என் மலர்
உலகம்
- 2019 சட்ட மாற்றத்தின்படி முன்னர் நடந்த தாக்குதலுக்கு புகார் அளிக்க இயலாது
- 2022ல் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்
பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான நியூயார்க்கில், கடந்த 2022 நவம்பர் மாதம் பாலியல் தாக்குதல் குறித்த புகாரளிப்பு சட்டங்களில் பெண் கவர்னர் கேத்லீன் ஹோசல் (Kathleen Hochul) சில மாற்றங்களை கொண்டு வந்தார்.
பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்கள், அது குறித்த புகாரையும், வழக்கையும், 3 வருட காலத்திற்குள் பதிவு செய்து விட வேண்டும் என அங்கு சட்டம் இருந்தது.
2019ல் இந்த காலக்கெடு முறை நீக்கப்பட்டாலும், அது சட்டம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து நடைபெறும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தி வந்தது.
எனவே, 2022ல் "அடல்ட் சர்வைவர்ஸ் ஆக்ட்" (Adult Survivors Act) எனும் பெயரில் கவர்னர் ஹோசல் கொண்டு வந்த இந்த சட்ட மாற்றத்தின்படி ஒரு ஆண்/பெண், தங்கள் வாழ்வின் முந்தைய காலகட்டத்தில் எப்பொழுதோ பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால் கூட தற்போது அது குறித்து புகார் அளிக்கலாம் என வழிவகை செய்யப்பட்டது.
ஆனால், இந்த சட்ட மாற்றம் ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் கொண்டு வரப்பட்டதால், அது இம்மாதத்துடன் காலாவதியாகிறது.
இதனையடுத்து, இந்த ஒரு வருட கால தொடக்கத்தில் பெரிய அளவு புகார்கள் வரவில்லை. ஆனால், விரைவில் சட்ட திருத்தம் காலாவதியாக போவதால் சமீப சில நாட்களாக பலர் தாமாக முன்வந்து புகார் அளித்து வழக்கு பதிவு செய்கின்றனர். இதுவரை 2500 பேர் புகார் அளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பல பிரபலங்களுக்கு எதிராக புகார்கள் வந்துள்ளது அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்க பாடகர் டிட்டி (ஷான் கோம்ப்ஸ்), முன்னாள் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பாடகரும் நடிகருமான ஜேமி ஃபாக்ஸ், பாடகர் ஆக்ஸ்ல் ரோஸ் உட்பட பல பிரபலங்கள் இக்குற்றச்சாட்டிற்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கராச்சி:
பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட போலீசார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.
- கைதானவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள எசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் டேரன் ஸ்டிர்லிங். 58 வயதான இவர் மீது போதைப்பொருள் வினியோகம் செய்த வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்டிர்லிங் ஆன்லைனில் சட்ட விரோதமான பொருட்களை பரிமாறி கொள்வதற்காக பயன்படுத்தப்படும் என்க்ரோசாட் தளத்தில் தனது 'செல்பி' புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஒரு கப்பலில் மேல் சட்டை அணியாமல் இருந்தார். இதற்கிடையே போலீசார் ஸ்டிர்லிங்கை பிடிப்பதற்காக என்க்ரோசாட் தளத்தை கண்காணித்து வந்த நிலையில் ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட போலீசார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.
அதன்படி கப்பலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- திராட்சை பழம் முதல் சில பழங்களாலும் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக கூறியிருந்தார்.
- வீடியோ வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
தென்கொரிய தலைநகர் ஜியோல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஜோன்னே பேன். 21 வயதான இவர் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனக்கு சில உணவுகளால் ஒவ்வாமை இருப்பதாக ஒரு பட்டியலை பகிர்ந்துள்ளார்.
இறப்பதற்கு 37 புதிய வழிகள் என்ற தலைப்பில் பதிவிட்ட அந்த பட்டியலில் ஏராளமான உணவு வகைகளால் அவருக்கு ஒவ்வாமை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், திராட்சை பழம் முதல் சில பழங்களாலும் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக கூறியிருந்தார்.
அதாவது, சில உணவுகளை சாப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் அவர் தோல் அலர்ஜியால் பாதிக்கப்படுவதாகவும், உடலில் அரிப்பு மற்றும் அதிக வெப்பம் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் கூறியிருந்தார். அவர் 37 என்ற எண்ணை பயன்படுத்தினாலும் அதை விட அதிகமான எண்ணிக்கையில் அவருக்கு ஒவ்வாமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த வீடியோ வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- நெக்லஸ் எல்விஸ் பிரெஸ்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- 1975-ம் ஆண்டு முகமது அலியை சந்தித்த போது நெக்லசை அணிந்திருந்தார்.
பிரபல அமெரிக்க பாடகரும், நடிகருமான எல்விஸ் பிரெஸ்லி 'ராக் அண்ட் ரோலின் மன்னன்' என போற்றப்பட்டவர். 1954-ம் ஆண்டு இசை துறைக்குள் நுழைந்த இவர் ராக் அண்ட் ரோல் இசையின் தொடக்க வடிவமான 'ராக்கபிலிட்டி' இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர்களுள் ஒருவராக இருந்தார்.
1970-ம் ஆண்டு மறைந்த இவர் அணிந்திருந்த சிங்க நக நெக்லஸ் மிகவும் பிரசித்தி பெற்றது. மேடை நிகழ்ச்சிகள் மற்றும் எல்விஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போது அவர் அந்த நெக்லசை அணிந்து செல்வது வழக்கம். 1975-ம் ஆண்டு முகமது அலியை சந்தித்த போது இந்த நெக்லசை அணிந்திருந்தார்.
அவரது இந்த நெக்லஸ் எல்விஸ் பிரெஸ்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நெக்லஸ் ஏலத்திற்கு செல்கிறது. இந்த நெக்லஸ் ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8 கோடி) வரை ஏலம் போகும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- 2022 அக்டோபர் மாதம், எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கினார்
- யூதர்களுக்கு எதிரான கருத்தை ஆமோதித்து மஸ்க் பதிவிட்டார்
கருத்து பரிமாற்றங்களுக்கான உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருந்த டுவிட்டரை, அமெரிக்காவின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், கடந்த 2022 அக்டோபர் மாதம் விலைக்கு வாங்கினார். அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன் ஒரு பகுதியாக நிறுவன பெயரை எக்ஸ் என மாற்றினார். தொடர்ந்து தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். பல பொறுப்புகளில் புதிய பணியாளர்களை நியமித்தார்.
ஆனால், மஸ்கின் மாற்றங்களால் நிறுவனத்தின் வருமானம் அவர் எதிர்பார்த்ததை போல் அதிகரிப்பதற்கு பதிலாக குறைய தொடங்கியது. எக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்களின் முக்கிய வருமானமான விளம்பர வருவாய் குறைந்து வந்தது.
அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்தகைய எக்ஸ் பதிவு ஒன்றில் யூதர்களுக்கு எதிரான கருத்தை ஒரு பயனர் பதிவிட்டிருந்தார். இதனை ஆமோதிக்கும் வகையில் எலான் மஸ்க் ஒரு கருத்தை பதிவிட்டார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஊடக விவகாரங்களை கவனித்து செய்தி வெளியிடும் மீடியா மேட்டர்ஸ் எனும் நிறுவனம், எக்ஸ் தளத்தில் யூதர்களை இனப்படுகொலை செய்த ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியினரை பெருமைப்படுத்தும் எக்ஸ் பதிவுகளுக்கு அருகில் ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் வெளிவருவதை சுட்டி காட்டியிருந்தது.
இதையடுத்து எக்ஸ் நிறுவனத்திற்கு விளம்பரங்களை தந்து வந்த இருநூறுக்கும் மேற்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை நிறுத்தி விட்டன.
இதனால் எக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ரூ.625 கோடி ($75 மில்லியன்) தொகை வரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபலமான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, வருவாய் இழப்பை தடுக்க எலான் மஸ்க் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது.
- காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது.
காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தீவிரமாக சண்டையை தொடர திட்டமிட்டுள்ளோம்.
இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது. அவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் பல சுரங்கங்கள் அழிக்கப்படும்.

