என் மலர்
ஆன்மிகம்
- சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கன் இலைக்கு உண்டு.
- நாம் அளிக்கும் பச்சரிசியை ஒரு எறும்பு சாப்பிட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும்.
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி.
சூரிய பகவான் தனது 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி திருப்பிப் பயணத்தைத் தொடங்கும் புனித நாளே 'ரத சப்தமி'. தை மாத வளர்பிறை சப்தமி திதியில் கொண்டாடப்படும் இந்த நாள், சூரிய பகவானின் பிறந்த நாளாகவும் (சூரிய ஜெயந்தி) போற்றப்படுகிறது.
இந்த ஆண்டு ரத சப்தமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. சப்தமி திதி நாளை அதிகாலை 12:39 மணிக்கு தொடங்கி இரவு 11:10 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அதிகாலை 4:56 முதல் 6:36-க்குள் புனித நீராடுவது நல்லது.
ரத சப்தமி அன்று மிக முக்கியமான வழிபாடு 'எருக்கன் இலை' வைத்து நீராடுவது ஆகும். ஆண்கள் 7 எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் விபூதி வைத்து நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்து நீராட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் கடந்த 7 ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும், தீராத நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும் என்பதும் ஐதீகம். அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். அர்க்கன் இலை என்பதே மருவி எருக்கன் இலை என மாறிவிட்டது.
சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கன் இலைக்கு உண்டு. சூரிய கதிர்களில் உள்ள நல்ல சக்திகளை உடலுக்குள் செலுத்தும். தீபாவளியன்று நீராடுவது எவ்வளவு விசேஷமானதாக கருதப்படுகிறதோ அதேபோல, ரத சப்தமி நீராடலும் முக்கியமானது.
ரத சப்தமி அன்று வாசலில் சூரிய ரதம் போன்ற கோலமிட்டு, அதன் நடுவில் சூரிய-சந்திரர்களை வரைய வேண்டும். சூரிய ஒளிபடும் இடத்தில் புதுப்பானையில் பால் பொங்க வைத்து, சர்க்கரைப் பொங்கல் மற்றும் உளுந்து வடை நிவேதனம் செய்வது சிறப்பு.
இந்த உலகில் தோன்றிய பழமையான வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன்.
சிவனும் நாராயணனும் சூரிய வடிவிலே துதிக்கப்படுவது வழக்கம். தெய்வங்களில் நாராயணனைப் போன்று சங்கு சக்கரம் தரித்தவர் சூரியபகவான். 7 குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன.
சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் 7 வண்ணங்களே 7 குதிரை களாகச் சொல்லப்படுகின்றன. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட வேண்டும்.
சூரிய பகவான் நாராயணனின் அம்சமாகவும் இருப்பதால் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணமும் செய்வது நன்மையைத் தரும். சூரியன் ஆரோக்கியத்துக்கு உரிய கிரகம். சூரியனை வழிபடுவதன்மூலம் அவரின் அருளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
ரத சப்தமி அன்று சூரியனுக்கு ஒரு எளிய பரிகாரத்தை செய்வதால் வாழ்க்கையில் அளவில்லாத மாற்றங்களை பெற முடியும். அதன்படி ரத சப்தமி அன்று ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் சிறிதளவு பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை எடுத்துச் சென்று, வெள்ளை எருக்கம் செடிக்கு ஊற்ற வேண்டும்.
"ஓம் ஸ்ரீசிவசூரிய நாராயண சுவாமியே நமஹ" என்ற மந்திரத்தை 3 முறை சொல்லி அந்த தண்ணீரை வெள்ளை எருக்கம் செடிக்கு ஊற்ற வேண்டும். மிக எளிமையான இந்த பரிகாரத்தை செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் பெரியவர்கள்.
நகரத்தில் இருப்பவர்கள் வெள்ளை எருக்கம் செடியை கண்டுபிடிக்க முடியாது. அதனால் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் சிறிதளவு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து, மனிதர்கள் கால்படாத இடமாக பார்த்து தூவி விடலாம்.
