என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இங்கிலாந்தில் ஜூலை மாதம் 4-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
    • இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை சமீபத்தில் வெளியிட்டன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் ஜூலை மாதம் 4-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை சமீபத்தில் வெளியிட்டன.

    இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசுகையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியை ஆதரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நான் மிகவும் வரவேற்கிறேன் என தெரிவித்தார் .

    இதுதொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், ஜான்சன் பிரசாரத்தின் மூலம் வீடியோக்கள் மற்றும் கடிதங்கள் மூலம் வேட்பாளர்களை ஆதரிக்கிறார். அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.

    நிச்சயமாக, ஒவ்வொரு வாரமும் அவர் தனது கட்டுரையில் வழக்கை உருவாக்கி, தொழிற்கட்சி அரசாங்கம் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்வதை உறுதிசெய்கிறார்.

    எல்லோரும் பழமைவாதத்திற்கு வாக்களிப்பது ஏன் முக்கியம், அவர் அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்தார்.

    • ஒரு மோதிரத்தையும் அவளுக்கு அணிவித்து காதலை வெளிப்படுத்துகிறார்.
    • அரண்மனை வாசலை கடந்து செல்ல இளம்பெண் ஓடும்போது மீண்டும் ஒருமுறை அவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைபெறுகிறார்கள்.

    இங்கிலாந்தில் சார்லஸ் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படும். ட்ரூப்பிங் தி கலர் எனப்படும் இந்த விழாவின்போது, அரண்மனையின் பால்கனியில் ராஜ குடும்பத்தினர் தோன்றும்போது, கீழே ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில், நடந்த சுவாரஸ்யமான பல புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பிரபலமாகின. அதில் அரண்மனை காவலர் ஒருவரின் காதல் வீடியோ மிகவும் வைரலானது.

    அரண்மனையின் முதன்மை வாசல் அருகே, ராணுவ அணிவகுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, காவலர் தனது காதலியை கட்டிப்பிடித்து வழியனுப்புகிறார். அப்போது ஒரு மோதிரத்தையும் அவளுக்கு அணிவித்து காதலை வெளிப்படுத்துகிறார். உடனே காதலி மீண்டும் அவரை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். பின்னர் அரண்மனை வாசலை கடந்து செல்ல இளம்பெண் ஓடும்போது மீண்டும் ஒருமுறை அவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைபெறுகிறார்கள். கடமைக்கு இடையே காதலில் நெகிழ்ந்த இந்த ஜோடியின் வீடியோக்கள் வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது.

    • ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.
    • தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.

    தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.

    தமது ஐஃபோன்வழி பாலியல் தொழிலாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வந்த அந்த அவர், குறுந்தகவல்கள் அனைத்தையும் கைப்பேசியிலிருந்து நீக்கிவிட்டார்.

    ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.

    குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை இயக்கிய ரிச்சர்ட் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.

    அவர் மேலும் ஆழமாக ஆராய்ந்ததில் பல ஆண்டுகளாகத் தம் கணவர் அனுப்பி, பின்னர் நீக்கிய குறுந்தகவல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் மனைவி விவாகரத்து கோரினார்.

    இந்நிலையில் அந்த தொழிலதிபர், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்பது இவரது வாதம். ஆதலால் அவர் சுமார் 5 மில்லியன் பவுண்ட் (ரூ. 53 கோடி) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு பொது வெளியில் தோன்றாமல் இருந்தார்.
    • பின்னர் புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன். வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

    கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கேட் மிடில்டனை பொது வெளியில் காண முடியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுந்த நிலையில், கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியானது.

    புற்றுநோய் குணமாக கேட் மிடில்டன் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியுலகில் தோன்றாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்றுதான் பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்றார்.

    மன்னர் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு லண்டனில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். இதன்மூலம் சுமார் ஆறு மாதத்திற்கு பிறகு பொது வெளியில் கேட் மிடில்டன் காணப்பட்டார்.

    கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட அதேவேளையில் மன்னர் சார்லஸ்க்கும் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால், சிசிக்சை மேற்கொண்டு சில வாரங்களிலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    கேட் மிடில்டன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடைந்ததாக தெரிவித்தார்.

    • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
    • மோசமான வானிலையால் ஏற்பட்ட திடீர் குலுக்கலில் ஒருவர் உயிரிழந்தார்.

