என் மலர்
ஆன்மிகம்
- கடகம் அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம்.
- மீனம் எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம்.
மேஷம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் 3,6ம் அதிபதி புதனுடன் இணைந்து உள்ளார். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். கணவன் மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயரும். 7ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் திருமணத் தடை அகலும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். பவுர்ணமி அன்று திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.
ரிஷபம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் சூரியன் நீச்ச பங்கு ராஜயோகம் பெறுகிறார். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும். பார்த்துச் சென்றவரனிடம் இருந்து சாதகமான பதில் வரும்.திருமண முயற்சி சாதகமாகும். விவாகரத்து வழக்குகள் ஒத்திப் போகும். நிதானமும், நம்பிக்கையும் அனைத்து இன்னல்களிலும் இருந்து உங்களை காப்பாற்றும். குடும்ப பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். பவுர்ணமி அன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.
மிதுனம்
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 6-ம்மிடமான ருண,ரோக,சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாயுடன் ராசி அதிபதி புதன் சேர்ந்து நிற்பது சுபித்துச் செல்லக்கூடிய பலன் அல்ல. பங்குச் சந்தை வர்த்தகத்தை தவிர்க்கவும். குடும்ப உறவுகளுக்கு நண்பர்களுக்கு ஜாமின் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். வீடு, வாகன முயற்சி சித்திக்கும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். தாய்வழிச் சொத்து தேடி வரும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் சொந்த பந்தங்களின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். காதல் திருமணம் கைகூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும்.கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.
கடகம்
அமோகமான மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசிக்கு 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது.உயர் கல்வியில் இருந்த தடை தாமதங்கள் விலகும்.உபரி வருமானம் கிடைப்பதால் தாராளமாக செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பங்குச் சந்தை ஆதாயமும் சேமிப்பும் அதிகரிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். வேலையில் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழில் அல்லது சுய தொழில் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். பழைய பாக்கிகள்இ வசூலாகும். குலதெய்வத்திடம் ஒரு முக்கிய கோரிக்கை வைப்பீர்கள். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் வாரிசு உருவாகும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. பொதுக் காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் கூடும். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும்.பவுர்ணமி அன்று குல தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். அஷ்டமச் சனி உள்ளதால் வியாபாரம் சார்ந்த விசயத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும்.முதலீட்டாளர்களுக்கு வெளியூர், வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் வாக்கு சாதுர்யத்தால் லாபம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வராக்கடன் வசூலாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும்.சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். திருமண வயதினருக்கு காலதாமதத் திருமணம் நல்லது. 4.11.2025 அன்று பகல் 12.34 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை விவாதங்களைத் தவிர்த்து விடாமுயற்சி, வைராக்கியத்துடன் செயல்பட வேண்டும்.பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி
வெற்றிகரமான வாரம்.ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார்.ஆட்சி பலம் பெறும் சுக்கிரனால் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த குடும்ப உறவுகள் உங்களை புரிந்து கொள்வார்கள். சில திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் முடிவில் வெற்றி வாகை சூடுவீர்கள். நீச்ச பங்க ராஜயோக சூரியனால் அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு. விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும்.காலி மனை வியாபாரிகளுக்கு நல்ல ஆதாயம் உண்டு. இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும்.அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு பயன்படுத்துவீர்கள். 4.11.2025 அன்று பகல் 12.34 முதல் 6.11.2025 பகல் 11.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. காவல் தெய்வங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சுப பலன்களும் உண்டாகும்.
துலாம்
சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரம். ராசியில் ஆட்சி பலம் பெற்ற சுக்கிரனுடன் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சூரியன் சஞ்சரிக்கிறார்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.மன அமைதி கூடும். வளர்ச்சிக்கான பாதை தென்படும்.முக்கிய தேவைகளுக்கு பண வரவு இருக்கும்.விரும்பிய கடன் தொகை கிடைக்கும்.குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் குறையும். உடன் பிறந்த வர்கள் உதவியாக இருப்பார்கள்.பாகப்பிரி வினை சுமுகமாகும். கலைத் துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும்,கவுரவமும் கிடைக்கும். பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உதயமாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 6.11.2025 பகல் 11.47 முதல் 8.11.2025 பகல் 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நெருங்கிய நண்பர்கள் உறவுகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அதனால், தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாட்டை தவிர்க்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆத்ம பலம் கூடும்.