நாம் அளிக்கும் பச்சரிசியை ஒரு எறும்பு சாப்பிட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும் என்பார்கள். அதனால் பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்களையும், சூரிய பகவானின் அருளையும் பெறுவதற்கு எறும்புகளுக்கு பச்சரிசி மாவை சாப்பிட கொடுப்பது நல்லது.
ரத சப்தமியன்று துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதும், இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. ஜோதிட ரீதியாக தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர் லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
தலைமைப் பொறுப்புகளைப் பெற வேண்டி வழிபடக்கூடிய முக்கியமான கடவுள் சூரிய பகவான். அரசு வேலையில் உயர் பதவி வேண்டுவோர், பதவி தொடர்பாக தடைகள் உள்ளவர்கள், வழக்குகளில் வெற்றி வேண்டுபவர்கள் ரத சப்தமி விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுவது நன்மை தருவதாகும்.
கோவில்களில் நவகிரக சன்னதியில் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். ரத சப்தமி அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
- கோவில் நுழைவுவாசலில் கொடி மரம், மயில் வாகனம் ஆகியவை அமைந்திருக்கின்றன.
- பங்குனி உத்திரம் மற்றும் கந்தகஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
சென்னை மடிப்பாக்கத்தில் கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். ஒரு சமயத்தில் இந்த பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள், அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில் தான் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. முதலில் இங்கு விநாயகர் மட்டுமே அருள்பாலித்து வந்தார். அதன்பிறகு, முருகப்பெருமானுக்கு சன்னிதி கட்டினர்.
கோவில் நுழைவுவாசலில் கொடி மரம், மயில் வாகனம் ஆகியவை அமைந்திருக்கின்றன. கருவறையில் வள்ளி-தெய்வானை சமேதராக அருள்பாலிக்கும் கல்யாண கந்தசுவாமியை தரிசிக்க ஆறு படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இந்த ஆறு படிகளும், 'சரவணபவ' எனும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரத்தை நினைவுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படிகளுக்கு படி பூஜையும் நடத்தப்படுகிறது.
கோவில் பிரகாரத்திற்கு தெற்கு பகுதியில் கருணை கணபதியும், வடக்கு பகுதியில் அங்காரகனும் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெய துர்க்கையும் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்கள். ராமர், சீதா தேவி, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேசுவரர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் நவக்கிரகங்களுக்கும் தனிச் சன்னிதி உண்டு.
இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கு 'தில பத்ம தானம்' எனும் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. 'தில' என்றால் எள் என்றும், 'பத்ம' என்றால் தாமரை என்றும் பொருள்படும். அதாவது செவ்வாய்க்கிழமை அன்று, இத்தல அங்காரகனுக்கு எள்ளையும், தாமரையும் சமர்ப்பித்து மனமுருக வழிபாடு செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரம் மற்றும் கந்தகஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அப்போது, முருகப்பெருமான் அணிந்திருக்கும் மாலையை திருமணமாகாதவர்கள் வாங்கி அணிந்து கொண்டால் விரைவில் திருமணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே தான் இத்தல முருகன், 'கல்யாண கந்தசுவாமி' எனப் போற்றப்படுகிறார்.
- ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு.
- சூரியனுக்கு உகந்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.
ரத சப்தமி என்பது இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். அமாவாசைக்குப் பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். தை அமாவாசைக்குப் பிறகு வரும் சப்தமி திதி 'ரத சப்தமி' என்று அழைக்கப்படுகிறது. இது சூரியன் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளை 'சூரிய ஜெயந்தி' என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டால் பலவிதமான நன்மைகளை பெறலாம்.
