என் மலர்
ஈரான்
- ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது
- இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும் என்று ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர், எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கி உள்ளது.
- ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும் என்று ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர், எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது
ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
- ஈரானில் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது
- அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம்
அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம் என ஏமன் ராணுவம் அறிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏமன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யத் அப்பாஸ் அரக்சி, ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், "நாளை ரஷிய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். ரஷியாவுடன் இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.
- அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
- அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் தரப்பில் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை.
அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.
- ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக அறிவித்திருந்தார்.
- மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இத்தாக்குதல் இன்று அதிகாலையில் நடந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலை ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் சேதத்தின் அளவு குறித்து ஈரான் தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில் ஈரானிய அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிரிகளின் தீய சதிகளுக்கு மத்தியிலும், ஆயிரக்கணக்கான புரட்சிகர விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் முயற்சிகளுடன், அணுசக்தி தியாகிகளின் இரத்தத்தின் விளைவாக கிடைத்த இந்த தேசியத் தொழிலின் (அணுசக்தி) வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்காது என்று மாபெரும் ஈரானிய தேசத்திற்கு உறுதியளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.
மேலும் "ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதன் மூலம் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் NPT ஆகியவற்றை கடுமையாக மீறியுள்ளது" என்று கூறிய அவர் ஐநா சாசனத்தின் படி தன்னை தர்க்கத்துக் கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து, கதிர் வீச்சுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று ஈரானின் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியதாக ஈரானிய அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று, ஈரானுக்கு அதன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப அதிகபட்சம் இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளித்துள்ளதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூன் 13 அன்று, இஸ்ரேல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. இதில் பல உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. மேலும் சில ஈரானிய ராணுவத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா காமேனி பாதுகாப்பாக ஒரு ரகசிய நிலத்தடி பதுங்கு குழிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அனைத்து வகையான மின்னணு தகவல்தொடர்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பகமான உதவியாளர் மூலம் மட்டுமே இராணுவத் தளபதிகளுக்கு செய்திகள் அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது.
காமேனி இன்னும் இந்த உலகில் இருக்க கூடாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சில விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த சூழலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்குப் பின் உயர் தலைவர் பதவிக்கு மூன்று மூத்த மதத் தலைவர்களின் பெயர்களை காமேனி பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அந்த பட்டியலில் அவரின் மகன் பெயர் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில், மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்தது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது, காமெனியின் சொந்த மகன், திரைக்குப் பின்னால் ஒரு முக்கிய நபராகக் கருதப்படும் மோஜ்தபாவும் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் சிற்பியாக அறியப்படும் ஃபக்ரிஸாதே 2011 இல் SPND அமைப்பை நிறுவினார்.
- ஏவுகணை பாகங்கள் மற்றும் ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன.
ஈரான் இஸ்ரேல் மோதல் நேற்றுடன் ஒரு வாரத்தை எட்டியது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஈரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) கூற்றுப்படி, 60க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் சுமார் 120 சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தெஹ்ரானுக்கு அருகிலுள்ள பல ஏவுகணை உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன. ஏவுகணை பாகங்கள் மற்றும் ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன.
குறிப்பாக, ஈரானின் அணுசக்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தெஹ்ரானின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SPND) தலைமையகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி அதை வெற்றிகரமாக அழித்ததாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பலர் பேர் கொல்லப்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இராணுவத் திறனுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் SPND முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் சிற்பியாக அறியப்படும் ஃபக்ரிஸாதே 2011 இல் SPND அமைப்பை நிறுவினார்.
இதற்கிடையே ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
ஈரானின் இராணுவத் திறனுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எஸ்பிஎன்டி முக்கிய பங்கு வகிக்கிறது.
- தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- அங்கிருந்து இந்தியா அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான்- இஸ்ரேல் இடையே கடந்த 8 நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர் விமானங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் ஈரானில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு முதலில் அழைத்து செல்லப்பட்டனர்.
அந்த வகையில் தெஹ்ரானில் இருந்து மஷாத் நகருக்கு சுமார் ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வருவதற்காக ஈரான், வான்வெளி தடையை நீக்கியுள்ளது.
ஏற்கனவே, ஈரானில் இருந்து அர்மேனியா நாட்டிற்கு இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு அங்கிருந்து, இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில் ஈரானின் மஷாத் நகரில் இருந்து மாணவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற ஈரான் தற்காலிகமாக அதன் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை நீக்கியுள்ளது.
- ஈரான் தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான Fattah-1 ஐ 2023 இல் அறிமுகப்படுத்தியது.
- IRGC இதை "இஸ்ரேலிய-ஸ்ட்ரைக்கர்" என்று விவரிக்கிறது.
இஸ்ரேலுடனான நடந்து வரும் போர் குறித்து ஈரான் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நேற்று முன் தினம் தாக்குதல்களில் இஸ்ரேலுக்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிக்கைப்படி, 11வது கட்ட தாக்குதல்கள் "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" இன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை "Fattah-1" பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
"ஈரானியப் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் வான்வெளியின் (இஸ்ரேல்) மீது முழு கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளன" என்று IRGC தெரிவித்துள்ளது.
தற்போதைய மோதலில் ஈரான் இந்த வகை ஏவுகணையைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. அக்டோபர் 1, 2024 அன்று "ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 2" இல் இஸ்ரேலுக்கு எதிராக Fattah-1 ஏவுகணைகளை ஈரான் ஏவியிருந்தது.

ஈரான் தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான Fattah-1 ஐ 2023 இல் அறிமுகப்படுத்தியது.
இஸ்ரேலின் இரும்பு டோம் போன்ற மிகவும் மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக் கூட தோற்கடிக்கும் வகையில் Fattah-1 வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
IRGC இதை "இஸ்ரேலிய-ஸ்ட்ரைக்கர்" என்று விவரிக்கிறது. இந்த ஏவுகணை 12 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 1,400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இது திட எரிபொருளில் இயங்குகிறது மற்றும் 200 கிலோகிராம் வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
Fattah-1, மணிக்கு 17,900 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் (HGV) முனையைக் கொண்டுள்ளது.
இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் காற்றில் இருக்கும்போது அவற்றின் பாதையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன.
இந்த தனித்துவமான திறன் அவற்றைக் கண்டறிந்து இடைமறிப்பதை கடினமாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கின்றன, இது மணிக்கு தோராயமாக 6,100 கிலோமீட்டர் ஆகும்.
- ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது.
- சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.
நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈரான் நாட்டின் உச்சபட்ச அதிகார தலைவரான அயதுல்லா அலி காமேனி "ஈரான் ஒருபோதும் சரணடையாது" எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அயதுல்லா அலி காமேனி "இந்த விவகாரத்தில் ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது. ஒருபோதும் ஈரான் சரணடையாது. அமெரிக்கா ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால், சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
- ஈரான் மீதான தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்கா முதலில் விலகி நிற்பதாக தெரிவித்தது.
- பின்னர் ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இஸ்ரேல்- ஈரான் இடையே கடந்த சில தினங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் தலைநகர், மொசாட் தலைமையகம் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்றிரவு உச்சக்கட்டமாக ஈரான், ஹைபர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம் போர் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம் என ஈரான் நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் பிராந்தியத்தில் போரை தூண்டுவதாக இருக்கும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.






