என் மலர்tooltip icon

    ஈரான்

    • 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
    • போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் தோன்றினார்.

    அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13-ந்தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதனையடுத்து 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

    இஸ்ரேல் உடனான போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் அயதுல்லா கொமேனி தோன்றியுள்ளார்.

    அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர்.

    • ஈரான் அணுசக்தி திட்டங்களை தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
    • மீண்டும் சீரமைத்து வருவதாக ஈரான் கூறிய நிலையில் ஒத்துழைப்புக்கு தடைவிதித்துள்ளது.

    ஈரான் அணுசக்தி திட்டங்களை மேம்படுத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யூரேனியத்தை செறிவூட்டும் பணியை அதிவேகமாக மேற்கொண்டு வருகிறது எனக் குற்றம்சாட்டியது.

    இதனால் ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த நிலையில்தான் தங்கள் நாட்டிற்கு ஈரானால் அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் அறிவித்து, ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்கா ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆணுஆயுத திட்டங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தெரிவித்தது.

    சுமார் 12 நாட்களுக்குப் பின் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தற்போது ஈரான் அணுஆயுத திட்டங்களை சீரமைப்பு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு சஸ்பெண்ட் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார். ஈரான் பாராளுமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

    • 3 அணுசக்தி நிலையத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.
    • சேதமடைந்த அணு நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈரான் மும்முரமாக உள்ளது.

    அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13-ந்தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் 2 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த 3 அணுசக்தி நிலையத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி உள்ளன. அதில் போர்டோ நிலத்தடி அணு நிலையம் அமைந்துள்ள மலை பகுதியில் பல பணியாளர்கள் இருப்பதை காட்டுகிறது.

    மேலும் மலை முகட்டுக்குக் கீழே பல வாகனங்கள் நிலத்தடி அணு நிலைய வளாகத்துக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் சேதமடைந்த அணு நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈரான் மும்முரமாக உள்ளது.

    • 12 நாள் மோதலுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
    • பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து வான்வெளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈரான் தனது மத்திய மற்றும் மேற்குப் வான்வெளியை சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் திறந்துள்ளதாக அதன் சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    ஈரானின் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜூன் 13 அன்று ஈரான் தனது வான்வெளியை மூடியது. 12 நாள் மோதலுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

    இந்நிலையில் ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (CAO) ஒப்புதல் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து வான்வெளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, நாட்டின் கிழக்குப் பகுதி வான்வெளியை உள்நாட்டு, சர்வதேச மற்றும் கடந்து செல்லும் விமானங்களுக்காக ஈரான் திறந்துவிட்டது.

    இருப்பினும், வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஈரானிய விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ அனுமதிக்கப்படவில்லை. இந்த பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரம் 2:00 வரை மூடப்பட்டிருக்கும் CAO தெரிவித்துள்ளது. 

    • ஈரான் அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்க சிவில் நோக்கங்களுக்காகவே என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.
    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதை அரக்ச்சி ஒப்புக்கொண்டார்.

    அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மறுத்துள்ளார்.

    அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தங்கள் நலன்களுக்கு உதவுமா என்பதை ஈரான் இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் அணுசக்தி வசதிகள் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தடைபட்ட நிலையில் இந்த மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் அரக்ச்சி தெரிவித்தார்.

    ஈரான் அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்க சிவில் நோக்கங்களுக்காகவே என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதை அரக்ச்சி ஒப்புக்கொண்டார்.

    இத்தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன.

    புதன்கிழமை நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப் , அமெரிக்கா மற்றும் ஈரான் அடுத்த வாரம் சந்திக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான பென்டகன் தாக்குதல்கள் வெற்றி பெற்றதாகவும் கூறியிருந்தார்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதைத் தடுக்க அமெரிக்கா முயன்று வருவதாகவும், ஆட்சி மாற்றம் என்பது ஒரு சாத்தியமான விளைவு என்றும் தெரிவித்தார்.

    • ஈரான் மீண்டும் அணு ஆயுத உற்பத்தி பணியில் ஈடுபட்டால் அமெரிக்கா தாக்கும் என்றார் டிரம்ப்.
    • தற்போதைய போரில் அமெரிக்காவுக்கு எந்த பலனும் இல்லை என்றார்.

