என் மலர்
வழிபாடு
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
- உப்பிலிய்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-5 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி மதியம் 12.53 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.39 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீகவுரிராஜப் பெருமாள் காலை பரவாசுதேவ சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை. பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி காமதேனு வாகனத்தில் பவனி. நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலிய்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-பண்பு
மிதுனம்-நலம்
கடகம்-உறுதி
சிம்மம்-திடம்
கன்னி-சுகம்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- உயர்வு
மகரம்-அமைதி
கும்பம்-அன்பு
மீனம்-பாசம்
- வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும்.
- அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.
கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்கள் மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க கூடாது அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள லட்சுமி போய் விடுவாள் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாகும். தங்க நகை ஆபரணங்களையும் யாருக்கும் வெள்ளிக்கிழமை கடனாகத் தரக்கூடாது. சுக்கிரனுக்கும் மகாலட்சுமிக்கும் உகந்த வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
கடன் சுமை அதிகரிக்க பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை மகாலட்சுமி கடாட்சத்துடன் வைக்காமல் இருப்பதே காரணமாக இருக்கும். வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமையே பெரும்பாலும் தெய்வத்திற்கு உகந்த நாளாக அனைவரும் கடைபிடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தப்படுத்தி விரதமிருந்து தெய்வ வழிபாடுகள் செய்வார்கள்.

எல்லாக் கிழமையிலும் எல்லாவற்றையும் நாம் செய்துவிடக் கூடாது. குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் சுத்தம் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை செய்வதால் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது.
வெள்ளிக்கிழமை அன்று அடுப்புகளை துடைக்கக் கூடாது வியாழக்கிழமை இரவே துடைத்து வைத்துவிடுவது நல்லது. வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து பெண்களும் வாசலில் கோலம் போடுவர் அவ்வாறு போடும் கோலம் புள்ளி வைத்து போடக்கூடாது ரங்கோலி கோலம் போட்டாலே போதுமானது.
வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டுவதோ அல்லது கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது. தங்க ஆபரணங்களை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது. பணத்தையோ, தயிர், உப்பு, ஊறுகாய், இட்லி, தோசைக்கு அரைத்து வைத்த மாவை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று பூஜை பொருட்களை விளக்கவும் அல்லது தொடைக்கவும் கூடாது பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்வது மிகவும் நல்லது. அதே போல் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அழுக்கு துணிகளை சேர்த்து வைத்திருப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமை அன்று துவைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.
பாத்ரூம், கழிவறையையும் இந்த நாளில் சுத்தம் செய்யக்கூடாது. அதே போல் சமையலறையில் அலமாரிகளில் போடப்பட்டிருக்கும் பேப்பர்களை புதிதாக மாற்ற கூடாது. மளிகை பொருட்களை எதுவாக இருந்தாலும் அதனை துடைத்து எடுக்க கூடாது. அதை எல்லாம் மறுநாள் தாராளமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.
வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. அதேபோல் முடி வெட்டுவதும் முகசவரம் செய்வதும் கூடாது. வெள்ளி கிழமை அன்று தேவையற்ற செலவுகளை செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும். முடி, நகம் இரண்டையும் வெள்ளிக்கிழமை வெட்டக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். இந்த இரண்டுமே நம் உடலில் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது . இதனால் வெள்ளிக்கிழமை நம் உடலில் உள்ள இந்த அங்கத்தை நான் இழக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் தவிர்ப்பதன் மூலம் இருக்கின்ற கடன் பிரச்சனையையும் சுலபமாக குறைக்க முடியும்.

வெள்ளி கிழமை என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவிக்கு விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்வதால், மகா லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைகிறாள். அன்னை லட்சுமி தேவியை மகிழ்விக்க வெள்ளிக்கிழமை செய்யப்படும் சில பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அன்னை மகாலட்சுமியின் அருள் இருந்தால் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். இதனால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்பார்கள். மேலும் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். உங்கள் வீட்டில் அன்னை மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்ய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமையன்று, 5 சிவப்பு மலர்களை கையில் எடுத்து, அன்னை லட்சுமியை தியானித்து, அந்த மலர்களை பெட்டகத்திலோ அல்லது பணப்பெட்டியிலோ வைக்க பண வரவு அதிகரிக்கும்.
- திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணி நாதர் திருக்கல்யாணம்.
- பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 4 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி காலை 10.55 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம் : பூரம் இரவு 11.03 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணி நாதர் திருக்கல்யாணம். காளையார்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநரசிம்மாழ்வார் ஒன்பது கருட சேவை. பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
நாளைய ராசிபலன்
மேஷம்-ஓய்வு
ரிஷபம்-கவனம்
மிதுனம்-கடமை
கடகம்-ஆரோக்கியம்
சிம்மம்-ஜெயம்
கன்னி-நட்பு
துலாம்- அமைதி
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- கவனம்
மகரம்-முயற்சி
கும்பம்-பண்பு
மீனம்-பணிவு
- ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும்.
- திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு.
அக்னி நட்சத்திரம் நேரத்தில் எல்லா சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் நடைபெறும். அதிலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும்.
ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும். அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதியில் தாராபிஷேகம் தொடங்கப்படும். அனைத்து சிவன் கோவிலிலும் உள்ள மூலவருக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டி தொங்க விடுவார்கள். இந்த பாத்திரத்தில் பன்னீர், வெட்டிவேர், விளாமிச்சை வேர் பச்சிலை, ஜடா மஞ்சி, பன்னீர், பச்சை கற்பூரம் ஏலக்காய். ஜாதிக்காய். கடுக்காய். மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்த நீரை நிரப்புவார்கள் பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியே அருணாச்சலேஸ்வரர் லிங்கம் மீது குளிர்ச்சியான பன்னீர் சொட்டு சொட்டாக விழும்.
இந்த தாராபிஷேகம் அக்னி நட்சத்திரம் முடியும் நாளான மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அதேபோல் மற்ற சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டுவிட்டது.

அக்னி நட்சத்திரத்தை ஒட்டி வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவருக்கு தாராபிஷேகம் தொடங்கிவிட்டது தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாராபிஷேகம் நடைபெறும். இதே போல் ஏராளமான கோவில்களில் அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவனுக்கு தாராபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவனுக்கு தாராபிஷேகம் செய்வதால் கோடையின் வெயிலின் உக்கிரகம் தணிந்து ஓரளவு இதமான சூழ்நிலை ஏற்பட மேகக் கூட்டங்கள் கூடி வரும் சிவபெருமானின் அருள் கிடைக்கும். அதனால் நமக்கு அக்னி நட்சத்திரத்தின் சூட்டின் வேகம் குறையும். முதல் வாரம் அக்னி நட்சத்திரத்தில் இருக்கும். சூட்டின் வேகம் செல்ல செல்ல படிப்படியாக குறைந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும். பல நூறு ஆண்டுகளாக இந்த தாராபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறுகின்றன. அதிலும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஏனென்றால் அது அக்னி தலம் அல்லவா!

கோடையில் தாக்கம் குறைந்து போதிய மழை பெய்யும் என்பது நம்பிக்கை சில தலங்களில் தோஷ நிவர்த்தியாகவும், இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மே 28 தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்களும் தாராபிஷேகம் நடைபெறும் கோவிலில் தாராபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருளை பெறலாமே.
- வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வேல், சேவல், மயில் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. அப்போது வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி ரத வீதிகளில் தங்க மயில், தந்த பல்லக்கு, காமதேனு, ஆட்டுக்கிடா, சப்பரம், வெள்ளியானை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் வருகிற 21ந் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது.
மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது. அன்று காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் தேரேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
10 நாட்களும் பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நடனம், கிராமிய பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும்
- வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருச்சி:
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடன் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.
உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தனத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபதிற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.
வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணா பிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வசந்த உற்சவ விழாவின் 7ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.
வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சிறப்பு குருவார திருமஞ்சன சேவை.
- உத்தமர்கோவில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-3 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி காலை 9.06 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: மகம் இரவு 8.33 மணி வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். உத்தமர்கோவில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா. மதுரை ஸ்ரீ கூடலழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் பவனி. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் பெரிய ரிஷப வாகனத்திலும், அம்பாள் தபசுக் காட்சி, இரவு திருக்கல்யாணம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான கொண்டைக் கடலைச்சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சுபம்
கடகம்-தாமதம்
சிம்மம்-ஆதாயம்
கன்னி-நட்பு
துலாம்- விருப்பம்
விருச்சிகம்-உதவி
தனுசு- விவேகம்
மகரம்-கவனம்
கும்பம்-கடமை
மீனம்-பக்தி
- மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
- தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்
"மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17).
ஒரு காலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசித்து வாழ்ந்த மனிதர்கள், இன்று இயற்கையின் அழிவைக் கண்டு கலக்கம் அடைகின்றனர். சிறிது சிறிதாக பூமி தன்நிலை இழந்து மனிதர்கள் வாழத் தகுதியில்லாத சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர்கள் வாழ்ந்தாலும், நாம் வாழ்வதற்கு தகுதியான இன்னொரு இடம் உண்டு. ஒருநாள் அனைவரும் அங்கு ஒன்றுகூடி வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பு எல்லா மனிதர்களுக்குள்ளும் உள்ளது. அவ்விடம் பரலோகம், மோட்சம், சொர்க்கம் என பல பெயர்களில் பலராலும் அறியப்படுகிறது.
