜெயம் நிச்சயம்.
- மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம் மங்களம்
- அஷ்ட தேதரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்
மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம் மங்களம்
நாதநாதாய கால காலாய மங்களம்!!
மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம் மங்களம்
ஜிஷ்ணுஜேசாய வல்லீ நாதாய மங்களம்!!
மங்களம் சம்பு புத்ராய ஜயந்தீசாய மங்களம் மங்களம்
சுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்!!
மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம் மங்களம்
சக்தி ஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்!!
மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம் மங்களம்
ஸ்வாமிநாதாய மங்களம் சரஜன்மனே!!
அஷ்ட தேதரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்
கமலாஸன வாகீச வரதாயாஸ்து மங்களம்!!
ஸ்ரீ கௌரீ கர்ப்பஜாதாய ஸ்ரீ கண்ட தநயாய்ச்
ஸ்ரீ காந்த பாகினேயாய் ஸ்ரீமத் ஸ்கந்தாய மங்களம்!!
ஸ்ரீ வல்லீரமணாயாத ஸ்ரீகுமராய மங்களம்
ஸ்ரீ தேவஸேநா காந்தாய ஸ்ரீ விசாகாய் மங்களம்!!
மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம் மங்களம்
புண்ய யசஸே மங்களம் புண்ய தேஜஸே!!
இந்த மந்திரத்தை தைப்பூசத்தன்று செய்யும் பூஜையின் முடிவில் சொல்லி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
- முருகப்பெருமான் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம்.
- பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது.
தைப்பூசம் அன்று காலையில் எழுந்து குளித்து தூய்மையான உடை உடுத்தி முருகப்பெருமானை வழிபட வேண்டும். முருகப்பெருமான் படத்திற்கு அல்லது விக்கிரகத்திற்கு முருகப்பெருமானின் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் படைத்து, சுவாமிக்கு நைவேத்தியம் செய்வது நல்லது.
சிலர் அன்று முழுவதும் எதையும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பார்கள். சிலர் பாலும் பழமும் மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். தைப்பூசம் அன்று முருகப்பெருமான் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம். அன்றைய தினம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதோ, கோபப்படுவதோ, வீண் விவாதங்கள் செய்வதோ கூடாது. முருகப்பெருமான் நாமத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
முருகப்பெருமானை நினைத்து தைப்பூச விரதம் இருந்தால், பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.
- தைப்பூசம் என்றதும் முருகப்பெருமானின் ஞாபகம்தான் வரும்.
- தைப்பூசம் என்றதும் அடுத்து வள்ளலார் ஞாபகம் வரும்.
தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியை, `தைப்பூசம்' என்ற பெரும் விழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் தான் முன்னொரு காலத்தில் உலகம் உண்டாக்கப்பட்டது என்று சொல்லப் படுகிறது. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசத்தை ஒட்டி விசேஷ பிரம்மோற்சவம் நடைபெறும். தைப்பூச நாளில் இங்கே `அஸ்வமேத பிரதட்சணம்' என்று கோவிலைச் சுற்றி வருவது விசேஷம். சோழ மன்னர்களில் ஒருவன் இவ்வாறு சுற்றி வந்து, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.
தைப்பூசம் என்றதும் அடுத்து வள்ளலார் ஞாபகம் வரும். முருக பக்தர்களுக்கு தைப்பூசம் என்றதும் முருகப்பெருமானின் ஞாபகம்தான் வரும். `சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை' என்பது பழமொழி.
சூரபத்மன்-தரகாசுரன் பிறந்த கதை
அசுர குல தலைவனாக அசுரேசன் இருந்து வந்தான். அவனுக்கு சுரசை என்னும் மகள் பிறந்தாள். அசுர குருவான சுக்ராச்சாரியார் மாய வித்தைகளை அவளுக்கு கற்றுக்கொடுத்தார். அதனால் அவளை `மாயை' என்றும் அழைத்தனர். அந்த அசுரப் பெண் காசியப முனிவரை விரும்பி திருமணம் செய்துகொண்டாள். அவர்களுக்கு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் என்ற மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். மாயை தன் குழந்தைகளை நோக்கி "நீங்கள் கடும் தவம் செய்யுங்கள். `நரமேத யாக'த்தை செய்யுங்கள்" என்றாள்.