கூடுதல் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் 27-ந்தேதி காலாவதியாகும். காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது" என்றார்.
- இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீனர்கள் விடுதலை.
- பிணைக்கைதிகள் 25 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளதாக அறிவிப்பு.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து வெளிநாட்டினர் உள்பட 250-க்கு மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 14 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக்கைதிகளை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று போர் நிறுத்தம் தொடங்கியது.

இதில் முதல் கட்டமாக ஹமாஸ் அமைப்பிடம் பிணைக்கைதிகளாக இருந்த 13 இஸ்ரேலியர்கள் மற்றும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களை ஹமாஸ் அமைப்பினர், செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து இஸ்ரேலுக்கு சென்றடைந்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு குடும்பத்தினரிடம் இணைவார்கள் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சிறைக்காவலில் இருந்து 24 பெண்கள் உள்பட 39 பேரை இஸ்ரேல் விடுதலை செய்தது. அவர்கள் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தப்படி 2-வது நாளாக இன்று மேலும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
காசாவில் இருந்து 2-வது கட்டமாக விடுவிக்கப்பட உள்ள பிணைக்கைதிகளின் பட்டியலை இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு அளித்து உள்ளது. அந்த பட்டியலை இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
இன்று விடுவிக்கப்படும் பிணைக்கைதிகள் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