பரிசுத்த வேதாகமம் 'பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது' என்று கூறுகிறது. அதாவது பரலோக ராஜ்ஜியம் அருகில் இருக்கிறது அல்லது நமக்கு நெருங்கிய தூரத்தில் உள்ளது. இது குறுகிய காலத்தைக் காட்டுகிறது. எனவே சீக்கிரம் தாமதிக்காமல் மனந்திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கிறது.
'நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்' (மத்தேயு 9:13) என்று இயேசு கூறுகிறார்.
இந்த உலகில் துன்மார்க்கமாக வாழ்கிறவர்களை யாரும் விரும்புவது இல்லை. பொதுவாக எல்லா மனிதர்களுமே நல்லவர்களாக, நற்குணங் களோடு, சமுதாயத்தில் மிகுந்த மதிப்போடு, உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே விரும்புவர். ஆனால் இயேசு மட்டுமே பாவிகளை தேடி இந்த உலகிற்கு வந்தார். ஏனென்றால் அவர் பாவிகளையும் நேசிக்கிறார்.
சிலர் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு தேவைக்காக காத்திருந்து அது நிறைவேறாது போகும்போது அந்த விரக்தியினால் ஏற்படும் கவலை, பயம் போன்ற உணர்வுகளோடு வாழ்கின்றனர். சிலர் அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவறான பாதையில் செல்கின்றனர். சிலர் மதுவுக்கும், மாதுக்கும் அடிமையாகி விடுகின்றனர்.
ஆரம்பத்தில் சிறியதாக தோன்றிய பாவங்கள், பின்னர் அதில் இருந்து விடுபட நினைத்தாலும் முடியாதபடி அவர்களை அடிமைப்படுத்தி விடுகிறது. `பாவத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர நினைக்கிறேன், என்னால் முடியவில்லை' என்று பலர் கூறுவதை கேட்கலாம். இப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
பாவிகள் தங்களுடைய பாவத்திலேயே வாழ்வது அவருக்கு விருப்பம் அல்ல. அவர்கள் மனம் திரும்பி வாழ வேண்டும். மனிதன் தன் சுய முயற்சியால் பாவத்தில் இருந்து விடுபட முடியாது. ஆனால் இயேசுவிடம், 'இயேசுவே நான் பாவம் செய்யாமல் வாழ விரும்புகிறேன் எனக்கு உதவி செய்யும்' என்று அவரை அழைத்தால் அவர் நிச்சயமாக உதவி செய்வார்.
'மனம் திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. (எசேக்கியேல் 18:32).
'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்' (நீதிமொழிகள் 28:13) என வேதம் கூறுகிறது. ஆனால் யாரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்ப வேண்டும்?
'நீர் சர்வ வல்லவரிடத்தில் மனம் திரும்பினால் திரும்ப கட்டப்படுவீர்' (யோபு 22:23) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
நாம் யாரிடம் நம்முடைய பாவங்களை சொல்லுகிறோம்? யாரிடம் மனந்திரும்புகிறோம்?
நம்மில் சிலர் பாவத்திற்கு பரிகாரம் என்று புண்ணிய தலங்களுக்கு செல்வதும், தன்னை வருத்திக்கொள்வதும் உண்டு. பாவ பழக்கங்களால் இடிக்கப்பட்டு பழையதாகி போனது போன்ற நிலைமையில்உள்ள ஒருவருடைய வாழ்க்கையை திரும்ப கட்டப்பட வேண்டும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்துவிடம் தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து மனம் திரும்ப வேண்டும்.
அப்பொழுது அவனுக்கு கர்த்தருடைய கண்களில் இரக்கம் கிடைக்கும். தான் இழந்து போன தொழில், நிலம், செல்வம், சரீர சுகம் போன்ற உலக ஆசீர்வாதங்கள் மட்டுமல்லாது, அவனது ஆத்துமா மரணத்துக்கு நீங்கலாக்கி கர்த்தருடைய இரக்கத்தால் பாதுகாக்கப்படும்.
நம்முடைய மனம் குற்றமில்லாது இருக்க வேண்டும். 'மனுஷனுடைய இதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலை பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்ட தனங்களும், கபடும், காம விகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதுகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனை தீட்டுப்படுத்தும்' (மாற்கு 7:21-22) என்று இயேசு கூறினார்.
இப்படியான பாவங்கள் நம் இதயத்துக்குள் இருந்து புறப்பட்டு நம்மை தீட்டுபடுத்தாதபடிக்கு நம்மை காத்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நம்மிலும் இருக்க வேண்டும் (பிலிப்பியர் 2:5).
நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறவேண்டும். பரலோக வாழ்க்கையைக் குறித்த உணர்வு வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம்.
எனவே நாம் சர்வ வல்லவராகிய நம்முடைய கர்த்தரிடத்தில் மனந்திரும்பி சகல ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொள்வோம்.
- இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம்.
- ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம். உலக மக்களிடையே அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மார்க்கம் ஆகும்.
உலக மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அநீதியுடன் நடப்பவர்களுக்கு மறுமை உலகில் காத்திருக்கும் தண்டனைகள் குறித்தும் திருக்குர்ஆனும், நபி மொழிகளும் தெளிவாக எச்சரித்துள்ளன.
ஒரு முஸ்லிம் பிற மனிதர்களிடம் நீதியாக நடக்க வேண்டும், அநீதியாக நடக்கக் கூடாது, பிறருக்கு உதவும் மனப்பான்மை வேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றன.
இதையே திருக்குர்ஆன் (5:2) 'இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்' எனக்கூறுகிறது.
உனக்கு அநீதி இளைத்தவனுக்கு உதவிட வேண்டும் என்று உத்தரவிட்டவர் நபிகள் பெருமான். அவரது நபி மொழி இதோ:
'உனது சகோதரன், அவன் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும், அநீதி இளைத்தவனாக இருந்தாலும் சரியே அவனுக்கு நீ உதவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! பாதிக்கப்பட்டவனுக்கு உதவிபுரிவது சரி! ஆனால், அநீதி இளைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வது?' என்று கேட்டனர். 'ஆம்! அநீதி புரிந்தவனை அதில் இருந்து தடுப்பதும் அவனுக்கு செய்யப்படும் உதவியாகும்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
பாதிக்கப்பட்டவனுக்கு நீதியை பெற்றுத் தருவது எப்படி உதவியோ, அதுபோன்று பாதிப்பை ஏற்படுத்தியவனை அந்த பாவத்தில் இருந்து நல் வழிப்படுத்துவதும் உதவியே என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மாறாக அநீதி இளைப்பவனுக்கு மேலும் அவன் அநீதிக்கு துணை புரிவது, உதவி செய்வது கடும் கண்டனத்திற்குரியது என இஸ்லாம் கூறுகிறது.
'அநியாயக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகும், அவன் அநியாயத்திற்கு எவன் துணை புரிகின்றானோ அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நபிமொழி)
இந்த உலக வாழ்க்கையிலே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வியாபாரங்களில் அதிக அளவு ஏமாற்றுத்தனமும், அநீதியும் இழைக்கப்படுகிறது. இதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரித்து கண்டிக்கிறது:
"ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்.
இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் இறைவனை (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது;
இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ (நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;
ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களில் இருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;
அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை;
ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (திருக்குர்ஆன் 2:282).
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் மூலம் வியாபாரத்திலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் நாம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியலாம். இதை நமது வாழ்வில் வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நீதியுடன் நடந்து இறையருள் பெறுவோம், வாருங்கள்.
- நரசிம்ம ஜெயந்தி விரதம் இருப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும்.
- இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.
பிரம்மா தன் படைப்புக்கு உதவிபுரிய, சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு புத்திரர்களை படைத்தார். அவர்கள் பிறவியிலேயே பிரம்ம ஞானியாக இருந்ததால், இல்லறத்தில் ஈடுபடாமல் தவயோகியாக எல்லா உலகங்களும் சுற்றி வந்தனர்.
அதன்படி வைகுண்டத்திற்கும் சென்றனர். அப்பொழுது மகாவிஷ்ணுவின் பாதுகாவலர்களாக இருக்கக்கூடிய ஜெய மற்றும் விஜய என்ற இரு துவார பாலகர்களும், பிரம்மஞானிகள் நால்வரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த பிரம்ம குமாரர்கள், துவார பாலகர்கள் இருவரையும் சபித்தனர்.
வைகுண்டத்தின் உள்ளே இருந்த மகாவிஷ்ணு நடந்ததை அறிந்து பிரம்ம குமாரர்களுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரம்ம குமாரர்கள், ஜெய, விஜயர்களின் சாபத்தை போக்க எண்ணினர். மகாவிஷ்ணுவும் அதையே நினைத்தார். அவர் ஜெய, விஜயர்களை நோக்கி, "நீங்கள் பிரம்ம குமாரர்கள் சாபத்தின்படி பூலோகத்தில் பிறந்துதான் ஆக வேண்டும்.
