என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அளிக்கிறது.

    இதற்கிடையே கிறிஸ்து மஸ் நாளான நேற்று உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் எரிசக்தி கட்ட மைப்புகளை குறிவைத்து 78 ஏவுகணைகள், 106 டிரோன்கள் மூலம் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.


    இதில் 59 ஏவுகணைகளையும் 54 டிரோன்களையும் உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. 52 டிரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இத்தாக்கு தலுக்கு ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலை கண்டிக்கிறேன். குளிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரத்தை துண்டிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான் தெளிவாக சொல்கிறேன். உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.

    ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும். உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷியாவின் படைகளுக்கு எதிராக, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    • கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்ததாக மேரி மில்பென் கூறியுள்ளார்.
    • கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன என்றார்.

    வாஷிங்டன்:

    உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்திய கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    இந்நிலையில், ஆப்பிரிக்க-அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் தனது வாழ்த்துகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பாடகி மேரி மில்பென் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் மிகப்பெரிய பரிசாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எனது ரட்சகராகிய கிறிஸ்துவை கவுரவம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்தன. இந்தியாவில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, பாடகி மேரி மில்பென்னுக்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கையில், கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டியது அவசியம் என பதிவிட்டார்.

    • 8 நாள் பயணமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பட்டார்கள்.
    • அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியிருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சாண்டா தொப்பிகளுடன் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். நாசா வெளியிட்ட வீடியோவில் சுனிதா வில்லியம்ஸ் சிவப்பு சட்டை அணிந்திருப்பதையும், மற்ற மூவர் சாண்டா தொப்பியை அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

    இந்நிலையில் இந்த வீடியோ இணைய வாசிகளிடையே பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 8 நாள் பயணமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள், தொழிநுட்ப பழுது காரணமாக பல மாதங்களாக அங்கேயே சிக்கியுள்ளனர்.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்தான் மீண்டும் அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா கூறி வருகிறது. எனவே 8 நாள் பயணத்துக்கு திட்டமிட்ட நாசா அவர்கள் விண்வெளியில் சிக்குவார்கள் என்று தெரிந்தே டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ்-க்கு தேவையான அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.

    இதற்கு பதிலளித்துள்ள நாசா நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று டன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என்றும், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பிற அலங்காரங்கள் மற்றும் பரிசுகள் வீரர்களுக்கு அனுப்பப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த தொகுப்பில் வான்கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், பிஸ்கட் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன. இது தவிர, சில பணி சார்ந்த மற்றும் தொழிநுட்ப்ப பொருட்களும் அவர்களுக்கு இதில் அனுப்பி வைக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளது.

    முன்னதாக நிலவில் முதலில் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது ரஷியா மற்றும் உலக நாடுகளை ஏமாற்ற ஒரு அறைக்குள் வைத்து அமெரிக்க அரங்கேற்றிய நாடகம் என்ற ஒரு கண்ணோட்டமும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் தற் போதைய அதிபர் ஜோபைடன் அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளில் 37 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். ஜோபைடன் நமது நாட்டில் மிக மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை குறைத்து உள்ளார்.

    ஒவ்வொருவரின் செயல்களை கேட்டால் அவர் ஏன் இதை செய்தார் என நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். எந்த அர்த்தமும் இல்லை. உறவினர்கள், நண்பர்கள் கூட இதனை நம்பமாட்டார்கள். நான் பதவிக்கு வந்தவுடன் மீண்டும் மரண தண்டனையை கொடுக்க வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.
    • தொழில்நுட்ப கோளாறு சரியானதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவையை தொடங்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.

    விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானங்கள் நாடு முழுவதும் தரையிறக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சுமார் 2மணி நேரத்துக்கு பின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் மீண்டும் சேவையை தொடங்கின.

    • கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது வெளிப்பட்டது
    • 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.

    உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்துமுடிந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வெற்றி பெற்று ஜோ பைடன் அதிபர் பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்திய - ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.

    இரு கட்சி ஆட்சி முறை கொண்ட அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி. அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் இந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக நின்றார்.

    கடந்த 2016 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்ற நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் அவரை எதிர்த்து நின்றார். ஆனால் இந்த முறை அவரை எதிர்க்க ஜோ பைடன் திணறினர். 82 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக ஞாபக மராத்தி உள்ளிட்ட பிரச்சனைகளால் பொது வெளியில் பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தினார்.

    இது கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது பெரிதும் வெளிப்பட்டது. சொந்த கட்சியினரே பைடன் அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டுமா என்று யோசித்தனர்.

     

    இதற்கு மத்தியில் பைடன் ஜூலை 21 அன்று தான் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகவும், தனக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிவதாகவும் அறிவித்தார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டிரம்ப் உடனான விவாதங்களிலும், தனது பிரச்சாரங்களிலும் அழுத்தமான பேச்சுகளால் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார்.

     

    ஆனால் இந்த முறை டிரம்ப் மீது நடந்த கொலை முயற்சிகள் அவருக்கு பெரும் அனுதாப அலையை சம்பாதித்து கொடுத்தன. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் பேரணியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.