அவர்கள் ரத்தத்துடன் கலந்த பொருட்களை அக்னியில் சேர்த்து, ரத்தம், மாமிசம் முதலானவற்றால் யாகம் நடத்தி கடும் தவம் செய்தனர். முடிவில் நரமேத யாகத்திற்காக தங்கள் உடல்களையே இழக்கத் தயாராகினர். தாரகாசுரன் தனது பெரிய யானைத் தலையை அறுத்து, ஹோமத்தில் இட்டான். (இந்த தாரகாசுரன் காசியப முனிவரும், மாயையும் யானை உருவத்தில் இருந்தபோது பிறந்தவன்).
சூரபத்மனுக்கு தம்பியாகிய தாரகாசுரன் இந்த கடும் தவத்தால் பல அரிய வரங்களைப் பெற்றான். பின்னர் அஷ்டதிக் பாலகர்களையும் வென்று, மேரு மலையின் தென்புறத்தில் மாயாபுரி என்னும் பெரிய நகரத்தை உருவாக்கினான்.
மேலும் தன் அசுர சேனைகள் தங்கவும் பெரிய நகரங்களை உருவாக்கினான். சூரபத்மனுக்கு பானுகோபன் உள்பட பல குழந்தைகள் பிறந்தன. சிங்கமுகனுக்கு அதிசூரன் என்னும் புதல்வனும், 100 பிள்ளைகளும் பிறந்தனர். தாரகாசுரனுக்கு அசுரேசன் என்னும் மகன் பிறந்தான். இவர்களது சகோதரி அஜமுகி, துர்வாசரை மணந்துகொண்டதால், வாதாபி மற்றும் வில்வலன் என இரு குழந்தைகள் பிறந்தன.
முருகப்பெருமான் அவதாரம்
ஒரு சமயம் பரமேஸ்வரனை பிரிந்து பார்வதி தேவி பூலோகத்தில் பிறந்தாள். இமயவன் புத்திரியாக பிறந்து சிவபெருமானையே அடைய வேண்டும் என்று கடுந்தவம் இருந்தாள். அந்த சமயம் சிவபெருமான் தவத்தில் இருந்தார்.
தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்மதன், சிவபெருமான் மீது காமக் கணைகளைத் தொடுத்து, அவருடைய தியானத்தைக் கலைத்தான். இதனால் மன்மதன் துன்பப்பட்டது ஒருபுறம் என்றாலும், தியானம் கலைந்த சிவபெருமான், பார்வதி தேவியின் தவத்தை அறிந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.
அப்போது தேவர்கள், ``இணை இல்லாத இறைவா... எங்கள் துயர்தீர தங்கள் சக்திக்கு நிகரான ஒரு குமரன் பிறக்க வேண்டும். அப்பொழுதுதான் சூரபத்மன், தாரகாசுரன் போன்றவர்களின் ஆணவம் அழியும்" என்று வேண்டினர்.
அப்பொழுது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு, ஆறு பொறிகளாக பிரிந்தது. அந்த நெருப்பால் உலகம் முழுவதும் தகிக்க ஆரம்பித்தது. இதைக்கண்டு தேவர்களும் கூட அஞ்சினர். சத்தம் கேட்டு பார்வதி தேவி அங்கே விரைந்து வர, அவரது உடலில் இருந்து சிந்திய வியர்வையில் இருந்து ஒரு லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் தோன்றினர்.
பார்வதியின் கால் சிலம்பில் இருந்து உதிர்ந்த நவரத்தினங்கள் ஒன்பதில் இருந்து 9 சக்திகள் பிறக்க, அந்த நவக்கன்னியர்களிடம் இருந்து 9 வீரர்கள் தோன்றினர். அவர்கள் வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமாமகேந்திரர், வீரமா மகேஸ்வரர், வீரமா புரந்தரர், வீரராகர்த்தர், வீரமார்தாண்டவர், வீராந்தகர், வீரதீரர் என்ற பெயர்களைப் பெற்றனர். முருகப்பெருமான் அவதாரத்திற்குப் பின் அவர்கள் பூலோகம் வந்தனர்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய அந்த ஆறு தீப்பொறிகளையும், தகிக்கும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வாயு பகவான், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் திருமால் ஆணைக்கிணங்க கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர்.
கார்த்திகை பெண்கள் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும், பார்வதி தேவி பூமியில் வந்து கையில் எடுக்க, ஆறு குழந்தைகளும், ஆறுமுகம் 12 கைகளை உடைய ஒரு குழந்தையாக உருவெடுத்தது. இதையடுத்து அசுரர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு, 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் ஒன்றை, ஆயுதமாக பார்வதிதேவி வழங்கினார். அந்த தினம் `தைப்பூசம்' என்று போற்றப்படுகிறது.