    தெஹ்ரான்:

    இஸ்ரேல்-ஈரான் இடையே நடந்த போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபின், முதல் முறையாக ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி பேசியதாவது:

    அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம். ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும்.

    கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம். எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு, பாடம் புகட்டியுள்ளோம். தற்போதைய போரில் அமெரிக்காவுக்கு எந்த பலனும் இல்லை.

    இஸ்லாமிய குடியரசு வெற்றி பெற்றது. மீண்டும் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை செய்தால் எதிரி நிச்சயம் அதிக விலை கொடுக்க நேரிடும். தேவைப்பட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் நிகழலாம்.

    கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என தெரிவித்தார்.

    • ஈரான் - இஸ்ரேல் நாடுகள் 10 நாட்களுக்கும் மேலாக சண்டையிட்டு வந்தன.
    • டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து 2 நாடுகளும் போர்நிறுத்ததை அறிவித்துள்ளன.

    ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டை தொடர்ந்து 2 நாடுகளும் போர்நிறுத்ததை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், இஸ்ரேலுக்காக உளவு வேலை பார்த்த 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

    இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியாக ஈரான் அரசு குற்றம் சாட்டி இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

    இதே குற்றச்சாட்டுகளுடன் ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று இந்த தாக்குதல் அழைக்கப்பட்டது.
    • அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ஈரானிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.

    ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது.

    ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது.

    'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது.

    இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலும் பங்கேற்றதாக செய்திகள் வந்தன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

    இந்நிலையில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி,"தொடர்ச்சியான தாக்குதல்களால் எங்கள் அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்பது தெளிவாகிறது" என்று கூறினார். இருப்பினும், சேதத்தின் முழு விவரங்களையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

    ஈரானிய அணுசக்தி அமைப்பு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் தற்போது நிலைமை மற்றும் சேதத்தை மதிப்பிடுவதாக அவர் விளக்கினார்.

    மறுபுறம், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) ஈராபி அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களைக் கையாண்ட விதம் குறித்து ஈரான் ஆழ்ந்த கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    அதன் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வரை IAEA உடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்க ஈரானிய பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்தது.

    ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்க IAEA மறுத்ததை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் விமர்சித்தார்.

    • ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது.

    இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி முகமது ரெசா செடிகி சபர் கொல்லப்பட்டார்.

    போர் நிறுத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு, வடக்கு ஈரானின் அஸ்தானா அஷ்ரஃபியாவில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது 17 வயது மகன் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் அணுஆயுதம் தாயரிக்க ஈரான் முயற்சிக்க கூடாது என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார். 

    • ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது
    • அமெரிக்காவின் தலையீடு 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மேலும் மோசமாக்கியது.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

    ஆனால் போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி மறுத்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

    • ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • அமெரிக்காவின் தலையீடு 2 நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை மேலும் மோசமாக்கியது.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.

    அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.

    இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், "இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை தொடங்கியது. நாங்கள் போரை தொடங்கவில்லை.

    தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த 'உடன்பாடும்' எட்டப்படவில்லை.

    இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.

    எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.
    • 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.

    ஃபோர்டோ உட்பட மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்கச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.

    மறுநாள் (நேற்று) இஸ்ரேல், அமெரிக்கா தாக்கிய அதே ஃபோர்டோஅணுசக்தி தளத்தை தாக்கியது. இதனுடன் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை தலைமையகம், பாலஸ்தீன சதுக்கம், துணை ராணுவப் பசிஜ் தன்னார்வப் படை கட்டிடம் மற்றும் எவின் சிறைச்சாலையையும் தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான், ஃபோர்டோவில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடவில்லை.

    புஷேர், அஹ்வாஸ், யாஸ்த் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஏவுகணை சேமிப்பு வசதிகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் வான் பாதுகாப்பு உபகரண உற்பத்தி வசதி ஆகியவற்றைத் தாக்கியதாகவும், இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.

    யாஸ்டில் உள்ள இமாம் ஹுசைன் ஏவுகணை தளத்தைத் தாக்கி கோர்ராம்ஷஹர் ஏவுகணைகளை அழித்ததாகவும் அவர் கூறினார். 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களைத் தவிர, இஸ்ரேலின் பிற நகரங்களையும் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

    இதற்கிடையே கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 

    ×