என் மலர்tooltip icon

    பிரேசில்

    • உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • மனித உரிமைகளை மீறும் செயல்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் அதிபர் டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.

    இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் தெரிவித்து இருக்கிறது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கி வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். மேலும், விமானத்தில் குளிரூட்டி இயக்கப்படவில்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்டவர்களில் சிலர் குற்றம்சாட்டினர்.

    மேலும், சிலர் விமானத்தினுள் அதிக வெப்பம் காரணமாக சிலருக்கு மயங்கினர் என்றும், பயணிகள் கழிவறையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்ட பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பயணிகளை மிக மோசமாக நடத்தியது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • அப்பகுதி முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
    • அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயிருந்தார்.

    தென்கிழக்கு பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, இபடிங்கா நகரில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 80 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால், அப்பகுதி முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    நிலச்சரிவால் அழிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் எட்டு வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டான். இதுதவிர, அருகிலுள்ள நகரமான சாண்டானா டோ பரைசோவில் மற்றொரு உடலையும் மீட்புக் குழுவினர் மீட்டனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    நகரின் பெத்தானியா பகுதியில் உள்ள மலையின் ஓரத்தில் உள்ள ஒரு தெருவில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவு அதன் பாதையில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயிருந்தார்.

    அவரின் நிலைமை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீட்கப்பட்டனர். 

    • அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தோனேசியா.
    • 2009 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.

    பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இந்தோனேசியா இணைந்ததாக பிரேசில் அறிவித்து இருக்கிறது. தெற்கு ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருக்கிறது.

    இது தொடர்பாக பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு ஆசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு உலகளாவிய நிர்வாகத்தின் நிறுவனங்களை சீர்திருத்தும் விருப்பத்தை மற்ற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், உலகளாவிய தெற்கிற்குள் ஒத்துழைப்பை வழங்கவும் சாதகமாக பங்களிக்கிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2025 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை ஏற்றுள்ள பிரேசில், இந்தோனேசியாவை அமைப்பில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கியதாக தெரிவித்தது.

    2009 ஆம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முழு உறுப்பினர்களாக இணைந்தன.

    • கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்தது.
    • கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்ததில் 10 பேரும் பலியாகினர்.

    பிரேசிலா:

    பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். சாலொ பாலோ மாகாணத்தில் அமைந்துள்ளது சுற்றுலா நகரமான கிராமடோ.

    இந்நிலையில், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்தது.

    கீழே விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்த விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். அதேவேளை வீட்டில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டயர் திடீரென வெடித்ததால் பயணிகள் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
    • எதிரே வந்த லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.

    பிரேசிலா:

    பிரேசில் நாட்டின் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து நேற்று மாலை சால் பாலோ நகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 45 பயணிகள் பயணம் செய்தனர்.

    தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது பஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை விபத்தில் 38 பேர் பலியானது குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

    நடப்பு ஆண்டில் மட்டும் சாலை விபத்து தொடர்பான சம்பவங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    லாரி மீது பயணிகள் பஸ் மோதியதில் 38 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

    பிரேசிலியா:

    பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி அதிபரான ஜெயிர் போல்சனரோவை தோற்கடித்து, இடதுசாரி வேட்பாளரான லுலா டி சில்வா வெற்றிப் பெற்றார். இதையடுத்து, அவரது தலைமையில் புதிய அரசு அமைந்தது.

    இந்த நிலையில் 2022-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் அதிபர் லுலா டி சில்வா தலைமையிலான அரசை கவிழ்க்க பெரும் சதி நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் டி சில்வா, துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோரை படுகொலை செய்யவும் சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்த சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
    • ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.

    பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு செய்தார். இதோடு எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

    நைஜீரியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வந்த பிரதமர் மோடி, இங்கு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.

    இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், "நாங்கள் எங்கள் நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தோம். எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    19வது ஜி20 மாநாட்டை பிரேசில் நடத்துகிறது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    • இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்
    • பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்

    பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் வைத்து 19-வது ஜி 20 உச்சி மாநாடானது நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர்.

    அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. தற்போது நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இத்தாலி, பிரான்ஸ் அதிபர்கள் என உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் ஜி20 மாநாட்டின் ஹைலைட்டாக இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒன்றில் அனைத்து தலைவர்களும் சேர்ந்த எடுத்த குரூப் போட்டோவில் அமெரிக்க அதிபரை காணவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

     

     

    ஜோ பைடன் வருதற்கு தாமதமானதால் அவர் புகைப்படத்தில் இருந்து விடுபட்டுள்ளார் என்று மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிகாரிகள் விளக்கமளித்தாலும், ஜோ பைடன் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைய உள்ளது என்பதால் அதன் பின்னர் அவரது முக்கியத்துவம் உலக அரங்கில் இருக்காது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் இருப்பதால் இதை இணையவாசிகள் டிரண்ட் செய்து வருகின்றனர்.

