என் மலர்
அமெரிக்கா
- 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன்[7 கோடி] உயர்ந்துள்ளது.
- ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும், 2 பேர் இறப்பார்கள்.
உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் [ஜனவரி 1] 8.09 பில்லியனாக [809 கோடியாக] இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று [திங்களன்று] வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் [7 கோடி] உயர்ந்துள்ளது . 2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் [2024] மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.
மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும்.
வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பரபரப்பான புகாரினை தெரிவித்தார்.
- வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர் மீது ஏற்கனவே பாலியல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு எதிரான 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பரபரப்பான புகாரினை தெரிவித்தார்.
டிரம்புக்கு எதிராக அவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்கினை தொடர்ந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டினை டிரம்ப் மறுத்து வந்தார்.
இந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இதனை 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. இதில் மன்ஹாட்டன் நீதிமன்றம் விதித்த ரூ.42 கோடி அபராதத்தை பெடரல் கோர்ட்டு உறுதி செய்தது.
அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க இருக்கும் சூழ்நிலையில் டிரம்புக்கு எதிராக வந்துள்ள இந்த தீர்ப்பு அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- தனது பதவிக்காலத்துக்குப் பின் மற்ற அமெரிக்க அதிபர்களை விட நீண்ட காலம் வாழ்ந்தார்.
- ஜிம்மி கார்ட்டர் கடந்த 2002-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவரது வயது 100.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று ஜார்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் இறந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் மற்ற அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தார்.
மேலும், கடந்த 2002-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி கார்ட்டர் வென்றார்.
ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
- போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்ந்து 17 முறை அழைத்து போலீசை தொந்தரவு செய்த 24 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை கேட்டு கடுப்பான போலீசார் ஆடம் வான் இருப்பிடத்திற்கே சென்று அவரை எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு மட்டும் தான் 911 எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று போலீசார் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதனையடுத்து 911 எண்ணுக்கு ஆடம் வான் 17 ஆவது முறையாக மீண்டும் அழைத்துள்ளார். பின்னர் அவசர உதவி எண்ணை தவறாக பயன்படுத்தியதாக கூறி ஆடம் வானை போலீசார் கைது செய்தனர்.
- வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவுக்கு கட்டுப்பாடு விதிக்கபடலாம் என்று தகவல் வெளியானது.
- நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். அவர் தனது ஆட்சியில் குடியேற்றம் தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவுக்கு கட்டுப்பாடு விதிக்கபடலாம் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, மிகவும் திறமையான தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைய உதவும் சிறப்பு விசா திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். நான் எப்பொழுதும்எச்1-பி விசாக்களை விரும்புகிறேன். நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அதனால்தான் நாங்கள் அவற்றை வைத்திருக்கிறோம் என்றார்.

டிரம்பின் ஆதரவாளரும், அவரது ஆட்சி நிர்வாகத்தில் உயர் பதவி அளிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க் சமீபத்தில் கூறும்போது,
வெளிநாட்டில் இருந்து உயர் பொறியியல் திறமைகளை கவர்வது அமெரிக்கா வெற்றி பெறுவதற்கு அவசியம் என்று கூறியிருந்தார்.
- அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த மாதம் 20-ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
- டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என்றார் டிரம்ப்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட் டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, பைட் டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப் படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த மாதம் 20-ம் தேதி பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அரிசோனா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டாக் செயலி உதவியாக இருந்திருக்கலாம். மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அமெரிக்க அரசின் புதிய சாலிசிட்டர் ஜெனரல் ஜான் சாயர் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், டிக்டாக் செயலியை தடைசெய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட் நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த டிரம்ப், அதிபராக பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.
- ஒரு அதிகாரி ஷூவைப் பயன்படுத்தி ப்ரூக்ஸின் வயிற்றில் அடித்தார்
- உடையில் பொருத்தப்பட்ட பாடி கேம் கேமராவில் பதிவான வீடியோ வெளியானது.
அமெரிக்காவின் நியூ யார்க் சிறையில் கைதி ஒருவரை போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட அடுத்த நாளே அந்த கைதி உயிரிழந்தார்.
