என் மலர்
அமெரிக்கா
- காசாவுக்கு கப்பல் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுசென்றார்.
- அவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.
வாஷிங்டன்:
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் (22).
உலக நாடுகளுக்கு சுற்றி வந்து சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசுபாடு, புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சென்றார். அவருடன் பல நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.
அப்போது இஸ்ரேல் ராணுவத்தால் இடைமறித்து சிறைவைக்கப்பட்டு சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இதுதொடர்பாக கிரெட்டா தன்பெர்க் சுவீடனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் ராணுவம் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது என தெரிவித்தார். இதனை இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் கிரெட்டாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர், "கிரெட்டா தன்பெர்க் ஒரு பைத்தியம்போல செயல்படுகிறார். எப்போதும் மூர்க்கமாக உள்ளார். அவர் நல்ல ஒரு மனநல டாக்டரை பார்க்க வேண்டும்" என பரிந்துரைத்துள்ளார்.
- பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது.
- இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
காசா போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்: இஸ்ரேல் - ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.
இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போர் நிறுத்த திட்டத்தை இருதரப்பும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் நடந்து வருகின்றன. மேலும் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன். நேரம் மிகவும் முக்கியமானது. இதில் விரைவாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்து விடும்" என்று கூறியுள்ளார்.
- இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை எகிப்தில் இன்று நடக்க உள்ளது.
- அதிபர் ட்ரம்ப் அறிவித்த 20 அம்ச திட்டத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார்.
ஆனால் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன் திங்கட்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.
- அமெரிக்க அணி 5-0 என்ற கணக்கில் இந்தியா அணியை வீழ்த்தியது.
- ரசிகர்ளை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் செக்மேட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடைபெற்ற இப்போட்டியல் இந்தியா- அமெரிக்கா மோதியது.
இதில், அமெரிக்க அணி 5-0 என்ற கணக்கில் இந்தியா அணியை வீழ்த்தியது.
நேற்றைய கடைசி ஆட்டத்தில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா, இந்திய கிராண்ட் மாஸ்டரான உலக சாம்பியன் குகேஷ் டோமராஜுவை தோற்கடித்தார்.
இதையடுத்து, ஹிகாரு நாகமுரா, குகேஷின் கையில் இருந்த KING-ஐ பிடிங்கி அங்கிருந்த கூட்டத்தின் மீது விசிறியடித்தார். பின்னர், ரசிகர்ளை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்தார்.
அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நாகமுரா ஹிகாருவின் செயலை கண்டு குகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
- ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
- பணய கைதிகள் விடுதலைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயரிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளையும், உயிரிழந்த கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்தது.
அமைதி திட்டத்தில் உள்ள மற்ற சில அம்சங்கள் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விளைவதாகவும் ஹமாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகளும், உயிரற்ற 26 இஸ்ரேல் கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான பணய கைதிகள் விடுதலைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் காசா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்துமான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு டிரம்ப் கட்டளையிட்டார்.
இந்நிலையில், காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், பணயக்கைதிகள் விடுதலை செய்ய ஒப்புக்கொண்ட ஹமாஸ் அமைப்பு, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்றும், மேலும் தாமதம் ஆகுவதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- டல்லாஸ் மாகாணத்தில் எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்தார்.
- பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.
வாஷிங்டன்:
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.
நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே, பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இச்சம்பவம் தெலுங்கானாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.
இந்நிலையில், இந்திய மாணவர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த ஹூஸ்டன் இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தது.
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
- இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ள கோள்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டு புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கோளுக்கு 'சா 1107 - 7626' என்று பெயர் சூட்டினார்கள். வழக்கமாக ஒரு கோள் என்பது ஏதாவது ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும்.