- 25-ந்தேதி தைப்பூசம்.
- 29-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி.
23-ந்தேதி (செவ்வாய்)
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை தங்கப் பல்லக்கில் பவனி.
* கோவை பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் புறப்பாடு.
* திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம், யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* மேல்நோக்கு நாள்.
24-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* பழனிமலை முருகன் கோவிலில் காலை தெய்வானை திருமணம். இரவு வள்ளி திருமணம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கு.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (வியாழன்)
* தைப்பூசம்.
* பவுர்ணமி.
* வடலூர் ராமலிங்க சுவாமிகள் அருட்பெரும்சோதி தரிசனம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் மாலையில் கிரிவலம் வரும் காட்சி.
* மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.
* கோவை பாலதண்டாயுதபாணி வாணவேடிக்கையுடன் தெப்பத் திருவிழா.
* பழனிமலை முருகப்பெருமான் தங்கக் குதிரை வாகனத்தில் பவனி.
* திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
27-ந்தேதி (சனி)
* திருநெல்வேலி நெல்லையப்பர் தெப்ப உற்சவம், ரிஷப வாகனத்தில் பவனி.
* திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
* திருக்குற்றால குற்றாலநாதர் கோவில் தெப்ப உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
28-ந்தேதி (ஞாயிறு)
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி விழா தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (திங்கள்)
* சங்கடகர சதுர்த்தி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி புறப்பாடு.
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்
- 63 நாயன்மார்களின் ஒருவர் அரிவாட்டாய நாயனார்.
- நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார்.
சைவசமய நாயன்மார்கள் 63 பேர். அதில் ஒருவர் அரிவாட்டாய நாயனார். இவர் கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவ பக்தியில் திளைத்தவர்கள்.
அரி வாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோவில் கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார்.
செல்வந்தரான அவருடைய பெருமையை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், அவருடைய செல்வத்தை நீக்கி வறுமையை உண்டாக்கினார். கூலிக்கு வேலை செய்தாலும், நெல் வயலில் கிடைத்த நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார்.
ஒரு நாள் அவர் தன் வயலில் விளைந்த செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு மண் கலயத்தில் சுமந்து சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கச் செல்லுகின்ற போது கீழே விழுந்து கலயம் உடைந்து, எல்லா உணவுகளும் சிந்தியதைக் கண்டு மனம் நொந்தார். `இனி சிவ பெருமானுக்கு எப்படி அமுது செய்விப்பது? இன்றைய பூஜை வீணாயிற்றே? இனி உயிரோடு இருந்து என்ன பலன்?' என்று தம்மை மாய்த்துக் கொள்ள முயன்றார்.
அப்பொழுது சிவபெருமான் அவர் முன் தோன்றி தடுத்தாட்கொண்டு, அவருக்கு நற்பதம் அளித்தார். தன் கழுத்தை அரிவாள் பூட்டி அறுக்க முயன்ற காரணத்தால், அரிவாட்டாய நாயனார் என்ற திருநாமத்தைப் பெற்றார்.
தவறாது கடைபிடித்து வந்த சிவபாட்டிற்குரிய பொருட்களை தவற விட்டதால், தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த அரிவாட்டாய நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் `எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்' என்று வியக்கிறார். அவருடைய குருபூஜை நாள் தை மாதம் திருவாதிரை. அந்த நாள் இன்று.
- காஞ்சீபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் தேரோட்டம்.
- திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 9 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி இரவு 9.56 மணி வரை பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: திருவாதிரை (முழுவதும்)
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோஷம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். குன்றக்குடி முருகப்பெருமான் வெள்ளி ரதத்தில் பவனி. காஞ்சீபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் தேரோட்டம். திருப்புடையமருதூர் சிவபெருமான் கைலாச வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருக்கல்யாணம். அறிவாட்டாய நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-நலம்
கடகம்-லாபம்
சிம்மம்-இரக்கம்
கன்னி-துணிவு
துலாம்- உறுதி
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- நற்செயல்
மகரம்-நட்பு
கும்பம்-உதவி
மீனம்-புகழ்
- நவீன வசதிகளுடன் ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
- அயோத்தி நகரத்தை சீரமைக்க வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
அயோத்தி நகரத்தை கட்டமைக்க ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதில் தற்போது மட்டும் ரூ.66 ஆயிரம் கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இன்னும் ரூ.34 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நகரில் அத்தியாவசிய பணிகளான குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு அழகுப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. அயோத்தி நகரை கட்டமைக்க மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு கொண்டு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.37 ஆயிரம் கோடி செலவில் அயோத்தி நகரை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதுதவிர மாநில அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு அயோத்தியில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரில் உள்ள சரயு நதிக்கரை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள ராமர் படித்துறை சீரமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் மின்விளக்கு அலங்கார காட்சி நடத்தப்படுகிறது. சரயு நதி மூலம் 14 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் ரூ.9 ஆயிரம் கோடியில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் சுமார் ரூ.350 கோடி செலவில், மரியதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. அதே போல் அயோத்தி ரெயில் நிலையம் ரூ.430 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமான நிலையங்களை விட நவீன வசதிகளுடன் இந்த ரெயில் நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
* அயோத்தியில் உள்ள ஆராய்ச்சிக் கழகத்துக்கு சர்வதேச அந்தஸ்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
* அயோத்தியில் அமைச்சரவை கட்டிடத்தை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்தி அந்த நகருக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
* அயோத்தியை இணைக்கும் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளன.