விருச்சிகம்
கற்பனைகள், கனவுகள் நனவாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 8,11ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்.பணபர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். வீடு, மனை, திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். 8.11.2025 அன்று பகல் 11.14 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அக்கம் பக்கத்தினரின் தீய பார்வை யால் ஆரோக்கியம் குறையும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.
தனுசு
முன்னேற்றமான மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசியை சனி பகவான் பார்க்கிறார். அஷ்டமஸ் தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குரு பகவான் சனி பகவானை பார்க்கிறார். வியாபாரத்தில் எதிர் பார்க்கும் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உழைப் பிற்கேற்ற ஊதியம் உண்டு. தொழிலில் ஏற்படும் போட்டியை சமாளிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு சாத்தியமுண்டு. இரண்டாவது திருமண முயற்சி கைகூடும். அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். . பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் நன்மைகள் உண்டு.மாணவர்கள் ஆர்வமாக படிப்பார்கள். தான தர்மங்கள் செய்வ தால் நிம்மதி அதிகமாகும். பெண்க ளுக்கு சொத்துக்கள் மற்றும் சொந்தங்க ளால் மகிழ்ச்சி கூடும். தடைபட்ட புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பங்குச் சந்தை முதலீடு லாபம் தரும்.ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் நீங்கும். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.
மகரம்
இடப்பெயர்ச்சி பற்றிய சிந்தனை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் பார்வை உள்ளது. வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும்.அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணியில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாங்கும் போது முக்கிய பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். கலைத் துறையினருக்குப் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். தாய்வழிச் சொத்தில் இளைய சகோதரத்தால் ஆதாயம் உண்டு. இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.வருமானம் மகிழ்ச்சியை தரும் விதத்தில் இருக்கும்.ஆஞ்சநேயர் வழிபாட்டால் இன்னல்கள் அகலும்.
கும்பம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றியில் முடியும் வாரம்.ராசியில் உள்ள ராகுவை 3,10ம் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். எந்த ஒரு செயலும் தொடங்கும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு கிடைக்கும் வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் படிப்படியாக குறையும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள்.அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றிய முடிவு எடுக்க சாதகமான காலம்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயோதிகர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வெகு நாட்களாக தாமதப்பட்ட பணிகள் இந்த வாரம் சாதகமாகும். அனைத்து பாக்கியங்களும் தேடி வரும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள்.போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சிறிய தொகை கடன் வாங்க நேரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும்.சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதால் நன்மைகள் கூடும்.
மீனம்
எதிர்பாராத பணவரவு உண்டாகும் வாரம். 3, 8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம்.பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலக பணிச் சுமை அதிகரிக்கும். இடமாற்றம்,வீடு மாற்றம்,வாகன மாற்றம் போன்றவை ஏற்படலாம். ராசிக்கு குருப்பார்வை இருப்பதால் வெற்றி நிச்சயம்.மனத் தடுமாற்றம் இருக்காது.குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். தியானம்,யோகா போன்ற ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்.பிரதோஷ வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
ரிஷபம்
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மிதுனம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
கடகம்
அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தொல்லை உண்டு.
சிம்மம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். நினைத்த காரியம் தாமதப்படும். விரயங்கள் உண்டு.