அதே நேரத்தில் என்னிடம் பக்தி செய்து என்னை மறுபடியும் அடைய விரும்பினால், நீங்கள் ஏழு பிறவி எடுக்க வேண்டும். எனக்கு விரோதியாக பிறந்தால் மூன்று பிறவி எடுத்தால் போதும்" என்றார். ஜெய, விஜயர்கள் "நாங்கள் ஏழு பிறவி வரை காத்திருக்க விரும்பவில்லை. உங்களுக்கு விரோதியாகவே பிறந்து மூன்று பிறவிகளில் உங்களை அடைகிறோம்" என்றனர். (அவர்கள் முதலில் இரண்யாட்சன்- இரண்யகசிபு, பின்னர் ராவணன்- கும்பகர்ணன், இறுதியாக சிசுபாலன்- தந்துவர்த்தன் ஆகிய மூன்று பிறவிகளை எடுத்து இறைவனை அடைந்தனர்.)
அதே நேரத்தில் காசியப முனிவரின் மனைவியரில் ஒருவரான திதி, 'தங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லையே' என்று வருந்தினாள். ஒரு முறை ஆசிரமத்தில் காசியப முனிவர் இருந்த தருணத்தில் தனது ஆசையை அவள் வெளிப்படுத்தினாள். அப்போது காசியபர், "பெண்ணே.. இது சந்தியா காலம். இந்த நேரத்தில் புத்திர உற்பத்தி நல்லது இல்லை. இரவும் பகலும் சேரக்கூடிய இந்த பிரதோஷ வேளை, பூதங்களும், பிசாசுகளும் விரும்புகின்ற நேரம். இவ்வேளையில் சிவதரிசனம் மட்டுமே சிறந்தது. வேறு சிந்தனை கூடாது. இன்னும் ஒரு முகூர்த்தம் பொறுத்துக்கொள்" என்றார்.
ஆனால் திதி கேட்பதாக இல்லை. "இவ்வளவு காலம் பொறுத்தாகி விட்டது. புத்திர பாக்கியத்திற்காக இன்னும் தாமதிக்க எனக்கு விருப்பமில்லை" என்று கூறிவிட்டாள். 'இது விதியின் சதியே' என்ற முடிவுக்கு வந்தார், காசியப முனிவர்.
திதியை நோக்கி, "உனக்கு இரண்டு புதல்வர்கள் பிறப்பார்கள். பிரதோஷ நேரத்தில் நாம் சேர்ந்ததால், அவர்கள் ராட்சச தன்மையுடன் இருப்பார்கள். அவர்கள் இருவரும் சக்கரத்தை கையில் ஏந்திய திருமாலால் அழிவார்கள்" என்றார்.
உடனே திதி, "இத்தனை காலம் ஆன பிறகு பிறக்கும் பிள்ளைகள், அசுரர்களாகவா பிறக்க வேண்டும். நம் வம்சம் சிறக்க ஹரி பக்தியுடன் குழந்தைகள் இருக்க வேண்டாமா?" என்று கேட்டாள். அதற்கு காசியபர், "கவலைப்படாதே. உனக்கு பிறக்கும் இரு பிள்ளைகளில் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை, விஷ்ணு பக்தியுடன் விளங்குவான். சிறந்த பக்தனாகவும், நாராயண மந்திரத்தை உலகத்துக்கு எடுத்துச் சொல்லக் கூடியவனாகவும் இருப்பான்" என்றார்.
தொடர்ந்து காசியபர்- திதி தம்பதியருக்கு, இரண்யாட்சன், இரணியகசிபு ஆகிய இருவரும் பிறந்தனர். இரண்யாட்சனை மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து கொன்றார். இதை அறிந்த இரண்யகசிபு, மகாவிஷ்ணுவை வெற்றிகொள்ள கடும் தவம் செய்யத் தொடங்கினான்.
இரண்யகசிபு மந்தார மலையில் தவம் செய்த நேரத்தில், அவன் அரண்மனையில் புகுந்த இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை தூக்கிச் சென்றான். அப்போது நாரதர், "இந்திரா.. நீ இவ்வாறு செய்யக்கூடாது. இந்த பெண் கர்ப்பவதியாக இருக்கிறாள்" என்று கூறினார். அதற்கு இந்திரன், "நாரதரே.. இரணியன் எங்களுக்கு மிகுந்த தொல்லையை கொடுக்கிறான். இவனுக்கு குழந்தை பிறந்தால், இதைவிட எங்களுக்கு வேறு என்ன அபாயம் வேண்டும்" என்றான்.