* அயோத்தியில் 1407 ஏக்கரில் பசுமை நகரம் உருவாக்க ரூ.2182 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* அயோத்தியில் ரூ.1,463 கோடி செலவில் அதி நவீன வசதிகளுடன் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
* அயோத்தியில் சக கஞ்ச் பகுதியில் இருந்து நயாகாட் சாலை வரை 1.94 கி.மீ. தூரத்துக்கு ரூ.845 கேடி செலவில் ராமர் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
* அயோத்தியில் ரூ.246 கோடி செலவில் ராஜரிஷி தசரதர் பெயரில் தன்னாட்சி அந்தஸ்து கொண்ட மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது.
* அயோத்தி ரெயில் நிலையம் ரூ.241 கோடி செலவில் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.
* அயோத்தியில் உள்ள அனைத்து மின் கம்பிகளும் ரூ.167 கோடி செலவில் பூமிக்குள் புதைக்கப்பட்டுள்ளன.
* அயோத்திக்குள் ரெயில் பாதைகள் மீது ரூ.74 கோடியில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
* அயோத்தி முழுக்க ரூ.72 கோடி செலவில் பாரம்பரிய அலங்கார கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
* மகரிஷி அருந்ததி பெயரில் ரூ.68 கோடி செலவில் வாகனம் நிறுத்தும் இடங்கள் கட்டப்பட்டுள்ளன.
* பக்தி பாதையில் இருந்து ராமஜென்ம பூமி வரை 29 கி.மீ. தொலைவுக்கு ரூ.68 கோடி செலவில் பாதை கட்டப்பட்டுள்ளது.
* ரூ.65 கோடி செலவில் அயோத்தி முழுவதும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
* கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.37 கோடி செலவில் பிரமாண்டமான கார் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.
* தீப உற்சவம் காட்டும் போது பக்தர்கள் வசதியாக உட்கார்ந்து பார்ப்பதற்காக ரூ.23 கோடியில் காலரிகள் கட்டப்பட்டுள்ளன.
* ரூ.18 கோடியில் கழவுநீர் அகற்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* அயோத்திக்குள் வரும் 4 திசை சாலைகளிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.
* அயோத்தி முழுக்க முக்கிய இடங்களில் 410 பகுதிகளில் ரூ.12 கோடி செலவில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
* அயோத்தியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 264 விதமான திட்டப்பணிகளை மத்திய- மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மேற்கொண்டுள்ளன.
* அயோத்தியை 2031-ம் ஆண்டுக்குள் பூலோக சொர்க்கமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 34 நிறுவனங்களிடம் 250 திட்டப்பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ரூ.80 ஆயிரம் கோடி செலவில் செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* எதிர்காலத்தில் லக்னோவில் இருந்து அயோத்திக்கு காரில் சுமார் 2 மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.
* அயோத்தியில் செய்யப்படும் வசதிகள் மற்றும் பக்தர்கள் வருகை காரணமாக அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம் கணிசமாக உயர உள்ளது.
- நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.
- பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் காமராஜ் நகர், சந்தையபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு 9 நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (கடந்த 19-ந்தேதி) இருந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்றிரவு அவரவர் வீடுகளில் இருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து ஊரின் நடுவே உள்ள பொது இடத்தில் வண்ண வண்ண கலர்களில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்ததுடன், பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை எருக்கலம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.
பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பிள்ளையாரை பாவித்து, நிலாவை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆடி, பாடி கும்மியடித்தனர்.