கன்னி
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவு கைக்கு கிடைக்கலாம். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
யோகமான நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
விருச்சிகம்
நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி புதியவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
தனுசு
காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
மகரம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவராணம் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
கும்பம்
பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். நீண்ட தூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். எண்ணம் மேலோங்கும்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-16 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி நள்ளிரவு 1.43 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : பூரட்டாதி பிற்பகல் 2.04 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் நூபுர கங்கைக்கு எழுந்தருளிய காட்சி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அன்பு
ரிஷபம்-பாசம்
மிதுனம்-நலம்
கடகம்-உயர்வு
சிம்மம்-ஆக்கம்
கன்னி-மேன்மை
துலாம்- வரவு
விருச்சிகம்-முயற்சி
தனுசு- நிறைவு
மகரம்-தெளிவு
கும்பம்-புகழ்
மீனம்-சாந்தம்
- 108 ஸ்தாபன கலச அபிஷேகம் என 48 வகையான பொருட்களை கொண்டு பேரபிஷேகம் நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி பெருவுடையாரை வழிபட்டனர்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் 1040-வது சதய விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சதய விழாவை முன்னிட்டு காலை பெருவுடையாருக்கு விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், திரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், நெய், பசும்பால், தயிர், மாதுளை முத்து, பிலாச்சுளை, அன்னாச்சி, திராட்சை பழம், சொர்ணாபிஷேகம், 108 ஸ்தாபன கலச அபிஷேகம் என 48 வகையான பொருட்களை கொண்டு பேரபிஷேகம் நடைபெற்றது. பின்னர், வண்ண, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி பெருவுடையாரை வழிபட்டனர். தொடர்ந்து, மாலை பெருவுடையார்-பெரியநாயகி உருவ செப்பு திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில், மாமன்னர் ராஜராஜ சோழன், பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகள் மற்றும் ராஜேந்திரசோழன் திருமேனி ஆகியவை தங்க கிரீடத்துடன் வீதிஉலா நடைபெறுகிறது.
- மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐப்பசி மாத பவுர்ணமி வருகிற 4-ந் தேதி இரவு 9.43 மணிக்கு தொடங்கி 5-ந் தேதி இரவு 7.27 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் நின்று கொண்டு விபூதி பூசி, பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்வது போன்று பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மிதுனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
கடகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இயலாது. தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிம்மம்
யோகமான நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். சொத்துகளால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
கன்னி
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணங்களால் கையிருப்பு கரையலாம்.
துலாம்
நன்மைகள் நடைபெறும் நாள். புதிய திட்டமொன்றை செயல்படுத்த முற்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மேலதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பர். உணவில் கட்டுப்பாடு தேவை.
மகரம்
செலவுகள் கூடும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
கும்பம்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். உறவினர்களின் சந்திப்பு உண்டு.
மீனம்
விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-15 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி பின்னிரவு 3.18 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : சதயம் பிற்பகல் 2.47 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : அமிர்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சர்வ ஏகாதசி, ஸ்ரீரங்கம், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்
இன்று சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. 1040-வது ராஜ ராஜ சோழன் சதய திருவிழா. பேயாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மார்வார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-நலம்
மிதுனம்-சுகம்
கடகம்-அமைதி
சிம்மம்-ஆர்வம்
கன்னி-சுபம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- ஆக்கம்
மகரம்-பெருமை
கும்பம்-நிறைவு
மீனம்-உவகை
- மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே இருப்பது சபரிமலையின் தனிச்சிறப்பாகும்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
இதனால் நவம்பர் 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். தினமும் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்யலாம்.
சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த முறை அமல்படுத்தப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் (உடனடி முன்பதிவு) மூலமாக 20 ஆயிரம் பேர் என தினமும் 90 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது.
பக்தர்கள் தாங்கள் சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய தினத்தை தேர்வு செய்து, கேட்கக்கூடிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ததற்கான அனுமதி சீட்டு புக்கிங் செய்யக்கூடிய இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.
ஆன்லைன் முன்பதிவுக்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.3லட்சம் இன்சூரன்சு வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. ஆனால் இது கட்டாயமில்லை எனவும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டணதை செலுத்தலாம். அதற்கு தகுந்தாற்போல் ஆன்லைன் முன்பதிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
- அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார்.
- துளசீஸ்வரரை துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
செங்கல்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது துளசீஸ்வரர் கோவில். பொதுவாக சிவன் கோவில்களில், சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் இக்கோவிலின் தனிச் சிறப்பாக சிவபெருமானுக்கு துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
கயிலாயத்தில் சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றது. இதைக் காண தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் குவிந்தனர். இதனால் பூமியின் வடக்கு பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தது. இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்திசை நோக்கி செல்ல பணித்தார், சிவபெருமான். அதன்படி, கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு வந்த அகத்தியர், வரும் வழிகளில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் இக்கோவிலில் உள்ள சிவலிங்கம்.
அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார். ஆனால் இப்பகுதி முழுவதும் துளசியால் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது சிவன் அசரீரியாக, ''நான் இங்குதான் துளசி செடிகள் சூழ மறைந்திருக்கிறேன்'' என்றார். இதையடுத்து சிவனின் குரல் கேட்ட இடத்திற்கு சென்றபோது அங்கு ஒரு சிவலிங்கம் தென்பட்டது. பிறகு, அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பூஜை செய்ய இப்பகுதியில் வேறு எந்த மலரும் கிடைக்காததால், அகத்தியர் துளசி இலைகளை கொண்டே அர்ச்சனை செய்தார். சிவபெருமானும் அகத்தியரின் பூஜையை ஏற்றுக்கொண்டு, சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.
சுமார் 900 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான், லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அமர்ந்து, சற்று திரும்பி ஈசான்ய மூலையை பார்த்து காணப்படுகிறார். துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால் இவர், 'துளசீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் திருநாமம், 'வில்வநாயகி' என்பதாகும். இவர் ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள துளசீஸ்வரரை துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தவர்கள், திங்கட்கிழமை அன்று இத்தல ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபடலாம்.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் வழியில் திருக்கச்சூர் எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள கொளத்தூரில் இக்கோவில் அமைந்துள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பணநெருக்கடி அகலும் நாள். குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.
ரிஷபம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்
விரயங்கள் ஏற்படும் நாள். வீடு மாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது.
கடகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும்.
சிம்மம்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கன்னி
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
துலாம்
புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.
விருச்சிகம்
தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். பழைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.
மகரம்
அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
கும்பம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.
மீனம்
சந்தர்ப்பங்கள் சாதமாக அமையும் நாள். சகோதரர்கள் ஆதரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் உண்டு.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-14 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி மறுநாள் விடியற்காலை 4.31 மணி வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம் : அவிட்டம் பிற்பகல் 3.03 மணி வரை. பிறகு சதயம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுருந்தளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா. பூதத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.
பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பாள் கோவில்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-யோகம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-நட்பு
கடகம்-ஆதரவு
சிம்மம்-ஆக்கம்
கன்னி-நிம்மதி
துலாம்- லாபம்
விருச்சிகம்-இன்பம்
தனுசு- நற்செயல்
மகரம்-உற்சாகம்
கும்பம்-திறமை
மீனம்-சாந்தம்
- திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும்
- கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூரிர் சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் இரண்டாம் படைவீடாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும், முருகனிடம் முன் வைத்த வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கலியுகத்திலும் பல அதிசயங்களை பக்தர்களின் வாழ்வில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் நடத்தி வருவதால் இங்கு வருடத்தின் அனைத்து நாட்களும் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது.
திருச்செந்தூரில் உள்ள மிக முக்கியமான இடம், கோவிலுக்கு எதிரில் உள்ள நாழிக்கிணறு. இங்கு நீராடினாலே நம்முடைய பாவங்கள், துன்பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் கோவிலுக்கு தெற்கு புறம் உள்ள நாழிக்கிணற்றில் நீராடி விட்டு, பிறகு கடலில் சென்று நீராடி விட்டு, முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். ஆரம்பத்தில் கோவிலை சுற்றி 24 தீர்த்தங்கள் இருந்ததாகவும், பிறகு மணலால் மற்ற தீர்த்தங்கள் மூடப்பட்டு விட்டதாகவும், தற்போது நாழிக்கிணறு மட்டுமே இங்கு உள்ளதாகவும் தல புராணம் சொல்கிறது.
இந்த நாழிக்கிணற்றிற்கு, கந்த தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. அதாவது முருகப் பெருமான் தன்னுடைய திருக்கை வேலால் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு சதுரடி பரப்பும், 7 அடி ஆழமும் கொண்ட இந்த தீர்த்தம் பெரிய கிணற்றுக்குள் ஒரு சிறிய கிணறு இருப்பது போன்ற அமைப்பில் இருக்கும்.
கடலுக்கு மிக அருகிலேயே இருந்தும் இந்த தீர்த்தத்தின் தண்ணீர் உப்புக்கரிப்பது கிடையாது. மிகவும் சுவை தன்மை கொண்டதாகவும், எந்த காலத்திலும் வற்றாமலும் இருக்கும் இந்த தீர்த்தம் மிகப் பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இந்த கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்நிலையில் திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்கீழ் நாழிக்கிணறு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.