மற்ற சில அதிகாரிகளில் உடையில் பொருத்தப்பட்ட பாடி கேம் கேமராவில் பதிவான அந்த வீடியோவில் கறுப்பின நபரான அவரை போலீஸ் அதிகாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கைதி 43 வயதான ராபர்ட் ப்ரூக்ஸ் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மார்சி கரெக்ஷனல் ஃபெசிலிட்டியில் வைத்து அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.
கைவிலங்கிடப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனை மேசையில் அமரவைக்கப்பட்டார். அவரது வாயில் போலீசார் துணி போன்ற எதையோ திணித்தனர். அதன்பின் அதிகாரிகள் புரூக்ஸின் முகம் மற்றும் இடுப்பில் அடித்தனர். ஒரு கட்டத்தில், ஒரு அதிகாரி ஷூவைப் பயன்படுத்தி ப்ரூக்ஸின் வயிற்றில் அடித்தார், மற்றொருவர் அவரை கழுத்தைப் பிடித்து மேசையில் தள்ளினார்.
சிறிது நேரம் கழித்து, அவர்கள் அவரது சட்டை மற்றும் பேண்ட்டைக் கழற்றினர். இதன்பின் புரூக்ஸ் அசைவற்றுக் கிடந்தார். இதற்கு மறு நாள் டிசம்பர் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் ப்ரூக்ஸ் வழக்கை விசாரித்து வரும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ், இந்த கேமரா காட்சிகளை நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 13 அதிகாரிகள் மற்றும் சிறை உதவியாளர் ஒருவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
உயிரிழந்த ராபர்ட் ப்ரூக்ஸ், 2017 ஆம் ஆண்டில் மன்ரோ கவுண்டியில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார்.
- தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- இந்த சட்டத்துக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:
இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் அங்குள்ள ஒகியோ மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதுதவிர தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த சட்டத்துக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- மோட்டலில் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாக்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
- மார்பு, கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தியால் அல்வேலா கத்தியால் குத்தினார்.
டெலிவரி செய்த பீட்சாவுக்கு வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்ததால் கர்பிணி பெண்ணை, பெண் டெலிவரி ஊழியர் 14 முறை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பெண் ப்ரியானா அல்வெலோ. பீட்சா டெலிவரி ஊழியரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மோட்டலில் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாக்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
அல்வெலோ பீட்சாவை கர்ப்பிணிப் பெண்ணிடம் டெலிவரி செய்தார், அதன் மொத்த மதிப்பு $33 (சுமார் ரூ. 2,800), ஆனால் $50 (சுமார் ரூ. 4,300) தாளை கொடுத்து அதற்கு சில்லறை வழங்கும்படி ஆர்டர் செய்த கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.

ஆனால் சேஞ் இல்லாததால் பின்னர் அந்த பெண்ணே சில்லறையாக தேடி அல்வெலோவுக்கு கொடுத்துள்ளார். கடைசியில் அல்வெலோவுக்கு டிப்ஸாக வெறும் 2 டாலர் (சுமார் 171 ரூபாய்) மட்டுமே கிடைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அல்வெலோ 90 நிமிடங்களுக்குப் பிறகு தனது நண்பனுடன் வந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்தி உள்ளார். மார்பு, கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் அல்வேலா கத்தியால் குத்தினார்.

அல்வெலோவுடன் வந்த நண்பன் கையில் துப்பாக்கியோடு மோட்டலில் பெண்ணின் காதலன் மட்டும் 5 வயது ,மகளை மிரட்டி உள்ளார்.
இறுதியில் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பெண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய அல்வெலோவையும் அவரது நண்பரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

- தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகிறது.
- தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.
பையன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தொழில்நுடபத்துறையில் வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் பலர் இதில் அடங்குவர்.