காஷ்யப முனிவரின் மனைவியர்களில் ஒருவர் அதிதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சமயத்தில், கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டின் வெளியே ஒரு அந்தணர், "மிகவும் பசியாக இருக்கிறது. உணவு இருந்தால் கொடுங்கள்" என்று யாசகம் கேட்டு நின்றார். நிறைமாத கர்ப்பிணி என்பதால் கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு, மெதுவாக உணவு எடுத்து வந்து யாசகரிடம் கொடுத்தார்.
அப்போது கோபம் அடைந்த யாசகர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? என்னை அவமானம் செய்துவிட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபமிட்டார். இதனால் பயந்து போன அதிதி, இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். அவரோ, "கவலைப்படாதே, நமக்கு தேவலோகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் கிடைப்பான்" என்று கூறினார். அதன்படி, அதிதிக்கு மகனாக பிரகாசமான ஒளியுடன் சூரியன் பிறந்தார். இந்த தினமே 'ரத சப்தமி' ஆகும்.
இந்த ஆண்டு ரத சப்தமி மார்கழி மாதம் 11-ம் நாள் (25-1-2026) நாளை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவர், சூரிய பகவான். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபாடு செய்வதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். சூரியனுக்கு உகந்ததாக எருக்கம் இலை உள்ளது. ரத சப்தமி அன்று, ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராட வேண்டும். இதனால் ஆரோக்கியமும், செல்வ வளமும் உண்டாகும் என்கிறார்கள்.

ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் இருந்தால் அடுத்து வரும் பிறவிகளில் முன்னேற்றங்கள் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த நாளில் தியானம், யோகா செய்வது சிறந்தது.
ரத சப்தமியில் சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் இருந்தால் செல்வந்தராக உயர்வார்கள் என்கின்றது புராணம். அன்றைய தினம் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சூரியனாருக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது சிறப்பு.

அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை வணங்க வேண்டும். அதன்பின் சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். சூரியனுக்கு உகந்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல். எனவே சூரிய பகவானுக்கு பொங்கல் நைவேத்தியம் படைத்து, பின்பு அதை பிறருக்கு கொடுப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது வழக்கம்.
திருமாலின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பெருமான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளையும், குறையாத ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர்.
சூரிய பகவானை ரத சப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, 'ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!' என்று சொல்லி வணங்கலாம். சூரியனை பொங்கல் அன்றும், ரத சப்தமி நாளிலும் மட்டும் வணங்காமல் தினமும் வழிபட்டு வாழ்வில் தீவினை என்னும் இருள் விலகி, நன்மை என்னும் ஒளி பரவ செய்வோம்.
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் அதிகரித்து காணப்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் நாளை நடைபெறும் மினி பிரமோற்சவம் எனும் ரத சப்தமியில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.
காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் தரிசனத்திற்காக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் கடும் குளிர் வீசுவதால் வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 69,726 பேர் தரிசனம் செய்தனர். 27,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- மூங்கில் செடிகளை குளியலறை அல்லது கழிப்பறைக்கு அருகில் வைக்கக்கூடாது.
- மூங்கில் செடி நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வைப்பதற்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் பல செடி மற்றும் மரங்கள் உள்ளன. இவைகள் வைத்தால் நேர்மறை ஆற்றல் பரவும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், பலர் தங்கள் வீடுகளிலும் மூங்கில் செடிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் மூங்கில் செடிகளை வீட்டில் வைக்கலாமா, இல்லையா? அப்படி வைத்தால் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்...
வீட்டில் மூங்கில் நடுதல்
இந்து மதத்தில், மூங்கிலை குடும்ப வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வேதங்கள் மூங்கிலை மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாக விவரிக்கின்றன. வீட்டில் ஒரு மூங்கில் செடியை வைத்திருப்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. வாஸ்துவின் படி, இந்த செடியை வீட்டில் நடுவது சுற்றியுள்ள சூழலில் இருந்து எதிர்மறையை நீக்கி நேர்மறை ஆற்றலை வளர்க்கிறது.
