என் மலர்
வழிபாடு
- பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம்.
- மதுரை ஸ்ரீ கூடலழகர் யானை வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-8 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி இரவு 6.08 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: சித்திரை காலை 6.23 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருக்கண்ணபுரம் ஸ்ரீ கவுரிராஜப் பெருமாள் காலை வாமன அவதாரம். பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம். மாயூரம் ஸ்ரீ மாயூரநாதர்,திருவாடானை ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர், நயினார் கோவில் ஸ்ரீ நாகநாதர், திருப்பத்தூர் ஸ்ரீ திருத்தணிநாதர், திருப்புகழூர் ஸ்ரீ அக்னீஸ்வரர், உத்தமர் கோவில் ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் கோவில்களில் தேரோட்டம். மதுரை ஸ்ரீ கூடலழகர் யானை வாகனத்தில் பவனி. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-வரவு
கடகம்-உயர்வு
சிம்மம்-நன்மை
கன்னி-சுகம்
துலாம்- பெருமை
விருச்சிகம்-நலம்
தனுசு- கீர்த்தி
மகரம்-உழைப்பு
கும்பம்-உதவி
மீனம்-பணிவு
- காளையார்கோவில் ஸ்ரீ சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-7 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி மாலை 4.40 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : சித்திரை (முழுவதும்)
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம். இரவு யானை வாகனத்தில் பவனி. காளையார்கோவில் ஸ்ரீ சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள் வைரச் சப்பரத்தில் பவனி. திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-யோகம்
ரிஷபம்-பெருமை
மிதுனம்-மேன்மை
கடகம்-ஆக்கம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-கடமை
துலாம்- அமைதி
விருச்சிகம்-கவனம்
தனுசு- நிம்மதி
மகரம்-பக்தி
கும்பம்-நன்மை
மீனம்-வெற்றி
- 23-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது.
- பவுர்ணமியன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேங்கிகால்:
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேரம் வருகிற 22-ந் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 23-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.
சமீபகாலமாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதோடு, தற்போது கோடை விடுமுறை என்பதால், வரும் பவுர்ணமியன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருக்கிறது.
- வைகாசி விழாவையொட்டி மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
- தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை:
சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விசாகத் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விழாவையொட்டி மங்கள கிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
பின்னர் சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வ யானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, நாக வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்தி புறப்பாடும், நேற்று யானை புறப்பாடும் நடந்தது.
இந்த நிலையில் பிரம் மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.
காலை 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு ஒய்யாவி உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகாசி விசாகமான 22-ந்தேதி காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், கலசாபி ஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது.
வருகிற 23-ந்தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. அதன் பின்னர், வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள், 24-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை நடை பெறுகிறது.
இதையொட்டி தினமும் மாலையில் பரத நாட்டியம், இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை செற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
#WATCH | Chennai, Tamil Nadu: On the occasion of 'Vaikasi Visakam Festival' chariot procession was held in Vadapalani Murugan Temple
— ANI (@ANI) May 19, 2024
'Vaikasi Visakam' is a 10 day grand festival in which each day different processions would be held. Today as a part of the event, chariot… pic.twitter.com/fNf2inZaEA
- நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம் நடை பெற்றுவந்தது. விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் (சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசர், திருநாவுக்கரசர் ) புஷ்ப பல்லக்கு வீதியுலா கடந்த 13-ந் தேதி இரவு நடை பெற்றது. தொடர்ந்து 17-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா(தங்க ரிஷப வாகன காட்சி), சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. முதல்தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகப்பெருமானும், 3-வது தேரில் சென்ப கத்தியாகராஜ சுவாமியும், 4-வது தேரில் நீலோத்பா லாம்பாளும், 5-வதுதேரில் சண்டிகேஸ்வரும் வரிசையாக கொண்டு செல்லப் பட்டது. காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், தொகுதி எம்.எல்.ஏ.சிவா, பா. ஜனதா மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
20-ந் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும், 21-ந் தேதி தெப்போற்சவமும் நடை பெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் தலைமையில் ஊழி யர்கள் செய்து வருகின்றனர்.
- ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக கடந்த 14-ந் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப் பட்டுள்ளதால், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் சகஸ்ர கலச சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சபரிமலையில் மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்த படியே காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வைகாசி மாத பூஜை நிறைவையொட்டி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.
- தினமும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது.
- வருகிற 21- ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் 14- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. 18- ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமி மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது.
வருகிற 21- ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகிழ்ச்சியாக தேரோட்ட விழா வருகிற 22- ந்தேதி நடைபெறுகிறது. அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று நிலையை அடையும்.
அன்று இரவு தீர்த்தவாரி அவரோகணம், 25- ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- துவாதசி அதிகாலை பாரணை செய்தால் திருமாலின் திருவருளைப்பெறலாம்.
- இன்று ஏகாதசி விரதத்தில் அரிசி முதலிய தானியங்களை உண்ணக்கூடாது.
இன்று வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினமாகும். தசமி நாளான மதியம் முதல் ஏகாதசி உபவாசம் இருந்து, துவாதசி அதிகாலை பாரணை செய்தால் திருமாலின் திருவருளைப்பெறலாம். நாளைய ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். இதை கடைப்பிடித்தால் எத்தகைய பாவ விளைவுகளில் இருந்தும் விடுபட்டு விட முடியும். சீதையைப் பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், "ராமா! வருகின்ற வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேறும். பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேருவாள்" என்று அறிவுறுத்தினார். அதை ஏற்று ஸ்ரீ ராமபிரானே, முறையாக, ஏகாதசி விரதம் இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு.
இன்று ஏகாதசி விரதத்தில் அரிசி முதலிய தானியங்களை உண்ணக்கூடாது . முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கஞ்சி, பால், பழம் அல்லது உடைக் கப்பட்ட அரிசியினால் செய்யப்பட்ட உப்புமா போன்றவற்றை சாப்பிடலாம். பெருமாளின் நாம சங்கீர்த் தனத்தைப் பாடலாம். மிக முக்கியமாக துவாதசி பாரணையின்போது வாழை இலை, வாழைக்காய் போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
- காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் தேரோட்டம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-6 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி பிற்பகல் 2.53 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : அஸ்தம் நாளை விடியற்காலை 4.09 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
நாளை சுப முகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு. திருப்புகழூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் சகோபுரசகித வெள்ளி விருஷப சேவை. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப்பெருமான் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-பரிவு
சிம்மம்-ஓய்வு
கன்னி-சிந்தனை
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-வரவு
தனுசு- சாதனை
மகரம்-உண்மை
கும்பம்-வரவு
மீனம்-பயணம்
- வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.
திருச்செந்தூர்:
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.
விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.
23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.
மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
- வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம், நிதி மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க நாம் சில விசயங்களை செய்தால் தோஷங்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.
வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.
பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.
- இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
- மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் சனிக்கிழமையில் இந்த விரதத்தை தொடங்கலாம். இந்த விரதம் 11 வாரம் முதல் 51 வாரங்கள் வரை கடைப்பிடித்தால் அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை. நவக்கிரகங்களில், சனிபகவானை 'ஆயுள்காரகன்' என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.
இந்த சனிக்கிழமை விரதத்தை அனுசரிப்பவர்கள், காலையில் எழுந்து புனித நீராடி கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் உடையணிந்து கொள்ளலாம். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு. பூஜையின்போது கருமையை ஒட்டிய மலர்கள், எள்ளு, கருப்பு வஸ்திரம் ஆகியவற்றை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த அரிசியையும் வைக்கலாம்.

இந்த பூஜையை அனுசரிக்கும் பக்தர்கள், அனுமன் அல்லது பைரவர் கோவிலுக்குச் செல்லலாம். ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் உணவை உட்கொள்ளலாம். பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால், சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிக்கலாம்.