இந்நிலையில் வெளிநாட்டு தொழிநுட்ப ஊழியர்கள் அமெரிக்க ஊழியர்களின் வேலை வாய்ப்பை பரிக்கிறார்களா என்றும் அமெரிக்காவின் வேலை சந்தையில் வெளிவந்தவர்களின் தாக்கம் குறித்தும் Replit நிறுவனத்தின் CEO அம்ஜத் மசாத் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
தொழில்நுட்பத் துறையில் தகுதிவாய்ந்த அமெரிக்கர்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டினர் அனைத்தையும் எடுத்துக்கொண்டதால், தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகி வருகிறதா என்று மசாத் தனது பதிவில் சந்தேகம் தெரிவித்தார். இது உண்மை என்றால் ஆச்சர்யம் தான், ஏனெனில் தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், சிறந்த பொறியியல் திறமைகளுக்கு இங்கு நிரந்தர பற்றாக்குறை உள்ளது. இது சிலிக்கான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடிப்படை காரணியாகும் என்று பதில் அளித்துள்ளார்.
சிலிகான் பள்ளத்தாக்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கும் பிரதான இடமாகும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய மஸ்க்கின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க அதிபராகும் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் மஸ்க் முக்கிய பங்காற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பேபி டிரைவர் திரைப்படத்தில் யங் பேபியாக நடித்தவர் ஹட்சன் மீக்.
- அவரது மரணம் குறித்து வெஸ்டாவியா ஹில்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாஷிங்டன்:
பேபி டிரைவர் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்தது. அதில் யங் பேபியாக நடித்தவர் ஹட்சன் மீக். அதன்பின், அவரது நடிப்பு வாழ்க்கை முன்னேறியது.
இந்நிலையில், ஹட்சன் மீக் அலபாமாவின் வெஸ்டாவியா ஹில்ஸ் பகுதியில் வண்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய ஹட்சன் மீக் வண்டியில் இருந்து விழுந்தார்.
சாலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்த மீக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஹட்சன் மீக் மரணம் குறித்து வெஸ்டாவியா ஹில்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் 16 வயது நடிகர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடாவை முன்மொழிகிறேன்
- வெயின் கிரேட்ஸ்கிவெயின் கிரேட்ஸ்கியை பிரதமராக முன்மொழிகிறேன்.யை பிரதமராக முன்மொழிகிறேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் அமெரிக்காவின் பெருமையை மீட்பதுதான் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு ஒரே வழி வரி விதிப்பதுதான்.
அண்டை நாடான கனடான அமெரிக்காவை சுரண்டுவதாக தனது கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்றதும், முதலில் கையெழுத்திடும் கோப்புகளில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதுதான் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பு கனடாவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என ஜஸ்டின் ட்ரூடோ கருதுகிறார்.
கடந்த மாதம் ஜஸ்டின் ட்ரூரோ டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை நடததினர். இது கனடாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும என தெரிவித்தார். அப்போது டொனால்டு டிரம்ப் "அமெரிக்காவிடம் இருந்து 100 பில்லியன் டாலர் அளவில் கொள்ளை அடிக்காவிடில் உங்ளுடைய நாடு உயிர்வாழ முடியாது. அப்படித்தானே? என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், மற்றொரு பதிவில் கவர்னர் என ஜஸ்டின் ட்ரூடோவை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். அத்துடன் உங்களுடைய வரி 60 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்படும். கனடா வர்த்தகம் உடனடியாக இரண்டு மடங்காகும். உலகில் உள்ள மற்ற எந்த நாடும் பெறாத ராணுவ பாதுகாப்பை பெறும்.
அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை முன்மொழிகிறேன். இதனால் வரி குறையும். வெயின் கிரேட்ஸ்கியை பிரதமராக முன்மொழிகிறேன் என ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டல் செய்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து கனடா நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். மக்கள் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
டொனால்டு டிரம்ப் தனது Truth சமூக வலைத்தளத்தில் "நான் வெய்னிடம் கனடாவின் பிரதமர் பதவிக்கு நீங்கள் ஏன் போட்டியிடக்கூடாது, விரைவில் கனடாவின் ஆளுநர் என்று அறியப்படுவீர்கள்- நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள், நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூட வேண்டியதில்லை என்றேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
வெயின் தலைசிறந்த ஐஸ் ஹாக்கி வீரர் ஆவார்.