சரியான திசையில்
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, மூங்கில் செடியை சரியான திசையிலும் இடத்திலும் வைப்பது மிகவும் முக்கியம். தவறான இடத்தில் நடுவது நல்ல பலன்களை விட மோசமான பலன்களையே தரும்.

மூங்கில் எங்கே வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வரவேற்பறையிலோ அல்லது அறையிலோ ஒரு மூங்கில் செடியை வைக்கலாம். அவ்வாறு செய்வது குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு பரிமாறவும், வீட்டுப் பிரச்சனைகளைப் போக்கவும் உதவுகிறது.
நேர்மறை ஆற்றல்
நீங்கள் ஒரு மூங்கில் செடியை சரியான இடத்தில் வைத்தால், அது உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதோடு, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவரும்.
சிறந்த திசை
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் கிழக்கு திசையில் மூங்கில் செடியை நடுவது சிறந்தது. அடுத்தபடியாக, வடக்கு திசையிலும் மூங்கில் செடியை நடலாம்.
தவறான திசை
வாஸ்து சாஸ்திரத்தின்படி, மூங்கில் செடிகளை குளியலறை அல்லது கழிப்பறைக்கு அருகில் வைக்கக்கூடாது. மேலும், சமையலறையிலும் வைக்கக்கூடாது.
நன்மைகள்
வீட்டில் மூங்கில் செடியை வைத்திருப்பது நிதி நிலைமையை வலுப்படுத்துவதோடு தேவையற்ற செலவுகளையும் குறைக்க உதவும். இந்த செடி குடும்ப உறுப்பினர்களின் மூடிய அதிர்ஷ்டங்களுக்கு கதவுகளைத் திறக்கும். இது வணிக வளர்ச்சிக்கான புதிய வழிகளையும் திறந்து வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டுவருகிறது. மூங்கில் செடி நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
- வளர்பிறை சஷ்டி விரதம்.
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-10 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி இரவு 11.14 மணி வரை பஞ்சமி
நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 1.19 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சஷ்டி விரதம், ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று வளர்பிறை சஷ்டி விரதம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கலிகம்ப நாயனார் குரு பூஜை. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-பக்தி
மிதுனம்-பாராட்டு
கடகம்-கவனம்
சிம்மம்-நற்செயல்
கன்னி-லாபம்
துலாம்- தாமதம்
விருச்சிகம்-வரவு
தனுசு- ஆதாயம்
மகரம்-இரக்கம்
கும்பம்-நன்மை
மீனம்-பொறுமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். சேமிப்பை உயர்த்த முயற்சி எடுப்பீர்கள்.
கடகம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். சமூகத்தில் உங்கள் மதிப்பும். மரியாதையும் உயரும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும் சூழல் ஏற்படும்.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். செயலில் வேகம் காட்ட வேண்டாம். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வரவைவிட செலவு கூடும்.
கன்னி
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். வெளியூர்களில் இருந்து அலைபேசி வாயிலாக நல்ல செய்திகள் வந்துசேரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
துலாம்
தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.
விருச்சிகம்
யோகமான நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும்
தனுசு
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடன் இருப்பவரிடம் கவனம் தேவை.
மகரம்
நீண்ட நாளைய கனவு நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம்
எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லையே என நினைப்பீர்கள்.
மீனம்
குடும்பச் சுமை கூடும் நாள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமான பற்றாக்குறை அகலும்.
- பிரம்மதேவர், “நான் தான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா" என்றார்.
- சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இத்தல மூலவரான முருகப்பெருமான் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி பாடியுள்ளார்.
தல வரலாறு
ஒரு முறை கயிலாயத்துக்கு வந்த பிரம்மதேவர், சிறுவனாக இருந்த முருகப்பெருமானை கவனிக்காமல் சென்றார். அப்போது பிரம்மாவை அழைத்த முருகப்பெருமான், "நீங்கள் யார்?" எனக் கேட்டார். அதற்கு பிரம்மதேவர், "நான் தான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா" என்றார். பிரம்மதேவரின் அகந்தையை அழிக்க நினைத்த முருகப்பெருமான், படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் கேட்டார். பிரம்மதேவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழிக்க, முருகப்பெருமான் அவரை சிறை வைத்தார்.