நேற்றைப்போலவே இன்றும் 20-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 196 டிரக்குகளில் உணவு பொருட்கள், தண்ணீர், மருத்துவ பொருட்கள் ஆகியவை ராபா எல்லை வழியாக காசாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.
- இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும், பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு.
- காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வருகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் 7-ந்தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் உயிரிழந்தனர். 240 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவ உதவி செய்து வருகிறது. விமானம் தாங்கிய கப்பலை இஸ்ரேல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.
இஸ்ரேல் போர் நிறுத்தம் கிடையாது என்பதை திட்டவட்டாக அறிவித்தது. அமெரிக்காவும் அதற்கு முழு ஆதரவு தெரிவித்தது. ஆனால், நாட்கள் செல்லசெல்ல காசாவில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். குழந்தைகள் முதல் பெண்கள் வரை என பாகுபாடின்றி ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
தரைவழியாக தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயல்பட்டிற்காக அவற்றை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ஆதாரத்தை வெளியிட்டு தாக்கியது.
இருந்தபோதிலும், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தம் தேவை என உணர்ந்தது. இல்லையெனில் காசா மக்கள் மருத்துவம் மற்றும் அடிப்படை உதவியின்றி மடிந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனால் இஸ்ரேலிடம் போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா வலியுறுத்தியது. இருந்தபோதிலும், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.
இந்த நிலையில்தான் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை உலக நாடுகள் மறந்துவிட்டன குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர். அவர்களை காப்பாற்றுவதில் இஸ்ரேல் அக்கறை காட்டுவதில்லை என உள்நாட்டிலேயே இஸ்ரேலுக்கு எதிர்ப்பு வலுத்தது.

இதன் காரணமாக 4 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் இஸ்ரேல் 150 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நேற்று 25 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 39 பாலஸ்தீனர்கள் விடுதலையாகியுள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு நிபந்தனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஜோ பைடன் தெரிவிக்கையில் "காசாவில் நான்கு நாள் பேர் நிறுத்தம், அதையும் தாண்டி நீட்டிக்கும் என நம்புகிறேன். நாளை (இன்று) பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள. அதற்கு அடுத்தஅடுத்த நாட்களும் விடுவிக்கப்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறேன்.

நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்குவது என்பது பயனுள்ள சிந்தனைதான். ஆனால், இதை தொடங்கினால், இப்போது நாம் எங்கே இருக்கிறோமோ, அதை நாம் பெற்றிருப்போம் என்று நினைக்கவில்லை" என்றார்.
மேலும், நிபந்தனை குறித்து எந்த உதாரணத்தையும் ஜோ பைடன் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல்.
- பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள்.
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பிணைக்கைதிகளில் 50 பேர் விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக ஹமாஸ்- இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று தாய்லாந்தை சேர்ந்த 12 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் என 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்.
அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் உள்ள 39 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 25 பேர் பெண்கள், 14 பேர் இளைஞர்கள். கத்திக்குத்து, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் ஆகிய குற்றத்திற்காக 25 பெண்களும் கைது செய்யப்பட்டவர்கள். இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள்.

33 பேர் மேற்கு கரையில் உள்ள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ஜெருசலேமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் குழு தெரிவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்த பெண்களை தங்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். அப்போது, ஆனந்த கண்ணீருடன் அவர்களை வரவேற்றனர். இளைஞர்களை தோளில் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி வாணவேடிக்கை நிகழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அப்போது பலர் தங்களது கைகளில் பாலஸ்தீன கொடிகளையும், சிலர் ஹமாஸ் கொடியையும் வைத்திருந்தனர்.

இஸ்ரேல் சிறையில் இருந்து மொத்தம் 150 பேர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். 250 பிணைக்கைதிகளை ஹமாஸ் ரிலீஸ செய்யும்போது சுமார் ஆயிரம் பேர் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
பிணைக்கைதிகள்- கைதிகள் பரிமாற்றத்தில் கத்தார் முக்கிய பங்குவகித்தது குறிப்பிடத்தக்கது.
- விடுவிக்கப்பட்ட செய்தி அரசுக்கு கிடைத்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
- தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.
இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்பந்தப்படி பிணைக்கைதிகளை விடுதலை செய்யப்பட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக தாய்லாந்தை சேர்ந்த 12 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனை, காசாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 12 பேர் விடுவிக்கப்பட்ட செய்தி அரசுக்கு கிடைத்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 13 பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதற்கட்டமாக மொத்தம் 25 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இஸ்ரேல் வசம் உள்ள 7 ஆயிரம் கைதிகளில் 39 பேரை இன்று இரவு விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் 150 கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த 3 நாட்களில் மேலும் 37 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோவிட்-19 பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்
- உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டது
கடந்த 2019 டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் (Wuhan) மாகாணத்தில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா (Corona) எனும் வைரஸ் வகை நுண்கிருமியால், நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். 2020 மார்ச் மாதம் இந்த பெருந்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.
கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல மாதங்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தன. இந்த பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க, உயிரிழந்தவர்களின் உடலை கூட சுகாதார துறையினர், உறவினர்களிடம் காட்ட மறுத்த சோகம் நிலவியது.
மேலும், ஊரடங்கால் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் பல மாதங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.
சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:
புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் சீன மக்கள் கடைபிடிக்க அந்நாட்டை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வைரஸ் தோன்றிய காரணங்கள் குறித்து கண்டறிய சீனா சரிவர ஒத்துழைக்கவில்லை என பல நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.