    லண்டன்:

    லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலையால் கடும் குலுக்கலை எதிர்கொண்டது. நடுவானில் நிலைதடுமாறி குலுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவித்தது.

    இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

    இந்நிலையில், கடந்த மாதம் நடந்த விமான குலுக்கலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    சிறிய காயங்கள் உள்ள பயணிகளுக்கு 10,000 டாலர் வழங்கப்படும். கடுமையான காயங்கள் உள்ளவர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி விவாதிக்கலாம். கடும் காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்ட பயணிகளுக்கு நீண்டகால மருத்துவ பராமரிப்பு தேவை மற்றும் நிதி உதவி கோரும் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய 25,000 டாலர் முன்பணமாக வழங்கப்படும். பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளது.

    • எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன்.
    • ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

    அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது ஒரு வாரத்துக்கு சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

     

    இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி  தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கைலா, திடீரென வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறித் துடித்து மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கைலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அளவுக்கு அதிகமான முறை சிகெரெட் புகையை உள்ளிழுத்ததால் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

    பல்மோனரி பிலெப் எனப்படும் இந்த நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருக்க ஐந்தரை மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கினர். இதனால் கைலா உயிர்பிழைத்தார்.

     இதுகுறித்து கைலாவின் தந்தை கூறுகையில், 'எனது மகள் படும் வேதனையை பார்த்து நான் ஒரு குழந்தையைப் போல் அழுதேன். அவளுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. அவள் இறக்கப்போகிறாள் என்றே பயந்தேன், தயவு செய்து இளஞர்கள் புகைப்பழக்கத்தை கை விடுங்கள், அதனால் ஒரு பயனும் இல்லை, Its not worth it' என்று தெரிவித்தார்.

     

    சிகிச்சைக்ககுப் பிறகு உடல் தேறி வரும் கைலா பேசுகையில், 'எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன். ஆனால் இப்போது நன் அனுபவித்த வலிக்கு பிறகு நீ ஒருபோதும் சிகரெட்டை தொடப்போவதில்லை' என கூறினார். 

     

    சிகெரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிகெரெட் புகையை உள்ளிழுக்கும்போது நுரையீரலுக்குள் நச்சுத்தன்மை கொண்ட கேமிக்கல்களும்,  யுரேனியமும் படிமங்களாக சேகரமாகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    • மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் கெல்லிக்கு பாராசோம்னியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • பெயிண்ட் வாளிகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், குளிர்சாதன பிரிட்ஜ், மேசைகள், மிட்டாய்கள் என தனக்குத் தேவைப்படாத பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்துள்ளார்.

    நவ நாகரிகப்பெண்கள் அதிகம் ஷாப்பிங் செய்கிறார்கள் என்பதே பெருமபாலான கணவர்களின் கவலையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பெண் ஒருவருக்கு தூக்கில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதி உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான கெல்லி கிநைப்ஸ் என்ற பெண் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தனக்கு தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து வருகிறார். இதனால் அவருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.

     

    மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் கெல்லிக்கு பாராசோம்னியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாராசோம்னியா இருப்பவர்கள் தூக்கத்தில் எழுந்து சுயநினைவு இல்லாமலேயே நடப்பது, பேசுவது, சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். தூக்கத்தில் மூளையின் ஒரு பகுதி மட்டும் செயல்படுவதால் இது நடக்கிறது.

    மாறிவரும் வாழ்க்கை முறையால் கெல்லியின் விஷயத்தில் பாராசோம்னியா மேலும் ஒரு படி போய் தூக்கத்தில் ஷாப்பிங் செய்வது வரை சென்றுள்ளது. கெல்லி தூக்கத்தின்போது ஆன்லனில் பிளாஸ்டிக்கால் ஆன முழு பேஸ்கெட்பால் செட்டப், நெட், பெயிண்ட் வாளிகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், குளிர்சாதன பிரிட்ஜ், மேசைகள், மிட்டாய்கள் என தனக்குத் தேவைப்படாத பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்துள்ளார்.

     

    தனது வங்கி விவரங்களும் கிரெடிட் கார்ட் தகவல்களும் ஏற்கனவே ஆன்லைனில் பதிவாகியுள்ளதால் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும்போது பணம் தானாகவே சென்று விடுகிறது என்றும் தனிப்பட்ட வங்கி விவரங்களை தூக்கத்தில் யாருக்காவது சேர் செய்து விடுவதால் மோசடி நிகழும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விரக்தியில் தெரிவிக்கிறார் கெல்லி.


