search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Worshiping with Kummiyati"

    • நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.
    • பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் காமராஜ் நகர், சந்தையபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு 9 நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (கடந்த 19-ந்தேதி) இருந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்றிரவு அவரவர் வீடுகளில் இருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து ஊரின் நடுவே உள்ள பொது இடத்தில் வண்ண வண்ண கலர்களில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்ததுடன், பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை எருக்கலம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.

    பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பிள்ளையாரை பாவித்து, நிலாவை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆடி, பாடி கும்மியடித்தனர்.

    ×