பிரம்மதேவரிடம் கேள்வி கேட்டபோது, அதிகாரத் தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக்கொண்டிருக்கும் தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சி தந்தார். அதே அமைப்பில் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
ஒரு சமயம் முருக பக்தர் ஒருவர் தல யாத்திரையாக இத்தலம் வந்தார். அவர் இங்கு தீர்த்த நீராட எண்ணி, இங்கிருந்த ஆண்டிகளிடம், "இங்கே நீராடும் இடம் எங்கே உள்ளது?" என்று கேட்டார்.
அதற்கு ஆண்டிகள், "அப்படி இந்த ஆலயத்தில் தீர்த்தம் எதுவும் கிடையாது" என்று பதிலளித்தனர்.
அப்போது அங்கு ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்த முருகப்பெருமான், தீர்த்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்வதாகக் கூறி ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார்.
பின்பு, குறிப்பிட்ட இடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார், முருகப்பெருமான். உடனே, அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடி குளமாக மாறியது. அதுவே இத்தலத்தில் 'வேலாயுத தீர்த்தம்' என்ற பெயரில் உள்ளது. அந்த பக்தர் ஆச்சரியத்தில் திகைத்தவாறே தீர்த்தத்தில் நீராடினார். பின்பு முருகப்பெருமான், பக்தருக்கு தன் சுயரூப காட்சியை கொடுத்து அருளினார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கிறார்.
முருகப்பெருமான், ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ஆண்டியார்குப்பம்' என்று அழைக்கப்பட்டது. பின்பு அதுவே மருவி, 'ஆண்டார்குப்பம்' என்றானது.
கோவில் அமைப்பு
கோவிலில் மூலவரான முருகப் பெருமான், தன்னுடைய கரங்களில் வேல், வஜ்ரம், சக்தி என எந்தவித ஆயுதமும் இன்றி, இடுப்பில் கரங் களை வைத்தபடி காட்சி தருகிறார். இறைவன் அதிகார தோரணையில் இருப்பதால் 'அதிகார முருகன்' என்றும் அழைக்கப்படுகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
மூலவர் சன்னிதிக்கு எதிரில் பிரம்மதேவர், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மாவுக்கு உரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை போன்றவை மட்டும் காணப்படுகிறது. கோவில் முன்மண்டபத்தில் காசி விசுவ நாதர், விசாலாட்சி, நடராஜர் சன்னிதிகளும் உள்ளன. இங் குள்ள விநாயகர், 'வரசித்தி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
வழிபாடு
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பொறுப்பான பதவிகள் கிடைக்கவும், அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்கவும், புத்திசாலித்தனமான பிள்ளைகள் பிறக்கவும் வழிபாடு செய்கிறார்கள்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருமணமாகாதவர்கள் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமியை தொடர்ச்சியாக 6 வாரம் வணங்கினால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
அமைவிடம்
திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
- வசந்த பஞ்சமி.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-9 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி நள்ளிரவு 12.51 மணி வரை பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : பூரட்டாதி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று வசந்த பஞ்சமி. காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் உற்சவம் ஆரம்பம். கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு, கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம். மாலை ஊஞ்சல் சேவை. திருமாலிருஞ்சோலை. ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடராமண சுவாமிக்கு திருமஞ்சனம் பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர். படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பாலாபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-சுபம்
மிதுனம்-ஆக்கம்
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-வளமை
கன்னி-நன்மை
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- பாராட்டு
மகரம்-பாசம்
கும்பம்-விருத்தி
மீனம்-பரிசு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
ரிஷபம்
மனதில் நினைத்தது மறுநிமிடமே செயலாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
மிதுனம்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அலுவலக பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
கடகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பி எதையும் செய்ய இயலாது. தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி தாமதப்படும்.