அதற்கு நாரதர் "இப்பொழுது பிறக்கப் போகும் குழந்தை, சிறந்த ஹரி பக்தன். நீ அவனை அழிக்க முடியாது" என்றார். அதைக் கேட்ட இந்திரன், இரண்யகசிபுவின் மனைவியை விட்டு விட்டுச் சென்று விட்டான். நாரதர், அந்த பெண்ணை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அந்த பெண்ணுக்கு நாராயண மந்திரத்தை தொடர்ந்து கூறும்படி அறிவுறுத்தினார். அந்த பெண் சொல்வதை, கருவில் இருந்த குழந்தையும் மந்திர உபதேசமாக எடுத்துக் கொண்டது. அப்படி இறைவனின் நாமத்தைக் கேட்டு பிறந்தவர்தான், பிரகலாதன்.
இந்த நிலையில் இரண்யகசிபு செய்த கடும் தவந்தால், மூன்று உலகங்களும் தகித்தன. பூகம்பம் ஏற்பட்டது. காடுகள் தீப்பற்றி எறிந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனை சரணடைந்தனர்.
பிரம்மதேவர் உடனடியாக இரண்யகசிபு முன்பாக தோன்றினார். "உன் தவத்தை இத்துடன் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்" என்றார். அதற்கு இரண்யகசிபு, "எனக்கு மரணம் இல்லாத வரத்தை அருளுங்கள்" என்றான். "மரணமே இல்லாத வரத்தை யாருக்கும் அருள முடியாது. ஆனால் நீ வேறு விதமாக வரம் கேள், தருகிறோம்" என்றார், பிரம்மன்.
உடனே இரண்யகசிபு, "ஆணாலோ, பெண்ணாலோ, தேவர்களாலோ, அசுரர்களாலோ, உங்களால் படைக்கப்பட்ட எந்த ஒரு ஜீவராசிகளாலும் என் உயிர் போகக்கூடாது. மேலும் பூமியிலும், ஆகாயத்திலும், வீட்டின் உட்புறத்திலும், வீட்டின் வெளிப்புறத்திலும் என் உயிர் பிரியக் கூடாது.
ஆயுதங்களாலோ அல்லது விஷங்களாலோ என் உயிர் பிரியக்கூடாது" என்று பல விதமான வரங்களைக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்டபடி வரம் அருளினார். இதையடுத்து இரணியகசிபு மூன்று உலகத்தையும் வென்றான். மண்ணுலகும் விண்ணுலகும் அவன் வசமாகியது.
இரண்யகசிபு தனது குருவான சுக்ராச்சாரியாரின் புதல்வர்களாகிய சண்டன் மற்றும் அமர்க்கன் ஆகியோரிடம், பிரகலாதனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க உத்தரவிட்டான். பிரகலாதனுக்கு பல வித்தைகளை அவர்கள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தனர். பிரகலாதனுக்கு குருகுல வாசம் ஆரம்பமாகியது. சில காலம் சென்ற பிறகு இரண்ய கசிபு, குருகுலத்திற்கு வந்து பிரகலாதனிடம் "என்ன கற்றாய்?" என கேட்டான். தன் பிள்ளை 'தன்னைவிட மேலான சக்தி உலகத்தில் எதுவும் இல்லை. தானே மிகப் பெரிய சக்தி, பிரம்மம்' என்று கூறி புகழ்வான் என்று நினைத்தான்.
ஆனால் பிரகலாதனோ "தந்தையே.. இந்த ஜென்மத்தில் மோட்சம் அடைய ஒரே வழி, ஹரி பக்தி மட்டுமே" எனக் கூறினான். இதைக்கேட்ட இரண்யகசிபு கடும் கோபம் கொண்டு ஆசிரியர்களை நோக்கி, "நீங்கள் என்ன சொல்லிக் கொடுத்தீர்கள். இவன் என்ன சொல்கிறான்" என்று கடுமையாக கேட்டான்.
பின்னர் தன் மகனிடம் திரும்பி, 'என் விரோதியான விஷ்ணுவை புகழ்பவன், மகனாயினும் தண்டிக்கத்தக்கவன்' என கூறி, கடலில் தூக்கிப்போட்டான். ஆனால் அதில் இருந்து பிரகலாதன் மீண்டு வந்தான். பின்னர் ஆயுதங்களால் தாக்கச் சொன்னான். யானையை விட்டு மிதிக்கச் சொன்னான். விஷம் அருந்தக் கொடுத்தான். அனைத்திலும் இருந்து மீண்ட பிரகலாதன், 'எமன் அறியாமல் உயிர் போகாது. விஷ்ணுவே பரம்பொருள்' என்று நிரூபித்தான்.
இனிமேலும் பிரகலாதனை தண்டிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட இரண்யகசிபு, நேரடியாக விஷ்ணுவுடன் மோத முடிவு செய்தான். தேவர்களால் மரணம் நேராது என்ற வரத்தை நினைத்துக் கொண்டான். பின்னர் பிரகலாதனை நோக்கி, "உன் விஷ்ணுவை எனக்கு காட்டு. அவனிடம் நான் யுத்தம் செய்கிறேன்" என்றான்.
