என் மலர்
உலகம்
- நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன்.
- இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்.
நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக செப்டம்பர் 8 இல் வெடித்த இளைஞர்களின் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறி அந்நாட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது.
அடுத்த நாளே சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இது வழிவகுத்தது. அவரை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார்.
சர்மா ஒலி தற்போது காத்மாண்டுவின் வடக்கே உள்ள சிவுபுரி ராணுவ முகாமில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பதவி விலகிய பின் அவர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியுள்ளார். அதில் தனது பதவி இழப்புக்கு இந்தியா மீதான தனது நிலைப்பாடே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் பிறந்ததை எதிர்த்ததால் தான் ஆட்சியை இழந்ததாகக் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், காலாபனி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானவை என்று தான் வலியுறுத்தியதும் தனது பதவி இழப்புக்கு ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவரது அறிக்கையில், "நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன். சமூக ஊடக நிறுவனங்கள் எங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார், இந்தியாவில் அல்ல என்று நான் கூறினேன். இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் பல அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததுடன், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அதிபர் மாளிகைகளையும் சூறையாடினர்.
வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 13,500-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பி ஓடியதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
- சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
- சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்
ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் க்ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
மேலும், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவராக சுவிட்சர்லாந்து, வெளிப்படையாக தவறான மற்றும் இந்தியாவின் யதார்த்தத்திற்கு பொருந்தாத கதைகளால் சபையின் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தியாகி தெரிவித்தார்.
- அவர்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டி காட்டினார்.
- வாஷிங்டன் டி.சி. காவல்துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டிரம்ப் கொண்டுவந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தலைநகர் வாஷிங்டன் டி.சியில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பிரபல உணவகத்தில் இரவு உணவு அருந்த சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஒரு போராட்டக்காரர்கள் குழு, "டி.சி-க்கு விடுதலை", "பாலஸ்தீனத்திற்கு விடுதலை" என கோஷங்களை எழுப்பினர்.
மேலும், டிரம்பை "நவீன கால ஹிட்லர்" என்றும் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பினர்.
அவர்களின் கோஷங்களைக் கேட்ட டிரம்ப், அவர்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டி காட்டினார்.
'கோட் பிங்க்' என்ற பெண்ணிய செயற்பாட்டாளர் குழு இந்த போராட்டத்திற்கு பொறுப்பேற்றது.
அண்மையில் வாஷிங்க்டன் பாதுகாப்பற்றதாக இருப்பதாக கூறி வாஷிங்டன் டி.சி. காவல்துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் டிரம்ப் கொண்டுவந்தற்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
- பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார்.
பிரான்சில் அதிபர் மேக்ரானின் 'ரினைசன்ஸ்' கட்சி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி தயவை நம்பி ஆட்சியில் உள்ளது. இதனால் கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர்.
இதற்கிடையே பொது விடுமுறை நாட்களை குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாதது, மருத்துவம், கல்வி, வீட்டு வசதி, மானியங்கள் போன்ற மக்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அண்மையில் பட்ஜெட் குறைப்பு மசோதாவை தாக்கல் செய்ய, பிரதமராக இருந்த பிராங்காய்ஸ் பாய்ரு முயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா நிறைவேறவில்லை. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிராங்காய்ஸ் பாய்ரு கோரினார். அதில் தோல்வியடைந்ததால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே கடந்த திங்களன்று புதிய பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார். இவ்வாறு பிரதமர்கள் தொடந்து மாறுவதும் பட்ஜெட் குறைப்பும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நேற்று பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் 80,000 போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வரும் 18ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
- ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
- கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காங்கோ - உகாண்டா எல்லையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் நடத்திய 2 வெவ்வேறு தாக்குதல்களில் பொதுமக்கள் 89 கொல்லப்பட்டனர்.
திங்கட்கிழமை, நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் நியாதோ என்ற இடத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கூடியிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை, பெனியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பகுதியில், பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் முன்னரும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
- டிரம்ப் கத்தாருக்குச் சென்றபோது, அவருக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு விமானம் பரிசாகக் கொடுக்கப்பட்டது.
- "இந்தத் தாக்குதலை நடத்தியது நான் அல்ல, பெஞ்சமின் நேதன்யாகு" என்று ட்ரம்ப் மழுப்பியுள்ளார்.
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று கூடியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.
அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன.
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக கத்தார் திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் அதிபர் டொனால்டு டிரம்பின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் "துரதிர்ஷ்டவசமாக, தாக்குதலைத் தடுக்கத் தாமதமாகிவிட்டது," என்று தாக்குதல் குறித்து டிரம்ப் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
மேலும், "இந்தத் தாக்குதலை நடத்தியது நான் அல்ல, பெஞ்சமின் நேதன்யாகு," என்று டிரம்ப் மழுப்பியுள்ளார்.