    மற்றொரு புகைப்படம் இந்திய பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ லியோனி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்து நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் கண்கொட்டாமல் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

     

    மெலோனி மற்றும் மோடி நட்புறவு, கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியில் வைத்து நடந்த ஜி7 மாநாட்டில் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு மெலோனி + மோடி = மெலோடி என்று பொருள்படும்படி அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலானது. எனவே தற்போது ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    மெலோனியை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ""ரியோ டி ஜெனிரோ ஜி 20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன.

    கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்" என்று அதில் பதிவிட்டிருந்தார். 

    • பிரேசில் நாட்டில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
    • தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்ற பிரேசில் அதிபரின் மனைவி தெரிவித்தார்.

    பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் 18, 19 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பிரதமர் மோடியும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

    இதனையொட்டி ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டா சில்வா பேசினார்.

    அப்போது திடீரென அங்குக் கப்பலின் ஹார்ன் சத்தம் கேட்டது. உடனே ஜன்ஜா டா சில்வா, "இது எலான் மஸ்க் தான் என்று நினைக்கிறேன்" என்று கிண்டல் செய்தார். தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்ற கூறிய அவர், மஸ்க்கை கெட்ட வார்த்தையிலும் திட்டினார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

    மேலும், எலான் மஸ்க் தனது மற்றொரு பதிவில், "ஜன்ஜா டா சில்வாவின் கணவரும் பிரேசில் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூயிஸ் அடுத்த தேர்தலில் தோற்கப் போகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    பிரேசிலில், இந்தாண்டு ஒரு மாதத்திற்கு மேலாக எக்ஸ் சமூக வலைத்தளம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனால், பிரேசில் அரசுக்கும், மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலைமையில் எலான் மஸ்க்கை பிரேசில் அதிபரின் மனைவி கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
    • கொலை செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே கிரிமினல் குரூப் மிரட்டல் விடுத்ததாக போலீசார் தகவல்.

    பிரேசில் நாட்டின் மிப்பெரிய விமானம் குவாருல்கோஸில் உள்ள சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு காரில் வந்த சிலர் திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்கும் புகுந்து சரிமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.

    கொலை செய்யப்பட்டவர் அன்டோனியா வின்சியஸ் லோபஸ் கிரிட்ஸ்பேச் என போலீசார் கண்டறிந்ததுள்னர். இவருக்கு சர்வதேச கிரிமினல் குரூப் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்.

    இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பதை தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவில் 2 பேர் ஈடுபட்டதாக தெரிகிறது. டெர்மினல் இரண்டில் ஒருவர் குண்டு பாய்ந்த கீழே விழுவது போல் தெரிகிறது. இந்த டெர்மினல் உள்ளூர் விமான போக்குவரத்திற்காக பயன்படும்.

    • பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ்.
    • 16-வது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெற உள்ளது

    பிரேசிலியா:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.

    கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.

    ரஷியாவின் காசான் பகுதியில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியானது. அங்கு உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    காயம் காரணமாக பிரேசில் அதிபர் பங்கேற்க மாட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநாட்டில் பங்கேற்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • 3 முதல் 22 வயதுக்குட்பட்ட ஏழு குழந்தைகளும் அந்த நபரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மகள்களில் ஒருவர் அந்நபருக்கு தூக்க மாத்திரை கொடுத்தபோதுதான் தப்பித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    20 ஆண்டுகளாக தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வீட்டு சிறையில் அடைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 54 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பிரேசிலின் நோவோ ஓரியண்டேயில் உள்ள வீட்டு சிறையில் இருந்து மகள் ஒருவர் தப்பித்து வந்து போலீசாரிடம் தந்தையின் துன்புறுத்தல்களை கூறியுள்ளார். அந்த நபர் தனது மனைவியை திருமணம் செய்ததில் இருந்து வீட்டு சிறையில் வைத்ததாக கூறப்படுகிறது. மனைவியை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தன்னுடன் வெளியே அழைத்து செல்வார். அண்டை வீட்டுக்காரர்கள் எவருக்கும் அவரது மனைவியைத் தெரியாது. ஏன் உறவினர்கள் கூட அப்பெண்ணை அணுகவில்லையாம்.

    3 முதல் 22 வயதுக்குட்பட்ட ஏழு குழந்தைகளும் அந்த நபரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குளிப்பதையும் ஆடை அணிவதையும் பார்க்க அந்த நபர் வீட்டின் சுவர்களில் துளைகளை துளைத்ததாக மகள்கள் கூறியுள்ளனர். மேலும் கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு அந்த நபர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் சமீபத்தில் இறந்து போன தனது மாமியாரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. உடல் நலக்குறைவு ஏற்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

    மகள்களில் ஒருவர் அந்நபருக்கு தூக்க மாத்திரை கொடுத்தபோதுதான் தப்பித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கைதான அந்த நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த நபர் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

    ×