"மரியாதைக்குரிய எனது தெய்வமான விஷ்ணு பகவான், நீங்கள் நினைப்பது போல் ஓரிடத்தில் மட்டுமே இருப்பவர் அல்ல.. அவர் எங்கும் நிறைந்திருப்பவர்" என்றான், பிரகலாதன். அப்போது இரண்யகசிபு அங்கிருந்த ஒரு தூணைக் காட்டி "இந்த தூணில் உன் ஹரி இருக்கிறானா?" என்றான். அதற்கு பிரகலாதன் "நிச்சயம் இருப்பார்" என்று பதிலளித்தான். உடனே இரண்யகசிபு, தன் வலிமையான கதாயுதத்தைக் கொண்டு அந்தத் தூணை பிளந்தான். அப்போது அதன் உள்ளே இருந்து, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்மர் தோன்றினார்.

நரசிம்மர் இரண்யகசிபுவுடன் கடுமையான யுத்தம் செய்தார். பின்னர் அவர் பெற்ற வரத்தின்படியே, இரவும் இல்லாமல், பகலும் இல்லாத பிரதோஷ வேளையில், வீட்டில் உள்ளேயும், வெளியேயும் இல்லாமல் வாசல் படியின் மேல், ஆகாயத்திலும் இல்லாமல், பூமியிலும் இல்லாமல் தன் மடியின் மேல் வைத்து, ஆயுதங்கள் இல்லாமல் தன் கை நகங்களால் அவனை வதம் செய்தார்.
இரண்யகசிபு வதம் முடிந்த பிறகு லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்து, பிரகலாதனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார் நரசிம்மர். அதற்கு பிரகலாதன், "என் தந்தை தவம் செய்து பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தி, தங்களால் வதம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு மோட்சம் வழங்க வேண்டும்" என்றான்.
அதற்கு நரசிம்மர், "நீ என் மீது பக்தி கொண்டு பிறந்த காரணத்தினால், உன் தந்தைக்கு மட்டுமல்ல.. உனக்குப் பின் வரக்கூடிய 21 தலைமுறையினர் உன்னால் மோட்சம் அடையப் போகிறார்கள்" என்றார்.
நரசிம்ம ஜெயந்தி அன்று விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் நீங்கும். செய்வினை, ஏவல் போன்ற பிரச்சினை அகலும். இன்பங்களை நரசிம்மர் வாரி வழங்குவார்.
- சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும்.
- ஆறு நதிகளுக்கு நடுவே சவுந்தரராஜப் பெருமாள், சவுந்தரவல்லி தாயாருடன் எழுந்தருகிறார்.
சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும். 'சவுந்தரம்' என்றாலும் அழகு என்றே பொருள்படும். அப்படி சுந்தரனாக, பெருமாள் வீற்றிருக்கும் ஓர் அற்புத தலம்தான், பாபநாசம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில். ஆதியில் இந்த திருத்தலம் சுந்தர வனம் என்றும், சமீவனம் (வன்னி மரக்காடு) என்றும் போற்றப்பட்டுள்ளது.
பஞ்ச நதிகள் என்று போற்றப்படும் காவிரியாறு, அரசலாறு, குடமுருட்டியாறு, திருமலைராஜன் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆறு ஆகிய ஆறு நதிகளுக்கு நடுவே சவுந்தரவல்லி தாயாருடன் எழுந்தருள் புரிகின்றார் சவுந்தரராஜப் பெருமாள்.
ஒரு சமயம் இந்திரனுக்கு சாபத்தால் வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. அதோடு, தனது இந்திர பதவியையும் இழந்தான். சாதாரண மானிடனாக மாறி, இப்பூவுலகை அடைந்தான். விமோசனம் வேண்டி அலைந்து திரிந்தான். பின் இச்சுந்தரவனத்தை அடைந்த இந்திரன், நாரதரின் தரிசனம் கிடைக்கப்பெற்றான்.
அவர் இந்திரனுக்கு '360 வெண் பூசணிக்காய்களை தினமும் ஒரு அந்தணர் வீதம் 360 அந்தணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வெண்குஷ்ட நோய் நீங்கும்' என்று ஆலோசனை கூறினார்.
அதன்படி வெண்பூசணிக்காயை தினமும் ஓர் அந்தணர் வீதம் கொடுத்து வந்தான் இந்திரன். ஒருநாள் அந்தணர் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை. பல இடங்களில் தேடியும் அந்தணர் ஒருவரும் அகப்படவில்லை. மிகவும் மனம் வருந்தினான் இந்திரன். நாராயணரை வேண்டி நின்றான்.