சிம்மம்
ஒவ்வாத உணவுகளை உட்கொண்டதன் மூலம் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
கன்னி
சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படையும் நாள். சொந்த பந்தங்கள் தொடர்பான விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மருத்துவ செலவு உண்டு.
துலாம்
சேமிப்பு கரையும் நாள். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.
விருச்சிகம்
தொட்ட காரியங்கள் துளிர்விடும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். புகழ்மிக்கவர்களைச் சந்தித்து பேசும் வாய்ப்பு உண்டு.
தனுசு
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சகோதர வழியில் சுபச்செய்தி ஒன்று வந்து சேரும்.
மகரம்
உற்சாகத்தோடு செயல்படும் நாள். ஆன்மிக ஈடுபாடு மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறப்புகளின் உதவி உண்டு.
கும்பம்
விவாதங்களில் வெற்றி பெறும் நாள். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உறவினர்கள் வழியில் அன்புத் தொல்லை உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- பிரம்மனின் படைப்புகள் அனைத்திற்கும் ஓசை நயம் கிடைத்தன.
- மேற்கு வங்காளத்தில், வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
கல்வி, ஞானம், கலைகளின் கடவுளாக கருதப்படும் சரஸ்வதி தேவியின் அவதார நாளையே 'வசந்த பஞ்சமி' என்று போற்றுகிறோம். எனவே இது சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டால் கல்வி, ஞானம், கலைகள், இசை போன்ற துறைகளில் சிறந்து விளங்கலாம்.
மாதந்தோறும் இரண்டு முறை பஞ்சமி திதி வந்தாலும், ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமியை 'கருட பஞ்சமி' என்றும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமியை 'ரிஷி பஞ்சமி' என்றும் வழிபடுவார்கள்.
அதுபோலவே தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதியை 'வசந்த பஞ்சமி' என்று போற்றும் வழக்கம் உள்ளது. வசந்த பஞ்சமி வழிபாடு தமிழ்நாட்டில் மிகக்குறைவு என்றாலும், வட மாநிலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரஸ்வதியை வழிபடும் தினமாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உள்ளது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்களில்தான் சரஸ்வதியை போற்றி கொண்டாடுவார்கள். ஆனால் வடநாட்டில் இந்த நவராத்திரி நாட்களில் துர்க்கையை விதவிதமாக அலங்கரித்து வழிபாடு செய்வார்கள். அதேநேரம் வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதியை வழிபடுகிறார்கள். இந்த வசந்த பஞ்சமியானது, முன் காலத்தில் 'காமன் பண்டிகை' என்ற பெயரில் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அண்ட சராசரங்களையும், அதில் பல்வேறு உயிரினங்களையும் படைத்த பிரம்மனுக்கு, தன் படைப்பின் மீது முழுமையான திருப்தி ஏற்படவில்லை. காரணம், உலகம் ஒலிகள் இன்றி நிசப்தமாக இருந்தது. இது பிரம்மனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது அவரது கையில் இருந்த கமண்டலத்தில் இருந்து சில துளி நீர் கீழே சிந்தியது. அதில் இருந்து ஒரு பெண் சக்தி வெளிப்பட்டது. அந்த சக்தியானவள், தனது கையில் சுவடிகளையும், ஸ்படிக மாலையையும் தாங்கி, வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்ட நிலையில் வெண் தாமரை மீது அமர்ந்திருந்தாள்.
அந்த பெண் சக்தி, தன்னுடைய மடியில் வீணை ஒன்றையும் வைத்திருந்தாள். அந்த வீணையை தன்னுடைய மென் கரங்களால் மீட்டத் தொடங்க, அதில் இருந்து தெய்வீக இசை வெளிப்பட்டது. இதன் மூலமாக, பிரம்மனின் படைப்புகள் அனைத்திற்கும் ஓசை நயம் கிடைத்தன. நதிகள் சலசலத்தன. மரங்கள் அசைந்து காற்றுடன் ஓசையை உண்டாக்கின. கடல் பேரிரைச்சலுடன் அலைகளை வெளிப்படுத்தின. உயிரினங்கள் சத்தமிட்டன. இப்படி பிரபஞ்சம் முழுவதும் ஒலியை நாதமாகக் கொண்டதாக மாறியது.