நாம் வாழும் பூமி எனப்படும் கோளானது, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
மேலும், இந்த கோளானது வளி மண்டலத்தில் தூசு மற்றும் மற்ற பொருட்களின் மோதல்கள் காரணமாகவோ அல்லது அந்த பொருட்கள் ஒன்றாக இணைவதன் மூலமாகவோ உருவாகவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கோளானது கிடைத்த பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வருகிறது. இப்படி அனைத்து பொருட்களையும் விழுங்கும் வகையில் இந்த கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கோள் ஒவ்வொரு வினாடியும் தனது சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் தூசி மற்றும் வாயு பொருட்களை விழுங்கி வருகிறது. இந்த கோள் விழுங்கும் பொருட்களின் அளவு மற்றும் வேகம் ஆகியவற்றை இதுவரை பார்த்ததில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக, நட்சத்திரங்களை சுற்றும் கோள்கள் மட்டுமே இதுபோன்று பொருட்களை தனக்குள் சேர்த்து வளர்ச்சி அடையும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கருதினார்கள்.
ஆனால் விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வளர்வதை பார்ப்பது இதுதான் முதல் முறை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த 'சா 1107 - 7626 ' கோளின் தீவிர வளர்ச்சியானது, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப்பது போலவே அதன் காந்தபுலத்தால் தூண்டப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய கோளின் நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- குடியுரிமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்வதாகும்.
- ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற உண்மை ஒன்றுதான் அந்த உரிமையை வழங்குகிறது
அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்து அதிபர் டிரம்ப் நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் கீழ் நீதிமன்றங்கள் பல டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்தன.
இந்நிலையில் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு பாஸ்டனில் உள்ள ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருப்போருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமையை வழங்குவதை அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய முடியாது
குடியுரிமை என்பது ஒரு குழந்தையை பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்வதாகும்.
ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற உண்மை ஒன்றுதான் அந்த உரிமையை வழங்குகிறது என கூறி கீழமை நீதிமன்றம் டிரம்ப் உத்தரவுக்கு விதித்த தடையை உறுதி செய்தது.
அமெரிக்க சட்டம், 14வது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகளும், உயிரற்ற 26 இஸ்ரேல் கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
- அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
கடந்த திங்களன்று இஸ்ரேல் இந்த அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹாமாஸ் ஞாயிற்றுக் கிழமைக்குள் முடிவெடுக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயரிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளையும், உயிரிழந்த கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்தது.
அமைதி திட்டத்தில் உள்ள மற்ற சில அம்சங்கள் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விளைவதாகவும் ஹமாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகளும், உயிரற்ற 26 இஸ்ரேல் கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான பணய கைதிகள் விடுதலைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் காசா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்துமான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு டிரம்ப் கட்டளையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அவரின் சொந்த சமூக வலைதள பதவில், ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்.
இஸ்ரேல் காசா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும்!
இப்போது, தாக்குதல் நடத்துவது மிகவும் ஆபத்தானது. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இது காசாவைப் பற்றியது மட்டுமல்ல, மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அமைதியைப் பற்றியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா சென்றார்.
- அவரை வெள்ளை மாளிகை வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார். அவரை வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப், நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இதற்கு நேதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது
காசா அமைதி திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று வெளியிட்ட ட்ரூத் சோசியல் பக்கத்தில் கூறியதாவது:
ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (5-ம் தேதி) மாலை 6 மணிக்குள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் அதில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒன்று அமைதி ஏற்படும். இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.
- எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.
- இதனால் 11000 அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பாராசூட் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. இதனால் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் அங்கு குவிவது வழக்கம்.
இந்நிலையில் மிட்செல் டீக்கின் (25) என்ற இளைஞர் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அந்த பாராசூட் திடீரென செயலிழந்தது.
இதனால் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் அவரது பயிற்றுவிப்பாளருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் விமானம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
- இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் 2 டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
நேற்று இரவு லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
இந்த செயல்பாட்டில், இரண்டாவது விமானத்தின் இறக்கை முதல் விமானத்தின் மூக்கில் பலமாக மோதியது. இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.
விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் ஒரு விமான பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