    தலையை லேசாக அசைத்ததால் துப்பாக்கி குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. இதில் அவர் உயிர்தப்பிய நிலையில் அவரை சுட்ட மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் அந்த இடத்திலேயே பாதுகாப்பு அதிகரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

     

    தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேடி தனக்கு சொந்தமான மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டுருந்த டிரம்ப் மீது இரண்டாவது கொலை முயற்சி நடந்தது. இதிலும் டிரம்ப் தப்பித்த நிலையில் தூரத்தில் வேலிக்கு அருகில் இருந்து குறிவைத்த 58 வயதான ரயான் வெஸ்லி ரூத் தப்பியோடும்போது கைது செய்யப்பட்டார்.

     

    டிரம்பின் செல்வாக்கு இந்த கொலை முயற்சிகளுக்குப் பின் அதிகரிக்கத்தொடங்கிய நிலையில் உலகப் பணக்காரருக்கும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 270 மில்லியன் டாலர் வரை நன்கொடை வழங்கினார்.

    வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் முன்பிருந்தே நாள் ஒன்றுக்கு ஒரு அதிர்ஷ்டசாலிலுக்கு 1 மில்லியன் டாலர் என வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார்.

     

    இருந்தபோதிலும் டிரம்புக்கு கடுமையான சவாலாக கமலா ஹாரிஸ் விளங்கினார். கமலா குறித்து தனிப்பட்ட முறையிலும் கடுமையாக டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

     

    இருப்பினும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டது. இறுதியாக தேர்தலும் வந்தது.

    வாக்கு எண்ணிக்கையில் கமலா ஹாரிஸின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தகர்ந்தன. கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்தார். 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.

     

    ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். பராமரியமாக டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் ரெட் ஸ்டேட்டஸ் என்றும் கமலாவின் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் புளு ஸ்டேட்டஸ் என்றும் அழைக்கப்படும்.

    இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து இழுபறி ஏற்படுத்தும் மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும். வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள்.

    அந்த இழுபறி மாகாணங்களில் அனைத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் 47வது அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் [ஜனவரி] 20 ஆம் தேதி வாக்கில் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

    பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர், உக்ரைன் - ரஷியா போர் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று கூறும் டிரம்ப் மற்ற நாடுகளுடன் வரி விதிப்பு விவகாரங்களில் தற்போதிருந்தே கறார் காட்டி வருகிறார். 

    • கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
    • மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார்.

    அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் [50 வயது] கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

     

    இந்த கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் கடையில் வைத்து 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை எப்.பி.ஐ. போலீஸ் கைது செய்தது. வீட்டிலேயே 3டி பிரிண்டர் மூலம் துப்பாக்கியை செய்து அதன்மூலம் இந்த கொலையை அவர் செய்ததாக போலீஸ் தெரிவித்தது.

     

    லைஃப் இன்சூரன்ஸ் சார்ந்த யுனைடட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் உயிரை பணமாக பார்ப்பதாக வெகு மக்களிடையே கோபம் இருந்து வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மாஞ்சியோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    கொலை, பயங்கரவாத செய்லபாடுகள் உள்ளிட்ட 11 பிரிவுகளின்கீழ் மாஞ்சியோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மான்ஹாட்டனில் உள்ள நியூ யார்க் மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று [திங்கள்கிழமை] மாஞ்சியோன் ஆஜர்படுத்தப்பட்டார்.

     

    மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார். தனது கட்சிக்காரரை மனித பிங்பாங் பந்துபோல் அதிகாரிகள் நடத்துவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாஞ்சியோன் தான் குற்றம் செய்யவில்லை [NOT GUILTY] என்று தெரிவித்தார்.

     

    இதனையடுத்து வழக்கு விசாரணை 2025, பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுவரும் இந்த வழக்கில் மாஞ்சியோன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    முன்னதாக [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்து, இதற்கு வன்முறைதான் பதில் என்றும் நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று கைது செய்யப்பட்டபோது மான்ஜியோனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அறிக்கையில் எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஒருகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகி உள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் சாரா டார். மாடல் அழகியான இவர் ஆபாச தளமான 'ஒன்லி பேன்ஸ்'சில் கணக்கு தொடங்கி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். வலைத்தள பிரபலமான இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வாழ்க்கை அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், 'படிப்பில் கெட்டிக்காரியான நான் கணினி என்ஜினீயரிங்கில் முனைவர் படிப்புக்காக பிரபல பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

    ஒருகட்டத்தில் கல்வி கட்டணம் செலுத்த முடியாதநிலையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். பின்னர் என்ன செய்வதென யோசித்தபோது மாடலிங்கில் இணைந்து ஆபாச நடிகையாக முடிவு செய்தேன். முதலில் படிப்பை உதறியதால் வருத்தம் அடைந்தேன். ஆனால் இப்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன்" என்றார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன.
    • அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்

     இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவரின் ரெட்டிட் சமூக வலைதள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவோருக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளை மேற்கோள் காட்டி அதிக சம்பளம் வாங்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

    தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த நிறுவனர் u/anonymous_batm_an என்ற ப்ரொபைலில் இந்த பதிவை இட்டுள்ளார். அதில், தான் புகழ்பெற்ற இந்திய பொறியியல் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், பின்னர் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

     

    2018 இல் இந்தியாவுக்குத் திரும்பி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சராசரியாக ரூ. 15 லட்சம் சம்பளத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பணிபுரியும் அவரது ஸ்டார்ட்அப் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

    ஆனால் நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன. எதையும் செய்ய அதிகாரம், அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுடன் தொடர்பு தேவை என்று தனது தற்போதைய பதிவில் ஆதங்கப்பட்டுள்ளார்.

    அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

    இந்தியாவின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை விமர்சித்துள்ள அவர், மக்கள் சமூக நிலையை செல்வம் மற்றும் தோற்றத்துடன் இணைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு மதிப்பளிக்கும் போக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் பயங்கரமான பொருளாதாரச் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ள இந்த நிறுவனர் இந்தியாவுக்கு மாற்றாக தொழில்முனைவோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல பரிந்துரைத்துள்ளார்.

    சுருக்கமாக சொன்னால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் எண்ணம் இல்லாததால், ஆட்சியாளர்கள் உங்கள் பாப்கார்னுக்கு வரி விதிக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! என்று புலம்பித் தீர்த்துள்ளார்.

     

    கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கான வரியை 5 முதல்18 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
    • டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டாலர்கள்வரை மஸ்க் பணத்தை வாரி இறைத்துள்ளார்.

    அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த குடியரசுக் கட்சி மாநாட்டில் நேற்று டொனல்டு டிரம்ப் கலந்துகொண்டார். இந்நிலையில் வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்த உள்ள உலகப் பணக்காரர் எலான் மஸ்க் ஒரு நாள் அதிபராக முடியுமா? என்று டிரம்ப் -இடம் கேட்கப்பட்டது.

    அதற்கு டிரம்ப், இல்லை, அது நடக்காது என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்று டிரம்ப் கூறினார்.

    அமெரிக்க அரசியலமைப்பு, ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் முதலாளியான உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஆவார்.

     

     

    அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர் என்று பைடன் நிர்வாகம் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற 277 மில்லியன் டாலர்கள்வரை மஸ்க் பணத்தை வாரி இறைத்துள்ளார்.

    இதற்காக அவருக்கு அரசு செயல்திறன் தொடர்பான GOVERNMENT OF EFFICIENCY பதவி வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் 200 மில்லியன் பாலோயர்களை கொண்ட மஸ்க்கை, பிரசிடெண்ட் மஸ்க் என குறிப்பிட்டு ஒரு கூட்டம் சமூக வலைதளத்தில் வைரல் செய்து வந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது டிரம்ப் காது வரை சென்றுள்ளது.

     

    இதற்கிடையே அரசு நிதியுதவி திட்டத்துக்கு எதிராக மஸ்க் போர்க்கொடி தூக்கியுள்ளதும் டிரம்ப் உடைய ஜனநாயக கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    • அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த இளம் பழமைவாதிகளுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசினார்
    • இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்

     பழமைவாதியான டொனல்டு டிரம்ப் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த மாதம் இரண்டாவது முறையாக அதிபர் பதவி ஏற்கும் டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    கடந்த 2016 முதல் 2020 வரையிலான டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த நிலையில் இனி வரும் 4 வருடமும் அப்படியே அமையும் என்பதை அவரது முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

    அந்த வகையில் நேற்று அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த இளம் பழமைவாதிகளுக்கான குடியரசுக் கட்சி மாநாட்டில்  பேசிய டொனால்டு டிரம்ப், அதிபர் பதவி ஏற்கும் நாள் முதல் திருநங்கைகள் என்ற பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

     

    குழந்தைகளின் பாலியல் சிதைவை நிறுத்தவும், திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றவும், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆண்களை பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைப்பதாக அவர் சபதம் செய்தார். ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

     

     மூன்றாம் பாலினத்தவரான LGBTQ சமூகத்தினரின் உரிமைகளுக்கு எதிராக அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். LGBTQ பிரச்சினைகள் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க அரசியலை பெரிதும் தாக்கம் செலுத்த வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.
    • ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விரைவில் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப், செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகர் பதவிக்கு இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை பரிந்துரை செய்துள்ளார்.

    தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவரான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இவர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்ப துறையின் கொள்கை ஆலோசகராக இருப்பார்.

    "ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏஐ-இல் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உட்பட, ஏஐ கொள்கையை வடிவமைக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுவார்" என்று டிரம்ப் கூறினார்.

    முன்னதாக ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாஹூ, பேஸ்புக் மற்றும் ஸ்னாப் என பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஆலோசகர்கள் குழுவில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

    புதிய பொறுப்பு குறித்து பேசிய ஸ்ரீராம் கிருஷ்ணன், "ஏ.ஐ. துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பது பெருமையான உணர்வை கொடுக்கிறது," என்று தெரிவித்தார்.

    ×