அதேவேளை "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாட்டில் தன்னிச்சையாக குண்டுவீசுவது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் நோக்கங்களை அடைய உதவாது" என்றும் டிரம்ப் கூறினார்.
கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், தாக்குதல் தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் அமெரிக்காவிடமிருந்து அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
நான்கு மாதங்களுக்கு முன்புதான் டிரம்ப் கத்தாருக்குச் சென்றபோது, அவருக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு விமானம் பரிசாகக் கொடுக்கப்பட்டது. கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமும் செயல்பட்டு வருகிறது.
- சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமானது.
- போராட்டத்தின்போது நேபாள சிறைகளில் இருந்து 7,000 கைதிகள் தப்பியோடினர்.
காத்மண்டு:
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். தகவலறிந்து விரைந்த ராணுவம் ஹெலிகாப்டரில் அங்கு சென்று கயிறுகளை வீசியது. கயிறுகளைப் பிடித்துக் கொண்டு அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
- இந்த ஆண்டின் கிட் ஆப் த இயர் என்ற பட்டத்தை தேஜஸ்வி மனோஜுக்கு டைம் இதழ் அளித்தது.
- ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் டைம் இதழ் இந்த ஆண்டின் கிட் ஆப் த இயர் என்ற பட்டத்தை 17 வயது அமெரிக்கவாழ் இந்தியப் பெண்ணுக்குத் தந்து கவுரவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது தேஜஸ்வி மனோஜ் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வயது மூத்தோரை ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாக்க ஷீல்டு சீனியர்ஸ் (Shield Seniors) எனும் இணையதளத்தை உருவாக்கினார். இதையடுத்து, தேஜஸ்விக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஆன்லைன் மூலம் அவரது தாத்தாவிடம் உள்ள பணத்தைத் திருட முயன்றதை அறிந்த தேஜஸ்வி மோசடிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
ஆன்லைன் மோசடி பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதை உணர்ந்த அவர், இணைய மோசடிகளைப் பற்றிக் கற்பிக்க இந்த இணையதளத்தை உருவாக்கினார். தற்போது முதியோர் இல்லங்கள் சென்று அங்குள்ளோருக்கு இந்த இணைய தளத்தைப் பயன்படுத்த உதவுகிறார்.
- முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள்.
- அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை போன்றவற்றை இழக்க நேரிடும்.
இலங்கை பாராளுமன்ற தேர்தலின்போது, முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் அதிபர்களுக்கு அதிகாரமளித்தல் திரும்பப் பெருதல் சட்ட மசோதாவை ஆளும் அரசு தாக்கல் செய்தது. விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 151 வாக்குகள் விழுந்தன. ஒரேயொரு வாக்கு மட்டும் எதிராக விழுந்தது.
முன்னாள் அதிபர்களுக்கான அதிகாரத்தை பறிப்பதற்கு, பாராளுமன்றத்தில் முழு மெஜாரிட்டியுடன் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து சட்ட அமைச்சர் ஹர்ஷனா நானயக்கரா கூறுகையில் "முன்னாள் அதிபர்கள், அவர்களின் பென்சன் உரிமையை இழக்கமாட்டார்கள். அரசு மாளிகை, போக்குவரத்து சலுகை, செயலக ஊழியர்கள் போன்ற வசதி பறிக்கப்படும்" என்றார்.
இலங்கையில் தற்போது ஐந்து முன்னாள் அதிபர்கள் உயிரோடு உள்ளனர். ஒரு அதிபரின் மனைவி விதவையாக உள்ளார். இதில் 3 பேர் மட்டுமே சலுகைகள் பெற்று வருகின்றனர்.
- நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமானது.
காத்மண்டு:
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியது.
சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் தகவல் வெளியானது.
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
- அரசு அலுவலகங்களை தொடர்ந்து ஹிலட்ன் ஓட்டல் தீக்கிரையானது.
காத்மண்டு:
நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து போராட்டம் வெடித்ததால் இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கும் தீ வைத்ததால் அங்கு கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி இடைக்கால தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
- விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
- பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
காத்மண்டு:
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்ததால் அங்கு கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
இந்நிலையில், பாராளுமன்றம், அரசு கட்டிடங்களைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டல் முழுவதும் தீக்கிரையானது. தொடர்ந்து அப்பகுதியில் எரிக்கப்பட்ட கட்டிடத்தின் இருந்து புகை சூழ்ந்து காணப்படுகிறது.