இதைக் கண்ட பிரம்மதேவர் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பெண் சக்தியை பலவிதமாக போற்றினார். அந்தப் பெண்ணை தன்னுடைய நாக்கில் இருத்திக் கொண்டார். அவளுக்கு 'சரஸ்வதி' என்று பெயரிட்டார். அந்த தினமே 'வசந்த பஞ்சமி' என்று கருதப்படுகிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.
பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் வசந்த பஞ்சமி அன்று நடைபெறும் சரஸ்வதி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மேற்கு வங்காளத்தில், வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
வசந்த பஞ்சமி தினத்தில் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்தும், மஞ்சள் நிற மலர் மாலை சூட்டியும், லட்டு போன்ற மஞ்சள் நிற நைவேத்தியங்கள் படைத்தும் வழிபடுகிறார்கள். பூஜையில் வைக்கப்படும் பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள்.
பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப் பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே, அனைத்திலும் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு அறியாமை மற்றும் சோம்பல் நீங்கி, அறிவும், தெளிவும் பெற்று சிறந்த வாழ்க்கை வாழ்வோம்.
- பூஜை செய்யும்போது, அம்மனுக்கு பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்கிறார்கள்.
- திருமணம் விரைவில் நடைபெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
கடலூர் மாவட்டம் எழுமேடு எனும் ஊரில் அமைந்துள்ளது, பச்சைவாழியம்மன் கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில் அருள் பாலிக்கும் அம்மன், 'பச்சைவாழியம்மன்' என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.
புராணங்களின்படி, பச்சைப் பசேலென காட்சி அளிக்கும் வயல்வெளிகள் சூழ்ந்திருந்த இந்த ஊரையும், இங்கு வசிக்கும் மக்களையும் காப்பதற்கு ஒரு பச்சை மரத்தின் மீது அம்மன் குடியமர்ந்தார். இந்த தகவலை ஊர் பெரியவர் ஒருவரின் கனவில் வந்து அம்மன் அருளினார்.
விடிந்ததும், இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. இதைக் கேள்விப்பட்ட மக்கள் மெய்சிலிர்த்தனர். பின்பு, அம்மனுக்கு கோவில் எழுப்பி, பச்சை நிற மேனியாக அம்மன் திருமேனியை பிரதிஷ்டை செய்தனர்.
இந்த ஆலயத்தில் எப்போதுமே அம்மனுக்கு பச்சை நிற சேலையே அணிவிக்கிறார்கள். பக்தர்களும் காணிக்கையாக பச்சை நிற புடவையை செலுத்துகின்றனர். பச்சைவாழியம்மன் இந்த கிராமத்தின் காவல் தெய்வ விளங்குகின்றாள்.
எனவே, பூஜை செய்யும்போது, அம்மனுக்கு பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்கிறார்கள். இது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.
கோவில் பிரகாரத்தில் கொடிமரம், குதிரை வாகனம் மற்றும் கருப்பண்ணசாமி சன்னிதி காணப்படுகிறது. இந்த கோவிலை சுற்றியுள்ள ஊர் மக்கள், தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு முன்பாக இக்கோவிலுக்கு வந்து அம்மனின் உத்தரவை கேட்டுச் செல்கின்றனர்.
அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலை சாற்றி, செய்யப்போகும் காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். அப்போது, எலுமிச்சம் பழம் கீழே விழுந்தால் அந்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமணம் விரைவில் நடைபெறவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவர், பச்சை நிற புடவை சாற்றி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
எழுமேடு பச்சைவாழியம்மன் ஆலயம், கடலூர் - பண்ருட்டி சாலையில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.