     



    மூன்று குழந்தைகளுக்கு தாயாக உள்ள கெல்லி, 2018 இல் தனது முதல் குழந்தை பிறந்தபோது இந்த வியாதிக்கு ஆளாகியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும் அது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்பதால் செய்வதறியாது தவித்து வருகிறார் கெல்லி.

    • பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
    • 4 போட்டி கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.

    லண்டன்:

    பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.

    4-வது டி20 போட்டி நடைபெற்ற நேற்று முன்தினம் பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கானை பெண் ரசிகை ஒருவர் சந்தித்து அவரது பார்ம் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பான உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஷதாப் கான் ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது ஒரு பெண் ரசிகர், ஷதாப் கானிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். நீங்கள் ஏன் இவ்வளவு சிக்சர்களை விட்டுக் கொடுக்கிறீர்கள்? நீங்கள் மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும். அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

    பெண் ரசிகையின் கேள்விக்கு ஷதாப் கான் மௌனமாக புன்னகைத்தார். இந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாக பரவியது.

    • ரிஷிசுனக் அணிந்திருந்த ‘முதுகு பை’அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்தில் பொது தேர்தல் ஜூலை 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ரிஷிசுனக் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரிஷிசுனக் சமீபத்தில் லண்டனில் இருந்து கார்ன்வால் வரை செல்லும் ஸ்லீப்பர் ரெயிலில் பயணம் செய்தார்.

    அப்போது ரிஷிசுனக் அணிந்திருந்த 'முதுகு பை'அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆர்.எஸ். என எழுதப்பட்டிருந்த அந்த 'முதுகு பை'யுடன் அவர் ரெயிலில் ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த 'முதுகு பை' தொடர்பான விபரங்களை அறிய மக்கள் ஆர்வம் காட்டி உள்ளனர். அந்த 'முதுகு பை' டுமி அரைவ் பிராட்லி நிறுவனத்தின் பேக் என்று கருதப்படுகிறது.

    இவை மிகப்பெரிய கடைகளில் விற்கப்படுகிறது. இந்த பையின் இந்திய மதிப்பு சுமார் ரூ.79 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்த பை தொடர்பான விபரங்கள் வைரலாகி வரும் நிலையில், பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

    ஓவல்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கான் 38 ரன், பாபர் அசாம் 36 ரன், முகமது ரிஸ்வான் 23 ரன்கள் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்களான பில் சால்ட், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர்.

    பிலிப் சால்ட் 24 பந்தில் 45 ரன்னும், ஜாஸ் பட்லர் 21 பந்தில் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். வில் ஜாக்ஸ் 20 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், 15.3 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது அடில் ரஷீத்துக்கும், தொடர் நாயகன் விருது ஜாஸ் பட்லருக்கும் வழங்கப்பட்டது.

    • தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.
    • பதிவு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தனது கணவருக்கு ஆதரவாக ஒரு அன்பான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், உங்களுக்குள் உள்ள பொதுவான விஷயம் என்ன என்று மக்கள் எப்போதும் எங்களிடம் கேட்கிறார்கள். நண்பர்களை மீண்டும் சந்திப்பது, ஸ்பானிஷ் உணவுகளை சாப்பிடுவது, இருவருக்கும் இடையிலான பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள், கடின உழைப்பு, வாழ்க்கையில் வெற்றி பெற வழி என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பது, நம் குழந்தைகளுக்கு இன்று உள்ளதை விட சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைப்பது, ஹாரோவில் மக்களின் முக்கியமான மதிப்புகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு விரும்பும் எதிர்காலம் பற்றி பேசுவது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.


    • இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.
    • பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெற உள்ள 3-வது பொதுத்தேர்தலாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் வரும் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெற உள்ள 3-வது பொதுத் தேர்தலாகும். இதையடுத்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் நேற்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும். இது தேசிய உணர்வை உருவாக்கும். கட்டாய தேசிய சேவையின் கீழ் 18 வயது இளைஞர்கள் ஒரு ஆண்டுக்கு ராணுவத்தில் சேரவேண்டும். இதற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் 2.5 பில்லியன் பவுண்ட்ஸ் செலவிடும் என தெரிவித்தார்.

    ×