மனமிறங்கிய மலையப்ப சுவாமி, ஓர் ஏழை அந்தணராக இந்திரன் முன் வந்து நின்றார். மனம் மகிழ்ந்த இந்திரன், அவருக்கு வெண்பூசணியை தானம் செய்தான். என்னே ஆச்சரியம்? உடனடியாக இந்திரன் வெண்குஷ்ட நோய் நீங்கப்பெற்று, பழைய நிலையை அடைந்தான். திருமாலும் தனது அந்தண ரூபத்தை மாற்றிக்கொண்டு, பன்னீர் மரத்தடியில் சவுந்தரவல்லி தாயாருடன் சவுந்தரராஜ பெருமாளாக, சுந்தர ரூபத்தில் காட்சி அருளினார்.
ஊரின் உட்புறம் உயரிய மதில்கள் கொண்டு, ஏழு கலசங்களுடனான ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்தவாறு கம்பீரமாக காணப்படுகிறது, ஆலயம். கணபதி ராஜகோபுரத்தின் கீழே வடக்கு முகமாக காட்சி தருகிறார். வெளிப் புறத்தில் நந்தவனம் அமைக்கப்பட்டு, மிகவும் ரம்மியமாக உள்ளது. தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. நேராக பலிபீடமும், துளசி மாடமும் உள்ளன. பின் கருடாழ்வார் கரம்குவித்தபடி நிற்கிறார்.
இதைடுத்து சிற்ப வேலைகளுடன் முக மண்டபம் உள்ளது. அடுத்ததாக இரண்டாம் வாசலும், அதன் மேலே சிறிய மூன்று நிலை கோபுரமும் காணப்படுகிறது. அதன் உள்ளே நான்கு கால் மண்டபம், இடது புறம் கொலு மண்டபம் உள்ளன. வலப்புறம் விஷ்வக்ஷேனர் சன்னிதி உள்ளது. பக்கத்தில் யோகநரசிம்மர், கிருஷ்ணர் மற்றும் அனுமன் சன்னிதிகள் உள்ளன. தொடர்ந்து ஆழ்வார்களிள் தரிசனம் தருகின்றனர்.
மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அமைப்பில் பெருமாள் சன்னிதி அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி - பூதேவியர்களுடன் சவுந்தரராஜப் பெருமாள் அழகே வடிவாய் அருட்காட்சி தருகிறார்.
மும்மூர்த்தி தலமாகத் திகழும் இப்பதியில் வடக்கு முகமாக பிரம்மாவும், தென்முகமாக ருத்ரரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்கு பின்புறம் சூரியனும், சந்திரனும் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். தேஜோமயராய், அதிரூப சுந்தரனாய்த் திகழும் இப்பெருமாளை முப்பத்து முக்கோடி தேவர்களும், 41 ஆயிரம் ரிஷிகளும் மலர் தூவி வணங்கி நிற்பதாக ஐதீகம். தினமும் சூரிய ஒளியானது பெருமாள் மீது படர்வது ஓர் தனிச்சிறப்பாகும்.
பெருமாள் சன்னிதிக்கு வலது புறம் சவுந்தரவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இடதுபுறம் ஆண்டாள் சன்னிதி அமைந்துள்ளது. வெளிப்புறம் தென்முகமாக சிறிய வடிவில், அழகர்கோவிலில் காட்சி தருவது போல் பதினெட்டாம்படி கருப்பர் வீற்றிருக்கிறார். இவரிடம் எவ்வித வேண்டுதல் வைத்தாலும் விரைவில் நடந்திடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்த ஆலயம் சோழர்களின் கலைப் பொக்கிஷமாக திகழ்கிறது. மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரம் அன்று, இத்தல பெருமாளுக்கு திருமஞ்சன சேவை நடக்கிறது. நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய வருடாந்திர விசேடங்கள் மட்டுமே இங்கு அனுசரிக்கப்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் தினமும் காலை 6 மணிமுதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாபநாசத்திற்கு அருகே 2 கிலோமீட்டர் தொலைவிலும் சுந்தரவனம் என்ற இவ்வாலயம் உள்ளது.
- அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
- காஞ்சீபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-2 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி காலை 7.40 மணி வரை
பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: ஆயில்யம் மாலை 6.12 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் காலை பூச்சப்பரத்திலும், சுவாமி அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் புறப்பாடு. அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் பவனி. காஞ்சீபுரம் குமரக்கோட்டம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவரிராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-உதவி
கடகம்-பாசம்
சிம்மம்-நற்செயல்
கன்னி-பாராட்டு
துலாம்- சிந்தனை
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்-நலம்
கும்பம்-பயணம்
மீனம்-கீர்த்தி






